தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரை

/idhalgal/general-knowledge/assembly-address-by-chief-minister-tamil-nadu

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! தடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தை பெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைந்த பேரறிஞர் அண்ணாவையும் தனித்தனி ஊரில் பிறந்தவர்களையும் "உடன்பிறப்பு' என்ற ஒற்றைச் சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, மாண்புமிகு ஆளுநர் கடந்த 21-ஆம் தேதி இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய நல்லதோர் உரையை ஆற்றியிருக்கிறார். அவர்களுக்கு இந்த அரசின் முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட நிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும் வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டு மக்களுக்கும், முதற்கண் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

"தமிழ்நாடு முதலமைச்சர்' என்ற இந்த அரிய ஆசனத்தை பார்க்கும்போதும், அதிலே அமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்ச ராகப் பொறுப்பேற்று அந்த வரலாற்றை படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச் சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சி-லிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும் உண்டாகின்றன.

குறிப்பாக, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி, 1920-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தை தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தந்து கல்வித் துறையில் சீர்திருத்தங்களை புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில் எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டிய-லின மக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி; திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி; அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூக நீதி சமத்துவ சமுதாயம் காணும் அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய ஆட்சி. 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்தபோது, "நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி' என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதே வழியில் எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சி தான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லி-க் கொள்ள விரும்புகிறேன்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்! ஏன், இந்த அரசு! தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும் - தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை யோடு ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தமது உரையில் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

அன்று நீதிக்கட்சியின் முதலாவது பிரதமராக இருந்த கடலூர் எ. சுப்பராயலு

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! தடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தை பெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைந்த பேரறிஞர் அண்ணாவையும் தனித்தனி ஊரில் பிறந்தவர்களையும் "உடன்பிறப்பு' என்ற ஒற்றைச் சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, மாண்புமிகு ஆளுநர் கடந்த 21-ஆம் தேதி இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய நல்லதோர் உரையை ஆற்றியிருக்கிறார். அவர்களுக்கு இந்த அரசின் முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட நிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும் வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டு மக்களுக்கும், முதற்கண் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

"தமிழ்நாடு முதலமைச்சர்' என்ற இந்த அரிய ஆசனத்தை பார்க்கும்போதும், அதிலே அமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்ச ராகப் பொறுப்பேற்று அந்த வரலாற்றை படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச் சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சி-லிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும் உண்டாகின்றன.

குறிப்பாக, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி, 1920-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தை தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தந்து கல்வித் துறையில் சீர்திருத்தங்களை புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில் எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டிய-லின மக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி; திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி; அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூக நீதி சமத்துவ சமுதாயம் காணும் அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய ஆட்சி. 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்தபோது, "நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி' என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதே வழியில் எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சி தான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லி-க் கொள்ள விரும்புகிறேன்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்! ஏன், இந்த அரசு! தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும் - தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை யோடு ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தமது உரையில் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

அன்று நீதிக்கட்சியின் முதலாவது பிரதமராக இருந்த கடலூர் எ. சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து ஆட்சி பொறுப்பில் அமர்த்தி, முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, 5 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரையும் முதலமைச்சராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர் களையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது என்னுடைய கடமை ஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது, தமிழர் பாண்பாட்டின் தவிர்க்க முடியாத முக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், பட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளை சார்ந்த 22 உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்தி இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றிய உங்கள் அனைவரது கருத்துக்களையும் இந்த அரசுக்கு நீங்கள் சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள் - தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப் பட்ட துறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. துறை அதிகாரி களோடு கலந்தாலோசித்து நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஐந்து ஆண்டு கால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல் படுத்தக்கூடிய திட்டங்கள் - கொள்கைகள் - கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாக சொல்-லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயற்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான்.

இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடு களைக் களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் - அவற்றை சந்திப்பதற்கான சாதுரியங்கள் என அனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலே வைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து நாங்கள் மக்களுக்கு கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம்.

அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்களை ஒப்படைத்துக் கொண்டிருக் கிறோம். ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவுடன், தலைமைச் செயலகத்திற்குச் சென்று நான் பொறுப்பேற்றேன். பொறுப்பேற்றவுடனே, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். முதல் தவணையான 2000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று மேலும் 2000 ரூபாய் வழங்கப்பட்டது. மொத்தம் 8,393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்திருக்கின்றன. ஆவின் பால் விலையை -லிட்டருக்கு 3 ரூபாய் குறைத் துள்ளோம். அது 16.5.2021 முதலே செயல்பாட்டுக்கு வந்தது. அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டோம். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. என்னிடம் தரப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்த்து வைக்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தைத் தொடங்கினேன். இன்று வரை இன்றைக்குக் காலையிலேயே வரை ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.

dd

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளி களுக்கான கட்டணத்தை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் அரசே செலுத்த உத்தரவிட்டோம். இதனால் 20 ஆயிரத்து 520 பேர் பயனடைந் துள்ளனர். கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கக்கூடிய 330 பேருக்கு 77 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் (ரஹழ் தர்ர்ம்) உருவாக்கப்பட்டது. தடுப்பூசிதான் உயிர்க்கவசம் என்பதால், தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாகவே மாற்றப் பட்டது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்த அரசு பொறுப்பேற்ற தி-லிருந்து 47 நாட்களில் 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைவிட இது இருமடங்கு அதிகமாகும். புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆக்சிஜன் வசதி கொண்டவையாக, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக உருவாக்கப்பட்டன. கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் 89 ஆயிரத்து 618 படுக்கைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இந்த மன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கொரோனா மூன்றாவது அலை வரக் கூடாது. வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் தொற்று குறைந்தது.

இத்தகைய மோசமான சூழலைக் கட்டுப்பத்தியதுதான் தி.மு.க அரசின் மகத்தான சாதனை என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அனைவரும் சேர்ந்து செயல்பட்டு-

அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்று கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே இந்த அரசு செய்துள்ள சாதனைகளைத் தொடர்ந்து சொல்ல வேண்டுமானால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள்-அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் தாக்கப்பட்டு, காயமடைந்த 94 பேருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழு அமைக்கப் பட்டிருக்கிறது.

செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையத்தையும், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தையும் செயல்பட வைக்க பிரதமரை வ-லியுறுத்திருக் கிறோம்.

ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என அறிவித்து அதையும் அமுல்படுத்தியிருக்கிறோம்.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய மரபு

அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆக்சிஜன், ரெகுலேட்டர்கள், ஆக்சிஜன் நிரப்ப சிலி-ண்டர்கள் வாங்கப்பட்டன.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ. 3000, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சம், கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என இப்படி பல்வேறு சலுகைகளை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறோம்.

tt

திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றக்கூடிய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ரூ. 4 ஆயிரம், மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, காவலர் முதல் ஆய்வாளர் வரைக்கும் ரூ.4 ஆயிரம் ஊக்கத் தொகை, திருநங்கை யருக்கு நிவாரண உதவி அளித்திருக்கிறோம்.

கொரோனா தடுப்புப் பணியில் இறந்த மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, அவர்கள் வாழ கனவு இல்லம் அறிவிக்கப்பட்டது.

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களது நினைவைப் போற்ற கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் நெல்சேமிப்பு கிடங்குகள்- உலர்களங்கள் அமைக்கப் படும்.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய் வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஆணையம், தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவுக்கு பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 8 ஆளுமைகள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள்.

பதினான்கு வகையான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 977 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப் பட்டுள்ளது.

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்ட 15 எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 4061 கிலோ மீட்டர் தொலைவிலான காவிரி கால்வாய்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குத் தேவையான 25 முக்கியக் கோரிக்கைகளோடு, பிரதமரை சந்தித்து அவற்றை விளக்கமாக எடுத்து வைத்திருக்கிறோம்.

டவ்தே புயலி-ல் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, மூன்று நாட்களுக்கு முன்பு ஆளுநரின் உரை மூலமாக ஏராளமான கொள்கை அறிவிப்புகளைச் செய்திருக்கிறோம். இந்த ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்கு சமூகநீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும். தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சீர்படுத்துவதே எங்களுடைய முதல் வேலை அதை யெல்லாம் மனதிலே வைத்துதான் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். இன்றைய நிதி நிலைமையில், ஏழை - எளிய, நடுத்தர மக்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் - வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால், அவர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்து வருகிறோம். இருப்பதை எப்படி பெருக்குவது, பெருக்கியதை எப்படிப் பகிர்ந்தளிப்பது, மாநிலத்தின் வளத்தையும், நலத்தையும் எப்படிப் பேணுவது - உயர்த்துவது என்பதை, ஆழ்ந்து, ஆராய்ந்து, "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்'' செயலாற்று வோம் என்று என்னுடைய உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகிறேன். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. அவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை மீண்டும் உழவர் சந்தைகள் இந்திய அலுவல் மொழிகளில்

ஒன்றாகத் தமிழ் இருக்க வேண்டும்

சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு

வட மாவட்டங்களில் தொழில் பெருக்கம் புதிய துணை நகரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் பொதுத் துறை நிறுவனங் களிலும் தமிழர்க்கு முன்னுரிமை

69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு

மேகதாது அணைக்கு எதிர்ப்பு

கச்சத்தீவு மீட்பு

நீட் தேர்வு ரத்து

உள்ளாட்சித் தேர்தல்

பட்டியலி-னத்தவர் பணியிடம் நிரப்புதல்

சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்

திருக்கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்த - ஆலோசனை வழங்க மாநில அளவில் உயர்மட்ட ஆலோசனைக் குழு பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந் தோறும் மகளிர் விடுதிகள்

சச்சார் குழுவின் பரிந்துரைகளை இந்த அரசு திறம்பட செயல்படுத்தும் சேவைகள் உரிமைச் சட்டம் அறிமுகப் படுத்தப்படும்

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை

பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு

இப்படி எத்தனையோ அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய கருத்துகளுக்குச் செயல்வடிவம் கொடுத்திடுவதற்கான சில அறிவிப்பு களை நான் வெளியிட விரும்புகிறேன்.

கொரோனா நோய்த் தொற்று குறைந் துள்ளபோதும், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சில பிரச்சினைகள் (ஈர்ம்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள்) வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர் - தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் (Post COVID Clinics) தொடங்கப்படும். தேவைப்படும் உயர்சிகிச்சை மருத்துவர்களோடு (Specialist Doctors) இந்த மையங்கள் செயல்படும்.

நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நோக்கத்தோடுதான் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என்று அறிவித்திருக் கிறோம். இதன் முதற்கட்டமாக செய்யாறில் 12,000 பேருக்கும் திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ளன.

ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர் அந்த சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப் படாத அவல நிலையில் இப்போது இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும்.

அதுமட்டுமல்ல தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். திருக்கோயில்களின் புனரமைப்புக் காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் படும் என்ற வாக்குறுதி இருந்தது. அதற்கு முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் செலவில் திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களைச் சீரமைத்திட, திருக்தேர்களைப் புதுப்பித்து திருவிழாக்கள் நடத்திட தேவையான பணிகள் 100 திருக்கோயில் களில் மேற்கொள்ளப்படும்.

இராமலி-ங்க அடிகள் மனம் உருகிச் சொன்னதைப் போல, "பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்'' எங்கள் இதயத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம். புதியதொரு வரலாறு படைத்திடும் எனது முயற்சிக்கு ஊக்கமளித்திடுவீர் என்று அன்புடன், பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிற அதேநேரத்தில், மக்களுக்குப் பணியாற்ற வேண்டியது ஒரு அரசினுடைய கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த மாமன்றத்தில் கூடியிருக்கின்ற மாண்புமிகு உறுப்பி னர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விளக்கங்களுக்குப் பிறகு என்னுடைய விளக்கங்களை ஏற்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திருத்தங்களைக் கொடுத்துள்ள உறுப்பினர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

gk010821
இதையும் படியுங்கள்
Subscribe