நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்து கிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப் பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்புகளால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.
1. இயற்பியல் (Physics)
2. வேதியியல் Chemistry)
3. இலக்கியம் ((Literature)
4. மருத்துவம் (Medicine)
5. அமைதி (Peace)
6. பொருளாதார அறிவியல் (Economic Science)
ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நோபல் பரிசு வழங்கும் இடங்கள் அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக் கான நோபல் பரிசுகள்-சுவீடன் நாட்டில் வழங்கப் படுகின்றன.
சுவீடன் நடுவண் வங்கி
பொருளாதார அறிவியல் நோபல் பரிசு பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
அமைதி நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோப-ன் உயி-ன் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.
நோபல் பரிசு 2021
பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் முக்கியமாக உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக் குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத் தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர் களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப் படுவார்கள்.
பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப் படும்.
பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
இயற்பியல்
இரண்டு, நான்கு, ஆறு என இப்படியே இரண்டின் மடங்கில் கூட்டிக்கொண்டே செல்கிறோம், இந்தத் தொடரில் 1,000-க்கு அடுத்து எந்த எண் வரும் என்று கேட்டால், 1,002 என்று எளிதாகக் கணிக்க முடியும். இதுவே ஒன்றிலி-ருந்து ஒன்பது வரை எண்களைக் கொடுத்து, நம் மனப்போக்கில் மாறிமாறி எண்களைச் சொல்லச் சொன்னால், நம் இஷ்டத்துக்கு 2, 9, 7, 5, 1, 4 என்று சொல்லிக்கொண்டே போவோம். இதே போக்கில் போனால், ஒருவர் அடுத்து என்ன எண்களைச் சொல்லுவார் கணிக்க முடியுமா? இப்படி உலகில் பல விஷயங்கள் தற்போக்காகத்தான் நடைபெறுகின்றன. இதனாலேயே அறிவியல் ஆய்வுகளும் கணிப்புகளும் நேரடியானவையாக இருப்பதில்லை.
கூட்டமாகப் பறக்கும் பறவைகள் அடுத்து எந்தத் திசையில் திரும்பும்? வளிமண்டலத்தில் ஏற்படும் சிறுசிறு மாற்றங் களால் நூறாண்டுகள் கழித்துக் கடலி-ன் வெப்பநிலை என்னவாக இருக்கும்? இப்படித் தன் போக்கில் நடக்கும் விஷயங்களைக் கணிக்க முடியாது என்று நாம் நினைத் தாலும், முடியும் என்று நிரூபித்திருக் கிறார்கள், இந்த ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளான சுகுரோ மனாபே (Syukuro Manabe),, கிளவுஸ் ஹாஸல்மான் (Klauss Hasselmann),,
ஜார்ஜோ பரீசி (Giorgio Parisi) , ஆகிய மூவரும். மிகவும் சிக்கலான விஷயங்களில்கூட அடிப்படையில் ஓர் ஒழுங்கு இருக்கிறது, வடிவுரு இருக்கிறது என்னும் புரிதலைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே “சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள் வதற்குத் திறவுகோலாக இருந்த ஆய்வுப் பங்களிப்புகளுக்காக” இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது.
இரவில் வெப்பம்
சூரியனிலிருந்து வரும் கதிர்களால் பூமிக்கு வெப்பம் கிடைக்கிறது. அப்படி யென்றால், சூரியன் மறைந்த பின்பு வெப்பம் இல்லாமல் பூமி குளிர்நிலைக்குச் சென்றுவிட வேண்டும் இல்லையா? ஆனால், இரவிலும் குறிப்பிட்ட அளவு வெப்பம் நிலவுகிறது. அதனால்தானே நாம் உறைந்து போகாமல் இருக்கிறோம். இது ஏன் என்று சிந்தித்த ஃபூரியர், பூமியில் இருக்கும் வளிமண்டலம் வெப்பத்தைத் தக்க வைக்கிறது என்று 200 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தார்.
ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாள ரான சுகுரோ மனாபே இரண்டாம் உலகப் போரினால் சிதைந்த டோக்கியோ நகரிலி-ருந்து 1950-களில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து,ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். வளிமண்டலம்தான் வெப்பத்தைத்தக்க வைக்கிறது என்றாலும், அதில் எந்த வாயு எவ்வளவு வெப்பத்தைத் தக்கவைக்கிறது என்கிற கேள்வி அவருக்கு எழுந்தது. வளிமண்டலத்தில் பல வாயு மூலக்கூறுகள், பல்வேறு அடுக்குகள் இருப்பதால், இது மிகுந்த சிக்கலான கேள்வி. எனினும் தன் அசாத்திய உழைப்பால், இதற்கான விடையை மனாபே கண்டறிந்தார். காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் வெப்பநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், வளிமண்டலத் தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு இரட்டிப்பானால் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கிறது என்று துல்-லியமாகக் கணக்கிட்டுச் சொன்னது, 1960-களில் இவர் கண்டுபிடித்த பருவநிலை மாதிரி. அதற்குப் பின், தினசரி மாறும் வானிலையையும், பொதுவான பருவநிலை யையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த பருவநிலையாளர் ஹாஸல்மான்.
மனிதரே காரணம்
ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு நீங்கள் சாலையில் நடந்துபோனால், அது முன்னே செல்லும், பின்னால் இழுக்கும், காலைச் சுற்றும். இதுபோன்ற சிறுசிறு மாற்றங்களைக் கொண்டதுதான் வானிலை. ஆனால், நீங்களோ சீராக நடந்துபோய் இலக்கை அடைந்துவிடுவீர்கள். இதுதான் பருவநிலை. இன்றளவும் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு மேல் வானிலை எப்படியிருக்கும் என்று துல்லி-யமாகக் கணிக்க முடியாது. ஆனால், 50 ஆண்டுகள் கழித்துப் பருவநிலை எப்படியிருக்கும் என்று சொல்ல முடிகிறது.
நாள்தோறும் விரைவாக மாறும் வானிலை யால், கட-லில் சிறிய மாறுபாடு உண்டாகும் என்பதை 1980-களில் தன் கணக்கீட்டு மாதிரிகளின் அடிப்படையில் ஹாஸல்மான் நிரூபித்தார். மேலும், பருவநிலையில் மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் மாற்றங் களைக் கணக்கிட்டுச் சொன்னார்.
பசுங்குடில் விளைவால் புவி வெப்பமடை கிறது என்பதை அறுதியிட்டுச் சொன்னவை, இன்றளவும் பயன்பாட்டில் உள்ள இவருடைய மாதிரிகள். 1980-களில் ஒழுங்கற்ற பொருட்களில் மறைந்திருக்கும் வடிவுருக்களைக் கண்டுபிடித்தவர் இத்தா-லியைச் சேர்ந்த ஜார்ஜோ பரீசி.
காந்தத் தன்மையின் ரகசியம்
தற்சுழற்சிக் கண்ணாடி (spin glass) என்று சொல்லப்படும் பொருட்களில் காந்தத் தன்மை கொண்ட அணுக்கள் இருக்கும். அருகில் உள்ள அணுக்களின் தன்மையால் தங்களின் காந்த அமைப்பை இவை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிவரும். இருப்பினும், அவற்றில் ஓர் அடிப்படை உருமாதிரி இருப்பதைக் கண்டுபிடித்து, எப்படி அணுக்களின் காந்தத்தன்மை அமையும் என்னும் சிக்கலைத் தீர்த்துவைத்தவர் பரீசி. மேலும், இதன் அடிப்படையில், பறவைக் கூட்டம் முதற்கொண்டு கோள்கள் வரை பல்வேறு சிக்கலான அமைப்புகள் சார்ந்து விடை யளித்தவர் பரீசி. பருவநிலை மாற்றத்துக்கு அங்கீகாரம் நோபல் பரிசுத் தொகையின் ஒரு பாதியை மனாபேவும் ஹாஸல்மானும் பிரித்துக்கொள்ள, மறுபாதி பரீசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரீசியின் கண்டுபிடிப்புகள் மற்றவற்றிலிருந்து மாறுபட்டவை போலத் தோன்றினாலும் மூவரும் சிக்கலான, சீரற்ற இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அரிய கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஒரு கண்டுபிடிப்பால் உலகம் எந்த அளவுக்குப் பயனடைந் திருக்கிறது என்பதும் முதன்மையாகக் கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பார்க்கை யில் இவர்களின் பணி பல்வேறு துறை ஆய்வாளர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம், உலகத் தலைவர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறீர்களா என்று தேர்வுக் குழுவினரை நோக்கிக் கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘ஆமாம், புவி வெப்பமாதல் என்பது வெறும் வார்த்தை விளையாட்டல்ல, அறிவியல்பூர்வமானது என்று உரக்கச் சொல்-லியிருக்கிறோம்” என்று அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
வேதியியல்
மருந்துகள் முதல் உணவு சுவையூட்டப் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை பல்வேறு மூலக்கூறுகளைத் தயாரிப்பதில், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வழிகளைக் கண்டறிந்ததற்காக ஜெர்மனியின் பெஞ்சமின் லி-ஸ்ட்டுக்கும் ஸ்காட்லாந்தில் பிறந்த டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லனுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்புப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் விதத்திலும், சூழல் பாதிப்புத் தாக்கம் குறையும் விதத்திலும் மருந்து போன்ற வேதிப்பொருட்களைத் தயார்செய்ய இவர்கள் கண்டுபிடித்த சமச்சீர்மையில்லா ஆர்கானிக் வேதி வினையூக்கித் தொழில்நுட்பம் பயன் தருகிறது. மொத்த உலக உற்பத்தியில், சுமார் 35% அளவுக்கு வினையூக்கி வழி நடைபெறும் வேதி உற்பத்தி முறை பங்களிப்பு செய்கிறது என மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
எனவேதான், இவர்களது கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வரலாறு முக்கியம்
வெவ்வேறு வேதிப்பொருட்களின் சேர்க்கையின் விளைவாக ஏற்படும் வேதிவினைகளை 19-ஆம் நூற்றாண்டில், வேதியியலர்கள் ஆராய்ந்து பார்த்த போது ஏற்பட்ட வியப்பான வேதிவினை ஒன்று, அவர்களை மலைக்கச் செய்தது. ஹைட்ரஜன் பெராக்சைடு (ஐ2ஞ2) நிரம்பிய கண்ணாடிக் குடுவையில் வெள்ளித் துகள்களை இட்டால், திடீரென ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைந்து நீராகவும் (ஐ2ஞ) ஆக்ஸிஜனா கவும் (ஞ2) மாறியது. வேதிவினையின் இறுதியில் எந்தவித மாற்றமுமின்றி வெள்ளி அப்படியே இருந்ததுதான் வியப்புக்குக் காரணம். இதேபோல முளைவிடும் தானியங்களில் உள்ள மால்ட்டேஸ் என்ஸைம் எனும் நொதி உயிரி வேதிவினையில் எந்த மாற்றமும் அடையவில்லை. ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலர் ஜேக்கப் பெர்செலியஸ்தான் எந்தவித மாறுதலுக்கும் ஆளாகாமல், ஆனால், வேதிவினையை முடுக்கிவிடும் வெள்ளி போன்ற உலோகங்கள், மால்ட்டேஸ் போன்ற நொதிகளை வேதி வினையூக்கி என 1835-இல் வகுத்தார்.
வினையூக்கி: எளிய அறிமுகம்
வேதிவினையில் ஈடுபடும் மூலக்கூறிட மிருந்து எதிர் மின்னணுக்களை (எலெக்ட்ரான்களை) பெற்றுத் தற்கா-லிக மாக வைத்துக்கொள்ள அல்லது வேதிவினை யில் ஈடுபடும் வேறு வேதிப்பொருளுக்குத் தற்காலி-கமாக எதிர் மின்னணுக்களை வழங்குவதே வினையூக்கி செய்யும் முக்கியமான பணி. எதிர் மின்னணுக்களை எடுத்துக் கொள்வதன் மூலம், மூலக்கூறில் உள்ள அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளைத் தளர்த்த அது உதவுகிறது. பிணைப்பு தளரும்போது, மூலக்கூறு பிரிந்து சிறுசிறு மூலக்கூறாக மாறலாம்; அல்லது வேறு மூலக்கூறுடன் பிணைந்து புதிய மூலக்கூறு உருவாகலாம். வேதிவினையை ஊக்குவிக்கும் வினையூக்கி இறுதியில் தனது நிலைக்கே திரும்புகிறது.
யூரியா உரம் தயாரிக்கக் கையாளப்படும் ஹேபர் - போஷ் செயல்முறையில் இரும்பு, ருத்தேனியம் போன்ற உலோகங்கள் வேதி வினையூக்கியாகப் பயன்படுகின்றன. இதே போல உயிரியல் இயக்கத்தில் பல்வேறு நொதிகள் உயிரிவேதி வினையூக்கியாகச் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் நொதி, உணவில் உள்ள அமினோ அமிலங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கடந்த நூற்றாண்டு வரை நாம் உலோக, உயிரியல் நொதி ஆகிய இரண்டு வகை வினையூக்கிகளை மட்டுமே நம்பி வேதித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்துவந்தோம். குரோமியம் போன்ற கனரக உலோகங்களை வினையூக்கி யாகப் பயன்படுத்த ஆரம்பித்தபோது,
சூழ-ல் மாசு ஏற்பட்டு, புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்கள் ஏற்பட அது காரணமாக அமைந்தது. உலோக வினையூக்கிகள் சூழல் மாசு மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால், இதற்கு மாற்றாக உயிரியல் நொதிகளைப் பயன்படுத்த 1990-களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தெற்கு கலி-ஃபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்த நோக்கில் கார்லோஸ் எஃப். பார்பாஸ் தலைமையில் ஆய்வுசெய்யும் குழு ஒன்று செயல்பட்டுவந்தது. இந்தக் குழுவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச் சேர்ந்தார் பெஞ்சமின் லி-ஸ்ட். சில நொதிகளில் உலோக அணுக்கள் இருக்கின்றன; பல நொதிகளில் உலோகமே இருக்கவில்லை. எனவே, உலோக அணு இல்லாமலேயே வினையூக்கிகள் செயல்பட முடியும் என பெஞ்சமின் லி-ஸ்ட் கண்டுகொண்டார். 1970-களின் முற்பகுதியில் புரோலைன் என்ற அமினோ அமிலம் வினையூக்கியாகச் செயல்படும் என சில ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
ஆயினும், அதுகுறித்து மற்றவர்கள் போதிய கவனம் செலுத்தி, மேலாய்வுகள் மேற்கொள்ளவில்லை. இரண்டு வெவ்வேறு மூலக்கூறுகளில் உள்ள கார்பன் அணுக்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ள ஆல்டோல் வேதிவினையை புரோலைனால் வினையூக்க முடியுமா என்று பெஞ்சமின் சோதனை செய்து பார்த்தார். அவரே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்குச் சிறப்பாக வினை நிகழ்ந்தது. இந்தப் பொறிதான் தீயாக வளர்ந்து சமச்சீர்மை இல்லா ஆர்கானிக் வேதி வினையூக்கிகள் வளர வழிவகுத்தது.
ஆரஞ்சும் எலுமிச்சையும்
லிமோனீன் என்ற வேதிப்பொருள்தான் ஆரஞ்சுக்கும் எலுமிச்சைக்கும் அதன் நறுமணத்தைத் தருகிறது. ஆயினும் இரண்டின் வாசமும் ஒன்றுபோல இல்லை. ஏன் என ஆய்வு செய்தபோது நமது இடது, வலது கைகள் ஒன்றுபோல இருந்தாலும், கண்ணாடியில் தெரிவது போன்று ஒன்று மற்றதன் எதிர் உருவம். அதுபோலப் பல வேதிப்பொருட்கள் இரண்டு ஆடிப் பிம்ப வடிவில் இருக்க முடியும் எனக் கண்டுபிடித்தார்கள். இடது ஆடிப் பிம்பம் மாற்றிய வடிவில் உள்ள எஸ்-லிமோனீன் எலுமிச்சை வாசத்தையும் வலது ஆடிப் பிம்பம் மாற்றிய வடிவில் உள்ள ஆர்-லிமோனீன் ஆரஞ்சு வாசத் தையும் தருகிறது. இடது - வலதுலி -மோனீன் வெறும் நறுமண வித்தி யாசத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால், குறிப்பிட்ட ஆடிப்பிம்ப வடிவ தா-லிடோமைடு சிறப்பாக... மருந்தாகச் செயல்பட, மாற்று வடிவ தா-லிடோமைடு ஆபத்து விளைவிக்கக் கூடிய தன்மை கொண்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட ஆடிப் பிம்ப வடிவம் கொண்ட வேதிப்பொருட்களை மட்டுமே உருவாக்கும் சமச்சீர்மை இல்லா வினையூக்கி அவசியமாகியது.
யூசி பெர்க்லியில் ஆய்வுசெய்துவந்த டேவிட் மேக்மில்லன் கரிம மூலக்கூறுகள் எந்த வடிவில் உள்ளன என்பதைப் பொறுத்து, சிக்கலான பண்புகளை அடைய முடியும் என்று கருதினார். நைட்ரஜன் அணுவைக் கொண்ட கரிம மூலக்கூறு இமினியம் அயனியை உருவாக்கி, வினையூக்கியாகச் செயல்பட முடியும் எனக் கண்டார்.
சில கரிம மூலக்கூறு வினையூக்கிகள் குறிப்பிட்ட ஆடிப் பிம்ப வடிவ மூலக்கூறுகளைச் சுமார் 90% வரை தயாரிக்கும் திறனைக் கொண்டிருப்பதையும் கண்டார்.
ஒரே கல்லி-ல் இரண்டு மாங்காய் பதற்றம், மனச்சோர்வுக்குச் சிகிச்சை யளிக்கப் பயன்படுத்தப்படும் பராக்ஸெடின், சுவாச நோய்த் தொற்றுகளுக்குத் தரப்படும் ஆன்டிவைரல் மருந்து ஒசெல்டமிவிர் முதலி-ய மருந்துகள் முதல் பல்வேறு வேதிப்பொருட்கள் இன்று இவர்கள் கண்டுபிடித்த முறையைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. மரபு வேதி உற்பத்தி முறையில் 1952-இல் ஸ்ட்ரைக்னைன் தயாரிக்கப்பட்டபோது 29 வெவ்வேறு வேதிவினைகள் தேவைப்பட்டன. மூலப்பொருளில் வெறும் 0.0009% மட்டுமே ஸ்ட்ரைக்னைனாக உருவாகியது; மீதம் உள்ளவை கழிவாக வீணாகி, மாசு ஏற்படுத்தின. சமச்சீர்மையில்லா ஆர்கானிக் வேதி வினையூக்கியைப் பயன்படுத்தி, 2011-இல் இதே ஸ்ட்ரைக்னைனை வெறும் 12 வேதிவினைப் படிகள் மட்டும் கொண்டு 7,000 மடங்கு அதிக செயல்திறனுடன் தயாரிக்க முடிந்தது.
சூழ-ல் மாசு ஏற்படுத்தாத வகையிலும், மூலப்பொருட்கள் வீணாகாமல் உற்பத்தி நடக்கவும், ஆபத்து விளைவிக்காத ஆடிப் பிம்ப வடிவ மூலக்கூறு மட்டும் தயார் செய்யவும் பெஞ்சமின் லி-ஸ்ட், டேவிட் மேக்மில்லன் ஆகியோரின் ஆய்வுகள் உதவிசெய்திருப்பதால், வேதித் தொழிற்சாலைகள் பசுமை நடைமுறைகளைப் பின்பற்ற வழி ஏற்பட்டுள்ளது. சமச்சீர்மையில்லா ஆர்கானிக் வேதி வினையூக்கியின் மாசு ஏற்படுத்தும் உலோகப் பகுதி தேவையில்லை; நமக்குத் தேவையான ஆடிப் பிம்ப வடிவ மூலக்கூறை மட்டும் தயார்செய்ய முடியும். இயற்பியலுக்கு வழங்கப்பட்டதுபோலவே சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட கண்டுபிடிப்புகளுக்கு வேதியியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மருத்துவம்
உலகையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் புரட்டிப்போட்ட பெருந்தொற்று, அதைத் தொடர்ந்து, அதை எதிர்த்துப் போராடுவதற்காகத் தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டும் இன்னும் கொரோனாவை முழுவதும் வெற்றிகொள்ள முடியாத சூழல். இதற்கிடையே உடலியல் - மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு வந்திருக்கிறது. வெப்பநிலை யையும் தொடுதலையும் மனித உடல் எப்படிக் கண்டுகொள்கிறது என்பது தொடர்பிலான கண்டுபிடிப்புகளுக்காக இந்த ஆண்டு மருத்துவ நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலைக்கும் தொடுதலுக்குமான ழஉணர்வு ஏற்பிகள் தொடர்பிலான கண்டுபிடிப்புக்காக, அமெரிக்க அறிவியலர்கள் டேவிட் ஜூலி-யஸும் ஆர்டெம் பாட்டபூட்டியானும் நோபலைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
மிளகாயிலும் சிலந்தியின் விஷத் திலும் இருக்கும் வெவ்வேறு மூலக்கூறு களை ஜூலி-யஸ் வெகுகாலமாக ஆராய்ந்து வருகிறார். வெப்பநிலையையும் எரிச்சலூட்டும் வேதிப்பொருட் களையும் எப்படி நமது உடல்கள் கண்டுகொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி பெரிதும் உதவுகிறது. வ-லி சார்ந்த சிகிச்சையில் முன்னேற்றம் காண்பதற்கு வ-லிக்கும் நரம்பிய லுக்கும் இடையே உள்ள புதிரை அவிழ்க்க வேண்டியது அவசியம். இந்தச் சூழலில் ஜூலி-யஸுடன் சேர்ந்து நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்டெம் பாட்டபூட்டியான், நமது தோலிலும் உள்ளுறுப்புகளிலும் குளிர் மற்றும் இதர இயக்கவியல் தூண்டல்களுக்கு எதிர்வினை யாற்றுவதற்குத் திறன் வாய்ந்த உணரிகள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவி யிருக்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் உணர்ந்தறியவும் அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளவும் காரணமான நரம்புமண்டலத் தூண்டுதல் களை வெப்பம், குளிர், இயக்கவியல் சக்திகள் ஆகியவை எப்படி ஏற்படுத்து கின்றன என்பதை நாம் புரிந்து கொள்வ தற்கு உதவும் வகையிலான மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் நோபல் விருதாளர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள் என்று நோபல் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடலின் உணர்வு ஏற்பிகள்
1997-இல் ஜூ-லியஸும் அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து ‘நேச்சர்’ ஆய்விதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர்.
மிளகாயில் உள்ள கப்சைசின் என்னும் வேதி மூலக்கூறு, எப்படி நமது தோலில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதன் உள்ளடக்கம்.
அதற்காக அவர்கள் டிஎன்ஏ துணுக்கு களின் நூலகம் ஒன்றை உருவாக்கி, அதற்குத் தொடர்புடைய மரபணுக் களைப் புரிந்துகொள்வதற்கு முயன்று, இறுதியாக நமது உடலி-ல் கப்சைசின் உணரி இருப்பதைக் கண்டறிந்து விட்டனர்.
அதற்கு டிஆர்பிவி1 என்று பெயரும் வைத்தனர். இந்தக் கண்டுபிடிப்பு, நமது உடலில் வெப்பத்தைக் கண்டுகொள்ளக் கூடிய மேலும் பல உணரிகளை அடையாளம் காண்பதற்கு உதவியது.
அடுத்து ஜூ-லியஸும் ஆர்டெம் பாட்டபூட்டியானும் தனித்தனியாக உணர்வு ஏற்பி ஒன்றைக் கண்டறிந்தனர். இது குளிரால் தூண்டப்படும் உணரி ஆகும். அதற்குப் பெயர் டிஆர்பிஎம்8. வ-லியையும் வெப்பநிலையையும் உணரும் நியூரான் களின் துணைக்குழுவில் உள்ள உணர்வு ஏற்பியாக இதை பாட்டபூட்டியானும் அவரது குழுவினரும் அடையாளம் கண்டனர்.
பாட்டபூட்டியான், இந்த உணர்வு ஏற்பிகளை இயக்கவியல்ரீதியாகத் தூண்ட முடியுமா என்பதை ஆராய்ந்து பார்த்தார். அவரது குழுவினரும் நுண்ணிய உறிஞ்சுகுழலைக் கொண்டு செல்களைக் குத்திப் பார்த்தபோது, பதிலுக்கு மின்சார சமிக்ஞையை அந்த செல் வரிசை வெளியிட்டதைக் கண்டனர். அவர்களில் அந்த செல்லி-ல் ஒரேயொரு மரபணுவை அடையாளம் கொண்டு, அதைச் செய-லிழக்கச் செய்யப்பட்டபோது, குத்தப்பட்ட செல்கள் குத்துதலை உணராமல் இருப்பதையும் கண்டனர்.
அந்தப் புதிய மின்திறன் கொண்ட மரபணுவுக்கு பியஸோ1 என்று பெயர் வைத்தனர்.
டிஆர்பிவி1, டிஆர்பிஎம்8, பியஸோ1 ஆகிய மூன்று உணரிகளும் நம் தோலி-ல் இருப்பது அறியப்பட்ட பின்னர், நாட்பட்ட வலி- சார்ந்த நோய்கள் பலவற்றுக்குச் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பது எளிதானது.
“உயிரியலி-ல் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் மாபெரும் ரகசியங்களை அறிவதற்குப் படைப்பாற்றல், அறிவியல்ரீதி யிலான தீவிரம், துணிவு ஆகியவை தேவை. அதற்கான உதாரணம்தான் டேவிட்டின் இந்தப் பங்களிப்பு. அவரது ஆச்சரியகர மான கண்டுபிடிப்பு, மனித ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான மருத்துவ முன்னெடுப்புகளுக்கு உதவியுள்ளது”
என்கிறார், ஜூலி-யஸ் பேராசிரியராகப் பணிபுரியும் க-லிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேந்தரான சாம் ஹாகுட்.
மிளகாயில் உள்ள கப்சைசின் மூலக்கூறு தொடர்பிலான ஆராய்ச்சிக்கான உந்துதலை ஜூலி-யஸ் ஒரு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்கின்போது பெற்றார். விதவிதமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த சில்லி சாஸ் குப்பிகளைப் பார்த்தபோதுதான் அவருக்கு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் ஷாப்பிங்கில் இருந்த மனைவியிடம் இதைப் பகிர்ந்துகொண்டபோது, அவரும் ஜூலி-யஸுக்கு நம்பிக்கையூட்டி யிருக்கிறார். கலி-ஃபோர்னியாவின் லஹோயா வில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு மையத்தில் பாட்டபூட்டியான் பேராசிரியராகவும் அறிவியலராகவும் இருக்கிறார்.
பாட்டபூட்டியானும் அவரது சகாக்களும் சேர்ந்து, தொடுதலை இனம்காணும் புரதங்களுக்கான மரபணுக்களான பியஸோ1, பியஸோ2-வைக் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு புரதங்களும் சக்தியூட்டப்பட்ட மின்திறன் வழிகளாகச் செயல்படுபவை என்று காட்டியுள்ளார்.
ஆர்மீனிய அமெரிக்கரான பாட்டபூட்டி யான், போரால் உருக்குலைந்த லெபனானில் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர். 18 வயதில் அமெரிக்கா வந்த அவர், அந்த நாடு தனக்களித்த எந்த வாய்ப்பு களையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை முதலில் கற்றுக்கொண்டதாகக் கூறி, அமெரிக்கா வுக்குத் தனது நன்றியைத் தெரிவித் திருக்கிறார். நோபல் பரிசு அறிவிப்பை யொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது சகாக்கள் பலருடைய பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
டேவிட் ஜூலி-யஸின் ஆய்வகத்தில் ஆய்வாளராக இருந்த எர்ஹூ காவோ, “வெப்பத்தை உணர்வது என்பது அடிப்படையான விஷயமாகும். நம்மால் வெப்பத்தை உணர முடியவில்லை யானால், சூடான காபியை அது தெரியா மலேயே குடித்துக் கொண்டிருப்போம்…
வலிக்கான எதிர்வினை என்பதே நம்மைப் பாதுகாக்கிறது” என்று ஜூ-லியஸின் பங்களிப்பை அங்கீகரித்துப் பேசுகிறார்.
நமது உடலின் பல்வேறு அம்சங்களைத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளை ஜூ-லியஸும் பாட்டபூட்டியானும் வழங்கியுள்ளனர் என்று அறிவியலர்கள் அவர்களைப் புகழ்கின்றனர். தொடுதல் தொடங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத் துவது, கழிப்பறைக்குச் செல்வதற் கான உந்துதல் எல்லாவற்றுடனும் தொடர்புடையது அது. வலியையும் சந்தோஷத்தையும் எப்படிப் பிரித்து உணர்கிறோம் என்பதை நாம் இதுவரை அறியாமலேயே உடலின் அற்புதப் பலன்களை அனுபவித்துவந்துள்ளோம். நமது உடலையும் நமது புலன்சார் உலகத்தையும் புரிந்துகொள்வதற் கான மகத்தான திறப்பை ஜூலி-யஸும் பாட்டபூட்டியானும் காட்டியிருக் கிறார்கள் என்று அறிவியலர்களின் சமூகம் அவர்கள் இருவரையும் பாராட்டுகிறது.
பொருளாதார அறிவியல்
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசினை இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளியல் அறிஞர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பரிசின் ஒரு பகுதியை கனடாவில் பிறந்து, தற்போது கலி-லிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் டேவிட் கார்ட் (உஹஸ்ண்க் ஈஹழ்க்) பெறுகிறார். மறுபகுதியை மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் (ஓர்ள்ட்ன்ஹ ஆய்ஞ்ழ்ண்ள்ற்), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குய்டோ இம்பென்ஸ் (ஏன்ண்க்ர் ஒம்க்ஷங்ய்ள்) இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்டவர். குய்டோ இம்பென்ஸ், நெதர்லாந்து நாட்டில் பிறந்தவர். மூவரும் பொருளிய-லின் ஆய்வுமுறைகளை முற்றிலுமாக மாற்றி யமைத்திருக்கிறார்கள் என்று பாராட்டி யிருக்கிறது ஸ்வீடிஷ் அகாடமி.
கூலி- உயர்வின் விளைவுகள் குறைந்தபட்சக் கூலி- அதிகரித்தால் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருக்கும்; புதிதாகக் குடியேறுபவர்களால் பூர்விகக் குடிமக்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்பது போன்று காலம்காலமாகத் தொடர்ந்துவந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று எடுத்துக்காட்டியவர் டேவிட் கார்ட். குறைந்தபட்சக் கூ-லி உயர்த்தப்பட்டதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு நியூ ஜெர்ஸி யிலும் கிழக்கு பென்சில்வேனியாவிலும் உள்ள உணவகங்களை அவர் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார்.
நியூ ஜெர்ஸியில் குறைந்தபட்சக் கூலி- உயர்ந்தது. பென்சில்வேனியாவில் அதே கூ-லி தொடர்ந்தது. ஆய்வின் முடிவில், குறைந்தபட்சக் கூ-லி உயர்த்தப் படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை என்பது நிரூபண மானது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை, அவர்களது வேலைவாய்ப்புக்கே பாதகமாக மாறும் என்ற முதலாளித்துவ அச்சுறுத்தல்களுக்கு அறிவியல்பூர்வமான விடையாக இந்த ஆய்வு அமைந்தது.
டேவிட் கார்ட்டுடன் இணைந்து இந்த ஆய்வுகளில் ஈடுபட்ட ஆலன் க்ரூகெர் (ஆப்ஹய் ஃழ்ன்ங்ஞ்ங்ழ்) 2019-இல் காலமாகி விட்டார். க்ரூகெர் உயிருடன் இருந்திருந் தால், அவரும் இந்தப் பரிசினைப் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார். உழைப்புச் சந்தையில் நிலவும் இனவாதப் போக்கு, மருத்துவக் காப்பீடு, தொழிற்சங்கங்கள், அவற்றின் பேரம் பேசும் திறன் என்று டேவிட் கார்டின் ஆய்வுப் பரப்பு மிகவும் விரிவானது.
எனினும், பொருளியலில் உழைப்பின் பங்களிப்புதான் அவரது ஆய்வுகளின் மையம்.
பானர்ஜி-டுஃப்ளோ பாராட்டு
2019-இல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அபிஜித் பானர்ஜிக்கும் அவரது இணையர் எஸ்தர் டுஃப்ளோவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
அதே ஆண்டில், வெளியான அவர்களது ‘குட் எகானமிக்ஸ் ஃபார் ஹார்ட் டைம்ஸ்’ புத்தகமும் பெருங்கவனம் பெற்றது. குடியேற்றம் குறித்தும் பூர்விகக் குடிகளின் அச்சம் குறித்தும் அந்நூலில் விவாதித்த பானர்ஜியும் டுஃப்ளோவும் டேவிட் கார்ட் ஆய்வுகளைத்தான் மேற்கோள் காட்டியிருந்தனர்.
1980-இல் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, விரும்புபவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று அறிவித்த வேகத்தில், அந்நாட்டி-லிருந்து 1.25 லட்சம் தொழிலாளர்கள் அமெரிக்காவின் மியாமி நகரத்துக்குக் குடியேறினார்கள். அந்நகரில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 7% கூடியது. கியூப தொழிலாளர் களின் குடியேற்றத்துக்கு முன்பும் பின்பும் அந்நகரத்தில் கூ-லியின் விகிதமும் வேலைவாய்ப்பின் விகிதமும் எப்படி உயர்ந்தன என்பதை மற்ற நான்கு அமெரிக்க நகரங்களோடு ஒப்பிட்டு எடுத்துக்காட்டினார் டேவிட் கார்ட். தொழிலாளர்கள் புதிதாக வந்து குடியேறுவதால், பூர்விகக் குடிகளின் வேலைவாய்ப்பில் உடனடியாகவோ நீண்ட கால அளவிலோ எந்த மாற்றமும் வருவதில்லை என்பதை ஆய்வுகளின் வழியாக அவர் உறுதிப்படுத்தினார்.
அந்த ஆய்வின் முக்கியத்துவத்தை பானர்ஜி இணையர் விதந்தோதிப் பாராட்டி யிருப்பார்கள். கியூபாவிலி-ருந்து மியாமிக்குக் குடியேறியவர்கள், அங்கு கிடைக்கும் வேலைவாய்ப்புக்காக மட்டும் அந்நகரத்தைத் தேர்வு செய்யவில்லை. கியூபாவுக்கு வெகு அண்மையிலுள்ள நகரம் அதுதான்.
டேவிட் கார்ட் ஆய்வுகளின் அணுகுமுறை மட்டுமல்ல, எட்டப்பட்ட முடிவுகளும் மிகவும் முக்கியமானவை. தொழிலாளர்களின் குடியேற்றப் பிரச்சினைக்கு மரபான ‘அளிப்பு - தேவை’ விதியை அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது என்பதை முதலி-ல் எடுத்துக் காட்டியது டேவிட் கார்ட் ஆய்வுகள்தான் என்கிறது ‘குட் எகானமிக்ஸ்’ புத்தகம். டேவிட் கார்ட் மேற்கொண்ட இத்தகைய பொருளியல் ஆய்வுகள், சமூகவியல் ஆய்வு களாகவும் அமைந்துள்ளன. அவை, உழைக்கும் வர்க்கத்துக்குள்ளேயே பகைமை வளர்க்கும் வளர்ந்த நாடுகளின் தேர்தல் அரசியல் உத்திகளை மறுதலிக்கவும் செய்கின்றன.
இயல்பு சோதனைகள்
ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸ் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பரிசானது காரண காரிய விளைவுகளின் அடிப்படையில் தெளிவான முடிவுகளைப் பெறும் வகையில், அவர்கள் உருவாக்கிய ஆய்வுமுறைகளுக் கானது. இயல்பு சோதனைகள் என்றழைக்கப் படும் இந்த ஆய்வுமுறை தற்போது நோபல் பரிசு பெற்றிருக்கும் பொருளியல் அறிஞர் களால் 90-களில் வளர்த்தெடுக்கப்பட்டது.
புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு மருந்தின் விளைவுகளைச் சோதனைக்கூடத்தில் ஆராய்ந்து பார்ப்பதுபோல, பொருளியல் கொள்கைகளின் தாக்கங்களை மக்கள் சமூகத்தில் ஆராய்ந்து பார்க்கும் முறை இது.
வருமானத்துக்கும் கல்விக்கும் இடை யிலான உறவு குறித்து, ஆலன் க்ரூகெருடன் இணைந்து ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் மேற்கொண்ட ஆய்வு இயல்புச் சோதனை களின் அடிப்படையிலானது. பள்ளிக்கூடங் களில் கூடுதல் கல்வியைப் பெற வாய்ப்புள்ளவர்கள், கூடுதல் ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களாக இருக் கிறார்கள் என்ற முடிவுக்கு அந்த ஆய்வு இட்டுச்சென்றது. ஒரே ஆண்டில், தொடக்க மாதங்களில் பிறந்தவர்களுக்குக் கல்வியாண்டு உடனடியாக முடிந்துவிடுகிறது. ஆண்டின் இறுதி மாதங்களில் பிறந்தவர்கள் அடுத்த கல்வியாண்டின் முடிவுவரைக்கும் கூடுதலாகப் படிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள் என்ற அளவுக்கு அமெரிக்காவின் ஆரம்பக் கல்வி முறைக்கும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்துக்கும் இடையிலான உறவைப் பேசியது அந்த ஆய்வு. அதன் முடிவுகளை மேம்படுத்துவதில் ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினர். இத்தகைய நம்பகமான ஆய்வுமுறைகளுக்கு இதற்கு முன் பொருளியல் துறையில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை. இப்போதும்கூட, மாதிரி ஆய்வுகள் முழுமைக்கும் பொருந்துமா என்ற கேள்விகள் இல்லாமலில்லை.
‘மற்றவை மாறாதிருக்கும்போது’ என்று தொடங்கி எப்போதுமே தர்க்கரீதி யான ஊகங்களையே முடிவுகளாக முன்மொழிகிற பொருளியல் துறையில், அறிவியல்பூர்வமான ஆய்வு முறைகள் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வந்துள்ளன. மூலதனத்துக்கான லாபத்தையும் அதற்கான சந்தை அமைப்பையுமே பிரதான ஆய்வுப்பொருளாகக் கொண்டிருந்த நிலைமாறி, உழைப்பும் கூ-யும்கூட இப்போது ஆய்வுப்பொருளாக மாறியிருக்கின்றன.
அமைதி
“இன்றுபோல் என்றுமே இதழியலுக் கான அவசியம் இருந்ததில்லை.
அதே நேரத்தில், இன்றுபோல் என்றும் இதழியல் கடினமாக இருந்ததில்லை. அதேநேரம், உறுதிபடைத்த மனத் துடன் செயலாற்றும்போது, உண்மையான தரவுகளை நீங்கள் பாதுகாப்பீர்கள், அதிகார அரியணையில் வீற்றிருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து பதில் சொல்ல வைப்பீர்கள்… அதைத்தான் நாங்களும் செய்தோம்… இனியும் செயல்படுத்துவோம்… நீங்கள் ஊடகத்தைத் தாக்குவதென்பது தூதுவரைக் கொல்வதற்குச் சமமானதே! இத்தகைய சூழலி-ல்தான் நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அதையும் மீறி இன்று உண்மையான இதழியலுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!” 2021-க்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தி கேட்டு, பிலி-ப்பைன்ஸ் நாட்டு இதழாளர் மரியா ரெஸா தன் மனதிலி-ருந்து பேசிய வார்த்தைகள் இவை. இவருடன் சேர்த்து ரஷ்ய இதழாளர் திமித்ரி முராதஃபுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் 142-வது இடத்தில் இந்தியா இருக்கிறதென்றால், ரஷ்யா 150-வது இடத்திலும் பி-லிப்பைன்ஸ் 138-வது இடத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
தரவுகளின் அடிப்படையிலான இதழியல்
இந்நிலையில், ஜனநாயகமும் அமைதியும் தழைத்தோங்குவதற்கு அடிப்படையான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இவ்விருவரும் ஆற்றிய பங்களிப்புக்கு விருது பெறுகிறார்கள் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. அதிகார அத்துமீறல், பொய் மற்றும் போர்ப் பிரச்சாரத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, கட்டற்ற, சுந்திரமான, தரவுகளின் அடிப்படை யிலான இதழியல் அவசியம் என்றும் தேர்வுக் குழு சுட்டிக்காட்டியது. உள்நாட்டு விவகாரங்களைக் கடந்து, நாடுகளுக்கு இடையிலான சகோதரத்து வத்தையும் பேண ஊடக சுதந்திரம் முக்கியம் என்று அடிக்கோடிட்டுள்ளது.
ரஷ்யாவில் தன்னை நிரந்தர அதிபராக நிலைநாட்டிக்கொண்டிருக்கும் விளாடிமிர் புதின் ஆட்சியில் ஊடகங்களின் குரல் கடுமையாக நெரிக்கப்படுகிறது. இந்நிலையில், ‘நவ்யா கஜட்டா’ என்ற ரஷ்ய சுயாதீன நாளிதழை 1993-இல் நிறுவியவர்களில் ஒருவர் திமித்ரி முராதஃப். இளம் பிராயத்தில் சோவியத் ராணுவத்தில் சில காலம் பணியாற்றிவிட்டு இதழியலுக்குள் காலூன்றினார் திமித்ரி. ரஷ்யா - சச்னியா வுக்கு இடையிலான போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது, கோடீஸ்வரப் பிரபுக்களுடன் கைகோத்து, புதின் செய்யும் ஊழலாட்சி உள்ளிட்ட புலனாய்வுச் செய்திகளை ‘நவ்யா கஜட்டா’ வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
இப்படி திமித்ரி தலைமையில் சமரச மின்றிச் செயலாற்றிவந்த இதழாளர்களில் 6 பேர் கடத்தப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனது நிறுவன இதழாளர்கள் கொல்லப் பட்டபோதும், தனக்கும் தொடர் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டபோதும் பத்திரிகை தர்மத்தையும் சுதந்திரத்தையும் ஒருபோதும் திமித்ரி முராதஃப் விட்டுக்கொடுக்கவில்லை. இந்நிலையில், தனக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு, “இது என்னுடைய சாதனை அல்ல. நவ்யா கெஜட்டினுடையது. மக்களின் உரிமைகளுக் காகக் குரலெழுப்பித் தங்களின் இன்னுயிர் நீத்த இதழாளர்களுக்கானது. அவர்கள் இன்று நம்முடன் இல்லாததால் நோபல் கமிட்டி அவர்கள் சார்பாக எனக்கு விருதை அளித்திருக்கிறது. அவர்களின் குரலாக ஒலி-க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.
அமெரிக்கருமல்ல, பிலி-ப்பினோவுமல்ல!
மறுமுனையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வென்றிருக்கும் முதல் பெண் மரியா ரெஸா. பிலி-ப்பைன்ஸ் நாட்டில் ஊடக சுதந்திரப் போராட்டத்துக்கான முகமாக மரியா மாறியிருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை அப்படி. பிலி-ப்பைன்ஸில் பிறந்து அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வளர்ந்தவர் மரியா. புகழ்வாய்ந்த பிரிஸ்டன் பல்கலையில் படித்தார். அமெரிக்காவிலேயே இருந்தாலும் தான் ஒருநாளும் தோற்றத் திலும் வாழ்க்கை முறையிலும் அமெரிக்கராக முடியாது என்பதை உணர்ந்தார். தன்னுடைய வேர்களைத் தேடி சொந்த மண்ணுக்குப் புறப்பட்டார். பிலி-ப்பைன்ஸ் திரும்பிய பிறகு, தன்னால் பி-லிப்பினோவாகவும் (பிலி-ப்பைனைச் சேர்ந்தவர்) இருக்க முடியாது என்ற அதிர்ச்சிகர உண்மையைக் கண்ட டைந்ததாகச் சொல்கிறார். அதுவும் பி-லிப்பைன்ஸுக்குள் 1986-ல் மரியா அடியெடுத்து வைத்தபோது சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸின் ஆட்சி மக்கள் புரட்சியால் கவிழ்க்கப் பட்டிருந்தது.
அடுத்து, இன்றைய பிலி-ப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அன்று தாவயோ நகரத்தின் மேயராகப் பதவியேற்றிருந்தார். பி-லிப்பைன்ஸில் உள்ள அமெரிக்காவின் சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி, சேன-லில் மரியா வேலையில் சேர்ந்தார். சிறிது காலம் இந்தோனேசியாவிலும் பணிபுரிந்தார். பிறகு, பி-லிப்பைன்ஸ் செய்தித் தொலைக்காட்சி ஏபிஎஸ்-சிபிஎன் சேன-லின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். புலனாய்வு இதழியலுக்கென 2012-இல் ‘ரேப்ளர்’ டிஜிட்டல் ஊடக நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிலிப்பைன்ஸில் நிலவிய வன்முறை வெறியாட்டத்தையும், சர்வாதிகாரத் தையும் இதழியல் மூலம் வெளி உலகுக்கு அவர் அம்பலப்படுத்தினார்.
கூர்மையான பேச்சாற்றலும், செய்திகளை நுட்பமாகப் பகுத்தாய்ந்து அலசும் திறனும் மிகுந்தவராகத் திகழ்ந்த மரியா வெளிக் கொண்டுவந்த புலனாய்வுச் செய்திகளுக்கு பி-லிப்பைன்ஸ் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தான் மட்டுமின்றி, தனது தலைமையின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊடகர்களும் பெண்களுக்கு எதிரான வன்முறையை, மனித உரிமை மீறலை, ஊழலை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களாக வளர்த் தெடுத்தார்.
மரியா ரெஸா, திமித்ரி முராதஃப் இருவரும் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்கள். அப்படி உண்மையின் பக்கம் நிற்பவர்கள் அதிகார துஷ்பிரயோகத்துக்கு, சர்வாதிகாரத்துக்கு அடிபணியத் தேவையில்லை என்ற செய்தியை உரக்கக் கூறுபவர்கள். ஊடகங்கள் அரசின் பிரதிநிதிகளல்ல, மக்களின் பிரதிநிதிகள் என்ற பாடத்தை உலக ஊடகங்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இலக்கியம்
ஆப்பிரிக்காவின் டான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்ஸிபாரில் வளர்ந்து பின்னர் 1960-களில் இங்கிலாந் துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது படைப்புகளில் வெவ்வேறு கண்டங்கள், கலாச்சாரங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் அகதிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. இவருடைய பாரடைஸ் (டஹழ்ஹக்ண்ள்ங்) நாவல் 1994-இல் புக்கர் பரிசுக்காகப் போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர் 10 நாவல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இலக்கியத்துக்கான நோபல் பரிசுடன் அப்துல்ரசாக்குக்கு 1.14 மில்லி-யன் டாலர் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும்.
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்த வர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள்.
இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றிய வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
ரவீந்திரநாத் தாகூர் 1913-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் இப்பரிசைப் பெற்றார்.
இவர்தான் நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
சர்.சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1930-ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்த தற்காக இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.