சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியில் வந்து நிலவின் தரைப்பகுதியைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவருகிறது. இந்த நிலையில் இன்னொரு வெளிச்சப் பந்தான சூரியனை ஆராயப் புறப்பட்டுவிட்டது இந்தியா. செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத் திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சுமந்துகொண்டு விண்ணுக்குப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி ராக்கெட்.
இதுவரை அமெரிக்காவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய ஆர்பிட்டர்களை விண்ணில் செலுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் மூன்றாவது நாடாக இணைகிறது இந்தியா. நம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியனை ஆய்வு செய்யும் இந்த முயற்சிக்கு சுமார் 380 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது இஸ்ரோ. நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்குவதே மிக நுட்பமான பணி. அதை இந்தியா சாதித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வது அதைவிடவும் சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்ட நடைமுறை.
ஆரம்ப நாட்களில் பூமியின் சுற்றுப்பாதையில்தான் இருக்கும். இதில் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஏழுவிதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் செயல்பாட்டை பூமியில் இருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தபிறகு, இது புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிய விண்வெளிக்குச் செல்லும். 100 நாட்களைத் தாண்டி பயணம் செய்யும் இது, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும். 2024 ஜனவரியில் இந்த வரலாற்றுச் சம்பவம் நிகழக்கூடும். லாக்ராஞ்ச் புள்ளி எனப்படும் அந்த இடத்தில் இருந்தபடி ஆதித்யா விண்கலம் சூரியனைக் கண்காணித்து தகவல்களை அனுப்பும். லாக்ராஞ்ச் 1 எனப்படும் இந்த இடத்தில் நிலைகொண்டு ஆய்வு செய்யப் போவதால்தான் இதற்கு ஆதித்யா எல்-1 என்று பெயர்.
இந்த லாக்ராஞ்ச் புள்ளியில் பூமி மற்றும் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசைகளற்ற சமநிலை நிலவும் என்பதால், இங்கிருந்தபடி ஒரு விண்கலம் செயல்பட மிக மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படும். அதனால் விண்கலம் நீண்ட காலம் செயல்பாட்டில் இருக்க முடியும். சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் சென்று இறங்கியது போல, ஆதித்யா விண்கலத்தை சூரியனுக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்ல முடியாது. இது சென்றடையும் தூரமான 15 லட்சம் கிலோமீட்டர் என்பதே, பூமியிலிருந்து நிலாவுக்குச் செல்வதைப் போல நான்கு மடங்கு தொலைவு. ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் நூறில் ஒரு பங்கு தொலைவே அது.
என்றாலும், இந்த 15 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து ஆராய்வதில் பல நன்மைகள் உண்டு. நமது வளிமண்டலத்தால் வடிகட்டி தடுத்து நிறுத்தப்படும் சூரியனின் கதிர்வீச்சையும் இதனால் ஆய்வு செய்ய முடியும். பூமியிலிருந்து இப்படி ஆய்வு செய்ய முடியாது. சூரிய கிரகணம் போன்ற எந்தத் தடைகளும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும் சூரியனை ஆய்வு செய்ய முடியும்.
இதிலிருக்கும் ஏழு கருவிகளும் சூரியனின் தொடர்ச்சியான செயல்பாடு, சூரியனின் பண்புகள், அதன் வெளிப்புற அடுக்குகள், சூரியக்காற்றின் இயல்பு போன்றவற்றை ஆய்வு செய்யும்.
ஆதித்யா விண்கலத்தின் சிறப்பம்சம், அதில் இருக்கும் கரோனாகிராப். யண்ள்ண்க்ஷப்ங் ஊம்ண்ள்ள்ண்ர்ய் கண்ய்ங் ஈர்ழ்ர்ய்ஹஞ்ழ்ஹல்ட் எனப் படும் இது, "ஸ்மைல் ப்ளீஸ்' என்று சொல்லாமலே ஒவ்வொரு நிமிடமும் சூரியனை ஒரு புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். இப்படி தினமும் 1,440 புகைப்படங்கள் ஆண்டுமுழுக்க வந்துகொண்டே இருக்கும்.
சூரியன், நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இதன் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன.
சூரியன்,பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டது சூரியன். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம்.
சூரியனின் மைய வெப்பம் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். இந்த உயர் வெப்ப நிலையில் அணு பிணைவு நடைபெற்றுக் கொண்டே இருப்பதால் இது சூரியனை உயிர்ப்புடன் வைத்துள்ளது. சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 5500 டிகிரி செல்சியஸ்.
ஆய்வு செய்வதன் நோக்கம்
நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் (15கோடி கி.மீ.) என்பதால் மற்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்வதைவிட சூரியனை ஆய்வு செய்வது அவசிய மாகிறது. இதன் மூலம் நம்முடைய பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வேறு சில நட்சத்திர திரள்களில் உள்ள நட்சத்திரங்களை நாம் தெரிந்து கொள்ள உதவும்.
சூரியனின் வெப்பம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதுகுறித்த ஆய்வுகளை ஒரு ஆய்வகத்தில் நிகழ்த்த முடியாது. எனவே சூரியனை ஒரு ஆய்வகமாக கொண்டு இந்த ஆய்வுகள் நேரடியாக செய்யப்பட உள்ளது.
ஆதித்யா எல்-1என்ற இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும். இந்த விண்கலமானது க-1 என்று அழைக்கக் கூடிய சூரியனின் ஒளிவட்டப் பாதையில் உள்ள லெக்ராஞ்சே-1, அதாவது சூரியன் -பூமி சுற்றுப்பாதையில் உள்ள பகுதியாகும்.
இந்த தொலைவில் ஆய்வகம் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் பயன் அதிகமாகும். மேலும் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து சூரியனை கண்காணிக்கக் கூடிய சாதக அம்சம் உள்ளது. இது கிரகணங்கள் ஏற்படாத பகுதியாகும்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவைகளின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார். அவரது பெயரில் இந்த சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் சம ஈர்ப்புவிசையுடன் சுழன்று வரும், பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை க1 என்றும், பூமிக்கு பின்னால் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையை க2 என்றும் அழைக்கின்றனர். இந்த க2-வில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டு சுற்றி வந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. க1, க2, க3, க4 மற்றும் க5 என மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன.
சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறி வதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களை கண்டறிய முடியும். சூரிய வெடிப் பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.
ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் அறிய முடியும்.
சூரியனின் துருவப் பகுதிகள் இதுவரை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து சூரியனை முழுமையாக ஆய்வு செய்ய முன் வரலாம். அதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இஸ்ரோவின் இந்த திட்டம் நிச்சயமாக உதவும்.
எல்.1 புள்ளியில் இருந்து விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூப்ரா தெர்மல் அண்ட் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (நபஊடந) கருவியைப் பயன்படுத்தி அறிவியல் தரவை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
"இந்த நபஊடந அளவீடுகள் ஆதித்யா-க1 பயணத்தின் போது சூரியன்-பூமி க1 புள்ளியை நோக்கி முன்னேறும் போது தொடரும். "விண்கலம் அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டவுடன் தொடரும் என்று கூறியுள்ளது.
செப்டம்பர் 10 அன்று ஆதித்யா எல்.1 பூமியிலிருந்து 50,000 கிமீ தொலைவில் இருந்தபோது நபஊடந கருவி செயல்படுத்தப்பட்டது, இது பூமியின் ரேடியசில் இருந்து எட்டு மடங்கு அதிகமாகும். அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் (நஆஈ) இணைந்து இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (டதக) வடிவமைக்கப்பட்டது. நபஊடந ஆனது 20 ந்ங்ய/ய்ன்ஸ்ரீப்ங்ர்ய் முதல் 5 ஙங்ய/ய்ன்ஸ்ரீப்ங்ர்ய் வரையிலான அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகளை அளவிட வெவ்வேறு திசைகளில் அமைந்துள்ள ஆறு சென்சார்களைக் கொண்டுள்ளது.
நபஊடந-ஆல் சேகரிக்கப்பட்ட தரவு, பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் தன்மை மற்றும் நடத்தையைப் புரிந்துகொள்வதில் விஞ்ஞானிகளுக்கு உதவும் குறிப்பாக காந்தப்புலத்திற்குள் கண்காணிக்க உதவும் என்று கூறியுள்ளது.
இஸ்ரோவிடம் வலிமை குன்றிய ராக்கெட்டுகள்தான் உள்ளன. எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் பூமியிலிருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடத்தை வேகமாகச் சென்றடைய முடியாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கவண்கல் எறிதல்’ நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் இலக்கை அடையும். செப்டம்பர் 2-இல் ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 127 நாள்கள் பயணித்த பின்னரே, தான் நிலைகொள்ள வேண்டிய எல்-1 புள்ளியை அடையும்.
லக்ராஞ்சியன் புள்ளி எல்-1 என்பது, பூமிக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது, சூரியனுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நேர்க்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டின் ஈர்ப்பும் சமமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசை சமப்புள்ளிதான் லக்ராஞ்சியன் புள்ளி எல்-1. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனை நோக்கி இந்தப் புள்ளி அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 1,510.7 லட்சம் கி.மீ. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
சூரியன், பூமி இரண்டின் ஈர்ப்பு விசையில் சமமாக இழுபட்டு நிற்பதால் பூமியோடு சேர்ந்து இந்தப் புள்ளியில் உள்ள விண்கலம் சூரியனைச் சுற்றிவரும். எனவே, ஒவ்வொரு கணமும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த விண்கலம் நிலைநிற்கும். சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி ஏற்படும்போது முதலில் இந்த விண்கலத்தைத் தாக்கும். இந்த விண்கலம் அதனை உணர்ந்து காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை நமக்குத் தரும். நாம் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.
சூரியனின் இயல்பான இயக்கம்
அவ்வப்போது மாறி, சீற்றம் கொள்ளும். சூரியச் சூறாவளி (ள்ர்ப்ஹழ் ள்ற்ர்ழ்ம்), சூரிய ஒளிப்புயல் (ள்ர்ப்ஹழ் ச்ப்ஹள்ட்), சூரிய வெடிப்பு (ஸ்ரீர்ழ்ர்ய்ஹப் ம்ஹள்ள் ங்த்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) என்கிற மூன்று முக்கியச் சீற்றங்கள் காந்தப்புயலை ஏற்படுத்தி பூமியின் மீது தாக்கம் செலுத்தும். சூரியனின் இயல்பு இயக்கத்தில் வெளிப்புற மண்டலமான கரோனா விலிருந்து சூரியக் காற்று எனப்படும் காந்தப்புலத்துடன் கலந்த மின்னூட்டம் கொண்ட அயனித் துகள்களின் வீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தக் காற்று, கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் நொடிக்குச் சுமார் 200 முதல் 400 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் அதன் காந்தப்புலக் கோடுகளில் அவ்வப்போது முறுக்கம் ஏற்படும். குறிப்பிட்ட வரையறையைக் கடக்கும்போது இந்த முறுக்கம் வெட்டிக்கொள்ளும். அப்போது சில வேளை மிக உக்கிரமாக - நொடிக்கு 800 கி.மீ. வேகத்தில் துகள்கள் பாயும். இதுவே சூரியச் சூறாவளி. சில வேளை முறுக்கிய காந்தப்புலக் கோடுகள் வெடித்துப் புதிய இணைப்பைப் பெறும்.
அப்போது பெருமளவில் ஒளி, எக்ஸ் கதிர், காமா கதிர் முதலிய பெரும் ஆற்றலுடன் வெளிப்படும். இதுவே சூரிய ஒளிப்புயல். முறுக்கிய காந்தப் புலம், பால் பொங்குவதுபோலப் பொங்கி சூரியனின் மேற்புறத்தில் எழுந்தால் அதுவே சூரிய எரிமலை வெடிப்பு அல்லது சூரிய நிறை வெளியேற்ற வெடிப்பு (ஸ்ரீர்ழ்ர்ய்ஹப் ம்ஹள்ள் ங்த்ங்ஸ்ரீற்ண்ர்ய்). இந்த மூன்று நிகழ்வுகளின்போதும் சூரியக் காற்றின் வேகம் வெகுவாகக் கூடும்; பூமியின் மீது காந்தப் புயல் ஏற்படும்.
காந்தப் புயலின் விளைவாக மனிதர் களுக்கும் உயிரினங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை. தீவிர காந்தப் புயல் பூமியைச் சுற்றியுள்ள அயனி மண்டலத்தை ஆட்டம்கொள்ள வைக்கும். இதன் தொடர்ச்சியாக சிற்றலை ரேடியோ தகவல்தொடர்பில் பாதிப்பு ஏற்படும். நாடு விட்டு நாடு செல்லும் விமானங்கள், சரக்குக் கப்பல்கள் முதலியவை சிற்றலை ஒலிபரப்பைப் பயன்படுத்துகின்றன.
விண்வெளியில் செயற்கைக்கோள் மீது எலெக்ட்ரான் பரவி நிலை மின்னூட்டத்தை ஏற்படுத்தி, மின்னணுக் கருவிகளைப் பாதிக்கும். செயற்கைக்கோளில் உள்ள சூரியத் தகடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) தரும் தகவலில் பல மீட்டர் அளவுக்குத் துல்லியம் சார்ந்த பிழை ஏற்படும். பூமியில் உள்ள மின் விநியோக மின்மாற்றிகளில் மீஅதிக மின்னோட் டத்தை உருவாக்கிச் செயலிழக்கச் செய்வதற்காலிக இருட்டடிப்புகூட ஏற்படலாம்.
பூமிக்கு அருகே காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூரியனிலிருந்து வரும் சூரியக் காற்றின் வேகம் முதலியவற்றை அறிந்துகொள்வதைத் தான் விண்வெளி வானிலை என்கிறார்கள். பல ஆயிரம் செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன.
எனவே, இன்று விண்வெளி வானிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது செயற்கைக்கோள்கள் பூமியில் தகவல்தொடர்பு, ஜிபிஎஸ் போன்றவற்றைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 5,600 டிகிரி செல்சியஸ். ஆனால், அதைத் தாண்டி சூரியனைச் சுற்றிப் படர்ந்துள்ள கரோனா எனும் வளிமண்டலப் பகுதியில் வெப்பநிலை பல லட்சம் டிகிரி செல்சியஸ். விளக்கின் அருகே வெப்பம் கூடுதலாக இருக்கும்; தொலைவு செல்லச் செல்ல வெப்பம் குறையும். சூரியனின் கரோனா மிகமிக உயர் வெப்பநிலையில் அமைந்துள்ளது பெரும் புதிர். இது குறித்தும் ஆதித்யா எல்-1 ஆய்வு நடத்தும்.
புற ஊதா நிறத்தில் சூரியன் உமிழும் ஆற்றலை, சூரிய புற ஊதாக் காட்சித் தொலை நோக்கி (Solar Ultra#violet Imaging Telescope # SUIT) வழியே அளவிடுவதன் மூலம் சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் குறித்து ஆய்வு செய்யலாம். சூரிய எரிமலைகள் வெடித்து எழும்புவதைப் படம்பிடிக்கும் Visible Emission Line Coronagraph – VELC எனும் கருவி, சூரிய ஒளிப்புயல் ஏற்படுத்தும் எக்ஸ் கதிர்களைப் பதிவுசெய்யும் தாழ் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி (Solar Low Energy X#ray Spectrometer), உயர் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி(High Energy L1 Orbiting X#ray Spectrometer) முதலிய கருவிகள் உள்ளன. இந்த மூன்று கருவிகளும் சூரிய இயக்கத்தை ஆய்வு செய்யும்.
இதைத் தவிர, விண்கலம் உள்ள பகுதியில் விண்வெளி வானிலையைக் கண்காணிக்கச் சூரியக் காற்று ஆய்வுக் கருவி Aditya Solar wind Particle Experiment),, பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி (Plasma Analyser Package for Aditya) முதலியவை உள்ளன.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்பியுள்ளன. இந்த முயற்சி வெற்றி யடையும்போது இந்தியா இந்த சாதனையை படைத்த ஐந்தாவது நாடு எனும் சிறப்பை பெறும்..