* இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கே.சிவனை நியமித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. கடந்த 2015 ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ஏ.எஸ்.கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, கே.சிவன் இந்த பதவியை ஏற்றார்.
* தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
* விஞ்ஞானி டாக்டர் கே. சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
* தந்தை கைலாசவடிவு நாடார், தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தார். பின்பு பியுசி படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பட்ட படிப்பும் அங்கு பயின்றார்.
* கடந்த 1980-இல் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் [Madras Institute of Technology] ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தன்னுடைய முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் (IISC) 1982-இல் முடித்தார்.
* இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982-இல் இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தில்பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
* 2014-இல் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது அதன் திட்ட இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
* மேலும் இவர் ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அதன் பாதையை விண்ணில் தீர்மானிப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஆய்வுகள் வாயிலாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தோல்விக்கான காரணங் களை கண்டறிந்து அதிலும் சிவன் வெற்றி கண்டார்.
* இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம்விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையஇயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம்ம கேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார்.
* இஸ்ரோவில் தொடர்ந்து புராஜக்ட் இயக்குனர், RLV-TD துணை இயக்குனர், GSLV முதன்மை கன்ட்ரோலர், LPSC டைரக்டர் என பல்வேறு தலைமைபொறுப்பை திறம்பட ஏற்று செயல்பட்டார்.
டாக்டர் சிவன் பெற்ற முக்கிய விருதுகள்:
* சிறி அரி ஓம் அசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆய்வு விருது (1999)
* இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007)
* டாக்டர் பிரன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011)
* மதிப்புமிகு அலும்னஸ் விருது (2013)
* சத்தியபாமா பல்கலைக்கழக அறிவியல் முனைவர் விருது (2014)
* ஆனந்த விகடன் ""டாப் 10'' மனிதர் விருது (2016)
* MIT அலுமினி விருது (2013)
இஸ்ரோவின் சமீப வெற்றி
* இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் 12 ஜனவரி 2018 அன்று 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர்.
* பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் (PSLV C40/Cartosat-2 Series) மூலமாக இந்த செயற்கைக்கோள்கள் சென்னையைஅடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ராக்கெட் செலுத்தும் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.
* இந்த ராக்கெட்டில் கார்ட்டோசாட்-2 வகை பூமியை மேற்பார்வையிடும் நிலப்படவரைவுக்கலைக்கு உதவும் செயற்கைக்கோள் பிரதானமாக இடம்பெற்று இருந்தது.
* இந்த செயற்கைக்கோள் 710 கிலோ எடை கொண்டதாகும். இதைத் தவிர இந்த செயற்கைக்கோளுடன் 30 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இவற்றின் மொத்த எடை 613 கிலோவாகும்.
* இந்த துணை செயற்கைக்கோள்களில் இரண்டு செயற்கைக்கோள்கள் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் ஆகும். அதில் ஒன்று நுண் செயற்கைக் கோள் (மைக்ரோ) இன்னொன்று மிகநுண்ணிய செயற்கைக்கோளாகும் (நானோ). மீதமுள்ள 28 செயற்கைக் கோள்கள் வெளிநாட்டு செயற்கைக் கோள்களாகும்.
* கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரிய குடியரசு (தென் கொரியா), இங்கிலாந்துமற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஆகும். 31 செயற்கைக்கோள்களுடன் மொத்தம்1323 கிலோ எடையை சுமந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
* 31 செயற்கைக்கோள்களில் 30 செயற்கைக் கோள்கள் முதலிலில் 505 கிமீ தொலைவில்துருவ சூரிய இணக்கப்பாதையில் செலுத்தப்பட்டன.
* இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட நுண் செயற்கைக்கோள் 359 கி.மீ. துருவ சூரிய இணக்கப்பாதையில் செலுத்தப்பட்டது.
இதற்கென ராக்கெட்டின் 4 கட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டு இயக்கி அதன் சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டது.
* இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் சி-40வது ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
* திட மற்றும் திரவ எரிபொருளைக் கொண்டு நான்கு கட்டமாக இயக்கப்படும் இந்த ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும்.
* முதலில் காலை 9.28 மணிக்கு ராக்கெட்டைசெலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விண்வெளியில் ராக்கெட்டின்சுற்றுப்பாதையில் பழைய செயற்கைக்கோள் இடிபாடுகள் கடந்து சென்றதால் ஒரு நிமிடம் தாமதமாக காலை 9.29 மணிக்கு செலுத்தவிஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து இந்த செயற்கைக்கோள்கள் செலுத்துவதற்கான கவுண்ட்டவுண் பின்னர் தொடங்கியது.
* ராக்கெட்டின் நான்கு நிலைகளிலும் திட மற்றும் திரவ எரிபொருள்கள் திட்டமிட்டபடி நிரப்பப்பட்டன.
மற்ற ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி செய்து முடிக்கப்பட்டன.
* காலை 9.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் வெள்ளைப் புகையைகக்கியபடி பலத்த இரைச்சலுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டன.
* கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளை சுற்றியிருந்த வெப்பக் கவசத் தகடு விலகாத காரணத்தால் செயற்கைக்கோள் பயணம் தோல்வியடைந்தது.
* இந்த முறை முதல் நிலை முடிவடைந்து.
இரண்டாம் கட்ட என்ஜின் செயல்படத்தொடங்கியதும் செயற்கைக்கோளின் வெப்பக் கவசத் தகடு பிரிந்தது. இதை கட்டுப்பாட்டு விஞ்ஞானி உறுதி செய்ததும் அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
* நான்கு கட்டமும் வெற்றிகரமாக செயல்பட்டு குறிப்பிட்டபடி புவி சுற்று வட்டப்பாதையில் ராக்கெட் பறந்தது.
* சரியாக 17 நிமிடம் 20 விநாடிகளில் முதல் செயற்கைக்கோளான கார்ட்டோசாட் 2 ஐ சரியான உந்துவிசையுடன் 504 கி.மீ. உயரத்தில் சுற்று வட்டப்பாதையில் எறிந்தது. இதன் பின் ஒவ்வொரு செயற்கைக்கோளாக பிரிந்தன.
* கடைசியாக இஸ்ரோவின் ஒரு நுண் செயற்கைக்கோள் மட்டும் ராக்கெட் செலுத்தப்பட்டபின் ஒரு மணி நேரம் 45 நிமிடத்தில் பிரிந்தது.
* செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியபின் விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
இஸ்ரோவின் சமீப கால முக்கிய சாதனைகள்: * 2016 ஏப்ரலில், வழிகாட்டி அமைப்புக்காக, ஏழு செயற்கைக்கோள்களை கொண்ட நேவிக் அமைப்பு உருவாக்கப்பட்டது. * 2016 ஆகஸ்ட்டில், காற்றை சுவாசிக்கும் அமைப்பின் செயல் திறனை அறிந்து கொள்ள, சோதனை ரீதியாக ஸ்கிராம்ஜெட்இன்ஜின் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. * 2017 பிப்ரவரியில், (PSLV C37/Carosat-2 Series) ஒரே செலுத்து வாகனத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. * அண்டை நாடுகளுக்கு பரிசாக அளிக்கப்பட்ட தெற்கு ஆசிய செயற்கைக்கோள், 2017 மே மாதத்தில், விண்ணில் செலுத்தப்பட்டது. * 2017 ஜூன் மாதம் ஜிஎஸ்எல்வி எம்கே-3ராக்கெட், ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாகவிண்ணில் செலுத்தப்பட்டது. * 2017 ஜூனில், பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் மூலம் கார்டோசாட் செயற்கைக்கோள்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. * இந்திய விண்வெளி திட்டத்தில், பல்முனைஅலைவரிசை கண்காணிப்பு செயற்கைக்கோளான அஸ்ட்ரோசாட், 2015 ஆகஸ்ட்டில்விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. * மங்கல்யான் செவ்வாய் சுற்றுவட்டப் பாதை இயக்க கலன்(Mars Orbiter Mission - MOM),செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது. |