Advertisment

காதல் திருமணம் பெற்றோரின் மனம் நோகாமல் வாழ்க்கையை அனுபவியுங்கள் !

marriage


காதல், காதல், காதல் இது இன்றைய இளைஞர்களின் வேத வாக்கு. பள்ளி படிப்பா, கல்லூரி படிப்பா? எதைப் பற்றியும் கவலை இல்லை. எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்பதைவிட யாரின் மனதில் இடம் பிடித்திருக்கி றோம் என்பதுதான் சவால். காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்றுப் புகாத இடத்தில்கூட காதல் புகுந்துவிடும். கோடி இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கல்லாதவன் கூட கவிஞனாவான். காதல்வயப்பட்டால் பக்தியே இல்லாதவன் கூட நெற்றியில் விபூதி வைப்பான். தன் காதலியை வசப்படுத்த சந்தேகமென்றால் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாருங்கள். தந்தை தினம், தாய் தினம், குழந்தைகள் தினம் என எத்தனையோ தினங்கள் வந்தாலும் இந்த காதலர் தினம் மட்டும்தான் களைகட்டும். கடற்கரை, பூங்கா, ஹோட்டல் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் இளம் ஜோடிகளை மலர் கண்காட்சிபோல விதவிதமாக பார்க்கலாம். இளம் உள்ளங்களே கண்டதும் காதல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர


காதல், காதல், காதல் இது இன்றைய இளைஞர்களின் வேத வாக்கு. பள்ளி படிப்பா, கல்லூரி படிப்பா? எதைப் பற்றியும் கவலை இல்லை. எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்பதைவிட யாரின் மனதில் இடம் பிடித்திருக்கி றோம் என்பதுதான் சவால். காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்றுப் புகாத இடத்தில்கூட காதல் புகுந்துவிடும். கோடி இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கல்லாதவன் கூட கவிஞனாவான். காதல்வயப்பட்டால் பக்தியே இல்லாதவன் கூட நெற்றியில் விபூதி வைப்பான். தன் காதலியை வசப்படுத்த சந்தேகமென்றால் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாருங்கள். தந்தை தினம், தாய் தினம், குழந்தைகள் தினம் என எத்தனையோ தினங்கள் வந்தாலும் இந்த காதலர் தினம் மட்டும்தான் களைகட்டும். கடற்கரை, பூங்கா, ஹோட்டல் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் இளம் ஜோடிகளை மலர் கண்காட்சிபோல விதவிதமாக பார்க்கலாம். இளம் உள்ளங்களே கண்டதும் காதல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து, தக்கவயதில் எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்யும் அளவிற்கு உங்களை வலிமை படுத்திக் கொண்ட பின்பு திருமண பந்தத்தை ஆரம்பியுங்கள். முடிந்தவரை பெற்றோரின் மனம் நோகாமல் அவர்களின் சம்மதத்துடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். இதுதான் உங்களுக்கும் நல்லது. உங்களை சார்ந்தவர் களுக்கும் நல்லது.

Advertisment

காதல் என்ற வளையத்திற்குள் வருவதற்கு அவரவரின் ஜெனன ஜாதகரீதியாக 5-ஆம் பாவமே முக்கிய காரணமாக அமைகிறது. 

Advertisment

ஒருவரை பார்த்தவுடன் மனதில் ஏற்படக் கூடிய ஈர்ப்பு தன்மை, உணர்வுகள், காதல் போன்றவற்றிற்கு 5-ஆம் பாவத்தில் அமையக் கூடிய கிரகங்களே காரணமாகிறது.

5-ஆம் பாவத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று, 5-ஆம் அதிபதியும் பாவ கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ, பெற்றிருந்தால் காதல் வயப்படக்கூடிய அமைப்பு, தான் விரும்பியவரையே திருமணம் செய்து கொண்டு வாழும் யோகம் போன்றயாவும் உண்டாகும். அதுபோல 5-ல் பாவிகள் அமையப்பெற்று 7-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5, 7-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும் ஜாதகருக்கு காதல் வயப்படக் கூடிய அமைப்பு உண்டாகும். 5, 7-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஒருவருக் கொருவர் பார்த்துக்கொண்டு சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்பு திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரனாவார். பெண்களின் களத்திரகாரகன் செவ்வாயாவார். மனம் மற்றும் அறிவு சம்மந்தப்பட்ட விஷயத்திற்கு காரகன் சந்திரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5, 7-ல் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள்  அமைந்து சனி ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சனி பார்வை 5, 7-க்கு இருந்தாலும் வேறு மதத்தவரை காதலித்து மனம் முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-ல் 1, 7-க்கு அதிபதிகள் இருந்தாலும் 5-ஆம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7-ஆம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு, கலப்பு திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக 5, 7-ல் சனி ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் வேறு மதத்தவரையோ, இனத்தவரையோ காதலித்து திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 5, 7-க்கு அதிபதிகள் கேது சேர்க்கை பெற்றாலும் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் காதலித்தவரையே மணம் முடித்துக் கொள்வார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-க்கு அதிபதி வலுவாக இருந்தால் விருப்பியவரை திருமணம் செய்ய நேரிடும். 5-ஆம் அதிபதி நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ பலமிழந்து இருந்தால் விருப்பங்கள் நிறைவேறாத நிலை, ஏமாற்றம் ஏற்படுகிறது. 5-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெறும் நிலையில் காதல் திருமண விஷயங்களில் ஒரு ஏமாற்றத்திற்கு பிறகு வாழ்க்கை அமையும் நிலை ஏற்படுகிறது. புதன் கேது சேர்க்கைபெற்று இருந்தால் விருப்பியவரை திருமணம் செய்ய நேரிடும்.  

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11-க்கு அதிபதி வலுவாக இருந்தாலும், 7, 11-க்கு அதிபதிகள் இனைந்து இருந்தாலும், வேறு ஒருவர் ஜாதகரை விரும்பி திருமணம் செய்ய நேரிடும்.

காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டுமா? ஏன் திருமணம் செய்து கொண்டு காதலிக்கக் கூடாதா என கேட்பவர்களுக்கு 5-ஆம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளை குறிக்கக்கூடிய கிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் 5-ல் அமையப்பெற்று பாவ கிரக சேர்க்கை பார்வையின்றி குரு போன்ற சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றால் பெற்றோர் களும் பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்தவரையே மணமுடித்துக்கொண்டு திருமணத்திற்குபின்பு ஒருவரையொருவர் காதலித்து அன்புடன் வாழமுடியும்.

நவகிரகங்கள் நம்மை ஆட்டி வைப்பதால் அதற்கேற்றார்போல நாமும் ஆடுகிறோம். 

காதல் என்ற பெயரில் உடலை மட்டும் ரசிக்கும் வேஷதாரிகளைத் தவிர்த்து உள்ளத்திற்கு மதிப்புக் கொடுத்து வாழுங்கள்.                  

செல்: 7200163001

bala140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe