காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2023-ஆம் ஆண்டு மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமாண பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இப்புதிய கைவினைஞர் நலத்திட்டம் தமிழக அரசு கடைபிடித்து வரும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக் கொண்டதாக இருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக அதனினும் மேம்பட்ட கலைஞர் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் வடிவமைத்து செயல்படுத்தப்படும் என்று 2024-2025-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

tn

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் வகையில் அவர் களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கிய தாக இருக்கும் வகையில் தமிழக அரசு கலைஞர் கைவினைத் திட்டம் என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.

இத்திட்​டம், குடும்பத் தொழில் அடிப்​படை​யில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்​களில் ஈடுபட்​டுள்ள அனைத்​துத் தரப்பு மக்களும் பயனடை​யும் வகையில் உருவாக்கப்​பட்​டுள்​ளது.

Advertisment

இத்திட்​டத்​தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்​க​வும், செய்​யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்​ய​வும் கடன் உதவி​களும், திறன்​மேம்​பாட்டு மற்றும் தொழில் முனை​வோர் மேம்​பாட்டுப் பயிற்சி​களும் வழங்​கப்​படும்.

கலைஞர் கைவினைத் திட்​டத்​தில் அதிகபட்​சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானி​யத்​துடன் கூடிய ரூ. 3 லட்சம் கடனுதவி​யும், 5 சதவீதம் வரை வட்டி மானிய​மும் வழங்​கு​வதுடன், தொழில் வளர்ச்​சிக்​குத் தேவையான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும்.

இத்திட்​டத்​தின்​கீழ் பயன்பெற குறைந்​த​பட்ச வயது 35 ஆக நிர்​ண​யிக்​கப் ​பட்​டுள்​ளது.

Advertisment

tn

இத்திட்​டத்​தின்​கீழ் மர வேலைப்​பாடு​கள், படகு தயாரித்​தல், உலோக வேலைப்​பாடு​கள், பூட்டு தயாரித்​தல், சிற்ப வேலைப்​பாடு​கள், கற்சிலை வடித்​தல், கண்ணாடி வேலைப்​பாடு​கள், மண்பாண்​டங்​கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்​பான்கள் செய்​தல், பொம்​மைகள் தயாரித்​தல், மலர் வேலைப்​பாடு​கள், மீன் வலை தயாரித்​தல், தையல் வேலை, நகை செய்​தல், சிகையலங்​காரம் மற்றும் அழகுக்​கலை, துணி வெளுத்தல் தேய்த்​தல், இசைக்​கருவிகள் தயாரித்​தல், துணி நெய்தல் மற்றும் துணி​களில் கலை வேலைப்​பாடுகள் செய்​தல், பாரம்​பரிய முறை​யில் ஜவுளி அச்சிடு​தல், பாசிமணி வேலைப்​பாடு​கள், மூங்​கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்​பாடு​கள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்​பாடுகள், சுதை வேலைப்​பாடு​கள், பழங்​குடி​யினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்​களுக்​குக் கடன் வழங்​கப்​படும்.

ஆண்டுக்​கு குறைந்​த​பட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்​பெறும் வகையில் திட்டம் செயல்​படுத்​தப்​படும்.

இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அவை வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்​டத்​தில் பயன்பெற ‘www.msmeonline.tn.gov.in’ என்ற இணையதளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும். தகுதியான விண்​ணப்​பங்களை மாவட்டத் தொழில் மையத்​தின் பொது மேலா​ளர்கள் தலைமை​யில் உள்ள குழு சரிபார்த்து, வங்​கி​களுக்​குப் பரிந்​துரைக்​கும்.