விவாகரத்து
இன்று வீட்டுக்கு வீடு..
விவகாரம் வெளியில்
தெரிந்தால்
விஷம் சாப்பிடுவேன் 
என்கிற காலம் போய்..
வீரமாய் பெண்கள்
விவேகமாய் செயல்பட்டு
வாழ்ந்து காட்டுகிறார்கள்...

Advertisment

சென்ற தலைமுறையோடு
தலைவிதியும் மாறிப்போச்சு..
புதிய விதியை
தானே எழுதிக்கொள்வதாய்
சொல்கிறார்கள்..

Advertisment

விவாகரத்து விமர்சனம்
செய்யப்படுவது
அவரவர் விதிப்படியே..
ஏழாமிடம் கெட்டுப்போனவனுக்கு
எத்தனை மனைவி வந்தாலும்
ஏகப்பட்ட பிரச்சினைதான்..

சூரியன், செவ்வாய் 
எங்கு சேர்ந்தாலும்..
பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்று
அடித்து சொல்லும்
ஜோதிடரிடம் காரணம் 
கேட்டால் பிதற்றுவார்...
உண்மையில்
காலபுருஷனுக்கு
எட்டுக்குரியவன் செவ்வாய்
எவருடன் சேர்ந்தாலும்
இழப்புதான்..

Advertisment

பெண்ணுக்கு களத்திரகாரகன் 
செவ்வாய் என்பதால் 
செவ்வாயுடன் பாவி சேர்ந்தால்
கணவன் உயிர் போகும் அல்லது
கூட இருந்து உயிரை எடுப்பான்..

கெட்ட பழக்கவழக்கம்
கொண்டவன்..
பெண்ணை கெட்டுப்போக
செய்பவனுமே
கணவனாய் வருவான்..
இந்த ஜென்மத்தில்
இப்படித்தான்
வாழவேண்டும் என்றால்
அப்படித்தான் வாழமுடியும்...

கெட்ட பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை
எனக்கு மட்டும் நரக வாழ்க்கை என
ஏங்கி சொல்லும் பெண்ணுக்கு
தெரியாது..
ஏற்கெனவே கெட்டுப்போன பெண்ணின்
வ-யும் வேதனையும்...

பட்ட கஷ்டம்
படும் கஷ்டம் பெண்ணுக்கே தெரியும்..
புரளி பேசுபவரும்
பொறாமையில் பேசுபவரும்
கஷ்டம் உணராதவர்கள்..
பணம் இருந்தால்
பாசம் வரும் என்பதெல்லாம்
பொய்யடா..
தானாய் வரும் பாசம் தானடா
காலம் முழுவதும் வரும்..

நம்மை ஒருவர் ஏமாற்றினால்
நம்மைவிட ஒருவரிடம்
ஏமாந்து போவார்கள்..
ஏமாந்தவர்களின் வ-
ஏமாற்றுபவர்களுக்கு தெரியாது..
இன்னொருவரிடம் ஏமாந்த பிறகும்
திருந்தாத ஜென்மங்கள்
ஒருபோதும் திருந்தாது..
தான் செய்த தவறை 
உணராதவர்கள் உண்டு..
தெரிந்தே தவறு செய்பவர்களும் உண்டு..
பிறர் வ- தெரிந்து 
நடப்பவன் வாழ்க்கையில்தான்
பெரும் வ- கொடுக்கப்படுகிறது..
வ-களை கேட்பதைவிட
வழிகளை கொடுப்பவனே
இறையாகிறான்...

விவாகரத்து வராமல் இருக்க
ஏழாமிடத்தைவிட
ஒன்பது, பதினோராமிடம்
வலுக்காமல் இருக்க வேண்டும்...

ஏழாமிடம் கெட்டுப்போனவனுக்கு
கெட்ட தசை வந்ததும்
உன் சீதை தூக்கி செல்லப்படுவார்!

மறுமணம் நடக்காமல் இருக்க..
நடைமுறையில்
நிறைய பரிகாரம் உண்டு..
பரிகாரத்தை பரிகாசம் செய்பவனுக்கு
பலன் எப்போதும் கிட்டாது!
திருமணம் தாமதம் என்றால்
தாமதமாய் செய்துகொள்..
அக்கம் பக்கம் என்ன சொல்வார்களோ
என்றால்..
மறுமணம்தான் தீர்வாகும்..

மறுமணம் விதியென்றால்
இன்னொரு முகூர்த்தத்தில்
செய்வது மதியப்பா..
அதற்கும் விதி வேண்டும் என்பதை
மறக்காதப்பா..

பிடிக்காத திருமணத்தில்
யாருக்கும் தெரியாமல்
பிடித்தவருடன் வாழ்பவர்களும் உண்டு..
தப்பான உறவு வைத்துகொண்டு
தோஷம் கழிந்து
கோடீஸ்வரனாகிய ஜாதகமும் உண்டு...

பு-யைப் பார்த்து பூனை சூடு 
போட்டவர்களுக்கு
எத்தனை மனைவி வந்தாலும்
வாழ்க்கை மாறாது...
களத்திர ஸ்தானம் கெட்டவனுக்கு
வாழ்க்கையே கலவரம் தானப்பா...

நீயின்றி நானில்லை 
என்கிற தம்பதிகள்
நிலையாய் பூமியில் இல்லை...
இருப்பதை ஏற்று வாழ்பவனுக்கே
இல்லறம்
இனிதாய் இருக்கும்..


செல்: 9600353748