17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக் கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடு களை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பதவிக்காலமும் நிறைவடைவதால் அவற்றிற்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் குறிப்புகள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தியது.

4 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

சண்டிகர், சென்னை, குவஹாத்தி, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் 5 மண்டல கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதில் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ee

தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஆணையம் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளது. இந்த பயணத்தின்போது, அரசியல் கட்சிகள், அமலாக்க முகமைகள், அனைத்து மாவட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆணையம் கலந்துரையாடியது.

அனைத்து மாநிலங்களிலும் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்க முடியும்.

18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டிய-லின்படி 01.01.2024 அன்று நிலவரப்படி நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 96.88 கோடி ஆகும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இது மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பொருந்தும்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும், குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிறைவாக வாக்குச் சாவடி மையங்களுக்கு வருகை தந்து, முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்துமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பணியில் 1.5 கோடி பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாடு முழுவதும் 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.

18-வது மக்களவைக்கான தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை புதுடெல்-லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மார்ச் 16-ஆம் தேதி அறிவித்தார். மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவின் விவரம் 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

94 தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

96 தொகுதிகளுக்கு 4-ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

49 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

57 தொகுதிகளுக்கான 6-ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7-வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

தொகுதிகளின் அடிப்படையில், உத்திர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பீகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.

இந்தத் தேர்தலி-ல் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கில் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்டது, வடகிழக்கில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி) ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜம்மு&காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.

96.8 கோடி வாக்காளர்கள்

2024 மக்களவைத் தேர்த-லில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர். மாற்று பாலி-னத்தவர் 48 ஆயிரம் பேர். மொத்த வாக்காளர்களில் 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்களாவர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர்.

10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. வேட்பாளர்கள் விவரங் களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள செய-லி அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைமுறைகள்

வேட்புமனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 20

வேட்புமனு தாக்கல் முடிவு - மார்ச் 27

வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற உள்ளன. அதற்கான தேதி விவரங்கள்:

ஆந்திர பிரதேசம்: வாக்குப்பதிவு – மே 13, 2024

அருணாச்சல பிரதேசம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024

சிக்கிம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024

ஒடிசா: மே 13 - 28 சட்டப்பேரவைத் தொகுதிகள்

மே 20 - 35 தொகுதிகள்

மே 25 - 42 தொகுதிகள்

ஜூன் 1 - 42 தொகுதிகள்

26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

பீஹார் (1), குஜராத் (5), ஹரியானா

(1), ஜார்க்கண்ட் (1), மகாராஷ்டிரா (1),

திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (4), மேற்கு வங்கம் (2), தெலுங்கானா (1),

இமாச்சல பிரதேசம் (6), ராஜஸ்தான் (1),

கர்நாடகா (1), தமிழ்நாடு (1) என மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும்

அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில்

விஜயதரணி ராஜினாமாவால் காலி-யான

விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் முடிவுகள்

மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.