டெல்லியில், மாற்றுத்திறனாளி களுக்கான 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2-வது சீசன் நடந்தது.
இதில் 1300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்,6 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
பாரா வில்வித்தை, பாரா-தடகளம், பாரா-பேட்மிண்டன், பாரா பவர் லிஃப்டிங், பாரா ஷூட்டிங் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் ஆகியவையே அந்த ஆறு வகையான விளையாட்டு களாகும்.
இம்முறை பவர்லிப்டிங்கில் 18, தடகளத்தில் 14 தேசிய சாதனை படைக்கப் பட்டன. இதில் 12 வீராங்கனைகள் தேசிய சாதனை படைத்தனர்.
தமிழகம் சார்பில் குஷ்பூ கில், என்பதமிழி, கீர்த்திகா, தேசிய சாதனை படைத்தனர்.
தவிர, 186 தங்கம், 189 வெள்ளி, 218 வெண்கலம் என, மொத்தம் 596 பதக்கம் வழங்கப்பட்டன.
இதில் 346 பதக்கம் (110 தங்கம், 109 வெள்ளி, 127 வெண்கலம்) வீரர்களும், 250 பதக்கம் (79 தங்கம், 80 வெள்ளி, 91 வெண்கலம்) வீராங்கனைகளும் வென்றனர்.
முடிவில், 34 தங்கம், 39 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட 104 பதக்கங்களை அள்ளிய ஹரியானா, மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதற்கு முன், 2023-இல் நடந்த முதல் சீசனில் ஹரியானா முதலிடம் பிடித்திருந்தது.
.தமிழகம் 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் உட்பட 74 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தட்டிச் சென்றது.
உ.பி.,க்கு (23 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலம்) 3-வது இடம் கிடைத்தது.