1931-ஆம் ஆண்டு முறையான சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என 94 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (ஈஈடஆ), வரவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. பல தசாப்தங்களாக நீடித்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பால் சமூகத்தில் தேவைப்படும் பிரிவினருக்கு அரசின் நலத்திட்டங்களை கொண்டு செல்வதற்கும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்கும், சாதி அடிப்படையிலான புள்ளி விவரங்கள், சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார கட்டமைப்பை வலுபடுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்திய விடுதலைக்கு முன்பு 1931-ஆம் ஆண்டு முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
அதன்பின் 1941-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகையில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதில், சாதி பற்றிய தரவுகளைச் சேகரித்த போதிலும் அவை ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதற்கு 2-ஆம் உலகப்போர் உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/censes.jpg)
எனவே, 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பே தற்போது வரையிலான இறுதி சாதிவாரி கணக்கெடுப்பாக உள்ளது.
1951 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு களில் சேகரிக்கப்பட்ட தரவுகளில் பட்டியல் சாதிகள் (நஈள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (நபள்) மற்றும் பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த தனிநபர்களின் எண்ணிக்கை அடங்கும். ஆனால் நஈள் மற்றும் நபள் தவிர பிற சாதிக் குழுக்களின் உறுப்பினர்கள் கணக்கிடப்படவில்லை.
சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு, சாதி பற்றிய கேள்விகளை மத்திய அரசு தவிர்த்து வந்தது.
அதன்பிறகு, மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் எந்த இந்திய அரசாங்கமும் சாதி உறுப்பினர்களின் முழுமையான எண்ணிக்கையை மேற்கொள்ளவில்லை.
மக்கள்தொகை முதல் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு வரை 2010-இல், பத்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நெருங்கியபோது, அப்போதைய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதி/சமூகத் தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
பிரதமரின் அலுவலகம் இந்த கோரிக்கையை இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் (தஏஒ) அலுவலத் திற்கு அனுப்பியது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. 2010 மே மாதத்தில், ஆர்.ஜே.டி., எஸ்.பி., தி.மு.க, ஜே.டி.யு. போன்ற கட்சிகள் மற்றும் பா.ஜ.கவில் சில ஒ.பி.சி. எம்.பி.க்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கோரியதை அடுத்து, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இதுதொடர்பான பல்வேறு நடைமுறை சிக்கல்களைப் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
சிதம்பரம் கூறியதாவது: எண்ணிக்கை மேற்கொள்வது மற்றும் அதனை தொகுத்து பகுப்பாய்வு செய்வது இரு வெவ்வேறு விஷயங்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது பார்வையால் பெறப்படும் தரவுகளுக்கானது. இதில் 21 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர்.
அவர்கள் கேள்விகளை கேட்டு, பதிலளிப்பவர்களின் பதில்களை எழுதி வைத்தல் மட்டுமே செய்யப்பட வேண்டும். கணக்கெடுப்பாளர் விசாரணை நடத்தும் அதிகாரியாக செயல்பட முடியாது என்றார்.
ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யு.பி.ஏ) கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொடர் அழுத்தத்தால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் தலைமையில் ஒரு அமைச்சரவை குழுவை (ஏர்ங) நியமித்தது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், 2010 செப்டம்பரில் மத்திய அமைச்சரவை தனி சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (நஊஈஈ) நடத்த முடிவு செய்தது.
சாதிவாரி கணக்கெடுப்பு 2011 ஜூன் மாதத்திலிருந்து தனிப் பயிற்சியாக நடத்தப்பட்டு, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு (பிப்ரவரி-மார்ச் 2011-இல் நடத்தப்படும்) முடிந்ததும், செப்டம்பர் 2011-க்குள் படிப்படியாக முடிக்கப்படும் என்று அரசு கூறியது. இந்த மாற்றம் மூலம், சாதி கணக்கெடுப்பு கோரிக்கையின் அரசியல் நோக்கம் பாதிக்கப்பட்டது.
சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு சுமார் ரூ.4,900 கோடி செலவில் நடத்தப்பட்டது. அதன் தரவுகள் 2016-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகங்களால் வெளியிடப்பட்டன. ஆனால், சாதி சார்ந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அந்த சாதி தரவுகள் சமூக நீதித் துறை அமைச்சகத் திற்கு ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அந்த தரவுகளை வகைப்படுத்தும் பணிக்காக அப்போதைய நிதி ஆயோக் துணைத் தலைவரான அரவிந்த் பனாகரியாவின் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தரவுகள் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை.
சமீபத்திய முன்னேற்றங்கள்
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய பா.ஜ.க-வைத் தவிர்த்து மற்ற அனைத்து அரசியல்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தன. பீகாரில் கூட, பாஜக இந்த கோரிக்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தது.
அரசின் முக்கிய நிலைகளில் ஒ.பி.சி. களுக்கு முன்னுரிமையில்லாத விவாதத்தை பற்றி ராகுல் காந்தி பேசினார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், 2019-இல் வென்ற 52 இடங்களில் இருந்து இம்முறை 99 இடங்களைப் பெற்றது. அதே நேரத்தில், பா.ஜ.க. 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பெற்ற கட்சி பெரும்பான்மையை இழந்து, உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது. இந்நிலையில், பல மாநில அரசுகள் தங்களது சொந்த சாதி கணக்கெடுப்புகளின் அடிப்படையில் ஒபிசிக்களை துணைக்குழுக்களாக பிரித்து ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றன. இவ்வாறான கணக்கெடுப்புகள் கணக்கெடுப்பு என்ற பெயரால் வழங்கப்படுகின்றன, ஏனெனில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அரசியல் முற்போக்கு சட்டப்பூர்வ கட்டுப்பாட்டில் மத்திய அரசின் உரிமைக்குட்பட்டதாகும் இதற்கு முந்தையதாக, 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி, அரசியல் மற்றும் அரசமைப்பு அமைப்பான தேசிய பின்தங்கிய வகுப்புகளுக்கான ஆணையம் (சஈஇஈ), மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒபிசி மக்களின் எண்ணிக்கையை சேகரிக்க அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், 2021 ஜூலை 20-ஆம் தேதி, மத்திய அரசு பாராளுமன்றத்தில், தெளிவான கொள்கை முடிவாக, தற்போது பதிவு செய்யப்பட்ட நஈள் மற்றும் நபள் தவிர வேறு எந்த சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் நடைபெறாது என அறிவித்தது. இதையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல மனுக்கள் தற்போதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அடுத்து என்ன நடக்கப் போகிறது
2021-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்றால் தாமதமானது. அதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கணக்கெடுப்பு எந்த நேரத்திலும் தொடங்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட வில்லை. அதே நேரத்தில், சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அரசின் மீது உள்ள அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நடவடிக்கை ரீதியாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மிகப்பெரிய பணியாகும். இதில் 2 முக்கிய பகுதிகள் உள்ளன:
வீட்டு பட்டியலிடல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு
2021-ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு கேள்வித்தாள், இந்த முயற்சி நிறுத்தப் படுவதற்குமுன் ஏற்கனவே இறுதியாக முடிவுசெய்யப்பட்டது. 2024 அக்டோபரில், அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் (தஏஒ) மிருதுஞ்ஜய் குமார் நாராயணின் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல் தொகுதிகளின் எண்ணிக்கைகளைப் பாதிக்கும். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மீளவரையறுக்கும் பணிகள், 1971 முதல் நிறுத்தப்பட்டு வருகின்றன; இது 2026-க்கு பின் நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் வரை உறைவாக உள்ளது.
அதேபோல், அரசு அறிவித்துள்ள மாநிலங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் திட்டமும், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மீள்வரையறை (க்ங்ப்ண்ம்ண்ற்ஹற்ண்ர்ய்) ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையிலே அமல்படுத்தப்படும்.
சாதி கணக்கெடுப்பு, குறிப்பாக ஓ.பி.சி. பிரிவுகளில், சில சமூகங்களுக்கு ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டு மெனும் கோரிக்கைக்கு மற்றும் சாதி வகைகளுக்குள் துணை வகைப்படுத்தல் செய்ய வேண்டுமெனும் அழுத்தத்திற்கு உறுதியான ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/censes-t.jpg)