1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவிற்கு சிறப்பாக அமையும்.
புதிய முயற்சிகளை தைரியமாக மேற் கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோருக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்பினும் ஒருசிலருக்கு அடிவயிறு, கால் பாதத்தில் பாதிப்புவர வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் உங்களுக்கு இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதுகூலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வேலையாட்களின்மீது கண்காணிப்பு தேவை. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நல்ல பலன் பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வும், புதிய பதவியும் தேடிவரும். ஆனால் மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தைகூட சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே "வாய்ப் பதனம், கைப் பதனம், மெய்ப் பதனம்' ஆகிய சொற்களைக் கடைப்பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் வாழும் மாதம். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்த படி திருமணம் நடக்கும். மாணவர்கள் சுற்றுலா சென்றுவருவார்கள். இந்த மாதம் இளைஞர்களுக்கு தண்ணீரில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளுக்கு மிகவும் எச்சரிக்கையுடன் சென்றுவரவேண்டும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் யார் தவறு செய்தாலும் அதை உடனடியாகத் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர். இந்த மாதம் உறவினர்கள், மகான்களின் சந்திப்பு நிகழும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் கிட்டும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள்வர வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் நிதானமாக செயல்படவேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்கவேண்டிய காலம். விற்பனையாளர் களுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத் துக்கு மாறுதலும், அதிகாரிகளின் கனிவும் கிடைக்கும். நிலுவைத் தொகை வந்துசேரும். அருகிலுள்ளவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே எச்சரிக்கையாக செயல்படவேண்டும். கனவுத் தொல்லைகள் உண்டு. பிள்ளைகளின் உயர் வால் பெற்றோர் கள் மகிழ்ச்சியடை வார்கள். வேலை தேடும் இளைஞர் களுக்கு தகுதிக்கேற்ப வேலை கிட்டும் மாதம். அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பணம் திடீரென வசூலாகும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்பு களையும், பொதுமக்களின் பாராட்டையும் பெறுவார்கள். காவல்த
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவிற்கு சிறப்பாக அமையும்.
புதிய முயற்சிகளை தைரியமாக மேற் கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோருக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்பினும் ஒருசிலருக்கு அடிவயிறு, கால் பாதத்தில் பாதிப்புவர வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். விட்டுக்கொடுக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் உங்களுக்கு இந்த மாதம் அதிகம் தேவை. அதனால் குடும்பத்தில் குதுகூலம் நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வேலையாட்களின்மீது கண்காணிப்பு தேவை. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நல்ல பலன் பெறும் மாதம். எண்ணம்போல பதவி உயர்வும், புதிய பதவியும் தேடிவரும். ஆனால் மேலிடத்துக்கு எதிராக நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தைகூட சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே "வாய்ப் பதனம், கைப் பதனம், மெய்ப் பதனம்' ஆகிய சொற்களைக் கடைப்பிடித்து உயர்வடைய வேண்டும். பெண்கள் குணமுடன் வாழும் மாதம். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். நினைத்த படி திருமணம் நடக்கும். மாணவர்கள் சுற்றுலா சென்றுவருவார்கள். இந்த மாதம் இளைஞர்களுக்கு தண்ணீரில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளுக்கு மிகவும் எச்சரிக்கையுடன் சென்றுவரவேண்டும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் யார் தவறு செய்தாலும் அதை உடனடியாகத் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர். இந்த மாதம் உறவினர்கள், மகான்களின் சந்திப்பு நிகழும். அதனால் மகிழ்ச்சியும் லாபமும் கிட்டும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள்வர வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் நிதானமாக செயல்படவேண்டும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். ஓய்வில்லாமல் உழைக்கவேண்டிய காலம். விற்பனையாளர் களுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். விரும்பிய இடத் துக்கு மாறுதலும், அதிகாரிகளின் கனிவும் கிடைக்கும். நிலுவைத் தொகை வந்துசேரும். அருகிலுள்ளவர்களால் தொல்லைகள் வரலாம். எனவே எச்சரிக்கையாக செயல்படவேண்டும். கனவுத் தொல்லைகள் உண்டு. பிள்ளைகளின் உயர் வால் பெற்றோர் கள் மகிழ்ச்சியடை வார்கள். வேலை தேடும் இளைஞர் களுக்கு தகுதிக்கேற்ப வேலை கிட்டும் மாதம். அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பணம் திடீரென வசூலாகும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பொறுப்பு களையும், பொதுமக்களின் பாராட்டையும் பெறுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு வராமலிருக்கும் பதவி உயர்வு வந்துசேரும். மாணவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வார்கள். கோடைகாலப் படிப்பில் மனம் ஈடுபடும். வெற்றிக்கு வழிகாட்டும். முதுகுத் தண்டுவடப் பகுதியில் சிறுசிறு உபாதை கள் வந்து மறையும்.
அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 7, 16, 25.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26, 9, 18.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குரு ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர் களால் செய்யமுடியாத காரியத்தையும் செய்துமுடிப்பவர்கள். இந்த மாதம் தடை, தாமதத்தோடு செய்யவேண்டியிருக்கும். எனவே சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதனால் வெற்றியடையலாம். திடீர்ப் பணவரவுகள் ஏற்படும். திருமணமாகாதவர் களுக்கு இந்த மாதம் நல்ல வரன்கள் வாயிற் கதவைத் தட்டும். நன்கு ஆலோசித்து திருமணம் செய்யவேண்டும். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் லாபம் பெறுவார்கள். இதுவரை எதிராக செயல்பட்டு வந்த தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அரசு ஊழியர்கள் கவனத் துடன் பணியாற்றவேண்டும். காவல்துறை நடவடிக்கை வர வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களே எதிரியாகலாம். எனவே எந்த காரியம் செய்தாலும் உங்கள் முடிவுப்படி செய்யவேண்டும். சிலருக்கு கட்டாய மாறுதல் வரலாம். அது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டாலும், நன்மையாக இருக்கும். பிள்ளைகளின் தொல்லைகள் மாறும். வரமாட்டார்களா என்று நினைத்த பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து திடீரென வந்துசேர்வர். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பொருட்களால் லாபம் இரட்டிப்பாகும். கனவுத் தொல்லைகள் உண்டு. சில பெண்கள் பிரச் சினை தீர்ந்து கணவர் வீட்டுக்குச் செல்வார் கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக் கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். இதுவரை உங் களை எதிர்த்து வந்தவர்கள் விலகி நிற்பார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மற்றவர்கள் செய்யாத செயலை எளிதாகச் செய்து முடிப்பவர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அரசு ஊழியர் கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வளம் காண்பார்கள். வேலை பார்க்கும் இடத்தில் "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று செயல் படாமல், நிதானமாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கலாம். மற்றவர்கள் தவறை நீங்கள் பெரிதுபடுத்தினால் உங்களது தவறு விஸ்வரூபம் எடுக்கும். மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். பணவரவுகள் சீராக இருக்கும். மற்றவர்கள் தன்னை உயர்வாக நினைக்க வேண்டுமென்பதற்காக சிலர் கடன்வாங்கி செலவு செய்வார்கள். உடல்நிலையில் பாதிப்பு வராது. தொழிலதிபர்களுக்கு உற்பத்தி செலவு கூடினாலும் லாபம் இரட்டிப்பாகப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிலருக்கு அரசாங் கத்தால் இருந்துவரும் தொல்லை நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நினைத்தபடி நடக்கும். சடங்கு வைபவங்களில் கலந்து கொள்வதால் மனம் உற்சாகமாகும். வெளி நாட்டிலிருந்தும், தொலைத் தொடர்பாலும் நல்ல செய்திகள் வந்துசேரும். பெண்கள் கணவருடன் சற்று பொறுமையாக அனுசரித் துச் செல்லவேண்டும். சிலருக்கு கருத்து வேறுபாடு பிரிவினைக்குக் கொண்டுசெல்லும். வெளிநாட்டில் படிக்கச் செல்லும் வாய்ப்பும் சிலருக்குக் கைகூடும். தாய்- தந்தையரை பிள்ளைகள் அனுசரித்துச் செல்வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சாமர்த்தியமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். எப்போதுமே மன நிறைவுள்ளவர்கள். புதிய தொழில் முயற்சிகள் கைகொடுக்கும். பணவரவு சுமாராக இருந்தா லும் கையில் காசில்லை என்ற நிலைமை வராது. பிரிந்துசென்ற தம்பதிகள் ஒன்றுகூடுவார் கள். வழக்குகள் சாதகமாகும். ரேஸ், ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெருகும். இளைஞர்கள் பெரும்பாலோருக்கு அயல்நாடு செல்லும் திட்டம் நிறைவேறும். இராணுவத்தில் சேரும் வாய்ப்பு அதிகமுள்ளது. அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழிகளில் லாபம் பெருகும். வியாபாரிகள் ஏற்கெனவே வாங்கிவைத்த சரக்குகளை விற்கவேண்டும். அதிக சரக்கு களைக் கொள்முதல் செய்வதைத் தவிர்த்தால் நஷ்டத்திலிருந்து மீளலாம். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் இரட்டிப்பு லாபம் பெறுவர். இதுவரை வராமலிருக்கும் பூர்வீக சொத்துகள் வந்துசேரும். எதிரி களின் தொல்லை விலகும். சிலருக்கு வாகன விபத்து நேர வாய்ப்புள்ளது. எனவே பொறுமை யாகச் செல்லவேண்டும். நீங்கள் பிரியமாக நேசித்த ஒருவரைப் பிரிய நேரலாம். வங்கி இருப்பு கூடும். பெண்களால் நன்மையுண்டு. மனைவி சொல்லே மந்திரமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், உங்களது முயற்சிகள் மற்றவர்களுக்குப் பயன்படவேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். வியாபாரிகள் புதிய யுக்தி யுடன் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர் களின் நேசம் கூடும். அரசு ஊழியர்கள் பிரச்சினை எதுவுமின்றிப் பணியாற்றும் காலம். தொழிலாளர்- முதலாளி கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மனைவி பயன்பெறும் மாதம். விலை போகாமலிருக்கும் பூர்வீக சொத்து நல்ல விலைக்குப் போகும். ஒருசில இளம்பெண்கள் மாந்ரீகர்கள் தொந்தரவால் அவதிப்படலாம்; எச்சரிக்கை தேவை. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்கள் உடைமைகளில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். களவுபோகும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வாங்கிப் போட்டுள்ள இடம் விற்று விடும். வெளிநாட்டுத் தகவல்கள் வந்துசேரும். தாய்- தந்தையரது அனுசரிப்புண்டு. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். பொற்கொல்லர் கள். விவசாயத் தொழில்புரிவோர், ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வோர் லாபம் அதிகம் பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடேஸ்வரர்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
கேது ஆதிக்கமுள்ள நீங்கள் எண்ணியதை எண்ணியபடி நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். எப்போதும் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். ஒரு செயல் நிறைவு பெறும்போது மற்றொரு குறை வந்துவிடும். அலைந்து திரிந்து வேலைசெய்தாலும் சரியான வருமானமில்லை என்றிருப்பவர்கள் இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவர். சந்தேகமே உங்களது பின்னடைவுக்குக் காரணம். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். அதேசமயம் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் லாபம் பெறலாம். வேலை பார்க்குமிடத்தில் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலர் பூமியிலிருந்து புதையல் போன்றவற்றைப் பெறுவர். பூர்வீக பூமிகளில் கிடைக்க வாய்ப் புண்டு. கடன் தொல்லை நீங்கும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை பிள்ளைகளுக்குத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். வாங்கிவைத்த சரக்குகள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை கட்டும் திட்டம் நன்மையாக நடக்கும். அரசாங்க ஆதரவு கிட்டும். குடும்பத் தில் சில பிரச்சினைகள் வந்து, பெரிதாகாமல் சென்றுவிடும். மாணவர்களின் உயர்கல்வி திட்டம் கைகூடும். பெண்கள் தங்க ஆபரணம் வாங்கிமகிழ்வீர்கள். வெளிநாடு சென்ற கணவர் இதுவரை அனுப்பியதைவிட அதிகமாக பணத்தை அனுப்புவார். ஆறுதலான மாதம்; கடனும் தீரும் மாதம்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20, 29.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், உங்கள் சொல்மீது அதிக நம்பிக்கையும், பிறரை மதிக்கும் உள்ளமும் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புப்படி அனைத்து காரியங்களும் நிறைவேறும். நன்மையான பலன்கள் நடக்கும். பிரிந்துசென்ற உறவினர் கள் வந்துகூடுவார்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை தாமதமாகிவந்த சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரிகள் திட்டமிட்டபடி கொள்முதலை உயர்த்திக்கொள்வார்கள். சில பெண்கள் "கணவர் பேச்சைமீறி ஏன் தாய்வீடு சென்றோம்' என்று மனம் வருந்தி, மீண்டும் கணவர் வீடு வந்துசேர்வார்கள். தந்தை- மகன் உறவு சுமுகமாக இருக்கும். தொழிலாளர்கள் கூடுதல் லாபம் பெறுவர். தொழிலாளர்களை நிர்வாகம் பாராட்டும். கலைஞர்கள் திட்ட மிட்டபடி புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை உயர்த்துவார்கள். லாபம் இரட்டிப்பாகும். காலதாமதமாகி வந்த திருமணம் கைகூடும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிகம் லாபம் பெறுவர். நேர்மையானவர்கள் பாராட்டப் படுவார்கள். நேர்மை தவறியவர்கள் காவல் துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். பெண்களுக்கு வேலைப்பளு உருவாகும். குழந்தை களால் பெருமையடைவார்கள். பெண்களா லும், நண்பர்களாலும் சிலர் லாபமடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் கூர்மையான சிந்தனை உள்ளவர்கள். உதவி யென்று வந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை மறுக்காமல் செய்பவர் நீங்கள். இந்த மாதம் உங்கள் வீட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்யும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் ஆர்வம் காட்டினால் நிறைய சம்பாத்தியம் வரும். கடன் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் இரட்டிப் பாகும். வீட்டு வசதிகளை செய்துகொள்வதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறந்தவர் கள் உங்கள் செய்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுவந்த பிள்ளை களின் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைப்படும் மாதம். வியாபாரிகள் சரக்கு களைக் கூடுதலாகக் கொள்முதல் செய்வதால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிட்டும். வேலை யாட்கள் லாபத்தை ஈட்டித் தருவார்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் லாபம் இரட்டிப்பாகும். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தன்னை நம்பியுள்ள குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு வேலைப் பளு கூடினாலும் மேலதிகாரிகளின் பாராட் டைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் கம்பெனி கணக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். கணவன்- மனைவி உறவு சுமுகமாக இருக்காது. மனைவியால் செலவுகள் வரும். எனவே கணவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எப்போதும் பணம் கையிருப்பு குறையாது.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23, 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.