தர்ம சாஸ்தா அய்யப்பன் திருத்தலம் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள்தான். விரதமிருந்து இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ஆம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப் பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித் தால்தான் ஒரு மண்டலம் விரதமிருந்து ஆலயம் சென்று வந்ததன் முழுப்பலன்களை யும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம். இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப் படுகிறது. அவையாவன:
1-ஆம் படி- குளத்தூர் பாலன்
2-ஆம் ப
தர்ம சாஸ்தா அய்யப்பன் திருத்தலம் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள்தான். விரதமிருந்து இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ஆம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப் பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித் தால்தான் ஒரு மண்டலம் விரதமிருந்து ஆலயம் சென்று வந்ததன் முழுப்பலன்களை யும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம். இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப் படுகிறது. அவையாவன:
1-ஆம் படி- குளத்தூர் பாலன்
2-ஆம் படி- ஆரியங்காவு அனந்த ரூபன்
3-ஆம் படி- எரிமேலி− ஏழைப் பங்காளன்
4-ஆம் படி- ஐந்துமலைத் தேவன்
5-ஆம் படி- ஐங்கரன் சோதரன்
6-ஆம் படி- கலி−யுக வரதன்
7-ஆம் படி- கருணாகரத் தேவன்
8-ஆம் படி- சத்யப்பரிபாலகன்
9-ஆம் படி- சற்குண சீலன்
10-ஆம் படி- சபரிமலை வாசன்
11-ஆம் படி- வீரமணி கண்டன்
12-ஆம் படி- விண்ணவர் தேவன்
13-ஆம் படி- மோகினி பாலன்
14-ஆம் படி- சாந்த சுவரூபன்
15-ஆம் படி- சற்குண நாதன்
16-ஆம் படி- நற்குணக் கொழுந்தன்
17-ஆம் படி- உள்ளத்தமர்வோன்
18-ஆம் படி- ஸ்ரீ ஐயப்பன்
இந்த 18 படிகளுக்கான தத்துவங்களைப் பார்ப்போம்.
முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்; 6 முதல் 13 படிகள்வரை அஷ்டமா சித்தி களையும்; 14, 15, 16 படிகள் மூன்றுவித குணங்களையும்; 17-ஆவது படி ஞானத்தையும்; 18-ஆவது படி அஞ்ஞானத்தையும் குறிக் கின்ற வகையில் அமைந்துள்ளதாக ஐதீகம்.
சபரிமலை கோவிலில் அமைந்துள்ள 18 படிகளும் தெய்வாம்சம் நிறைந்தவை.
ஒன்றாம் படியில்- சூரியன்
இரண்டாம் படியில்- சிவன்
மூன்றாம் படியில்- சந்திரன்
நான்காம் படியில்- பராசக்தி
ஐந்தாம் படியில்- செவ்வாய்
ஆறாம் படியில்- ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படியில்- புதன்
எட்டாம் படியில்- மகாவிஷ்ணு
ஒன்பதாம் படியில்- குரு பகவான்
பத்தாம் படியில்- பிரம்மா
பதினோறாம் படியில்- சுக்கிரன்
பன்னிரண்டாம் படியில்- திருவரங்கன்
பதின்மூன்றாம் படியில்- சனீஸ்வரன்
பதினான்காம் படியில்- எமதர்மன்
பதினைந்தாம் படியில்- ராகு
பதினாறாம் படியில்- காளி
பதினேழாம் படியில்- கேது
பதினெட்டாம் படியில்- விநாயகர்
ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18. அவை: வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம், கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை. இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம்.
சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரத மிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் புனிதம் நிறைந்த- புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படி களில் ஏறிச்சென்று அகிலம் காத்திடும் அய்யப் பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.