காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2023-ஆம் ஆண்டு மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமாண பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இப்புதிய கைவினைஞர் நலத்திட்டம் தமிழக அரசு கடைபிடித்து வரும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக் கொண்டதாக இருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக அதனினும் மேம்பட்ட கலைஞர் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படும் என்று 2024-2025-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2023-ஆம் ஆண்டு மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமாண பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இப்புதிய கைவினைஞர் நலத்திட்டம் தமிழக அரசு கடைபிடித்து வரும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக் கொண்டதாக இருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக அதனினும் மேம்பட்ட கலைஞர் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படும் என்று 2024-2025-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் வகையில் அவர் களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கிய தாக இருக்கும் வகையில் தமிழக அரசு கலைஞர் கைவினைத் திட்டம் என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.
இத்திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்யவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ. 3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மர வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும்.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அவை வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தில் பயன்பெற ‘www.msmeonline.tn.gov.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும்.