பிரவிண்குமார்
[email protected]

திருமணம் எப்போது நடக்கும்? பெண் பற்றிய விவரங்கள்.

17-11-1996-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. எனவே நாக தோஷ ஜாதகம். 2-ஆமிடத்தில் நீச சுக்கிரன். அதனை சனி பார்வை. இது தாமதத் திருமணம் தரும். மேலும் 5, 7-ஆம் அதிபதிகள் பார்வை. இது விருப்பத் திருமணம் கொடுக்கும். நடப்பு ராகு தசையில் சந்திர புக்தி 2026 அக்டோபர் வரை. பின் வரும் செவ்வாய் புக்தியில் திருமணம் நடந்துவிடும். இது இஷ்ட திருமணம் ஆதலால், வரும் வரன் பற்றி, பையனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும். இவ்விதம் நீச சுக்கிரன் உள்ளவர்கள் குலதெய்வ வழிபாடும், நாக தெய்வ வழிபாடும் செய்யவேண்டும். 

Advertisment

புகழ் சோழன்


இவருடைய வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்கள்.

3-7-2006-ல் பிறந்தவர். கன்னி லக்னம். கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். பையனின் லக்னாதிபதி ராசியில் சனி+செவ்வாயுடன் 11-ஆமிடத்தில் உள்ளார். அம்சத்தில் உச்சம். எனவே இவன், நிறைய காதல், நிறைய கல்யாணம் பண்ணிக்கொள்வான். இதற்கு, இந்த பையன் அரசியலில் பங்கெடுப்பது முக்கிய காரணமாகும். புதன், சந்திரன் பரிவர்த்தனை.இவனுக்கு அரசியல் கட்சியில் பதவி கொடுக்காவிட்டால், அந்த கட்சியை அழித்தே விடுவான். அப்பேர்ப்பட்ட ஜாதகமிது. நடப்பு ராகு தசை. குரு புக்தி. எப்போதும் யாருக்கும் பணிந்து நடந்துகொள்ளமாட்டான்.இவன் ஜாதகத்தில், செவ்வாய் 8-ஆம் அதிபதியாகி, நீசபங்கமாக உள்ளார். ஆயுள் பற்றிய கவலை வேண்டாம். இவ்விதம் 8-ஆம் அதிபதி நீசபங்கமாக இருப்பின், திருக்கடையூர் சுவாமிக்கு, அப்போது அர்ச்சனை செய்யவும். 

Advertisment

ரா. சண்முகநாதர், மதுரை.
([email protected])

வேலை மாறுதல், சம்பள பாக்கி, உள்ளூர் உத்தி யோகம், சொந்த வீடு பற்றி கேட்டுள்ளார்.

30-10-1987-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம்.தற்போது குரு தசை நடக்கிறது. இது 12-ஆமிடமான விரயத்தில் இருந்து நடக்கிறது. அவர் 6-ஆமிட அதிபதி சாரத்தில் நிற்பதால், வேலையை விட்டு நீக்கிவிட்டார். எனினும் தற்போது குரு தசையில், செவ்வாய் புக்தி 2026 ஜனவரிமுதல் 2027 ஜனவரிவரை. செவ்வாய், 8-ஆம் அதிபதியாகி, 6-ல் மறைந்து உள்ளதால், உங்கள் வழக்குகள் தள்ளுபடி ஆகிவிடும். நீங்கள் கேட்டதுபோல, சொந்த இடத்தில் வேலை கிடைக்கும். வரவேண்டிய பணமும் வந்துவிடும். இந்த ஒரு வருட காலத்திற்குள், சொந்த வீடு வாங்க, ஒரு அட்வான்ஸ் கொடுத்துவிடுங்கள். அடுத்து, 2027-ல் குரு தசை, ராகு புக்தி ஆரம்பித்துவிடும். அது  ரொம்ப அலைச்சலைத் தரும். எனவே கொஞ்சம் முன்யோசனையு டன் இருப்பது அவசியம்.இவ்விதம் 6-ஆமிடத்தில் செவ்வாய்+ புதன்+கேது எனும் அமைப்பு உள்ளவர்கள் வேலை செய்யும் இடத்தில், மௌனமாக இருப்பது நல்லது. இல்லையெனில் வழக்கு களை சந்திப்பது, வீண் சண்டை, பண இழப்பு என ஏற்பட்டுவிடும். இந்த அமைப்பு ஜாதகத் தில் உள்ளவர்கள் அடிக்கடி நரசிம்மரை வணங்கவேண்டும்.

Advertisment

பெருமாள் நாச்சியார்
([email protected])

தனது மகளின் சொந்த வீடு, அரசு வேலை வாய்ப்பு பற்றி கேட்டுள்ளார்.

கிருத்திகா 27-1-1995-ல் பிறந்தவர். மகர லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி புதன்+சூரியன் சேர்க்கை. எனவே அரசு பணிக்கு வாய்ப்புண்டு. நடப்பு சுக்கிர தசை, குரு புக்தி 2027 அக்டோபர்வரை. அதற்குள் அரசுப் பணி கிடைத்துவிடும்.வீடு பற்றி கேட்டுள்ளார். 4-ல் கேது 4-ஆம் அதிபதி 8-ஆமிடத்தில் மறைவு. எனவே மனை தோஷம் இருப்பதால், இவர் பெயரில் வீடு வாங்க இயலாது. இவரது தந்தை பெயரில், கடனில் வீடு வாங்க முடியும்.அரசுப் பணி வேண்டுவோர்  ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு தீபமேற்றி வழிபடலாம்.

ஜி. ராஜேந்திரன், கோயம்புத்தூர்.

தனது மகள், குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். அங்கு அவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேட்டுள்ளார்

ஜனனி 4-12-1986-ல் பிறந்தவர். மிதுன லக்னம், தனுசு ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். நடப்பு குரு தசையில் சனி புக்தி 2027 அக்டோபர்வரை. அதில் 2026 வருட கடைசிக்குள், வேலை கிடைத்துவிடும். வெளிநாட்டி-லேயே வேலை கிடைக்கும். இந்த ஜாதகிக்கு குருவும். செவ்வாயும் ஒரே ராசியில் உள்ளனர்.இவ்விதம் குருவும், செவ்வாயும் சேர்க்கைபெற்று நின்ற ஜாதகர்கள், எப்போதும், திருச்செந்தூர் முருகனை வணங்கவேண்டும். 

செல்வராஜ்

கிராமத்தில் காலி மனையை விற்பனை செய்ய முடியவில்லை. ஏதேனும் தோஷம் உள்ளதா? எப்போது விற்கமுடியும்?

30-9-1958-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். இவரது 4-ஆம் அதிபதியான சந்திரன், கேது மற்றும் செவ்வாய் என இரு கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு. பாப கர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். அதனால், அந்த 4-ஆமிட அதிபதியால் எந்த பலனும் ஜாதகருக்கு கொடுக்க முடியவில்லை. குருபார்வை, மனை வாங்கி கொடுத்துவிட்டது. பாப கர்த்தாரி யோகம் பலன் கொடுப்பதை தடுக்கிறது. நடப்பு குரு தசை. இதில் புதன் புக்தி 2027 ஜனவரிவரை. புதன் 6-ல் உச்சம். எனவே ஒரு வழியாக, இப்போது மனையை விற்று விடுவீர்கள். இவ்விதம் மனை தோஷம் உள்ளவர்கள். உங்கள் குலதெய்வக் கோவி-ல் இருந்து, கொஞ்சம் மண்ணை, ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்குவது, தோஷ பரிகாரமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.