இந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.
* 1978, 1979, 1993 முதல் 1997- ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு போர் சூழ-ன் போது பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.
* பத்ம விருதுகளானது பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளிலும் வழங்கப் படுகின்றன.
* பத்மஸ்ரீ விருதானது புகழ்பெற்ற சேவைக்காகவும்; பத்ம பூஷன் விருது உயர்ந்த புகழ்பெற்ற சேவையாற்றி வருபவருக்காகவும்; பத்மவிபூஷன் அபூர்வமான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.
* பத்ம விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுகள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுகாரியம், சிவில் சர்வீஸ், வர்த்தகம், தொழில் என எந்த ஒரு பிரிவிலும் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* கீழ்க்காணும் பல பிரிவுகளி-ருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* கலை: இசை, ஓவியம், சிற்பக்கலை, புகைப்படக்கலை, சினிமா, நாடகம்.
* சமூக பணி: பொதுசேவை, அறக்கட்டளை, சமூக திட்டங்களில் ஈடுபாடு.
* பொது விவகாரங்கள்: சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல்.
* வர்த்தகம் & தொழில்: வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், மேலாண்மை, சுற்றுலா மேம்பாடு, வணிகம்.
* மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணத்துவம், ஹோமியோ மருத்துவத்தில் நிபுணத்துவம், சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவம்.
* இலக்கியம்& கல்வி: ஊடகம், கல்வி கற்பித்தல், நூல், ஆசிரியர், இலக்கியம், எழுத்தறிவு மேம்படுத்துதல், கல்வி சீர்திருத்தம்.
* குடிமை பணிகள்: அரசு பணியாளர்களின் மிக சிறந்த நிர்வாகம் மற்றும் சேவை.
* விளையாட்டுகள்: பிரபல விளையாட்டுகள், தடகளம், சாகசங்கள், மலையேறுதல், யோகா, விளையாட்டு சாதனைகள்.
* அறிவியல் & பொறியியல்: விண்வெளிப் பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
* மற்றவை: மற்றவைகளில் சேராத இந்திய கலாச்சாரம், மனித உரிமை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரின ஆர்வலர்.
* பத்ம விருதுகள் அனைத்து நபர்களுக்கும் பொது வானது. இனம், மதம், தொழில், பதவி, பா-னம் போன்ற வேறுபாடுகள் காண்பதில்லை.
* இவ்விருதுகள் பொதுவாக இறந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனினும் தலைசிறந்த ஒருவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீ-த்து வழங்கலாம்.
* இந்த மிக உயர்ந்த பத்ம விருதுகள் ஒருவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுமானால் ஐந்து வருட இடைவெளிக்கு பின்னரே பத்ம விருது வழங்கப்படும். ஆனால் மிகச்சிறந்த நபருக்கு விருது குழுவினரால் இதி-ருந்து விதிவிலக்கு தரப்படும்.
* வழக்கமாக ஆண்டுதோறும் அனைத்து மாநிலம் மற்றும் மத்திய ஆட்சி பகுதி அரசுகள், இந்திய அரசின் துறைகள், மத்திய அமைச்சரவை, பாரத ரத்னா மற்றும் பத்ம விருது பெற்றவர்கள் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றி-ருந்து பரிந்துரைகள் பெறப் படுகின்றன. இப்பரிந்துரைகள் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெறப்படுகின்றன. மேலும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவுகளும் பெறப்படுகின்றது.
* விருது குழுவானது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
* ஆண்டுதோறும் விருது குழுவினரால் விருது வழங்கப்படுவர் பரிந்துரை செய்யப்படுவர். இப்பரிந்துரை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் அனுமதிப்பெற்ற பின்னர் விருது முறைப்படி அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். யாரொருவரும் விருது குழுவினரின் பரிந்துரையின்றி பத்ம விருதினை பெறமுடியாது.
* ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் 120 மேல் வழங்கப்படகூடாது. என்றாலும், இறந்த பின்னர் வழங்கப்படும் விருது மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் இவற்றி-ருந்து விதிவிலக்கானவை.
* பத்ம விருதுகள் பெற உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் இந்திய அரசிதழில் வெளியாகும். விருதுகளை ரத்து செய்யவும் எந்த ஒரு நபரை விருது பட்டிய--ருந்து நீக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு.
* ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். விருதுகள் பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் இவ்விருதுகளை வழங்குவார்.
* விருதானது அலங்காரமான சான்றிதழ் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். பதக்கம் அணிவிக்கப்படும். இந்த பதக்கத்தை எந்த ஒரு விழாவிலோ அல்லது மாநில நிகழ்ச்சிகளிலோ அணிந்து கொள்ளலாம்.
* விருது பரிசுத்தொகை கொண்டிருக்கவில்லை. இந்த விருதினை பெற்றவர்கள் விருது பெற்ற விவரத்தை கடிதத்தின் உறையில் அழைப்பிதழ், போஸ்டர்கள், புத்தகங்களில் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தவறாக பயன்படுத்தினால், விருது பறிமுதல் செய்யப்படும்.
* இந்த விருதுகளுக்கு எவ்வித பணம் அல்லது ரயில், விமான பயண சலுகைகள் வழங்கப்படு வதில்லை.
* பத்ம விருதுகள் பற்றிய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, இந்திய அரசு உயர்ந்தளவிலான மறுபரிசீலனை குழுவினை அமைத்தது. இக்குழு துணைக் குடியரசுத் தலைவர் தலைமையில் செயல் பட்டு, 1996 நவம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையினை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, பத்ம விருதுகளுக்கான நிறுவனத்தை 1997-இல் அமைத்து அதற்கான விருது கமிட்டியும் நியமனம் செய்யப்படுகிறது.
பத்ம விபூஷன்
பத்ம விபூஷன் (டஹக்ம்ஹ யண்க்ஷட்ன்ள்ட்ஹய்) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னாவுக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது உயரிய விருது.
பதக்கம் மற்றும் பாராட்டிதழ் வழங்கப்படுகிறது.
இது முதன்முதலி-ல் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2--ருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறன.
பத்ம விபூஷன் விருதுகள் 2023
பாலகிருஷ்ண தோஷி (மறைவுக்குப் பின்) -
மற்றவை - கட்டிடக்கலை - குஜராத்
ஜாகிர் உசேன் - கலை - மகாராஷ்டிரா
எஸ்.எம்.கிருஷ்ணா - பொது விவாகரங்கள் - கர்நாடகா
ஸ்ரீனிவாஸ் வரதன் - அறிவியல் மற்றும் பொறியியல் - அமெரிக்கா
முலாயம் சிங் யாதவ் (மறைவுக்குப் பின்) -
பொது விவாகரங்கள் - உத்தர பிரதேசம்
திலீப் மஹாலனாபிஸ் (மறைவுக்குப் பின்) - மருத்துவம் - மேற்கு வங்கம்
பத்ம பூஷன்
பத்ம பூஷன் (டஹக்ம்ஹ இட்ன்ள்ட்ஹய்) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2--ருந்து, இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசன் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
பத்ம பூஷன் விருதுகள் 2023
எஸ்.எல். பைரப்பா - இலக்கியம் மற்றும் கல்வி - கர்நாடகா
குமார் மங்கலம் பிர்லா - வர்த்தகம் மற்றும் தொழில் - மகாராஷ்டிரா
தீபக் தார் - அறிவியல் மற்றும் பொறியியல் - மகாராஷ்டிரா
திருமதி. வாணி ஜெயராம் - கலை - தமிழ்நாடு
சுவாமி சின்ன ஜீயர் - மற்றவை - ஆன்மீகம் - கர்நாடகா
திருமதி. சுமன் கல்யாண்பூர் - கலை - மகாராஷ்டிரா
கபில் கபூர் - இலக்கியம் மற்றும் கல்வி - டெல்லி-
திருமதி. சுதா மூர்த்தி - சமூக சேவை - கர்நாடகா
கமலேஷ் டி பட்டேல் - மற்றவர்கள் - ஆன்மீகம் - தெலுங்கானா
மு பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை, கல்வி, தொழில்,இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது முதன்முதலி-ல் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2--ருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.
பத்மஸ்ரீ விருதுகள் 2023
பத்மஸ்ரீ விருதுகள் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உள்பட 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது வென்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
சிற்பி பாலசுப்பிரமணியம் - இலக்கியம் மற்றும் கல்வி - தமிழ்நாடு பத்மஸ்ரீ விருதுகள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 87 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது வென்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
கே. கல்யாணசுந்தரம் பிள்ளை - கலை - தமிழ்நாடு
வடிவேல் கோபால் & மாசி சடையன் - சமூக சேவை - தமிழ்நாடு
பாலம் கல்யாணசுந்தரம் - சமூக சேவை - தமிழ்நாடு
டாக்டர். கோபால்சாமி வேலுச்சாமி - மருத்துவம் - தமிழ்நாடு
வாணி ஜெயராம்
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பா-லிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். தமிழிலும் பாடகியாக கோலோச்சிய வாணி ஜெயராம், கடந்த ஐந்து தசாப்தங்களாக கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு அதிகமாக பாடியுள்ளார்.
வடிவேல் கோபால் & மாசி சடையன்
தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களும், இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள் இருவரும். அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். முறையான கல்வியை பெறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர். தங்கள் முன்னோர்கள் சொல்-லிக் கொடுத்த முறையை பின்பற்றி பாம்பு பிடித்து வருகின்றனர். இந்திய ஹெல்த்கேர் பிரிவில் இருளர் இன மக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் கல்யாணசுந்தரம்
நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வே-லியில் பிறந்த இவர், கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்கு கொடுத்தார். பாலம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார்.
கே. கல்யாணசுந்தரம் பிள்ளை
பரதநாட்டியக் கலைஞர் கே. கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 91. தமிழகத்தின் தஞ்சாவூரில் பிறந்த அவர், இந்தியாவில் பரதநாட்டியத்திற்கான சிறந்த பயிற்சி மையமாக கருதப்படும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரை நிறுவியவர். தமிழகத்தில் பிறந்தாலும், ஏழு தசாப்தங்களுக்கு முன்பு, அவர் பரதநாட்டியத்தை பிரபலப்படுத்த தஞ்சாவூரி-லிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். திருவிடைமருதூர் குப்பையா கல்யாணசுந்தரம் என இயற்பெயர் கொண்ட இவர், தனது ஆறாவது வயதில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கும்பேஸ்வரன் கோவிலி-ல் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார்.