1949-ஆம் ஆண்டில் மாசேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1-ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது. இந்த வழியில் சீனா மீது கவனம் செலுத்திய முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடாக இந்தியா ஆனது. 1954-ஆம் ஆண்டில், திபெத்தின் மீதான சீன இறையாண்மையையும், இந்தியா ஏற்றுக்கொண்டது. அதாவது திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது. "இந்தியர் - சீனர், சகோதரர்-சகோதரர்' ( இந்தி-சீனி பாய் பாய்) என்ற முழக்கமும் எழுப்பப்பட்டது. 1954 ஜூன் மற்றும் 1957 ஜனவரிக்கு இடையில், சீனாவின் முதல் பிரதமரான சூ என் லாய் நான்கு முறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். 1954 அக்டோபரில் நேருவும் சீனா சென்றார். "சீன மக்கள் குடியரசாக மாறிய பின்னர் கம்யூனிஸ்ட் அல்லாத நாட்டின் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் சுமார் 10 கிலோமீட்டர் நீள சாலை நெடுகிலும் நின்றுகொண்டிருந்த சீன மக்கள் கைதட்டி நேருவை வரவேற்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​நேரு பிரதம மந்திரியை மட்டுமல்ல, சீன மக்கள் குடியரசின் தலைவரான மாவோவையும் சந்தித்தார்.

d

மறுபுறம், திபெத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து, சீனாவின் படையெடுப்பு அதிகரித்து வந்தது. 1950-ஆம் ஆண்டில், சீனா திபெத்தை தாக்கத் தொடங்கி அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. திபெத் மீதான சீனத் தாக்குதல் முழு பிராந்தியத்தின், நிலவியல் சார்ந்த அரசியலையும் (ஜியோ பாலிடிக்ஸ்) மாற்றியது.

சீன தாக்குதலுக்கு முன்னால் திபெத், சீனாவை காட்டிலும் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. இறுதியாக திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை இழந்தது. நேரு அரசில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், திபெத்தில் இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட சில தலைவர்களில் ஒருவர். 1950 டிசம்பரில் தான் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வல்லபாய் படேல் நேருவுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தார்.

Advertisment

அதில், "திபெத் சீனாவுடன் இணைக்கப் பட்ட பின்னர், அது நமது நாட்டின் வாயிற்கதவை எட்டிவிட்டது. அதன் விளைவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் வடகிழக்கு எல்லையைப் பற்றி நாம் அரிதாகவே கவலைப்படுகிறோம்.

வடக்கில் எல்லா ஆபத்து களுக்கும் முன்னால் இமயமலை நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று கொண்டிருக்கிறது. திபெத் நமது அண்டை நாடாக இருந்தது, அப்போது எந்தப் பிரச்சி னையும் இல்லை. முன்பு சீனர்கள் பிளவுபட்டி ருந்தனர், அவர்களுக்கு சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் இருந்தன, அவர்கள் ஒருபோதும் நம்மை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, என்று எழுதினார்.

கொள்கைவாதி நேரு, கம்யூனிச ஆட்சியின் கீழான புதிய சீனாவைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே நட்புதான் ஒரே சிறந்த வழி என்று அவர் நினைத்தார். இந்தியாவும் சீனாவும் அடக்குமுறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்றன என்றும் ஆசியா- ஆப்பிரிக்காவில் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளுடன், இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார்.

Advertisment

1950-களின் நடுவே இந்தியப் பகுதிகளில் சீனா ஊடுருவலை ஆரம்பித்தது. 1957-ஆம் ஆண்டில், சீனா, அக்சாய் சின் வழியாக, மேற்கே 179 கி.மீ சாலை அமைத்தது.

எல்லையில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையிலான முதல் மோதல், 1959 ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஏற்பட்டது. சீன ரோந்து படை, நெஃபா (வடகிழக்கு ஃப்ராண்டியர் ஏஜென்சி) எல்லையில், லாங்ஜுவை தாக்கியது. அந்த ஆண்டு அக்டோபர் 21லிஆம் தேதி, லடாக்கின் கொங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 17 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சீனா விவரித்தது. ஆனால் இந்தியா "தனது வீரர்கள் திடீரென தாக்கப்பட்டனர்' என்று கூறியது.

1962-இல் சீனா இந்தியாவைத் தாக்கியபோது, அது இமயமலையின் எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தவோ, எல்லையை மாற்றவோ நடந்த போர் அல்ல, அது ஒரு கலாசாரப்போர் என்று சிலர் கருதினர். தென்கிழக்கு ஆசியாவைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட இஸ்ரேலிய நிபுணரான யாகோவ் வர்ட்ஃஜபர்ஜர் தனது "சைனா சவுத்வெஸ்டர்ன் ஸ்டாடெர்ஜி' என்ற புத்தகத்தில் "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மற்றும் வரலாற்று வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள நேரு தவறிவிட்டார்' என்று எழுதினார். சீனாவின் நோக்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை முழு உலகமும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டதாக நேரு நினைத்தார். இந்தியா சட்டப்பூர்வமாக சரியானது என்பதால் ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் அது முன்வைத்தால், சீனா கடைசியாக அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் கருதினார். ஆனால் சீனா ஒருபோதும் சர்வதேச சட்டங்களை மதிக்கவில்லை.

d

"இந்தியாவும் சீனாவும் தங்கள் சுதந்திரத்தை வேறு வேறு விதமாக அடைந்தன என்ற அடிப்படை வேறுபாட்டைக் கூட நேரு புரிந்து கொள்ளவில்லை' என்று யாகோவ் வர்ட்ஃஜபர்ஜர் எழுதினார்.

இந்தியா ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டமும், சீனா, ஜப்பானிய காலனிகளுக்கும் உள்நாட்டு சக்திகளுக்கும் எதிராக நடத்திய போராட்டமும் வேறுபட்டவை. இந்தியா சுதந்திரப் போரை பெருமளவில் ஒத்துழையாமை மூலம் வென்றது மற்றும் வன்முறை தீயதாக கருதப்பட்டது. மறுபுறம், மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முற்றிலும் வேறுபட்டது. வன்முறையை கொள்கையாக கொண்டது. நேருவின் திட்டமிடல், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான தொடர்பைக் கொண்டிருந்ததால் அவர், பிரிட்டிஷ் புவிசார்மயமாக்கல் கருத்தை ஏற்றுக்கொண்டார். மறுபுறம், மாவோவின் ராஜதந்திரம், கடந்த காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 1949-இல் கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு முன்னர் மாவோ, சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத் தையும் ஒரு தரப்பானது என்று குற்றம் சாட்டி நிராகரித்து விட்டார்.

வரலாற்று அடிப்படையில் சீனா வுடனான எல்லையை நியாயப்படுத்த இந்தியா முயன்று வந்தது. அதே நேரம் சீனா போருக்கு தயாராகி வந்தது. மக்மோஹன் கோடு காலனித்துவமானது என்று கூறி அதை ஏற்க மாவோ மறுத்து விட்டார். சீனா, முழு அருணாச்சல் பிரதேசம் மீதும் உரிமை கோரத் தொடங்கியது.

பெர்டில்ண்ட்னர் தனது புத்தகத்தில் "சீன கம்யூனிஸ்டுகள் நேருவை முதலாளித்துவ தேசியவாத தலைவராக கருதினர்' என்று எழுதினார்.

நேருவை ஒரு இடைநிலை சோசலிச தலைவராகக்கூட அவர்கள் கருதவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேரு மீதான ஆரம்ப தாக்குதல், 1949 அக்டோபர் 1-ஆம் தேதி சீன மக்கள் குடியரசு அறிவிப் பிற்கு முன்பே தொடங்கிவிட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரக் குழு இதழான, ஷிஜி ஜிஷி (உலக அறிவு) 1949 ஆகஸ்ட் 19 இதழில், நேருவை ஏகாதிபத்தியவாதிகளின் உதவியாளர் என்று அழைத்தது. இந்தியர் சீனர் சகோதரர்-சகோதரர் என்ற முழக்கத்தின் பின்னால் என்ன நடக்கிறது என்று கூட நேருவுக்குத் தெரியவில்லை. சிஐஏ அறிக்கையின்படி, மியான்மரின் முன்னாள் பிரதமர் பாஸ்வே, 1958-இல் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜவஹர்லால் நேரு சீனாவை பெரிதும் நம்பி மோசம் போனார். சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. இது சீனாவின் நட்பு நாட்டிற்கெதிரான துரோகம்.

நரேந்திர மோடி பிரதமரானவுடன் சீனாவை மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நண்பர் என்று கூறினார். பிரதமரான பின்னர் சீன அதிபர் ஜி-ஜின்பிங்கை 18 முறை சந்தித்துள்ளார். 2017 ஜூன் 2லிஆம் தேதி, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்தின் குழு விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லை தாவாக்கள் உள்ளன, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படவில்லை என்று கூறினார். பிரதமரின் இந்த அறிக்கையை சீனா வரவேற்று அதை ஏற்றுக்கொண்டது. அப்படிச் சொல்லி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சீனா மீண்டும் நட்பு நாட்டுக்கு எதிராகவே செயல் படுகிறது.

இப்போதைய சீனா இந்தியாவுடன் எல்லை பிரச்சினை செய்வதற்கு மறைமுக காரணம் உள்ளது. "சிபிஇசி( சீனா பாகிஸ்தான் பொருளாதார பகுதி) சீனா வுக்கு மிகவும் முக்கியமானது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. சியாச்சின் பனிப்பாறை மீதும் சீனாவின் பார்வை உள்ளது. எவ்வாறா யினும், சிபிஇசி-ஐ யாரும் கண்காணிப்பதை சீனா விரும்பவில்லை. அதற்காகவே லடாக்கிலில் பிரச்சினை ஆரம்பித்தது. இதை திடீரென்று அந்த நாடு செய்யவில்லை, முழு திட்டமிடலுடன் செயல்பட்டுள்ளது.

1993லிஇல் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, இரு நாடுகளுக்கிடையில் எல்.ஏ.சி (மெய்யான கட்டுப்பாடு கோடு) முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்.ஏ.சி மணலில் வரையப்பட்டது போல வலிமையற்றதாக உள்ளது. எல்லையில் நிரந்தரத் தீர்வை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. அது இந்தியாவுடனான அனைத்து வகையான உறவுகளையும் ஊக்குவித்து வருகிறது, ஆனால் எல்லைப் பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை. 1962 போருக்குப் பிறகு, 58 ஆண்டுகள் கடந்துவிட்டன.

d

எல்லையில் பதற்றத்தை குறைப்பது தொடர்பான பேச்சுக்களை நடத்த, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், கடந்த மாதம் ரஷ்யாவில் சந்தித்தனர். இரு அமைச்சர்களுக்கிடையில் சில பிரச்சனைகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட்டது. ஆனால் சீன ராணுவம், இந்தியா ஆட்சேபம் தெரிவிக்கும் பகுதியிலிருந்து பின்வாங்கும் என்று வெளிப்படையாக கூறவில்லை..

ஏப்ரல் முதல் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜூன் 15 அன்று ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னர், சீன ராணுவம் லடாக்கில் பல இந்திய பகுதிகளில் ஊடுருவி இருப்பதாக கூறப் படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைமைக்கு திரும்ப சீனா அனுமதிக்குமா அல்லது எல்லையை மீண்டும் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வி. சீனா பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஆனால் அது இந்தியாவை அச்சுறுத்தவும் செய்கிறது. முழு அருணாச்சல பிரதேசமும் தனக்கு சொந்தமானது என்றும், அதை ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என்றும் சீனா கூறுகிறது.

முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சரை ரஷ்யாவில் சந்தித்தார். இது தவிர, சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் பேசினார்.

ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் கிழக்கு லடாக்கின் எல்லையில், ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று கூற சீனா தயாராக இல்லை.

"இந்திய அரசு லடாக் எல்லை பகுதியில் உள்கட்டமைப்பு தொடர்பாக நிறைய பணிகளை செய்துள்ளது. இன்னும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சீனா நம் பகுதிக்குள் நுழைந்ததும் இந்தியா ராணுவம் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய அரசு நேருவைப் போல எதுவும் செய்யாமல் இருக்கவில்லை, தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் எல்.ஏ.சி.யில் உள்ள 3,440 கிலோ மீட்டர் நீளத்தில், பல தசாப்த காலங்களாகத் தீர்வுகாணப்படாமல் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட, முக்கியமான விஷயங்களுக்கு ஒரு சில தினங்களில் தீர்வை ஏற்படுத்திவிட முடியாது.

என்றாலும் ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தை நல்ல தொடக்கம். பேச்சுகளே இல்லாமல் இருப்பதைவிட, பேச்சுகள் நடந்திருப்பது நல்லது.

ஆனால் நாம் எச்சரிக்கையுடனும் பரந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.