இந்​திய, ரஷ்ய வரு​டாந்​திர உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்​தார். ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்​தார். அப்​போது ரஷ்ய மொழி​யில் எழுதப்​பட்ட பகவத் கீதையை புதினுக்கு அவர் பரி​சாக வழங்​கி​னார்.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் புதினுக்கு 21 குண்​டு​கள் முழங்க ராணுவ மரி​யாதை​யுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி அவரை வரவேற்​றனர்.
இதன்​பிறகு அதிபர் விளாடிமிர் புதின், காந்தி நினை​விடத்​துக்கு சென்று அஞ்​சலி செலுத்​தி​னார்.
பின்​னர் டெல்லியில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் விளாடிமிர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.
இந்த பேச்​சு​வார்த்​தை​யின்​போது 16 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக, இந்​தியா - ரஷ்யா பொருளா​தார ஒத்​துழைப்பு திட்​டம் 2030 தொடர்​பான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி இரு நாடு​களும் இணைந்து கூட்டு தயாரிப்​பு​களில் ஈடுபட உள்​ளன.
யுரேசி​யன் பொருளா​தார கூட்​டமைப்​புக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொள்​வது தொடர்​பாக பேச்​சு ​வார்த்தை நடத்​தப்​பட்டு உள்​ளது. வேளாண்​மை, உரம், உணவு பாது​காப்பு உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​றும். இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இணைந்து யூரி​யாவை உற்​பத்தி செய்​யும்.
சென்​னை- விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம், ஐஎன்​எஸ்​டிசி வழித்​தடம், வடக்கு கடல் வழித்​தடம் ஆகிய திட்​டங்​கள் முன்​னெடுத்​துச் செல்​லப்​படும். துருவ பகு​தி​களில்
கப்​பல்​களை இயக்க இந்​திய மாலுமி களுக்கு ரஷ்யா சிறப்பு பயிற்சி அளிக்க உள்​ளது. இதன்​மூலம் ஆர்​டிக் பகு​தி​யில் இந்​தி​யா, ரஷ்யா இடையிலானஉறவு வலு​வடை​யும். இந்​திய இளைஞர்​ களுக்கு புதிய வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும். கப்​பல் கட்​டு​மானத்​தில் இந்​தி​யா​வும்ரஷ்​யா​வும் இணைந்து பணி​யாற்​றும்.
அணுசக்​தி, எரிசக்​தி, மரபு​சாரா எரிசக்​தி, அரிய​வகை தனிமங்​கள், தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பு மேலும் அதி​கரிக்​கும். ரஷ்ய சுற்​றுலா பயணி​கள் மற்​றும் ரஷ்ய குழு​வினர் 30 நாட்​கள் விசா இல்​லாமல் இந்​தி​யா​வுக்கு வருகை தரும் திட்​டம் விரை​வில் அறி​முகம் செய்​யப்​படும்.
இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான வர்த்​தகம் 96 சதவீதம் உள்​ளூர் கரன்​சிகளில் நடை​பெறுகிறது. இருதரப்பு வர்த்​தகம் கடந்த ஓராண்​டில் 12% அதி​கரித்​திருக்​கிறது. இந்த வர்த்​தகம் 100 பில்​லியன் டாலரை எட்​டும்.
இந்​தி​யா​வுக்​கான கச்சா எண்​ணெய், நிலக்​கரி ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. இந்​தி​யா​வுக்குதேவை​யான கச்சா எண்​ணெய் தடை​யின்றி தொடர்ந்து விநி​யோகம் செய்​யப்​படும். இந்​தி​யா​வுட​னான வர்த்தக உறவை மேம்​படுத்த வடக்கு தெற்கு போக்​கு​வரத்து வழித்​தடம் உரு​வாக்​கப்​படும். இதன்​ மூலம் ரஷ்​யா, பெலாரஸ் நாடு​களில் இருந்து இந்​திய பெருங்​கடல் வழி​யாக இந்​தி​யா​வுடன் வர்த்​தகம் நடை​பெறும். பாது​காப்பு துறை தொடர்​பாக பல்​வேறு உடன்​பாடு​கள் எட்​டப்​பட்டு உள்​ளன.
ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்​க​வும் ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் தயாரிக்​க​வும்​ உடன்​​பாடுஎட்​டப்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும்​ ரஷ்​யா​வின்​ ஐந்​​தாம்​ தலை​முறை போர்​ வி​மான​மான சுகோய்​ எஸ்​யு ரகத்​தை சேர்​ந்​த 54 போர்​ வி​மானங்​களை இந்​தி​யா​வில்​ த​யாரிப்​பது
குறித்​தும்​ உடன்​​பாடு எட்​டப்​பட்​டிருப்​ப​தாக கூறப்​படு​கிறது.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்கவும், உபகரணங்கள், எரிபொருளை வழங்கவும் ரஷ்யா உறுதியளித்துள்ளதாகவும், 2047-க்குள் இந்தியாவின் அணுசக்தி திறனை 100 ஜிகா வாட்டாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்​னை- விளாடிவோஸ்​டாக் வழித்தடம்: இந்​தி​யா, ரஷ்யா இடையே ராணுவ தளவாட ஆதரவு பரி​மாற்ற ஒப்​பந்​தம்(ஆர்​இஎல்​ஓஎஸ்) கடந்த பிப்​ர​வரி​யில் கையெழுத்​தானது. இந்த ஒப்​பந்​தத்​துக்கு ரஷ்ய நாடாளு​மன்​றம் ஒப்​புதல் அளித்​துள்ளது.
இதன்​படி ரஷ்ய ராணுவ தளங்​கள் மற்​றும் இந்​திய ராணுவ தளங்​களை இரு நாடு​களும் பரஸ்​பரம் பயன்​படுத்​திக்கொள்​ளலாம். குறிப்​பாக ஆர்​டிக் மற்​றும் பசிபிக் பகு​தி​களில் அமைந்​துள்ள ரஷ்​யா​வின் 40 ராணுவ, கடற்​படை, விமானப் படைத் தளங்​களை இந்​தி​யா​ பயன்​படுத்த முடியும்.
ஆர்​இஎல்​ஓஎஸ் ஒப்​பந்​தத்​தின் ஒரு பகு​தி​யாக சென்​னை- விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம் செயல்​படுத்​தப் பட உள்​ளது. தற்​போது ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் நகரில் இருந்து மும்​பைக்கு சரக்கு கப்​பல்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த வழித்​தடம் 16,000 கி.மீ. தொலைவு கொண்​டது. இத்​தடத்​தில் ரஷ்​யா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு சரக்கு கப்​பல்​கள் வந்து சேர 40 நாட்​களாகிறது. இதற்கு பதிலாக சென்​னை-​விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம் செயல்​படுத்​தப்​பட உள்​ளது. இந்​த தடத்​தில்​ 16 நாட்​களில்​ ரஷ்​யா​வில்​ இருந்​து சென்​னைக்​கு சரக்​கு கப்​பல்​கள்​ வந்​து சேரும்​. இத​னால்​ எரிபொருளும்​, நேரமும்​ சேமிக்​கப்​படும்​.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/putin-modi-2026-01-05-12-01-25.jpg)