Advertisment

பத்ம விருதுகள்

/idhalgal/general-knowledge/padma-awards-1

ந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.

1978, 1979, 1993 முதல் 1997- ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு போர் சூழலின் போது பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.

பத்ம விருதுகளானது பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளிலும் வழங்கப் படுகின்றன.

பத்மஸ்ரீ விருதானது புகழ்பெற்ற சேவைக்காகவும்; பத்ம பூஷன் விருது உயர்ந்த புகழ்பெற்ற சேவையாற்றி வருபவருக்காகவும்; பத்ம விபூஷன் அபூர்வமான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.

Advertisment

awards

பத்ம விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுகள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுகாரியம், சிவில் சர்வீஸ், வர்த்தகம், தொழில் என எந்த ஒரு பிரிவிலும் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கீழ்க்காணும் பல பிரிவுகளிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கலை: இசை, ஓவியம், சிற்பக்கலை, புகைப்படக் கலை, சினிமா, நாடகம்.

சமூக பணி: பொதுசேவை, அறக்கட்டளை, சமூக திட்டங்களில் ஈடுபாடு.

பொது விவகாரங்கள்: சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல்.

Advertisment

வர்த்தகம் & தொழில்: வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், மேலாண்மை, சுற்றுலா மேம்பாடு, வணிகம்.

மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணத்துவம், ஹோமியோ மருத்துவத்தில் நிபுணத்துவம், சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவம்.

இலக்கியம் & கல்வி: ஊட

ந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.

1978, 1979, 1993 முதல் 1997- ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு போர் சூழலின் போது பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.

பத்ம விருதுகளானது பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளிலும் வழங்கப் படுகின்றன.

பத்மஸ்ரீ விருதானது புகழ்பெற்ற சேவைக்காகவும்; பத்ம பூஷன் விருது உயர்ந்த புகழ்பெற்ற சேவையாற்றி வருபவருக்காகவும்; பத்ம விபூஷன் அபூர்வமான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.

Advertisment

awards

பத்ம விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுகள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுகாரியம், சிவில் சர்வீஸ், வர்த்தகம், தொழில் என எந்த ஒரு பிரிவிலும் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கீழ்க்காணும் பல பிரிவுகளிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கலை: இசை, ஓவியம், சிற்பக்கலை, புகைப்படக் கலை, சினிமா, நாடகம்.

சமூக பணி: பொதுசேவை, அறக்கட்டளை, சமூக திட்டங்களில் ஈடுபாடு.

பொது விவகாரங்கள்: சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல்.

Advertisment

வர்த்தகம் & தொழில்: வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், மேலாண்மை, சுற்றுலா மேம்பாடு, வணிகம்.

மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணத்துவம், ஹோமியோ மருத்துவத்தில் நிபுணத்துவம், சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவம்.

இலக்கியம் & கல்வி: ஊடகம், கல்வி கற்பித்தல், நூல், ஆசிரியர், இலக்கியம், எழுத்தறிவு மேம்படுத்துதல், கல்வி சீர்திருத்தம்.

குடிமை பணிகள்: அரசு பணியாளர்களின் மிக சிறந்த நிர்வாகம் மற்றும் சேவை.

விளையாட்டுகள்: பிரபல விளையாட்டுகள், தடகளம், சாகசங்கள், மலையேறுதல், யோகா, விளையாட்டு சாதனைகள்.

awards

அறிவியல் & பொறியியல்: விண்வெளிப் பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.

மற்றவை: மற்றவைகளில் சேராத இந்திய கலாச்சாரம், மனித உரிமை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரின ஆர்வலர்.

பத்ம விருதுகள் அனைத்து நபர்களுக்கும் பொதுவானது. இனம், மதம், தொழில், பதவி, பாலினம் போன்ற வேறுபாடுகள் காண்பதில்லை.

இவ்விருதுகள் பொதுவாக இறந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனினும் தலைசிறந்த ஒருவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வழங்கலாம்.

இந்த மிக உயர்ந்த பத்ம விருதுகள் ஒருவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுமானால் ஐந்து வருட இடைவெளிக்கு பின்னரே பத்ம விருது வழங்கப்படும். ஆனால் மிகச்சிறந்த நபருக்கு விருது குழுவினரால் இதிலிருந்து விதிவிலக்கு தரப்படும்.

வழக்கமாக ஆண்டுதோறும் அனைத்து மாநிலம் மற்றும் மத்திய ஆட்சி பகுதி அரசுகள், இந்திய அரசின் துறைகள், மத்திய அமைச்சரவை, பாரத ரத்னா மற்றும் பத்ம விருது பெற்றவர்கள் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகிய வற்றிலிருந்து பரிந்துரைகள் பெறப் படுகின்றன. இப்பரிந்துரைகள் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெறப்படுகின்றன. மேலும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவுகளும் பெறப்படுகின்றது.

விருது குழுவானது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் விருது குழுவினரால் விருது வழங்கப்படுவர் பரிந்துரை செய்யப்படுவர். இப்பரிந்துரை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் அனுமதிப்பெற்ற பின்னர் விருது முறைப்படி அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். யாரொருவரும் விருது குழுவினரின் பரிந்துரையின்றி பத்ம விருதினை பெறமுடியாது.

பத்ம விபூஷன்

பத்ம விபூஷன் Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னாவுக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது உயரிய விருது.

பதக்கம் மற்றும் பாராட்டிதழ் வழங்கப்படுகிறது.

இது முதன்முதலிலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறன.

பத்ம விபூஷன் விருதுகள் 2025

முன்னாள் நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் - பொது விவகாரங்கள் - சண்டிகர்

ஒசாமு சுசூகி (மறைவுக்குப் பின்) - தொழில் - ஜப்பான்

திருமதி சாரதா சின்ஹா (மறைவுக்குப் பின்) - கலை - பீகார்

துவ்வூர் நாகேஸ்வர ரெட்டி - மருத்துவம் - தெலுங்கானா

லட்சுமிநாராயண சுப்பிரமணியம் - இசை . கர்நாடகா

எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவுக்குப் பின்) - எழுத்தாளர் - கேரளா

குமுதினி ரஜினிகாந்த் லக்கியா - கலை - குஜராத்

பத்ம பூஷன்

பத்ம பூஷன் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து, இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப் படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசன் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

பத்ம பூஷன் விருதுகள் 2025

ராம்பகதூர் ராய் - ஊடகம், இலக்கியம் மற்றும் கல்வி - உத்திர பிரதேசம்

சாத்வி ரிதம்பரா - சமூக சேவை - உத்திர பிரதேசம்

சேகர் கபூர் - சினிமா - மகாராஷ்டிரா

ஷோபனா சந்திரகுமார் - கலை - தமிழ்நாடு

சுஷில் குமார் மோடி (மறைவுக்குப் பின்) - பொது விவகாரங்கள் - பீகார்

வினோத் தாம் - அறிவியல் மற்றும் பொறியியல் - அமெரிக்கா

டத ஸ்ரீஜேஷ் - விளையாட்டு - கேரளா

பங்கஜ் படேல் - வர்த்தகம் மற்றும் தொழில் - குஜராத்

பங்கஜ் உதாஸ் (மறைவுக்குப் பின்) - கலை - மகாராஷ்டிரா

எஸ். அஜித் குமார் - சினிமா - தமிழ்நாடு

நந்தமுரி பாலகிருஷ்ணா - சினிமா - ஆந்திர பிரதேசம்

ஏ. சூர்ய பிரகாஷ் - இலக்கியம், ஊடகம் மற்றும் கல்வி - கர்நாடகா

ஆனந்த் நாக் - கலை - கர்நாடகா

பிபேக் தேப்ராய் (மறைவுக்குப் பின்) - இலக்கியம் மற்றும் கல்வி - சஈப டெல்-லி

ஜதின் கோஸ்வாமி - கலை - அசாம்

ஜோஸ் சாக்கோ பெரியபுரம் - மருத்துவம் - கேரளா

கைலாஷ் நாத் தீட்சித் - தொல்பொருள் - சஈப டெல்-லி

மனோகர் ஜோஷி (மறைவுக்குப் பின்) - பொது விவகாரங்கள் - மகாராஷ்டிரா

நல்-லி குப்புசாமி செட்டி - வர்த்தகம் மற்றும் தொழில் - தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 19 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது.

கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் வழங்கப் படுகிறது. இது முதன்முதலி-ல் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2--ருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.

பத்மஸ்ரீ விருதுகள் 2025

பத்மஸ்ரீ விருதுகள் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உள்பட 113 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

குருவாயூர் துரை - கலை - தமிழ்நாடு

எம்.டி.ஸ்ரீநிவாஸ் - அறிவியல் மற்றும் பொறியியல் - தமிழ்நாடு

லட்சுமிபதி ராமசுப்பையர் - ஊடகம், கலை மற்றும் கல்வி - தமிழ்நாடு

புரிசை கண்ணப்பா சம்பந்தன் - கூத்து கலை - தமிழ்நாடு

ரவிச்சந்திரன் அஸ்வின் - விளையாட்டு - தமிழ்நாடு

ஆர்.ஜி.சந்திரமோகன் - வர்த்தகம் மற்றும் தொழில் - தமிழ்நாடு

ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - சிற்ப கலை - தமிழ்நாடு

சீனி விஸ்வநாதன் - இலக்கியம் மற்றும் கல்வி - தமிழ்நாடு

வேலு ஆசான் - கூத்து கலை - தமிழ்நாடு

செஃப் கே.தாமோதரன் - சமையல் கலை - தமிழ்நாடு

2025-ஆம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / பிஐஓ / ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.

gk010325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe