மத்திய அரசு லோக்சபாவில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ தாக்கல் செய்தது. பிறகு இந்த மசோதா கூட்டணி கட்சிகளுடன் விரிவான ஆலோசனைக்காக எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. முன்மொழியப் பட்டுள்ள சட்டத் திருத்தங்களின்படி, மொபைல் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் போல, மின்சாரம் வழங்குபவர்களையும் தேர்வு செய்யலாம் என்ற வாய்ப்பை நுகர்வோருக்கு அரசாங்கம் அளிக்கிறது. மாநிலப் பயன்பாடுகள் இழப்பில் இருந்து வெளிவரவும், சரியான நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த உதவவும், சரியான நேரத்தில் போதுமான கட்டணத் திருத்தங்களை செய்யும் ஏற்பாடும் இதில் உள்ளது.
மத்திய அமைச்சரவை நுகர்வோருக்காக, ஒப்புதல் அளித்த மசோதாவான மின்சாரச் சட்டத்தின் 42 மற்றும் 14-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம், தொலைபேசி அல்லது இணைய சேவை வழங்குனர் களை தேர்வு செய்வதைப் போல, மின்சார சேவை வழங்குபவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாடிக்கை யாளர்களுக்கு வழங்குகிறது.
மின்சார சட்டத்திருத்த பிரிவு 14, பாகுபாடற்ற திறந்த அணுகல் விதிகளின் கீழ் அனைத்து உரிமைதாரர்களும் விநியோக நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கும்.
அதே நேரத்தில், பிரிவு 42 விநியோக உரிமதாரர்களுக்கு விநியோக நெட்வொர்க்கிற்கு பாரபட்சமற்ற திறந்த அணுகலை எளிதாக்கும் என்று கூறுகிறது.
இந்த சட்டத்தின் 62-வது பிரிவு திருத்தத்துடன் கூடிய இந்த மசோதா, மின் விநியோக நிறுவனங்களின் கொள்ளை விலையைத் தவிர்க்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் பொருத்தமான கமிஷன் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண உச்சவரம்புகளை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்கிறது.
மேலும், மின் உற்பத்தியாளர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்து வதற்கு போதுமான பணத்தை மாநில மின் பயன்பாடுகளுக்கு வழங்க உதவும். சரியான நேரத்தில் கட்டண திருத்தங்களை உறுதி செய்வதற்கான பல விதிகளை இந்த திருத்த மசோதா கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை யானது, மின் உற்பத்தி நிறுவனங் களுக்குப் பணம் செலுத்துவதில் விநியோக நிறுவனங்களால் மீண்டும் மீண்டும் வரும் பிரச்சனையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சட்டத்தின் பிரிவு 166-இல் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலம் இந்த மசோதா பணம் செலுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், கட்டுப்பாட்டா ளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் முயற்சி செய்கிறது.
“இந்த சட்டத்தில் ஒழுங்குமுறை பொறிமுறையை வலுப்படுத்துவதும், விநியோக உரிமதாரர்களின் மேம்பட்ட பெருநிறுவன நிர்வாகத்தின் மூலம் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும் அவசியமாகிவிட்டது” என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் விதிகளை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் பல எதிர்க்கின்றன. மின்சாரம் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டெல்லிலி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாவை ஆபத்தானது என்று ட்வீட் செய்து “இது ஒரு சில மின் விநியோக நிறுவனங்களுக்கு பயனளிக்கும்” என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் மிகவும் ஆபத்தானது. இதன் மூலம், நாட்டில் மின்சார பிரச்னை மேம்படுவதற்கு பதிலாக, மேலும் தீவிரம் அடையும். மக்களின் துன்பம் அதிகரிக்கும். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பயனடையும்.
இதை அவசர அவசரமாக கொண்டு வர வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு அட்டைகளைக் காட்டி, காகிதங் களைக் கிழித்து, காற்றில் வீசியதால், அவையில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியது.
அதே நேரத்தில், பாஜகவுடன் நட்புறவாகக் கருதப்படும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் விரிவான ஆலோசனைகளை வலியுறுத்தியுள்ளன.
அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங் களைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், பல்வேறு மாநில மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்கள்) மின் உற்பத்திக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் டிஸ்காம்கள் மின் உற்பத்தி நிறுவனங் களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 57 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.114,222 கோடியில் 26 சதவீதம் ஆகும்.
மார்ச் 31, 2022 வரை புதுப்பிக்கப்பட்ட அரசு புள்ளிவிவரங்களின்படி, மாநிலங்கள் டிஸ்காம்களுக்கு சேவை களுக்காக ரூ. 62,931 கோடியும், அவர்கள் அறிவித்த இலவசங்களுக்கு ரூ.76,337 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது.
டிஸ்காம்களுக்கு பணம் செலுத்தத் தவறிய மாநிலங்களில், தெலங்கானா 11,915 கோடி ரூபாயுடன் முதலிடத் திலும், மகாராஷ்டிரா 9,131 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 18,946 கோடி ரூபாய்க்கு டிஸ்காம்களுக்கு மானியம் செலுத்தாத மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முன்னணியில் உள்ளது. மத்தியப் பிரதேசம் (ரூ. 16,240 கோடி) இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று மாநிலங்கள் சேர்ந்து ரூ. 65,041 கோடி செலுத்த வேண்டிய நிலையில், அடுத்த மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் மொத்தத் தொகையில் ரூ. 29,280 கோடி பாக்கி வைத்துள்ளன என்று பிராப்தி (செனரேட்டர்களின் விலைப்பட்டியலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான மின் கொள்முதலில் செலுத்துதல் மற்றும் பகுப்பாய்வு) புள்ளிவிவரங்களின்படி ஜூலை 31 வரை, 2022 தகவல்கள் உள்ளது.
கட்டணத் திருத்தம் குறித்த கோரிக்கை களை ஏற்கும் வகையில், கட்டுப்பாட்டா ளருக்கு அதிகாரம் அளிப்பதுடன், மின்சாரத்திலும், அரசின் இலவசங்கள் நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.