பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், முதலமைச்சர் நிர்ணயித்துள்ள 2030-31-ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லி-யன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை அடைந்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் 08.11.2022 அன்று சென்னை டைடல் பார்க்கில் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத் தின் சார்பில் நடைபெற்ற "நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் கலந்து கொண்டு பஆசநஆங மற்றும் பஆஙஈஞஊ ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார்.
இக்கொள்கை மூலம், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர் களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும். இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மேலும் டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து 251.54 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள "பஆசநஆங” மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மின் வாகனங்கள் (ஊய), தொழில் இயந்திரங்கள், கடல்சார் தொழில்நுட்பம் (ஙஹழ்ண்ய்ங்), பசுமை சக்தி (ஏழ்ங்ங்ய் ஊய்ங்ழ்ஞ்ஹ்) மற்றும் பெட்ரோ கெமிக்கல், உயிரியல் தொழில்நுட்பத்துறை (இண்ர்ற்ங்ஸ்ரீட்), தொழிற்சாலைகளின் தானியக்கம் (ஒய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் ஆன்ற்ர்ம்ஹற்ண்ர்ய்) சார்ந்த திட்டங்களுக்கு, ரோபாடிக்ஸ் (தர்க்ஷர்ற்ண்ஸ்ரீள்), உற்பத்திப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு (ஒய்க்ன்ள்ற்ழ்ஹ் ஒர்ப), ஆக்மென்டட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட் / மிக்ஸ்டு ரியாலிட்டி (ஆத / யத / ஙத), சேர்க்கை உற்பத்தி (ஆக்க்ண்ற்ண்ஸ்ங் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ்), டிஜிட்டல் டிவின்ஸ் (உண்ஞ்ண்ற்ண்ஹப் பஜ்ண்ய்ள்) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கிடும் வகையில் பஆசநஆங திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகு திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
டிட்கோ மற்றும் ஏஊ ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து ரூபாய் 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3உ அச்சிடுதல் தொழில்நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (ஆக்க்ண்ற்ண்ஸ்ங் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் ஈங்ய்ற்ழ்ங்) பஆஙஈஞஊ திறன்மிகு மையத்தினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஏஊ ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உபயோகப்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள பஆஙஈஞஊ உதவும். மேலும், குறு, சிறு நிறுவனங்கள் / புத்தொழில்கள் / பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு சாத்தியக்கூறு ஆய்வுகள் / முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் (டழ்ர்ற்ர்ற்ஹ்ல்ங் ஆக்க்ண்ற்ண்ஸ்ங் டஹழ்ற்ள்) போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகளும் வழங்கும்.
அறிவுசார் சொத்துரிமை (ஒய்ற்ங்ப்ப்ங்ஸ்ரீற்ன்ஹப் டழ்ர்ல்ங்ழ்ற்ஹ் தண்ஞ்ட்ற்ள்) மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3உ அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில்நுட்பங் களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது, பஆஙஈஞஊ-வின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த ஜூலை மாதம் "டஸோ” (உஹள்ள்ஹன்ப்ற்) நிறுவனத்தின் திறன்மிகு மையத்தை டைடல் பூங்காவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், தொழிற்சாலைக்கு செல்லாமலே, அச்சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் திறன்மிகு மையங்கள், முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் "நான் முதல்வன்'' திட்ட நோக்கத்துடன் இணைந்து செயல்படும்.
மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (ஒஏதமஆ) மற்றும் உஊ உழ்ர்ய்ங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை முதலமைச்சர் காணொ-லிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பஒஉஈஞ நிறுவனமும் ஏபச நிறுவனமும் இணைந்து பொது வசதி மையம் (ஈர்ம்ம்ர்ய் பங்ள்ற்ண்ய்ஞ் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) அமைப்பதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில், வெப்ப சிகிச்சை (ஐங்ஹற் பழ்ங்ஹற்ம்ங்ய்ற்), மேற்பரப்பு பூச்சு (நன்ழ்ச்ஹஸ்ரீங் ஈர்ஹற்ண்ய்ஞ்) மற்றும் வான்வெளி உபகரணங்களின் பிந்தைய செயலாக்கம் (டர்ள்ற் டழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ்) போன்றவற்றிற்கான வசதிகளை அமைக்க அதிகம் செலவாகும். இந்த பொது வசதி மையங்கள் (ஈர்ம்ம்ர்ய் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ் ஈங்ய்ற்ழ்ங்ள்) அமைக்கப்படுவதன் மூலம் தொழிலகங்களுக்கான உற்பத்தி செலவினங்கள் வெகுவாக குறைக்கப் பட்டு, உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (ஒஏதமஆ), உஊ உழ்ர்ய்ங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப் பட்டது.
சமீப காலங்களில், விவசாயம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் உழ்ர்ய்ங் எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலி-ன் “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உள்ளடக்கிய இந்த திராவிட மாடல் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை முத-லில் நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.
இதில் தொழில்துறையின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்பதை நான் சொல்லி- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால், தொழில்துறையானது மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான நம்முடைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருக்கு முன்பு துறைச் செயலாளராக இருந்த முருகானந்தம், இ.ஆ.ப., இப்பொழுது இருக்கக்கூடிய நம்முடைய தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் இருக்கக்கூடிய அதிகாரி களையும் நான் மனதார இந்த நேரத்தில் பாராட்ட, வாழ்த்த கடமைப் பட்டிருக்கிறேன்.
மேம்பட்ட உற்பத்தி மையம்
(ஆக்ஸ்ஹய்ஸ்ரீங்க் ம்ஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் ஐன்க்ஷ-ஆஙஐமஇ) தொடர்பான மாநாடாக இது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (ஒய்க்ன்ள்ற்ழ்ஹ் 4.0) நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக நாம் எட்டுவோம்!
தற்போதுள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். அவற்றை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக உருவாக்க வேண்டும். அதன் மூலமாக மின்னணுமயமாக்கப்பட்ட உற்பத்தியை செயல்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி பலமடங்கு உயரும்.
295 பில்-லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசி யாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
இவற்றோடு நாம் மனநிறைவு அடைந்துவிடாமல் 2030-ஆம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லி-யன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் நமது அரசு வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நமது இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டம்தான் அது என்னுடைய கனவுத் திட்டம் என்று கூட சொல்ல மாட்டேன், நம்முடைய கனவுத் திட்டமாக விளங்கக்கூடிய "நான் முதல்வன் திட்டம்''. நமது இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கச் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட திட்டம் தான் இந்தத் திட்டம்!
தமிழ்நாட்டில் இருக்கின்ற திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், உலகளாவிய பங்களிப்புடன் “அறிவுசார் நகரம்”(ஃய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் ஈண்ற்ஹ்) ஒன்று உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
"தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (பஆசநஒஉஈஞ) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங் களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் டஹழ்ந்ள்) நிறுவ ஊக்குவிக்கப்படும்'' என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படியே, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்று அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோரு டனான சந்திப்பில் நான் அதை அறிவித்தேன். இவையெல்லாம், அறிவுசார் மனித வளத்தை உருவாக்கி, மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கி, ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள்.
மேம்பட்ட உற்பத்தி தொடர்பாக உலகப் பொருளாதார மன்றமும் (ரர்ழ்ப்க் ஊஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ எர்ழ்ன்ம்-ரஊஎ), தமிழ்நாடு தொழில் வழிகாட்டி (ஏன்ண்க்ஹய்ஸ்ரீங்) நிறுவனமும் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். உலக அளவிலான நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான திட்டக்கூறுகளை வழிநடத்துவது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வெற்றிப் பாதையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இது ஏதுவாக அமைகிறது.
சூரிய எரிசக்தி, மின்னணுவியல், மின்வாகனங்கள், வான்வெளி & பாதுகாப்பு, தொழில்நுட்ப ஜவுளிகள், கூட்டு உற்பத்தி (ஆக்க்ண்ற்ண்ஸ்ங் ம்ஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ்) முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் (3உ உங்ள்ண்ஞ்ய் & டழ்ண்ய்ற்ண்ய்ஞ்), ரோபோடிக்ஸ் (தர்க்ஷர்ற்ண்ஸ்ரீள்) ஆகியவை புதிய தொழில் வாய்ப்பு உள்ள துறைகளாக அறியப்பட்டிருக்கிறது. இந்தத் துறைகளின் உற்பத்தியில் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும், தொழில்முறை 4.0 தரத்தையும் அறிமுகப்படுத்தி, தமிழகத் தொழில்துறைச் சூழலை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்துவது நமது தொழில் சூழலை மேலும் செம்மைப்படுத்த வழிவகுக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.
மேம்பட்ட உற்பத்தியைப் (ஆக்ஸ்ஹய்ஸ்ரீங்க் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ்) பொறுத்தவரையில், தமிழ்நாடு பலபுதிய முயற்சிகளை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்திட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கென மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அளித்திட அரசு முனைந்திருக்கிறது.
திறன்மிகு மையங்களை அமைக்கக்கூடிய முயற்சியில், முதலாவதாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, சென்னை டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (பஆசஈஆங) இங்கு என்னால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி (ஐன்க்ஷ ஹய்க் நல்ர்ந்ங் ம்ர்க்ங்ப்) அடிப்படையில் இயங்கும் பஆசஈஆங, மாநிலமெங்கும் இருக்கின்ற கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன்பயிற்சி, புதிய பொருட்கள் உருவாக்குதல் நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும்.
மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களின் படிப்புக்கும், பணிக்கும், இடையூறு எதுவுமில்லாமல், மெய்நிகர் சூழல் வழியாக பயிற்சி அளிக்கப்படும். புதிய பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கும், சிறந்த பயிற்சிகளுக்கும், சூழலமைப்பு அமைத்துக் கொடுக்கப்படும். தொழில்துறையினருக்கு ஒரு சாதகமான களம் உருவாக்கித் தரப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நவீன உத்திகளுக்கும், புதுப்புது திட்டப்பணிகளுக்கும் வழிவகை செய்து தரப்படும்.இதன்மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில் மாநிலமாக வளர்ச்சி அடைவது உறுதி செய்யப்படும்.
டிட்கோ நிறுவனம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான "சீமென்ஸ்' உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட & மேம்பட்ட உற்பத்தி மையம் (பஆசநஆங) மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (பஆஙஈஞஊ) அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் துவக்கிவைக்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டாவதாக, திருபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 தொழில் புத்தாக்க மையங்கள், (ஒய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் ஒய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் ஈங்ய்ற்ழ்ங்ள்) இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள், தொழில்துறை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்கநிலை தொழில்முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித் துறையின் உற்பத்தி மற்றும் போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும். ஒவ்வொரு மையமும் 23,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றின் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுமையான யோசனைகள், 200-க்கும் மேற்பட்ட முன்மாதிரிகளை மதிப்பீடு செய்யவும், 30-க்கும் மேற்பட்ட தொடக்க காலப் பட்டப்படிப்பு நிலையில் உள்ளவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த மையங்களை இயக்குவதற்காக ஃபோர்ஜ் (எர்ழ்ஞ்ங்) எனப்படும் கோயம்புத்தூர் இன்னோவேஷன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டருடன் (ஈர்ண்ம்க்ஷஹற்ர்ழ்ங் ஒய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் ஹய்க் இன்ள்ண்ய்ங்ள்ள் ஒய்ஸ்ரீன்க்ஷஹற்ர்ழ்) சிப்காட் இணைந்து செயல்பட இருக்கிறது.
மூன்றாவதாக, தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் "மினி டைடல் பூங்காக்கள்” (சங்ர் பண்க்ங்ப் டஹழ்ந்ள்) அமைக்கப் படும் என்று அறிவித்திருந்தேன். அதனடிப்படையில் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்று என்னால் அடிக்கல் நாட்டப் பட்டிருக்கிறது. இந்தப் பூங்காக்கள் செயல்படத் துவங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நான்காவதாக, வழிகாட்டி நிறுவனமும்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு (ஒய்க்ன்ள்ற்ழ்ஹ் 4.0 ஙஹற்ன்ழ்ண்ற்ஹ் நன்ழ்ஸ்ங்ஹ்) இன்றைய நாள் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தொழில்துறை மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற துறைகளும், மேம்பட்ட உற்பத்தித் தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங் களைத் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி வருகின்றது.
2877 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியினால் ஏற்படவுள்ள தொடர் மாற்றங்களை, நமது தொழிலாளர்கள் சுலபமாகக் கையாள முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை (உஒபஉந), தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துடன் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்திடவும், புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்திடவும், அத்துறையினரின் பிரச்சனைகள் மற்றும் சவால்களைத் தீர்த்து வைக்கக்கூடிய வகையில், "வளர் 4.0'' என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது.
நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் நம்மிடம் இருக்கிறது. அதற்கான பணியாளர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு திறன்மிகு மையங்களும், புத்தாக்க மையங்களும் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்குத் தயார்நிலைப்படுத்திக் கொள்வதற்கான நம்முடைய அரசின் முயற்சிகளில் நீங்களும் பங்கேற்று, ஒத்துழைக்க வேண்டுமென்று என்று நான் எல்லோரையும் அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வளர்ச்சிதான் நம் மாநிலத்தின் வளர்ச்சி!
நம் மாநிலத்தின் வளர்ச்சிதான் நம் நாட்டின் வளர்ச்சி!
உலக அரங்கில் தமிழ்நாட்டினை நோக்கி கவனம் ஈர்க்கக்கூடிய முயற்சிகளை நிச்சயமாக இவை அனைத்தும் அமைய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு இந்த நல்ல வாய்ப்பிற்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (பஆசநஒஉஈஞ) சிறப்பான வளர்ச்சி மிக்க மையங்களை தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உருவாக்குதல். 1971-இல் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் விரிவாக்கப்பட்டது. இன்றும் கூட இந்தக் கழகம் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாடு அரசாங்கம், முற்போக்கு சிந்தனையுடனும், தாராள / தயாள திறனும் கொண்டது. இந்த சிறு தொழில் முன்னேற்றக் கழகமானது அரசாங்கத்தின் வருமானம் செலவு, கடன் தொடர்புடைய மற்றும் மற்ற பல சலுகைகள் உள்ளடக்கிய சிறு அளவு தொழிலை முக்கியமாக சுய வேலைவாப்புக்களை ஊக்குவித்தலை நடைமுறைப்படுத்துகிறது. முக்கியக் குறிக்கோள் யாதெனில் சிறு அளவு தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்தல், மேம்படுத்தும் நடவடிக்கைகள் பின்வருமாறு.
அடிப்படை வசதிகளை உருவாக்குதல், இது ஒரு முக்கிய நடவடிக்கைகளாகும். அந்த வசதிகளான சாலைப் போக்குவரத்து, சாக்கடை நீர், மழை நீரை வடிகட்டுதல், மின்சார விளக்குகள், நீர் வசதி மற்றும் பல போன்றவற்றை தொழிற்பேட்டையானது அடிப்படையாகக் கொண்டு வசதிகளைச் செய்து தருகிறது. தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகமானது தொழிற்சாலை அமைத்து மேம்படுத்துவதற்கான பல்வேறு இடங்களில் ஆராய்ந்து, இடத்தினை தேர்வு செய்து, தொழிற்சாலைக்கு கொட்டகையை வெவ்வேறு அளவில், இடத்தில் அமைத்து, அதற்குத் தேவையான அடிப்படை / தேவையான வசதிகளை மேம்படுத்தி மற்றும் அதற்குச் சுலபமான அடிப்படை தவணை களையும் ஒதுக்கிட்டுள்ளது. இவ்வாறு இட வசதிகளை கட்டுவதற்கு முன், கழகமானது தொழில் தொடங்கு பவர்களின் தொழிற்சாலையின் இடம் மற்றும் கொட்டகைகளின் தேவைகளைப் பற்றிய கருத்தாய்வினை நடத்தி மதிப்பிடவேண்டும். இந்தக் கழகமானது 76 தொழிற்பேட்டையைப் பராமரித்து வருகிறது. இதில் 36 ஆனது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு சிட்கோ கழகத்தால் பேணிக்காக்கப் பட்டது. இந்தக் கழகம் மட்டும் 44 தொழிற்பேட்டைகளை உருவாக்கி யுள்ளது. இந்தத் தொழிற்பேட்டைகள் வெவ்வேறு கிராம மற்றும் பின் தங்கிய இடங்களில் அமைந்துள்ளது. நான்கு - ஐந்து ஆண்டுத்திட்டத்தின் அடிப்படையில் திட்ட முறைகளை இந்தக் கழகமானது நடைமுறைப் படுத்தியது.
கழகமானது, சிறு அளவு தொழில் பிரிவானது மூலப்பொருட்களைப் போட்டியிட்டு சந்தையில் இருந்து வாங்க பெரும் முயற்சியை மேற்கொள்கிறது. இது தான் கழகத்தின் அடிப்படை நோக்கமாகும். தேவைகளின் அடிப்படையில் மூலப்பொருள்களை சிட்கோவானது கையாளுகிறது.
கழகமானது, சிறு அளவு பிரிவுகளுக்கு பொருட்களின் வியாபாரத்துக்காக உதவுவதன் மூலம் இந்த சிறு பிரிவு களானது உண்மையான வெற்றியை அடைகிறது. சந்தை உதவியளிப்பு திட்டத்தினை கழகமானது அடிப்படை யாகக் கொண்டு எஸ்எஸ்ஐ பிரிவுக்கு பொருட்களின் முதலீட்டுக்கு எந்தவித தடைகளும் ஏற்படவில்லை. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய அரசாங்கத் துறை நடத்தும் ஏலக் குத்தகைகளில் இந்தக் கழகமானது பங்கேற்கிறது. 1998-99-இல் சிட்கோவின் விற்பனை மதிப்பானது ரூபாய் 500 லட்சமாகும். இதனால் எஸ்எஸ்ஐ பிரிவானது பொருட்களின் விற்பனையை உயர்த்தி, கழகத்தின் மூலம் சரியான இடைவெளியில் வாங்குபவர்கள் -
விற்பவர்களின் கருத்தரங்கு நடத்தப் படுகிறது.
மாற்றங்கள் நிகழும் இந்தத் தருணத்தில், மாநில சிறு தொழிலின் மரபுவழி அல்லாமல் புதுமையான முறையில் கழகமான மேம்படுத்துகிறது.
2.11.1998-இல் சிறு மற்றும் மத்தியத் தொழில் பிரிவின் ஏற்றுமதி சந்தைப் பற்றிய புதிய திட்டமானது நடைமுறைப் படுத்தப்பட்டது. பஆசநபஒஆ-எசஎ சேவை மையத்துடன் இந்தக்கழகமானது இணைந்து ஒரு புதிய இணையதளத் தினை உருவாக்கி, விற்பனை பொருட்களை காட்சித் திரையில் வைத்து, அதன் பின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் துணையானது சிறு பிரிவுத் தொழில் புரிவோர்களுக்கு தேவைப்படுகிறது. எனவே தான் சிட்கோவானது பொது ஏற்றுமதி மேலாளராக இருந்து விதவிதமான சேவைகளை எஸ்எஸ்ஐ பிரிவுகளின் வியாபாரப் பொருட்களுக்கு உதவி புரிகிறது.
ஒவ்வொரு வருடமும் எஸ்எஸ்ஐ பிரிவுகளின் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட விசாரணையானது இந்தியப் பன்னாட்டு வணிக அமைப்பில் கலந்துரையாடப் படும். இந்தக் கலந்துரையில் சிட்கோவும் பங்கேற்றது. இந்த அமைப்பானது, எஸ்எஸ்ஐ பிரிவின் ஏற்றுமதியின் அளவை அதிகப்படுத்துகிறது. அதாவது எஸ்எஸ்ஐ பிரிவின் உள் விற்பனையைவிட ஏற்றுமதியின் அளவின் வளர்ச்சி அதிகமாக இருத்தல் வேண்டும்.