‘கியோட்டோ நெறிமுறை-1997’, ‘பாரிஸ் உடன்படிக்கை-2015’-க்குப் பிறகு, தற்போது நடைபெற்ற கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு முதன்மைக் காரணம், பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (ஐ.பி.சி.சி.) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை - ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ என்கிற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்ததுதான். அறிவியல் அடிப்படையில் அந்த அறிக்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு பூவுலகைக் காக்கும் நடவடிக்கைகளை அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டில் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

cc

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமா கவும் இருந்து வந்துள்ளது.

Advertisment

பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிரகித்து கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது. பூமியின் நிலப்பரப்பிலிருந்து மீண்டும் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்படும் சூரியனின் ஆற்றல், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமியிலுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடர்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் எதுவும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

Advertisment

இயற்கையாக சூரிய ஆற்றலை கொண்டு பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல்முறையோடு, பூமியின் நிலப்பரப்பில் இருந்து தொழிற்சாலை கள் மற்றும் விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிகளவிலான ஆற்றல், பசுமை இல்ல விளைவின்போது சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதீத விவசாயத்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து மேற்காணும் இந்த அசாதாரண மாற்றத்துக்கே பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமயமாதல் என்று பெயர்.

வெப்பமயமாதலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது நீராவிதான். எனினும் அது வளிமண்டலத்தில் சில நாட்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

ஆனால், கரியமில வாயு (ஈஞ2) மிக நீண்ட காலத்திற்கு வளிமண்டலத் தில் தங்கியிருக்கும். தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தது போன்ற நிலைக்கு பூமியின் வளிமண்டலம் திரும்புவதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகும். அதுவும், இந்த மாற்றத்திற்கு பெருங்கடல்கள் போன்ற இயற்கை நீரியல் அமைப்பு களால் மட்டுமே வித்திட முடியும்.

மனிதர்களால் ஏற்படுத்தப்படும் கரியமில வாயு வெளியேற்றத்திற்கு பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதே காரணமாக உள்ளது. வளிமண்டலத்தில் காணப்படும் கரியமில வாயுக்களை உறிஞ்சக்கூடிய பூமியிலுள்ள காடுகள் அழிக்கப்படும்போது, அவற்றில் ஏற்கனவே உட்கிரகிக்கப்பட்டிருந்த கார்பனும் வெளியிடப்பட்டு, அது புவி வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது.

cc

தொழிற்புரட்சி தொடங்கிய 1750-களில் இருந்து, இதுவரை 30 சதவீதத்துக்கும் அதிகமாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கரியமில வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது.

மற்ற பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்டவையும் மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக அதிக அளவில் வெளியிடப்பட்டு வந்தாலும், கரியமில வாயுவுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவே.

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்னதாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் கூறுகிறது. பூமியின் மிகவும் வெப்பம் மிக்க ஆண்டுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களை, கடந்த 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளே ஆக்கிரமித்துள்ளன. 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளும் அதில் அடக்கம்.

2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.

நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இதுபோன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.

இருப்பினும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. துருவ பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருகின்றன. 1979 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் துருவ பகுதியில் உள்ள கடலில் உள்ள பனிப்பாறைகளின் இருப்பில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.

மேற்கு அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக்கோள் தரவு காட்டுகிறது. சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டி காவும் தனது பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாறிவரும் காலநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலும் காணப்படுகின்றன. தாவரங்கள் முன்னதாகவே பூ விடுவது மற்றும் பழம் விளையும் பருவம்/ காலம் மற்றும் விலங்குகளின் வாழிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

1850-ஆம் ஆண்டு முதல் 21-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலத்தில் பூமியின் தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றே பெரும்பாலான பாவனையாக்கல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3-5 செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதே பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும், கொள்கை வகுப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

1.5 டிகிரி செல்சியஸ் என்னும் இலக்கை எட்டுவதற்கு "சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் விரைவான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்கள்" தேவைப்படும் என்று 2018-ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) தனது அறிக்கை ஒன்றில் பரிந்துரைத்தது.

பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அரசியல் ரீதியான நடவடிக்கையின் மூலம் குறைப்பதற்குரிய முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை உடனடியாக மிகப் பெரிய அளவில் குறைத்தாலும், அவற்றின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், பூமியின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் இயற்கையின் மூலங்களான நீர் அமைப்புகள், பனிக்கட்டிகள் ஆகியற்றில் பிரதிபலிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதே போன்று, பூமியின் வளிமண்டலத்தில் குவிந்துள்ள கரியமில வாயுக்கள் நீங்குவதற்கு பல தசாப்தங்கள் ஆகும்.

மாறி வரும் காலநிலையால் எவ்வளவு பெரிய தாக்கங்கள் ஏற்படும் என்ற கேள்விக்குரிய பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது.

நன்னீர் பற்றாற்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது போன்ற வகைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இருக்கக் கூடும். அதிதீவிர மான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும், அவற்றை தற்போது நிலவும் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி கூறுவது சிக்கலான காரியமாகவே உள்ளது.

உலகம் மென்மேலும் சூடானால், நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக் கூடும். அதே சமயத்தில், கடற்கரையை ஒட்டி அமையாத பகுதிகளில் கோடைகாலத்தின்போது, வெப்பநிலை அதிகரித்து வறட்சிக்கு வித்திடும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.

புயல்களின் காரணமாக ஏற்படும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் கடலில் கலந்து, அதன் நீர்மட்டம் உயர வழிவகுக்கும். இதுபோன்ற அசாதாரண மான இயற்கையின் கோரத்தாண்டவங்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டம் இல்லாத ஏழை நாடுகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.

cc

புதிய வாழிடத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கு முன்னரே அடுத்த இடத்துக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் இதன் காரணமாக அழியும் நிலைக்கு தள்ளப்படக் கூடும்.

மலேரியாவின் வேகமான பரவல், நீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அளவு அதிகரிப்பதால், கடல்கள் உறிஞ்சும் கரியமில வாயுக்களின் அளவும் அதிகரிக்கும். இந்த மாற்றத்தின் காரணமாக கடல் நீரில் அமிலத்தன்மை உயர்ந்து, அங்குள்ள பவளப் பாறைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றங்களால் மென்மேலும் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக, உயர்ந்த மலைகளிலுள்ள நிரந்தர பனிப்பாறைகள் உருகும். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளே இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.

தீவிர இயற்கைப் பேரிடர்கள் வரலாற்றில் பூவுலகின் சராசரி வெப்பநிலை 2015 தொடங்கி, கடந்த ஏழு ஆண்டுகளிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இப்போது நாம் கடந்துகொண்டிருக்கும் 2021-ஆம் இந்தப் பட்டியலிலிருந்து தப்பவில்லை. இதுவரை பதிவானவற்றில் அதிக சராசரி வெப்பநிலை கொண்ட ஐந்தாவது அல்லது ஏழாவது ஆண்டாக 2021 இருக்கும். இவ்வளவுக்கும் முதல் 9 மாத சராசரி வெப்பநிலை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலக வானிலை ஆய்வு அமைப்பு (ரஙஞ) வெளியிட்ட ‘உலக பருவநிலை அறிக்கை, 2021’ மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. 26-வது உலகப் பருவநிலை மாநாடு கிளாஸ்கோவில் தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிக்கை வெளியானது.

“தீவிர இயற்கைப் பேரிடர்கள் இயல்பாகி வருகின்றன. மனிதர்களால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவுகளே இவற்றில் பலவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் வலுவடைந்து வருகின்றன” என்று உலக வானிலை ஆய்வு அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டெரி டாலஸ் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய கேரள நிலச்சரிவு, சென்னை வெள்ளம், உத்தராகண்ட் நிலச்சரிவு- வெள்ளம் போன்றவற்றுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என அறிவியலர்கள் நீண்டகாலமாகவே எச்சரித்துவருகிறார்கள்.

இவை அனைத்துக்கும் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் அதிகரித்ததன் தொடர்ச்சியாகப் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்ததே முதன்மைக் காரணம். நம் கண் முன்னாலேயே பூவுலகின் பருவநிலை எவ்வளவு மோசமாக சீர்கெட்டுவருகிறது என்பதற் கான அத்தாட்சியாக வானிலை ஆய்வு அமைப்பின் அறிக்கை கருதப்படுகிறது. ஒருபுறம் கிரீன்லாந்து பனிச் சிகரப் பகுதியில் வரலாற்றிலேயே முதன்முறையாக பனிபொழிவதற்குப் பதிலாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் மழை பெய்தது. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கும் காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகரித் துள்ளன.

2013 முதல் உயர்ந்துவரும் உலகக் கடல் மட்டம், 2021-இல் உச்சத்தைத் தொட்டுள்ளது. சராசரி வெப்பநிலை அதிகரிப்பின் தொடர்ச்சியாகப் பெருங்கடல்கள் வெப்பமடைவதும் பெருங்கடல்கள் அமிலமயமாவதுமே இதற்கு முதன்மைக் காரணம். இந்த நிகழ்வுகளால் உலகெங்கும் உள்ள சூழலியல் தொகுதிகள் மட்டுமல்லாமல், மக்களும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தி, உலகம் இயல்பாவதற்கு கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்றுவரும் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி அங்கே திட்டவட்ட மான முடிவுகள் எட்டப்படவில்லை என்றால், மனித குலம் சந்திக்க உள்ள எதிர்காலப் பேரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையே வானிலை ஆய்வு அமைப்பின் அறிக்கையும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திச் சொல்கிறது.

பருவநிலை மாற்றங்களும் ஆரோக்கிய கேடுகளும் 1880-1900 ஆண்டுகளில் நிலவிய சராசரி உலக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ். இப்போது அது 15 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால், 2100-இல் இன்றைய வெப்பநிலை யிலிருந்து 3 – 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும், இந்த வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரிக்குக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுக்குழு (ஐ.பி.பி.சி) பரிந்துரைக்கிறது.

கார்பன் டையாக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி சூடாகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிசக்தி வாகனங்கள், அடர்வன அழிப்புகள், நவீன வாழ்க்கை முறைகள் எனப் பலவும் பசுங்குடில் வாயுக்களின் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன.

இவற்றில் கார்பன் டையாக்ஸைடுதான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. அடுத்த 6 ஆண்டு களில் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இப்படிப் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் வெப்பமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது அது பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக, காற்று, குடிநீர், உணவு, வசிப்பிடம் என நம் வாழ்வாதாரங்களில் அது கைவைக்கிறது. அப்போது ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகிறது; விலங்கினங்கள் புலம்பெயர்வதும் அழிவின் பாதைக்குச் செல்வதும் நிகழ்கிறது. உணவுச் சுழற்சி சிதைகிறது.

பருவநிலை மாற்றத்தால் வெயில், குளிர் இரண்டுமே தீவிரமாகி, தட்பவெப்பம் தொடர்பான நோய் களை மட்டுமல்லாமல் ரத்தக்குழாய் களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, இதய நோய்களையும் சுவாச நோய்களையும்கூட பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன.

2003-இல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்பத்தால் 70,000 பேர் வழக்கத்தைவிட அதிகமாக இறந்துள்ளதை இதற்கு ஓர் உதாரண மாகக் கூறலாம். அதிக வெப்பமுள்ள வளிமண்டலத்தில் மாசுக்களும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் ஆஸ்துமா, சுவாசத்தடை உள்ளிட்ட பிரச்சினைகள் இரட்டிப்பாகும்.

அப்போது உலகில் 30 கோடி மக்களுக்கு ஆஸ்துமா புதிதாக உண்டாகும் என்கிறது புள்ளிவிவரம்.

பருவநிலை மாற்றத்தால் பல இடங்களில் மழையே பொழியாது அல்லது கடுமையாக மழை பொழியும். சமீபத்தில் கேரளத்திலும் உத்தராகண்டிலும் பொழிந்த கடுமையான மழையை இங்கு நினைவுகூறலாம். இதன் காரணமாகப் பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு பாதுகாப்பான குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வரும். வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் தலைதூக்கும்.

உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் கடலிலிருந்து 60 கி.மீ. தொலை வுக்குள்ளேயே வசிக்கின்றனர். கடலின் மட்டம் அதிகரிக்கும்போது அவர்கள் நகரங்களுக்குள் நகருவார்கள். அங்கு மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளும் சுகாதாரமும் குறைந்துபோகும். அப்போது டைபாய்டு, காசநோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்கள் அதிகரிக்கும்.

புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு வரும். அப்போது உணவுத் தானியங் களின் உற்பத்தி குறைந்து, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மனித இனத்தைத் தாக்கும். மனித உழைப்பு குறைந்து நாட்டின் உற்பத்தி குறையும்.

பருவநிலை மாற்றத்தால் பெருவெள்ளமும் புயல், சூறாவளிப் பேரிடர்களும் ஏற்படும்போது தெருக்களில் தண்ணீர் தேங்கும்.

அதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இன்னும் அதிகமாகப் பரவும். இந்தப் பாதிப்பை இப்போதே நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

தற்போது நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் ஆயுட்காலம் 20லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று.

புவிவெப்பம் காரணமாக வளிமண்டலத் தில் ஓசோன் ‘குடை’ சிதைந்துவிடு வதால், அதன் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவி நேரடியாக நம்மைத் தாக்கும்போது சருமப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு.

புவிவெப்பத் தாக்குதல்கள் கர்ப்பிணி களையும் விட்டுவைப்பதில்லை. பிறவிக்குறை நோய்களுடனும் குறைப் பிரசவங்களுடனும் குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கலாம் என்பதால் நம் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் சூழலியலர்கள்.

பசுங்குடில் வாயுக்களை மிகுதியாக வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வாயுக்களைக் குறைப்பது சாத்தியப்படும்.