ஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி 60 ராக்​கெட்​ மூலம்​ வெற்​றிகர மாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன.

எதிர்​கால தேவையை கருத்​தில்​​கொண்​டு ‘பாரதிய அந்​தரிக்​ ஷா ஸ்​டேஷன்​’ எனும்​ இந்​திய ஆய்​வு மையத்​தை 2035-ஆம்​ ஆண்​டுக்​குள்​ ​விண்​வெளியில்​ நிறுவ இந்​திய ​விண்​வெளி ஆய்​வு நிறுவனம்​ (இஸ்​ரோ) முடிவு செய்​துள்​ளது. இந்​த திட்​டத்​தின்​ முதல்​கட்​ட ​விண்​கலங்​கள்​ 2028-ஆம்​ ஆண்​டு ​விண்​ணில்​ செலுத்​தப்​பட உள்​ளன.

அதற்கான முன்​தயாரிப்​பு பணிகளில்​ இஸ்​ரோ ஈடுபட்​டுள்​ளது.

Advertisment

ss

அதன்​ ஒருபகுதியாக ஸ்​பேடெக்​ஸ்​ எனும்​ திட்​டத்​தின்​கீழ்​ ​விண்​ணில்​ ​ விண்​கலன்​களை ஒருங்​கிணைக்​கும்​ பணிகள்​ தற்​போது மேற்​​கொள்​ளப்​பட உள்​ளன. இதற்​காக ஸ்​பேடெக்​ஸ்​ ஏ மற்​றும்​ ஸ்​பேடெக்​ஸ்​ பி என இரு ​விண்​கலன்​களை தனியார்​ நிறுவன பங்​களிப்​புடன்​ இஸ்​ரோ வடிவமைத்​தது. ஆந்​திர மாநிலம்​ ஸ்ரீஹரிகோட்​டா​வில் உள்​ள சதீஷ் தவான்​ மையத்​தின்​ ஏவுதளத்​தில்​ இருந்​து இந்​த ​விண்​கலங்​கள் பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டன. சுமார்​ 15 நிமிடத்​தில்​ தரையில் இருந்​து 476 கி.மீ உயரத்தில் விண்​கலங்​கள்​ வெற்​றிகரமாக நிலைநிறுத்​தப்​பட்​டன. இந்​த இரட்​டை ​விண்​கலன்​கள்​ தலா 220 கிலோ எடை ​கொண்​டவையாகும்​.

தற்​போது ஒன்​றன்​பின்​ ஒன்​றாக சுற்​றிவரும்​ ​விண்​கலங்​களை அடுத்​த 2 வாரங்​களில்​ ஒன்​றிணைக்​கும்​ பணிகள்​ மேற்​​கொள்​ளப்​படும்​.

மனிதர்​களை ​விண்​ணுக்​கு அனுப்​பும்​போது ஒரு ​விண்​கலத்​தில்​ இருந்​து மற்​றொன்​றுக்​கு அவர்​கள்​ மாறவும், எரிபொருளை மாற்​றிக்​ ​கொள்​வதற்​கும் இந்​த தொழில்​நுட்​பம்​ பயன்​படும்​.

இந்​த திட்​டம்​ வெற்​றி பெற்​றால்​ வல்​லரசு நாடுகளை போன்​று ​விண்​வெளியில்​ இந்​தியாவாலும்​ ஆய்​வு மையத்​தை அமைக்​க முடி​யும். அதனுடன்​ ககன்​யான், சந்​திரயான்​-4 திட்​டங்​கள்​ மற்​றும்​ எதிர்​கால ​விண்​வெளி ஆராய்​ச்​சி நடவடிக்​கைகளுக்​கு உத​விகரமாக அமை​யும்​.

இதுத​விர பிஎஸ்​எல்​​வி ராக்​கெட்​டின்​ இறுதி பகுதியான பிஎஸ்​-4 இயந்​திரத்​தில்​ போயம்​ எனும்​ பரிசோதனை முயற்​சி​யும்​ 4-வது முறையாக வெற்​றிகரமாக மேற்​​கொள்​ளப்​ பட்​டது. அதாவது, பிஎஸ்​-4 இயந்​திரத்​தை இருமுறை நிறுத்​தி மீண்​டும்​ இயக்​கி, அதன்​ உயரமானது 365 கி.மீட்​டருக்​கு கீழே ​கொண்​டுவரப் ​பட்​டது. இதில் 24 ஆய்​வுக்​ கரு​விகள்​ இடம்​பெற்​றுள்​ளன. இவை பு​வியை வலம்​ வந்​தபடி அடுத்​த சில மாதங்​ களுக்​கு போடிக்​, செயற்​கை நுண்​ணறிவு, உயிரி தொழில்​நுட்​பம்​ தொடர்​பான ஆய்​வுகளை ​முன்​னெடுக்​க உள்​ள தாகவும்​ இஸ்​ரோ ​தெரி​வித்துள்​ளது.

ss

Advertisment

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 16-ஆம் தேதியன்று விண்வெளியில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.

இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள் களை விண்வெளியில் இணையச் செய்த 4-வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.