Advertisment

உலக அழகி 2019 : டோனி ஆன் சிங்

/idhalgal/general-knowledge/miss-world-2019

  • 2019-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்றது
  • இதில் உலகம் முழுவதிலுமிருந்து 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
  • இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் பங்கேற்றார்.
  • ms
  • அழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் உடல் அழகு குறித்து ஆய்வு போன்றவை நடத்தப்பட்டன. இதன் முடிவில் 40 அழகிகள் வரிசைப்படுத்தப்பட்டனர்.
  • 40 அழகிகளில் 10 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவும் ஒருவர். இறுதிச்சுற்றில் அழகிகளின் அறிவுத் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
  • இதன் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

  • 2019-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்றது
  • இதில் உலகம் முழுவதிலுமிருந்து 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
  • இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் பங்கேற்றார்.
  • ms
  • அழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் உடல் அழகு குறித்து ஆய்வு போன்றவை நடத்தப்பட்டன. இதன் முடிவில் 40 அழகிகள் வரிசைப்படுத்தப்பட்டனர்.
  • 40 அழகிகளில் 10 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவும் ஒருவர். இறுதிச்சுற்றில் அழகிகளின் அறிவுத் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
  • இதன் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
  • டோனி-ஆன் சிங் உலக அழகி போட்டியை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் ஆவார்.
  • இதையடுத்து 2018-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் அவருக்கு மகுடம் சூட்டினார்.
  • பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
  • உலக அழகிப் போட்டி, உலகின் நான்கு பெரிய அழகிப் போட்டிகளுள் ஒன்றாகும். மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி இரண்டுமே 1951-ஆம் ஆண்டு தொடங்கியவை.
  • உலக அழகிப் போட்டியை தொடங்கி வைத்தவர் எரிக் மோர்லி. 2000-இல் அவரது மறைவுக்குப்பின் அவரது மனைவியும் அமைப்பின் இணைத் தலைவருமான ஜூலியா மோர்லி அழகிப் போட்டியை நடத்தி வருகிறார்.
  • உலக அழகிப் பட்டம் வெல்பவர் அந்த ஓராண்டு முழுவதும் லண்டனில் தங்குவார். மேலும் அவர் உலகெங்கும் பயணம் செய்து அவ்வமைப்பைப் பற்றியும், அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் பிரதிநிதித்துவம் செய்வார்.
  • இப்போட்டி ஆரம்பத்தில் அன்றைய நீச்சலுடையை அறிமுகம் செய்யும் நீச்சலுடைப் போட்டியாகவே தொடங்கியது. மேலும் அப்போது அது ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்படவில்லை. ஆனால் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியென ஒன்று தொடங்கவிருப்பதை அறிந்த மோர்லி, இதனை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டார்.
  • 1951-இல் நடந்த போட்டிக்குப் பின், வெற்றி பெற்றவர் நீச்சலுடை அணிந்து மகுடம் சூட்டுவது கைவிடப்பட்டது. 2013-இல் நீச்சலுடையுடன், பங்கேற்கும் அழகிகளின் தேச கலாச்சாரத் துக்குக்கேற்ப சராங் எனும் ஒருவகை ஆடையுடன் மகுடம் சூட்டிக்கொண்டனர்.
  • 1980 முதல் பிபிசி இந்நிகழ்வை ஒளிப்பரப்பத் தொடங்கியது. 1960-1970களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்வாக மிஸ் வேர்ல்டு போட்டி திகழ்ந்தது.
  • ஆனால் 1970-இல் பெண் விடுதலை இயக்கத்தினர் தண்ணீர்த் துப்பாக்கி, துர்நாற்ற வெடிகுண்டுகள், மாவுக்குண்டுகளை எறிந்து இடையூறு செய்தனர்.
  • 1980-இல் இப்போட்டி ஒரு நோக்கத்துடன் கூடிய அழகு எனும் வாசகத்துடன், போட்டியில் ஆளுமை, அறிவுக்கூர்மையை மதிப்பிடும் தேர்வுகள் சேர்க்கப்பட்டன. எனினும், அப்போது அப்போட்டிக்கு பிரிட்டனில் செல்வாக்கு குறைந்தது. எனவே, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் அழகிப் போட்டியை ஒளிபரப்ப ஆர்வம் காட்டவில்லை.
  • தற்போது நடுவர்களின் மதிப்பெண்களுடன், போட்டியில் பங்கேற்கும் அழகிகளும், தொலைபேசி வழியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ என்னைத் தேர்ந்தெடுங்கள் எனக் கேட்டு மதிப்பெண்கள் பெறலாம்.
  • மிஸ் வேர்ல்டு அமைப்பு இறுதிப் போட்டியை மட்டுமே நடத்துகிறது. நூறு நாடுகளுக்கும் மேலாக அதன் கிளை அமைப்புகள் பரவியுள்ளன. இவ்வமைப்பு குழந்தைகளுக் கான நல நிதியாக 250 மில்லியன் டாலர் களுக்கும் அதிகமாக நிதி திரட்டியளித் துள்ளது. தவிரவும் மிஸ் வேர்ல்டு இறுதிப்போட்டி நடக்கும் நாடுகளில் சுற்றுலாத் துறை வளர்ச்சி யடைகிறது.
  • இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வுபெறு பவர்கள் அதற்கு முந்தைய வருடம் மிஸ் வேர்ல்டு கிளை அமைப்பு நடத்தும் போட்டிகளிலோ அல்லது சிறப்பு மிஸ் வேர்ல்டு தேசிய ஆரம்பச் சுற்றுப் போட்டிகளிலோ தேர்வு பெற்றிருக்க வேண்டியது அவசியம். இறுதிப் போட்டி கிட்டத்தட்ட ஒரு மாத காலம், பல்வேறு தகுதிப்போட்டிகள், விருந்துகள் என நடைபெறும் இறுதியில் 15 லிருந்து 20 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் மிஸ் வேர்ல்டாக அறிவிக்கப்படுவார்.
  • மிஸ் போட்டோஜெனிக் விருதை வெனிசுலா நான்கு முறை வென்றுள்ளது. (1984, 1990, 1995, 1996) மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றவர்களில் நான்கு பேர் மிஸ் போட்டோஜெனிக் விருதையும் பெற்றுள்ளனர். அவர்கள் ஆஸ்ட்ரிட் கரோலினா, ஐஸ்வர்யா ராய், ஜாக்குலின் அகியுலேரியா, டயானா ஹெய்டன் ஆவர்.
  • 2019-ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் முதலிடத்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் வென்றுள்ளார். இரண்டாம் இடத்தை பிரான்ஸ் நாட்டின் ஓபிலி மெசினோ மற்றும் மூன்றாவது இடத்தை இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் வென்றனர்.

Advertisment

ms

gk010120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe