கொரோனா மூன்றாம் அலை: முக்கிய பரிந்துரைகள்

/idhalgal/general-knowledge/corona-third-wave-key-recommendations

ந்தியாவில் காணப்படும் இந்த மாறுபாட்டை டெல்டா ப்ளஸ் என்று வழங்குகிறோம். ஜூன் 11-ஆம் தேதி அன்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் முதன்முதலாக இது இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் டெல்டா மாறுபாட்டின் துணை பிரிவை சேர்ந்தது இந்த மாறுபாடு. K417N எனப்படும் ஸ்பைக் புரத மாற்றத்தை பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்கா வில் காணப்பட்ட பீட்டா மாறுபாட் டிலும் காணப்பட்டது. இந்த பிறழ்வு, டெல்டா மாறுபாட்டின் தற்போதுள்ள பிற அம்சங்களுடன் இணைந்து மேலும் கொரோனா வைரஸை பரப்பக் கூடியதாக மாறிவிடும் என்று கவலை அடைந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

K417N பீட்டா மாறுபாட்டில் (பி .1.351 பரம்பரை) இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால், இந்த பிறழ்வில் நோய் எதிர்ப்பு சக்தியை முறித்து முன்னேறி செல்லும் பண்புகள் உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் காக்டெய்லின் செயல்திறனை இந்த பிறழ்வு குறைப்பதாக இந்திய வைரல் தொற்று நோயியல் நிபுணர் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார்.

dd

ஜூன் 16 அன்று 197 வழக்குகள் 11 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் (36), கனடா (1), இந்தியா (8), ஜப்பான் (15), நேபாளம் (3), போலந்து (9), போர்ச்சுகல் (22), ரஷ

ந்தியாவில் காணப்படும் இந்த மாறுபாட்டை டெல்டா ப்ளஸ் என்று வழங்குகிறோம். ஜூன் 11-ஆம் தேதி அன்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் முதன்முதலாக இது இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் டெல்டா மாறுபாட்டின் துணை பிரிவை சேர்ந்தது இந்த மாறுபாடு. K417N எனப்படும் ஸ்பைக் புரத மாற்றத்தை பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்கா வில் காணப்பட்ட பீட்டா மாறுபாட் டிலும் காணப்பட்டது. இந்த பிறழ்வு, டெல்டா மாறுபாட்டின் தற்போதுள்ள பிற அம்சங்களுடன் இணைந்து மேலும் கொரோனா வைரஸை பரப்பக் கூடியதாக மாறிவிடும் என்று கவலை அடைந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

K417N பீட்டா மாறுபாட்டில் (பி .1.351 பரம்பரை) இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால், இந்த பிறழ்வில் நோய் எதிர்ப்பு சக்தியை முறித்து முன்னேறி செல்லும் பண்புகள் உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் காக்டெய்லின் செயல்திறனை இந்த பிறழ்வு குறைப்பதாக இந்திய வைரல் தொற்று நோயியல் நிபுணர் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார்.

dd

ஜூன் 16 அன்று 197 வழக்குகள் 11 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் (36), கனடா (1), இந்தியா (8), ஜப்பான் (15), நேபாளம் (3), போலந்து (9), போர்ச்சுகல் (22), ரஷ்யா (1), சுவிட்சர்லாந்து (18), துருக்கி (1), அமெரிக்கா (83). அண்மையில் மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் கேரள மாநிலங்களில் 40 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பிடத்தக்க அளவிற்கு விரைவாக இம்மாநிலங்களில் அந்த நோய் தொற்று பரவவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப வழக்கு ஏப்ரல் 5 அன்று எடுக்கப்பட்ட மாதிரியி-லிருந்து உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் தனது முதல் 5 வழக்குகள் ஏப்ரல் 26 அன்று வரிசைப்படுத்தப்பட்டதாகவும், அவை நேபாளம் மற்றும் துருக்கி யி-லிருந்து பயணம் செய்த தனிநபர்களின் தொடர்பால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் இந்த பிறழ்விற்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

இந்த பிறழ்வுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை சோதிக்க இந்தியாவிலும் உலக அளவிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. டெல்டா பிறழ்வின் ஒரு பகுதியாக இந்த மாறுபாட்டை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது, கூடுதல் பிறழ்வுகளுடன் மாறுபாடுகள் ஏற்படும் போது அது கவலை அளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு, இந்த மாறுபாடு பொதுவானதாகத் தெரியவில்லை, தற்போது டெல்டா வழக்குகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது டெல்டா மற்றும் பிற புழக்கத்தில் உள்ள மாறுபாடுகள் அதிக அளவு தொற்று பரவுதலுக்கு காரணமாக அமைந்ததால் பொது சுகாதார அபாயமாக இருக்கின்றன. இந்த தொற்றுகள் உறுதியான பகுதிகளில் தடம் அறிதல், அதிக சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத் துதல், தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. உலகில் மோசமான கொரோனா தொற்று பாதிப்பை சந்தித்த நாடாக இந்தியா மாறியுள்ள நிலையில், டெல்டா ப்ளஸ் மாறுபாடு புதிய அலைகளை உருவாக்கும் என்ற கவலை அதிகமாக உள்ளது. பிறழ்வு இந்தியாவில் மூன்றாவது அலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இரண்டாம் அலையின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் நிலையில், மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போதி-ருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 21 பேர் அடங்கிய வல்லுநர்கள் குழு அளித்த பரிந்துரைகள் லேண்சட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உயிர்மருந்தக நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரன் மஜும்தார் ஷா மற்றும் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி ஆகியோரும் இந்த வல்லுநர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் முன், அரசாங்கங்கள் தயாராக வேண்டும் என்று கூறி முக்கிய பரிந்துரைகளை அவர்கள் அளித்துள்ளனர்.

முக்கிய பரிந்துரைகள்

அடிப்படை சுகாதார சேவைகள் பரவலாக்கப்பட வேண்டும்.

கொரோனா பரவல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடும் என்பதால், ஒரே மாதிரியான நடவடிக்கைகள் அனைவருக்கும் சரியாக இருக்காது.

ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை கட்டணங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

வெளிப்படையான தேசிய கட்டண நிர்ணய கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்கள் மருத்துவத்திற்கு செய்யும் செலவு அவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது, மேலும் தற்போது இருக்கும் அனைத்து விதமான மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு கீழும் கொரோனா சிகிச்சை பெறும் வசதி கொண்டுவரப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் அனைவருக்கும் தெளிவாக கொண்டு சேர்க்கும் படி செய்ய வேண்டும்.

சர்வதேச நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்கள், அதாவது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் மற்றும் அவர்களுக்கான சிகிச்சை, ஆரம்ப சுகாதாரம் குறித்து உள்ளூர் மொழியில் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் கூட இடம் பெற்றிருக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட, தனியார் உள்ளிட்ட அனைத்து சுகாதாரத்துறை பிரிவு களிலும் ஆட்களை நிர்ணயிக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு கவசங்கள், வழிமுறைகள், காப்பீடு மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

கையில் இருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை பார்த்து, அனைத்து தரப்பினரும் பயன்படும் படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் பொதுமக்கள் நலனிற்கானது. பொதுமக்களுடன் ஒன்றிணைந்து, கொரோனாவுக்கு எதிராக போராட அவர்களின் பங்கேற்பை பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயார்படுத்தி, தரவுகளை சேகரிப்பதிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்டோர் வயது, பாலினம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதம், இறப்பு விகிதம், அதோடு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, சமூக ரீதியில் கொரோனா பரவல் கண்காணிப்பு, சிகிச்சை வழிமுறைகள் என அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.

பல பணிகள் முடங்கி, பலரும் வேலையிழந்துள்ளதால், மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகமாகி இருக்கிறது. தொழில் சார்ந்த வேலைகளில் பணியாளர்களின் வேலை நீக்கம் இருக்கக்கூடாது. மேலும் பொருளாதாரம் சீரானதும், அந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்.

gk010721
இதையும் படியுங்கள்
Subscribe