மக்களாட்சி முறையை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும்.
மிகச் சில வளரும் நாடுகளால் மட்டுமே வலிமையான மக்களாட்சி முறையை நடத்திட முடிகிறது என்பதால் இதற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இந்திய தேசம் எந்த கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அக்கொள்கைகளை நிலைநிறுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் ஆணையமானது பல ஆண்டுகளாக தனது நேர்மையான, அச்சமற்ற, வலிமையான மற்றும் பாகுபாடற்ற சட்டப்பூர்வமான வரம்பிற்குள் செயல்பட்டு இந்திய தேர்தல் முறையை தூய்மைப்படுத்தி தனது நம்பகத்தன்மையை உயர்த்திக் கொண்டுள்ளதோடு மக்களாட்சியின் பாதுகாவலனாகவும் விளங்கிவருகிறது. மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களே மக்களால் ஆட்சி புரிவது என்பதால் தற்காலத்தில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையினால் ஈர்க்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டுமல்லாது உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து கடைமட்ட நிர்வாகம் வரை அதிகாரப்பரவல் உறுதி செய்யப்பட வேண்டும். இதன் காரணமாகவே, மைய அரசிலிருந்து உள்ளாட்சி அமைப்பிற்கு அதிகாரம் திருப்பப்படும் வகையில் மக்களவை முதல் கிராம சபை வரை என்ற சொற்றொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு முறை
இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் கொண்டு வந்தது. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பரவலாக்கப்பட்ட மக்களாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லாகும். பொருளா
மக்களாட்சி முறையை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும்.
மிகச் சில வளரும் நாடுகளால் மட்டுமே வலிமையான மக்களாட்சி முறையை நடத்திட முடிகிறது என்பதால் இதற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இந்திய தேசம் எந்த கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அக்கொள்கைகளை நிலைநிறுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் ஆணையமானது பல ஆண்டுகளாக தனது நேர்மையான, அச்சமற்ற, வலிமையான மற்றும் பாகுபாடற்ற சட்டப்பூர்வமான வரம்பிற்குள் செயல்பட்டு இந்திய தேர்தல் முறையை தூய்மைப்படுத்தி தனது நம்பகத்தன்மையை உயர்த்திக் கொண்டுள்ளதோடு மக்களாட்சியின் பாதுகாவலனாகவும் விளங்கிவருகிறது. மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களே மக்களால் ஆட்சி புரிவது என்பதால் தற்காலத்தில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையினால் ஈர்க்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டுமல்லாது உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து கடைமட்ட நிர்வாகம் வரை அதிகாரப்பரவல் உறுதி செய்யப்பட வேண்டும். இதன் காரணமாகவே, மைய அரசிலிருந்து உள்ளாட்சி அமைப்பிற்கு அதிகாரம் திருப்பப்படும் வகையில் மக்களவை முதல் கிராம சபை வரை என்ற சொற்றொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு முறை
இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் கொண்டு வந்தது. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பரவலாக்கப்பட்ட மக்களாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லாகும். பொருளாதார. சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நிர்வாகத்தை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதுமாகும். மேற்கண்ட திருத்தங்களால் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல்களை நடத்தும் முறையானது அரசியலமைப்பின்படி கட்டாய மாக்கப்பட்டுள்ளது,
இந்திய அரசியலமைப்பின் 73-வது திருத்தச் சட்டம் (ஊராட்சிகள்):
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபையை உருவாக்கி தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு பொது மேற்பார்வைக்கான அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு ஊராட்சியின் ஆண்டு திட்டங்களை அங்கீகரிக்கவும், செயல்படுத்தவும் அதிகாரம் வழங்குதல்.
மூன்று அடுக்கு ஊராட்சி முறையை உருவாக்குதல் அதாவது, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை உருவாக்குவதை கட்டாயமாக்குதல்.
நாடு முழுவதும் அனைத்து வகையான ஊராட்சிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருத்தல்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தலைமைப் பதவிகளிலும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர்களான ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடி யினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்தல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலத்தை மாற்றமின்றி கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் என ஒரே சீராக நிர்ணயித்தல் மற்றும் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னிச்சையாக ஓர் அமைப்பின் அதாவது மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்துதல்.
போதுமான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை அளித்தல்.
மாநில நிதிக் குழுவை அமைப்பதன் மூலம் வரிகள் விதித்துக் கொள்ள அதிகாரம் அளிப்பதோடு அரசு மானியங்கள் மற்றும் பங்கு ஒதுக்கீடுகளை வழங்க வகை செய்தல்.
இந்திய அரசியலமைப்பின் 74-வது திருத்தச் சட்டம் (நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்):
கூடுதலான செயல்பாடுகள் மற்றும் வரி விதிப்பு அதிகாரங்களைப் பிரித்தளித்தல்.
மாநில அரசுடன் நிதிப்பங்கீடு.
காலந்தவறாது தேர்தல்களை நடத்துதல்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்.
பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வகைப்படுத்தலுக்கான தகுதிகளை நிர்ணயித்தல்.
ஒரு குடியிருப்புப் பகுதியின் அனைத்து நகர்ப்புற சேவைகளையும் அங்கு அமைந்துள்ள தொழிற்சாலையே வழங்கும் அல்லது வழங்க முன்வரும் நிலையில் மட்டுமே அத்தொழிற்சாலைப் பகுதிகளில் நகர்ப்புற குடியிருப்புகளை (பர்ஜ்ய்ள்ட்ண்ல்ள்) ஏற்படுத்துதல்.
மாவட்ட திட்டமிடுதல் குழு மற்றும் மாநகர திட்டமிடுதல் குழுக்களை அமைத்தல்.
ஊராட்சி சட்டம்
தமிழ்நாடு அரசு, மேற்கண்ட அரசியல மைப்பு சட்ட திருத்தங்கள் இயற்றப் பட்டதைத் தொடர்ந்து முந்தைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1958-ஐ மாற்றியமைத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ஐ இயற்றியது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர் பான பல்வேறு சட்டங்களில் தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
புதியதாக உருவாக்கப்பட்ட ஊராட்சிகள் சட்டத்தில் ஊராட்சிகள் மூன்று வெவ்வேறான நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியமும், அடிமட்ட அளவில் கிராம ஊராட்சியும் (சிற்றூராட்சி) உருவாக்கப்பட்டுள்ளன.
அதாவது, இம்மூன்று விதமான பஞ்சாயத்து அமைப்புகளும் தங்களுக்குரிய அதிகார எல்லையோடு ஒரே இடத்தில் பல்வேறு நிலைகளில் இயங்கினாலும் பலவகையான அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. 50,000 மக்கள்தொகை கொண்ட பகுதி ஒவ்வொன்றிலிருந்தும் மாவட்ட ஊராட்சிக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்ட ஊராட்சிக்கும் வார்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஒவ்வொரு 5000 மக்கள் தொகைக்கும் ஒரு வார்டு என்ற அளவில் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட இரு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக் கப்பட்ட அந்தந்த அமைப்புகளின் வார்டு உறுப்பினர்களால் அவர்களுக்குள்ளேயே மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியின் எல்லைகளும் அதற்கான சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக் கும் நோக்கில் வார்டுகளாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால், இதற்கு முன்னர் ஊராட்சி எல்லைக்குள் சமமான பரவலின்றி காணப்பட்ட மக்கள்தொகை, சரியாக அமைக்கப் பெறாத தெருக்கள், சாலைகள், சந்துகள் மற்றும் குறுகிய சந்துகள், பின்னாளில் மேற்கொள்ளப்பட்ட பிளாக் முறையிலான வீடுகளுக்கு எண்ணிடும் முறை போன்ற சில சிறப்பு காரணங் களுக்காக ஒவ்வொரு சிற்றூராட்சியிலும் குடியிருப்பு பகுதி மற்றும் மக்கள் தொகை மற்றும் புவியமைப்பிற்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கை குறைந்த பட்சமாக இரண்டாகவும் அதிகபட்சமாக ஐந்தாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒவ்வொரு வார்டும் ஒரு உறுப்பினர் வார்டாகவோ அல்லது பல உறுப்பினர் வார்டாகவோ அதிகபட்சம் 3 உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்லுறுப்பினர் வார்டுகளும் ஓர் உறுப்பினர் வார்டுகளாக 2011 சாதாரணத் தேர்தலுக்கு முன்னதாக மாற்றப்பட்டன.
அதன்படி ஒவ்வொரு வார்டும் ஓர் உறுப் பினர் பிரதிநிதித்துவம் கொண்டதாக உள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-ஃ மற்றும் சட்டக்கூறு 243-ழஆ ன் கீழான அரசியலமைப்பு சார்ந்த அதிகார அமைப்பே மாநில தேர்தல் ஆணையமாகும். மேலும், இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 239 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்திய அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள், 1992-ன் கீழ் நிறுவப்பட்ட சுதந்திரமான, தன்னாட்சி யுடைய ஒரு சட்டபூர்வ அமைப்பான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-ஃ மற்றும் அதனுடன் படிக்கப்பட்ட 243-ழஆ-யின்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அனைத்துத் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய மானது, 1994-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.