கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் உண்மை நிலவரம் இதுவரையிலும் பேசப்படவில்லை. ஏனெனில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டும் இன்னமும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற வர்த்தகங்களும் தொழில்களும் மீளவில்லை. எப்போது அனைத்தும் பழையபடி மீண்டுவரும் என்பது குறித்த தெளிவு இல்லை. மக்கள் நோய் தொற்றுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். பெரும்பாலும் பணிச்சூழலும் வீட்டிலிலிருந்தபடி பார்க்கும் நிலைதான் உள்ளது. இப்போதைக்கு மக்களும் அத்தியாவசி யங்களைத் தவிர்த்து பிற பொருட் களையும் சேவைகளையும் எதிர்பார்க்கவு மில்லை.
ஆனால், இந்தச் சூழல் இப்படியே நீடிக்காது. வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகள் இனிதான் விஸ்ரூபமெடுக்கும். மக்களின் சேமிப்பு ஏற்கெனவே கரையத் தொடங்கியிருக்கும். பெரும்பாலானோர் தங்களின் வருமானத்தை மீறிய செலவு வாழ்க்கை முறையில்தான் இருக்கிறார்கள். இதனால் பலருக்கு சேமிப்பு என்பதைவிட கடன்கள்தான் அதிகமாய் இருக்கின்றன. கடந்த நான்கு மாத வருமான இழப்பு என்பது பலரது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கும். எனவே வருமானம் ஈட்ட வழி தேடி மக்கள் வெளியே வந்தே ஆக வேண்டும். ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்புகளும் சாத்தியங்களும் எந்த அளவுக்கு இருக்கின்றன?
அரசும் ரூ.20 லட்சம் கோடியும்
தற்போதைய நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி தொகுப்பை அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், இந்த நிதி தொகுப்பு என்பது மக்களுக்கான நிதி உதவியாகவோ நலத்திட்ட உதவியாகவோ இல்லை. மாறாக தொழில்களுக்கான கடன் உத்திரவாத திட்டங்கள் போன்றவையாகவே இருக்கின்றன. இந்த நிதி தொகுப்பு திட்டங்கள் இந்த ஊரடங்கு காலத்துக்குப் பிறகும் பிழைத்து நிற்கும் நிறுவனங்களுக்கு உதவுமே தவிர, நெருக்கடியால் மூட வேண்டிய நிலையில் இருக்கிற, அல்லது ஏற்கெனவே மூடப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை.
மேலும் அரசு அறிவித்த இந்த நிதி தொகுப்பினால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் கடுமையான கடன் சுமையும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அரசுக்கு இந்த நிதித் தொகுப்பில் உதவும் மிகப்பெரிய பொறுப்பு ரிசர்வ் வங்கியின் தலையில் விழுந்திருக்கிறது. ரிசர்வ் வங்கிதான் அரசுக்குப் பணம் வழங்க வேண்டும். நாட்டின் நிதி நிலையையும் ரூபாயின் மதிப்பையும் ஸ்திரமாக வைத்திருக்க தன்னுடைய சொத்துகளையும் செலவினங்களையும் சமநிலையுடன் வைத்திருக்கும் கடமையைச் செய்துவரும் ரிசர்வ் வங்கிக்கு தற்போது இந்த கூடுதல் பொறுப்பானது பெரிய சவால். அரசுக்கு நிதி வழங்க ரிசர்வ் வங்கி கூடுதலாகப் பணத்தை அச்சிட வேண்டும் என்ற யோசனையைப் பலர் முன்வைக்கிறார்கள்.
இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் செலவினங்கள் அதிகரிக்கும். நிதிநிலை சீர்குலையும். இந்நிலையில் அரசுக்கு வேறு வழியே இல்லை. கடன் வாங்குவதும் மற்றும் சொத்துகளை விற்று நிதித் திரட்டுவதையும் அரசு மேற்கொள்ளும். இவற்றால் அரசின் கடன் சுமை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டுக்கான அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கை முதல் காலாண்டிலேயே 83.2 சதவீதம் எட்டியிருக்கிறது. இதே காலாண்டில் அரசின் வரி வருவாய் 32.6 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த சூழலிலில் அரசு முதலீடு என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதமும்
பொருளாதாரம் தற்போதுள்ள சூழலிலில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதங்களுக்கு மத்தியில் கடந்த நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தில் மாற்றத்தை செய்ய வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டிவிகிதத்தை குறைத்து 4 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இதற்கு மேலும் குறைப்பது என்பது ரிசர்வ் வங்கிக்கு ஆபத்தாக முடியும்.
காரணம், பணவீக்கத்தின் இலக்கு 4 சதவீதமாக உள்ளது. வட்டி விகிதம் 4 சதவீதத்துக்கும் கீழ் குறையும்போது ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆட்டம் காணத் தொடங்கும். ரிசர்வ் வங்கியின் வட்டி வருவாய் என்பது வட்டி விகிதத்திலிலிருந்து பணவீக்கத்தைக் கழித்த பிறகு மிஞ்சுவது. அப்படியிருக்கும்போது பணவீக்க விகிதம் வட்டி விகிதத்தை விடவும் அதிகமாக இருந்தால் ரிசர்வ் வங்கிக்கு ஏற்படும் இழப்பு அதன் நிதி சுமையை அதிகரிக்கும். இதனால் அதன் நிதி சமநிலை பாதித்து ரூபாய் மதிப்பை வலுவிழக்கச் செய்யும்.
முதலீடுகளும் வேலைவாய்ப்பும்
தற்போது பொருளாதாரம் உள்ள சூழலிலில் புதிய முதலீடுகள்தான் மிகவும் முக்கியம். புதிய முதலீடுகள் மூலம்தான் பொருளாதாரத்தை சரிவிலிலிருந்து மீட்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான சூழல் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை. பாஜகவின் இது வரையிலான ஆட்சியில் அரசின் முதலீடுகள் பெரிய அளவில் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பீடுகளைச் சரிசெய்யவே அரசின் வருவாய் சரியாக இருந்தது. தற்போதைய சூழல் இன்னும் மோசம். தற்போது அரசின் வரி வருவாய் என்பது வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் கடன் மற்றும் ஜிடிபிக்கு இடையேயான விகிதமும் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 90 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அரசுகளின் வருவாயும் குறைந்துள்ள தால் நலத்திட்ட உதவிகளும் பெரிய அளவில் இருக்காது. எனவே அரசு முதலீடு என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே அந்நிய முதலீடுகள், தனியார் முதலீடுகள் ஆகியவற்றை ஈர்ப்பதைவிட்டால் வேறு வழியில்லை. ஆனால், அரசு தற்சார்பு கொள்கையை அறிவித்துள்ளது. தற்சார்பு எனில் உள்நாட்டு சந்தைக்கான தேவைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது. இதுவரை இறக்குமதி மூலம் தேவை களைப் பூர்த்தி செய்துவந்த நாம் இனி உள்நாட்டு உற்பத்தியை கைகொள்ள வேண்டுமெனில் அதற்கேற்ப முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், முதலீடு செய்யும் சூழலிலில் இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் தொழிலதிபர்கள் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல பெரிய நிறுவனங்களே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறு கின்றன. பியூச்சர் குழுமம் கடனை சமாளிக்க முடியாமல் ரிலையன்ஸிடம் நிறுவனத்தை விற்கிறது. வேளாண், டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவைத் தவிர பிற துறைகள் அனைத்துமே நிலையற்றத் தன்மையில் உள்ளன. சர்வதேச வர்த்தகமும் முன்புபோல் இல்லை. ஏற்றுமதி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. தேவையும் நுகர்வும் அதிகரித்தால்தான் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு உருவாகும். மீண்டும் நுகர்வு பழைய நிலைக்கு வருவதற்கு சில காலம் ஆகும். எனவே வரும் காலங்களில் வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் துறையின் நிலை
அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளில் ஒன்று ரியல் எஸ்டேட். ஆனால், ரியல் எஸ்டேட் ஏற்கெனவே பெரிய வீழ்ச்சியில் உள்ளது. தற்போது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிழைப்புக்காக பெருநகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்ததால் ரியல் எஸ்டேட்டின் மதிப்பு குறையாமல் இருந்தது. துறை வீழ்ச்சி கண்ட நிலையிலும் வீட்டு விலையோ, வாடகையோ குறையவில்லை. ஆனால், இந்த ஊரடங்கு காலம் இதை தலைகீழாக மாற்றியிருக்கிறது. வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழல் அதிகரித்ததால் பெருமளவிலான தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணி செய்தவர்கள் நகரங்களைக் காலிலி செய்துவிட்டு சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியாகிவிட்டது.
வங்கிகளின் புதிய சிக்கல்
தற்போதுள்ள சூழலிலில் வங்கிகளின் தேவையும் சேவையும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால், வங்கிகளுக்குப் புதிய சிக்கல் ஒன்று உள்ளது. வங்கிகளின் இருப்பு என்பது அதிகமாகவும், கடன் வளர்ச்சி என்பது குறைவாகவும் உள்ளது. தற்போது தொழில்கள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், புதிதாகக் கடன் வாங்குவது என்பது குறைந் துள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடன்களும் கடன் ஒத்திவைப்பு திட்டத்தினால் திரும்ப வரவில்லை. இதனால் வங்கிகளின் வட்டி வருமானம் பாதித்துள்ளது.
அரசு அறிவித்துள்ள கடன் உத்திரவாத திட்டங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. தொழில்கள் தங்களின் எதிர்காலம் என்பது என்னவென்று தெரியாமல் கடன்களை வாங்க தயாராக இல்லை. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சரிசெய்ய கடன் வாங்குபவர்கள் அந்தக் கடனை எப்படி செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படியான சூழலிலில் வங்கிகள் இருப்பு அதிகரிப்பு, கடன் வளர்ச்சி குறைவு மற்றும் வாராக்கடன் அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. இத்தனை சவால்களையும் மீறித்தான் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வர வேண்டியிருக்கிறது. அரசு இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அதற்கேற்ப கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் பொருளாதார பாதிப்பின் வடு ஆறாமலேயே தங்கிவிடும்.
மத்திய அரசின் 20 லட்சம் கோடி
பெரும்பான்மையான உலக நாடுகள் அவற்றின் ஜிடிபியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 10% முதல் 20% வரை கோவிட் நிவாரணமாக அறிவித்திருந்த நிலையில், இந்தியாவிலும் அனைத்து தரப்பினரும் அரசின் நிவாரண அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். ஏராளமான எதிர்பார்ப்புகளுக் கிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தனது உரையில் இந்தியாவை சுயசார்பான பாரதம் ஆக மாற்ற இந்த தருணத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து பகுதிகளாக நிவாரணம், உதவி மற்றும் சீரமைப்பு சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை செய்தார். முதல் பகுதி (மொத்த மதிப்பு ரூ.5,94,550 கோடி): முதல் பகுதியில் அறிவிக்கப்பட்ட 16 முக்கிய அறிவிப்புகளில் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், மின் விநியோகம் மற்றும் ஊதியம் பெறும் மக்கள் ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகள் அடங்கும். இரண்டாம் பகுதி (மொத்த மதிப்பு ரூ.3,10,000 கோடி): புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
மூன்றாம் பகுதி (மொத்த மதிப்பு
ரூ.1,50,000 கோடி): இதில் அறிவிக்கப் பட்ட 11 திட்டங்களில் நிர்வாகச் சீர்திருத்தம், விவசாய உள்கட்டமைப்பு, நிதி, குறு உணவு உற்பத்தி, கால்நடை களுக்கான தடுப்பூசி, தக்காளி, உருளை, வெங்காயம் வரிசையில் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் போக்குவரத்து மானியம், மீன் உற்பத்திக்கான உதவி, மூலிலிகை விவசாயம், தேனீ வளர்ப்பு ஆகியவை அடங்கும். நான்காம் பகுதி (மற்றும் ஐந்தாம் பகுதிகளின் மொத்த மதிப்பு : ரூ. 48,100 கோடி): இந்தப் பகுதியில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கம், நிலக்கரி எரிவாயு திட்டங்கள், விமான பழுது பார்த்தல், பராமரிப்புக்கான தொழிலகம் தொடங்குதல், விமான நிலைய தனியார் மயம், இந்திய விண்வெளி பயன்பாடு ஆகியவை அடங்கும். ஐந்தாம் பகுதி: இவற்றில் மாநிலங் களுக்கான நிதி உதவிகள், கடன் வரம்பு நீட்டிப்பு கல்வித் துறையில் மாற்றங்கள், கம்பெனி சட்ட மாற்றங்கள், திவால் சட்ட சீரமைப்பு ஆகியவை அடங்கும். இது தவிர, பிரதமர் வறுமை ஒழிப்பு நிவாரண திட்டத்தின் உதவிகள் ரூ.1,92,800 கோடி மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் நிவாரண திட்டங்கள் மதிப்பு ரூ. 8.01,603 கோடி ஆக மொத்தம் ரூ.20,97,053 கோடி என்று நிதி அமைச்சர் கணக்குக் கூறியுள்ளார்.
தொழில்களுக்கு ஆக்சிஜன்
இந்தியாவின் ஏற்றுமதியில் 40% பங்கு வகிப்பதோடு, 11 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வரும் எம்எஸ்எம்இ (ஙநஙஊ) தொழில்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங் களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டப்படி, நிறுவனங்கள் 29 பிப்ரவரி 2020-இல் இருக்கும் கடன் தொகையில் கூடுதலாக 20% கூடுதல் பிணையமின்றி வங்கிகளிடமிருந்து பெறலாம். 9.25% வட்டி கொண்ட இந்த கடன் தொகையை ஒரு ஆண்டு விடுமுறைக் குப்பின், நான்கு ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். விடுமுறைக்காலத்தில் வட்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. இது ஏற்கனவே கடன் வசதி பெற்றிருக்கும் நிறுவனங் களுக்குத்தான் பொருந்தும். உதாரண மாக கடன் வாங்காமல் நல்ல முறையில் செயல்படும் நிறுவனங்கள் தற்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது எனில் இந்த கோவிட் திட்டம் அவர்களுக்கு கை கொடுக்காது. அவர்களுக்கு உபரி கடன் கிடைக்காது என்பது இதில் உள்ள சிக்கல். பொதுவாக, நடைமுறை மூலதனக் கடன், விற்பனை, ஸ்டாக் போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு விற்பனையில் தொய்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி இருக்கும் என்பதை உதாரணத்தோடு பார்ப்போம். பத்து கோடி விற்பனை செய்யும் நிறுவனத் திற்கு ரூ.2 கோடி நடைமுறை மூலதன கடன் அளவில் கொடுக்கப்படுகிறது. தற்போது கூடுதல் 20 சதவீதம் அதாவது ரூ.40 லட்சத்துடன் மொத்த மாக ரூ2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அடுத்த ஆண்டில் விற்பனை ரூ.6 கோடி என்று வைத்துக்கொண்டால், அவர்களுக்கு கடனுக்கான தகுதித் தொகை ரூ.1.2 கோடி. ஏற்கனவே உள்ள ரூ 2.4 கோடிக்கான வட்டி செலுத்த நிலைமை ஏற்படும்போது வட்டி மற்றும் அசல் கட்டுவதில் சிரமம் ஏற்படும். இதனால் வாராக்கடன் வரையறையின் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஏற்படலாம். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அறிவிப்புகளை அரசு எதன் அடிப்படையில் வெளியிடுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. நடைமுறையில் தொழில்துறையின் எதிர்பார்ப்பும், மக்களின் எதிர்பார்ப்பும் வேறாக இருக்கிறது.
தொழில்துறையின் எதிர்பார்ப்புகள்
இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 10 சதவீதம் அளவு கோவிட் நிவாரண மற்றும் உதவிகள் வழங்கியதாக அரசு அறிவித்தாலும் பண உதவியாக (fiscal stimulus) 0.9% மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த அரசாங்கமும் திட்டங்கள் அளிப்பது இயலாத ஒன்று. ஆனால் மற்ற நாடுகளில் அறிவித்தது போல ஊரடங்கு நாட்களில் பணியாளர்களுக்கான சம்பளத்திற்காக குறைந்த வட்டி கடன், அனைத்து தொழில்களுக்கும் நீண்டகாலக் கடன், ஜிஎஸ்டி, டிடிஎஸ், இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றை தாமதமாக நீட்டித்து வட்டி இல்லாமல் செலுத்தும் வாய்ப்பு ஆகியவற்றை எதிர்பார்த்தனர். தற்போதைய தேவையில் நுகர்வை அதிகரிக்கும் திட்டங்கள்தான் முதன்மை யானது. தொழில் அமைப்புகளை கடனாளியாக ஆக்குவதற்கான திட்டங்கள்தான் அரசின் அறிவிப்பில் பிரதானமாக உள்ளன என்று கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரியை ஆறு மாதத்திற்குக் குறைக்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். தவிர தற்போது அறிவித்திருக்கும் பெரும்பாலான திட்டங்கள் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையிலிலிருந்து மீண்டுவர உதவாது என்றும் கருதுகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களிலேயே தங்கிவிடும் பட்சத்தில் கட்டுமானம், ஜவுளி, காஸ்டிங்க்ஸ் போன்ற பல்வேறு துறைகளின் உற்பத்தியில் பாதிப்பு உண்டாகும். இதுபோன்ற பல சிக்கல்கள் நாட்டில் உள்ளன. கோவிட் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அரசின் உதவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மக்களுக்கு நேரடியாக சென்றடையும் நிதி மானியம் (fiscal stimulus).. மற்றது வங்கிகள் மூலம் தொழில், விவசாயம் போன்ற துறைகளுக்கு சென்று உயிர்ப்பிக்கும் monetary stimulus.
(தொடர்ச்சி அடுத்த இதழில்...)