காவிரி மேலாண்மை வாரியத்தின் நோக்கமும் பணியும்
தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மைவாரியத்திற்கு ஒரு முழு நேர தலைவரையும்இரண்டு முழு நேர உறுப்பினர்களையும்மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும்கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.
மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்த ஒரு அணை, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய முடியும். மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவற்றின் மீது மத்திய அரசின் உதவியை கேட்க முடியும்.
மத்திய அரசின் போக்கு
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின்பும் கூட, அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வழி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போடுவதை, மத்திய அரசு அரசியல் சாசனத்தை காரணம் காட்டி தப்பி வருகிறது.
அடுத்த மாதங்களில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலும் முக்கிய காரணமாகும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், கன்வில்கர் ஆகிய மூவர் அமர்வு 465 பக்க தீர்ப்பை வழங்கியது. அதில் காவிரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்பில் பக்ரா-பியாஸ்மேலாண்மை வாரியத்தைப் போல, காவிரி மேலாண்மை வாரியம் (ஈஹன்ஸ்ங்ழ்ஹ் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் இர்ஹழ்க்) அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துவிட்டது.
இப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டால், காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்தும். புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது.
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு முறையாக வழங்கப்படும்.
அணைகளின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையே மேற்கொள்ளும். மத்திய அரசு இதனைப் புரிந்துகொண்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை மனு தந்தார்.
ஒரு தரப்பினர் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இல்லை. ஸ்கீம்-திட்டம் என்றுதான் இருக்கிறது. அப்படி அமையும் திட்டத்தையும் நாடாளுமன்றம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது என கூறுகின்றனர்.
ஸ்கீம் - என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் அல்ல என்று கூறினார்.