ஏரியையும் ஏரிக்கு அப்பாலிலிருந்த குன்றுகளையும் பார்த்தவாறு நீண்டநேரம் இருந்தபோது, வடிவமற்ற, பார்க்கமுடியாத யாரோ ஒரு ஆள் தன்னை தூரத்திலிலிருந்து திரும்பத் திரும்ப அழைப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. அவர் கண்களை மூடி, அசையாமல் காதுகளைத் தீட்டிவைத்துக்கொண்டு நின்றிருந்தார். விடுமுறை நாளாக இருந்தாலும், பணியாட்கள் பாறையை உடைக்கும் சத்தமும், மண்ணைத் தோண்டும் இயந்திரங்களின் சத்தமும், லாரிகளிலிருந்து இரும்புத் தூண்களைத் தள்ளி விடும்போது உண்டாகக்கூடிய பலமான ஓசையும், சிமென்ட்டும் கருங்கற் துண்டுகளும் பெரிய கொள்கலன்களில்...
ஆனால், அவற்றிற்கெல்லாம் மேலே அவருக்கு மட்டும் கேட்கக்கூடிய, ஒரு சிறிய பறவை களைப்பே இல்லாமல் ஏரிக்குமேலே நீரைத் தொட்டும் தொடாமலும் என்பதைப்போல அவரை நோக்கிப் பறந்துவருவதைப் போன்று...
நேரம் உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது.
சமையலறையிலிருந்து பணியாட்கள் தாழ்ந்த குரலிலில் பேசுவது தெளிவாகக் கேட்டது. மசாலாவில் வெந்துகொண்டிருக்கும் மாமிசத்தின் வாசனை காற்றில் தங்கி நின்றிருந்தது. அவர் சிறிதுநேரம் எதையோ நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியேறி ஏரியை இலக்காக வைத்து நடந்தார்.
அவருடைய மனைவி அறையில் சுகமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
வெயிலுக்கு நல்ல வெப்பம் இருந்தாலும், சற்று முன்பு மட்டுமே பெய்த மழையின் துளிகளைத் தெறிக்க விட்டவாறு மஞ்சள் நிறக் கிளிகள் பறந்து சென்றன. அவர் பாதையைவிட்டுவிலகி ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தார். தமிழ்நாட்டிலிருந்தும் தெலுங்கு நாட்டிலிருந்தும் வந்திருந்த பழமையான பணியாட்கள் பெரிய மூட்டைகளுடன் "கல பில' என்று பேசியவாறு அவரைத் தாண்டிச் செல்வதையோ, வேலிலிகளுக்கு அப்பாலிருந்து கறவைப் பசுக்கள் தலையை உயர்த்திப் பார்ப்பதையோ அவர் பார்க்கவில்லை. அவருக்கு முன்னால் ஏரி இருந்தது. மழைக் காலத்தில் நிறைந்து காணப்படுவதும், இருண்டதுமான ஏரி... ஏரியின் நீரில் குன்றுகள் பிரதிபலிலித்தன. மேகங்களை இறுகத் தழுவியவாறு நின்றுகொண்டிருக்கும் குன்றுகளின் அடிவாரத்திலிருந்த பசுமையும், அடர்த்தியுமான காடுகளில்... அவர் நினைத்தார். காடுகளில் "செண்பக மலர்கள் மலர்ந்து நின்றிருக்கும்... செண்பகாசோக புன்னாக சங்கந்திகாலஸல்கசா குருவிந்த மணிஸ்ரேணீகனல் கோடீரமண்டிதா...'
மூடிக்கிடக்கும் கதவைத் தள்ளித் திறந்தவாறு குளிர்ந்த காற்று அறைக்குள் வேகமாக அடிப்பதைப் போல, மனதில் பழைய நினைவுகள் ஓசையை எழுப்பியவாறு நுழைந்தன. மழைக்காலத்தில் மூடியநிலையில் நின்றுகொண்டிருக்கும் மாலை வேளைகள்... வெளியே ஒரு
ஏரியையும் ஏரிக்கு அப்பாலிலிருந்த குன்றுகளையும் பார்த்தவாறு நீண்டநேரம் இருந்தபோது, வடிவமற்ற, பார்க்கமுடியாத யாரோ ஒரு ஆள் தன்னை தூரத்திலிலிருந்து திரும்பத் திரும்ப அழைப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. அவர் கண்களை மூடி, அசையாமல் காதுகளைத் தீட்டிவைத்துக்கொண்டு நின்றிருந்தார். விடுமுறை நாளாக இருந்தாலும், பணியாட்கள் பாறையை உடைக்கும் சத்தமும், மண்ணைத் தோண்டும் இயந்திரங்களின் சத்தமும், லாரிகளிலிருந்து இரும்புத் தூண்களைத் தள்ளி விடும்போது உண்டாகக்கூடிய பலமான ஓசையும், சிமென்ட்டும் கருங்கற் துண்டுகளும் பெரிய கொள்கலன்களில்...
ஆனால், அவற்றிற்கெல்லாம் மேலே அவருக்கு மட்டும் கேட்கக்கூடிய, ஒரு சிறிய பறவை களைப்பே இல்லாமல் ஏரிக்குமேலே நீரைத் தொட்டும் தொடாமலும் என்பதைப்போல அவரை நோக்கிப் பறந்துவருவதைப் போன்று...
நேரம் உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது.
சமையலறையிலிருந்து பணியாட்கள் தாழ்ந்த குரலிலில் பேசுவது தெளிவாகக் கேட்டது. மசாலாவில் வெந்துகொண்டிருக்கும் மாமிசத்தின் வாசனை காற்றில் தங்கி நின்றிருந்தது. அவர் சிறிதுநேரம் எதையோ நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியேறி ஏரியை இலக்காக வைத்து நடந்தார்.
அவருடைய மனைவி அறையில் சுகமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
வெயிலுக்கு நல்ல வெப்பம் இருந்தாலும், சற்று முன்பு மட்டுமே பெய்த மழையின் துளிகளைத் தெறிக்க விட்டவாறு மஞ்சள் நிறக் கிளிகள் பறந்து சென்றன. அவர் பாதையைவிட்டுவிலகி ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தார். தமிழ்நாட்டிலிருந்தும் தெலுங்கு நாட்டிலிருந்தும் வந்திருந்த பழமையான பணியாட்கள் பெரிய மூட்டைகளுடன் "கல பில' என்று பேசியவாறு அவரைத் தாண்டிச் செல்வதையோ, வேலிலிகளுக்கு அப்பாலிருந்து கறவைப் பசுக்கள் தலையை உயர்த்திப் பார்ப்பதையோ அவர் பார்க்கவில்லை. அவருக்கு முன்னால் ஏரி இருந்தது. மழைக் காலத்தில் நிறைந்து காணப்படுவதும், இருண்டதுமான ஏரி... ஏரியின் நீரில் குன்றுகள் பிரதிபலிலித்தன. மேகங்களை இறுகத் தழுவியவாறு நின்றுகொண்டிருக்கும் குன்றுகளின் அடிவாரத்திலிருந்த பசுமையும், அடர்த்தியுமான காடுகளில்... அவர் நினைத்தார். காடுகளில் "செண்பக மலர்கள் மலர்ந்து நின்றிருக்கும்... செண்பகாசோக புன்னாக சங்கந்திகாலஸல்கசா குருவிந்த மணிஸ்ரேணீகனல் கோடீரமண்டிதா...'
மூடிக்கிடக்கும் கதவைத் தள்ளித் திறந்தவாறு குளிர்ந்த காற்று அறைக்குள் வேகமாக அடிப்பதைப் போல, மனதில் பழைய நினைவுகள் ஓசையை எழுப்பியவாறு நுழைந்தன. மழைக்காலத்தில் மூடியநிலையில் நின்றுகொண்டிருக்கும் மாலை வேளைகள்... வெளியே ஒரு தாளலயத்திற்கேற்றபடி உயர்ந்துகொண்டும் இறங்கிக்கொண்டும் இருக்கும் மழையின் இசையை கவனித்தவாறு இரவில் தூங்காமல் படுத்திருக்கும் ஒரு சிறுவன்...
ஒற்றையடிப் பாதையிலிலிருந்து அவர் ஏரியின் கரைக்குச் செல்லும் பாதையில் நடந்தார். பணி முழுமையடைந்திராத பாதையின்வழியாக நடந்தபோது, அவர் சிந்தித்தார். இங்கு வந்து எவ்வளவு வருடங்களாகி விட்டன! நான்கு வருடங்களாகி விட்டனவா? இல்லை... நான்கு முடியப்போகிறது...
முதலிலில் தூரத்திலிருக்கும் நிறுவனத்தின் நிர்வாகிகள் வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து வெள்ளைக்காரர்களும் நம் நாட்டைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்களும் இருந்தார்கள். அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு ஏரி இல்லை. குன்றுகளுக்கிடையே நீண்டு கிடந்த ஒரு பள்ளத்தாக்கு மட்டும் இருந்தது.
பள்ளத்தாக்கில் மனிதர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அதேபோல அதிக நாட்கள் விவசாயம் செய்வதற்கு அவர்களால் முடியவில்லை. புதிதாக வெட்டப்பட்ட பாதையின் வழியாக பெரிய இயந்திரங்கள் ஓசை உண்டாக்கியவாறு வந்தன. பாறையை உடைக்கக்கூடிய இயந்திரங்கள்... மண்ணை அகற்றக்கூடிய இயந்திரங்கள்... கான்க்ரீட் குழைக்கக்கூடிய இயந்திரங்கள்... பார்க்கப் பார்க்க பள்ளத்தாக்கிற்குக் குறுக்காக கருங்கல்லாலான ஒரு அணைக்கட்டு உயர்ந்து வந்தது. தூரத்திலிலிருந்த ஆற்றிலிருந்து பொறியியல் நிபுணர்கள் வாய்க்கால்களை வெட்டி நீரை பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவந்தார்கள். அத்துடன் கோபப்பட்ட, உரத்த குரலிலில் ஓசை உண்டாக்கியவாறு பாய்ந்து செல்லும் ஒரு வெறிபிடித்தவளைப்போல மழைக்காலம் வந்தது.
பிறகு... அங்கு பள்ளத்தாக்கு இல்லாமற் போனது.
பழைய ஒரு மக்களின் இருப்பு, அவர் பார்த்துக் கொண்டிருக்க இல்லாமற் போனது.
இருபத்து நான்கு மணி நேரமும் கள்ளுக்கடையில் இருப்பவனாக இருந்தாலும், நல்லவனும் உதவும் குணம் கொண்டவனுமான சங்கர்... அனைத்தையும் குடித்தே தொலைத்த கிருஷ்ணன் நாயர்... ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் "நாளைய பிரஜைகளை' வளர்த்தெடுப்பதற்காக கடுமையாக உழைத்தபிறகு, இறுதியில் "நில ஆக்கிரமிப்பு' அதிகாரிகளின் பிடியில் வீழ்ந்துவிட்ட பிள்ளை சார்...
முதன்முதலாக அங்கு ரப்பர் தோட்டம் உண்டாக்கிய மத்தியாயி...
புறம்போக்கு நிலத்தைக் கைப்பற்றும் விஷயத்தை ஒரு கலையாகவும் வர்த்தகமாகவும் மாற்றிய மாத்யூ... பாதை தவறிச்சென்ற குட்டியம்மா... "இறுதிப் புரட்சி'யைப் பற்றி கற்பனைகள் செய்யும் பொதுநல செயல்பாட்டாளரான பரமேஸ்வரன் நாயர்... தன்னைவிட எவ்வளவோ வயது குறைந்த ஒரு பையனுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ஓடிச்சென்ற தன் தாயைப் பற்றிய அவமானச் சுமையால் வெந்துருகி நடந்துகொண்டிருந்த அய்யப்பன்குட்டி... இப்படி எத்தனையெத்தனை முகங்கள்! அனைவரும் போய்விட்டார்கள்.
பழைய கல்லறைகளுக்கு மேலே ஒரு புதிய தொழிற்சாலையும், ஒரு புதிய மக்களின் கூட்டமும் உயர்ந்து வந்தது. கண்ணூரிலி−ருந்தும் கல்லடை யி−ருந்தும் வந்தவர்கள்... உத்தரப்பிரதேசத்தி−ருந்தும்லி பிஹாரி−ருந்தும் வந்தவர்கள்... இளைஞர்கள், நடுத்தர வயதினர்...
அவர் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தார். யாருக்குமே தெரியாமல் இந்த பெரிய நாடகத்தைப் பற்றிய சிறிய குறிப்புகளை எழுதி, ஆன்மாவின் ஆழமான தளங்களில் அவர் மறைத்துவைத்தார்.
சில நேரங்களில் பழைய நண்பர்களை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால்... அவருக்கு நண்பர்கள் குறைவு...
அவர்கள் கேட்பார்கள்.
"நீ ஒரு புதினம் எழுதக் கூடாதா?'
அவர் எதுவும் கூறமாட்டார். நண்பர்கள் மீண்டும் கூறுவார்கள்:
"ஏதாவது எழுதி எவ்வளவு காலமாச்சு! பாரு... மனுஷங்க இப்போ நினைக்கறதே இல்லை. எழுது...
எதையாவது எழுது...!'
அவர் புன்னகைக்க மட்டும் செய்வார். ஆனால், புன்னகை வெளியே மட்டுமே... உள்ளுக்குள் உமி நெருப்பு இருந்தது. யாரிடமும் எதுவும் கூறவில்லை. கூறினால், யாருக்கும் எதுவும் புரியுவும் செய்யாது.
நெருப்பு எப்போதும் உள்ளே எரிந்து கொண்டிருந்தது.
அவருக்கு என்னவென்று கூறமுடியாத கவலை இருந்தது. ஆனால், பிறகும்... அவர் எழுதவில்லை. இரவின் தனிமைப் பேரமைதியில் அவர் என்னவென்று கூறமுடியாத வகையில் திடுக்கிட்டு நெளிந்து எழுந்திருக்கும்போது, இடுப்பு எலும்புகளுக்கு நடுவில் கூர்மையான எழுத்தாணியைப்போல அந்த நினைவு...
குழந்தையை அருகில் அமரச்செய்து, ஒரு தாய் வெயி−ல் கருங்கல் துண்டுகளை அடித்து உடைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய வியர்வை வழிந்துகொண்டிருந்த முதுகையும், ஒரே தாலிளலயத்தில் உயர்ந்து, தாழ்ந்து கொண்டிருந்த குச்சியைப் போன்ற கையையும் மட்டுமே அவர் முதலி−ல் பார்த்தார். பிறகு... குழந்தையையும் பார்த்தார். விரித்து வைக்கப்பட்டிருந்த கிழிந்த குடை நிழ−ல் அமர்ந்து, குழந்தை ஒரு பழைய ஈயம் பூசப்பட்ட உருண்டையான பாத்திரத்தி−ருந்து சோற்றை அள்ளித் தின்றுகொண்டிருந்தது. குழந்தையின் சட்டை சேறு படிந்ததும், கிழிந்ததுமாக இருந்தது. குழந்தை குளித்து எவ்வளவோ நாட்களாகியிருந்தன! எண்ணெய்யைப் பார்க்காத, பரட்டையாகக் காணப்பட்ட செம்பு நிற முடி குழந்தையின் தோளில் விழுந்து கிடந்தது.
குழந்தை பாத்திரத்தி−ருந்த சோறில் மூழ்கியிருந்தது. குனிந்து அமர்ந்து ஒவ்வொரு தடவையும் சில பருக்கைகளை மட்டும் பொறுக்கியெடுத்துத் தின்றுகொண்டிருந்த குழந்தைக்கு முன்னால் அவர் அசையாமல் நின்றார். திடீரென்று குழந்தை தலையை உயர்த்திப் பார்த்தது.
அறிமுகமற்ற ஒரு ஆள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், குழந்தைக்கு பதைபதைப்பும் பயமும் உண்டாயின. அவர் புன்னகைத்தவாறு கையை நீட்டியபோது, குழந்தை மெதுவாக சோற்றுப் பாத்திரத்தைப் பின்னால் மறைத்து வைத்தது. சந்தேகம் நிழலாடிக் கொண்டிருந்த பெரிய கண்களை குழந்தை அவருடைய முகத் தி−ருந்து எடுக்கவே இல்லை.
சொல்லால் தெரிவிக்கமுடியாத கவலையின் ஆழத்தில் அவர் மெதுவாக மூழ்கிப் போனார்.
நிலவு வெளிச்சம் இருந்த இரவு வேளைகளில் சாணத்தால் மெழுகி சுத்தம் செய்யப்பட்ட வாசலி−ல், மண்ணெண்ணெய் விளக்கிற்கு முன்னால் அமர்ந்து கொண்டு, அன்னை சோறு பரிமாறியதை அவர் நினைத்துப் பார்த்தார்.
(வீடு இப்போது இல்லை. சாணத்தால் மெழுகி சுத்தம் செய்யப்பட்ட வாசலும் இல்லை. அந்த அளவுக்கு பாசத்துடன் சோறு பரிமாறுவதற்கும் யாருமில்லை.
அன்னை இப்போதும் உயிருடன் இருக்கிறாள்.
ஆனால், அவர் தாயிடமிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறார். தூரத்தால் மட்டுமல்ல... வயது காரணமாக மட்டுமல்ல...)
வேதனையுடன் அவர் நினைத்துப் பார்த்தார்:
எனக்கு குழந்தைகளும் இல்லை...
சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும் சிறகுகளைக் கொண்ட ஒரு வண்ணத்துப் பூச்சி வானத்திலி−ருந்து உதிர்ந்து விழுவதைப்போல வந்து, அவரைச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தது. அவர் கையை நீட்டியபோது, அது விலகிச் சென்றது. குழந்தை அதைப் பார்த்தது சிரிக்க ஆரம்பித்தது. அப்போது அவரும் சிரித்தார். மின்னிக்கொண்டிருக்கும் சிறகுகளுடன் இருந்த அந்த வண்ணத்துப் பூச்சியும் குழந்தையும் அவரும்...
கொடுமுடியில் கழுகு வசிக்கட்டும். கொடூர சிங்கம் குகையிலும் வாழட்டும்.
அழகான பொன் குன்றே... உன் பிரகாசம்பட்ட காடென வளர்ந்திருக்கும் பள்ளத்தாக்கில் இருப்பேன். நான்...
வீட்டிற்குத் திரும்பும்போது அவர் நினைத்தார்: இந்த பொன்மலையில் காடென வளர்ந்திருக்கும் நீண்ட பள்ளத்தாக்கில் மேலும் சிறிது இருந்தால், பூக்கள் இருக்காது. தொழிற்சாலையி−ருந்து வெளியேறும் ரசாயனப் புகைபட்டு, தளிர்களும் பூக்களும் கரிந்துபோகும். இங்கு பறவைகள் இருக்காது. வண்ணத்துப் பூச்சிகள் இருக்காது. இந்த காடுகூட ஒரு நினைவுச் சின்னமாக மட்டும் எஞ்சி நிற்கும்.
அவர் வீட்டை அடைந்தபோது, நேரம் அதிகமாகிவிட்டிருந்தது. மனைவி அறையிலி−ருந்தவாறு ஆடைகளை அணிந்துகொண்டிருந்தாள்.
மனைவி கூறினாள்:
""இன்று மிஸஸ் முகர்ஜியின் பார்ட்டி. யூ மஸ்ட் கெட் ரெடி ஸூன்...''
கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து பகல் தூக்கம் காரணமாக வீங்கிக் காணப்பட்ட கண் இமைகளிலும் கன்னத்திலும் சாயம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
யார் அது? என் மனைவியா?
அவருக்கு ஏனென்று கூறமுடியாத அளவுக்கு வெறுப்பு தோன்றியது. எந்தவொரு முகர்ஜியின் பார்ட்டிக்கும் செல்ல வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. யாரையும் பார்க்க வேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால், முடியாது... முடியாது...
மாலை வேளை மயங்குவதற்கு முன்பே மனைவியையும் அழைத்துக்கொண்டு பதினெட்டு நாழிகை தூரத்தி−ருக்கும் துறைமுக நகரத்திலுள்ள பெரிய ஹோட்டலுக்கு அவர் காரை ஓட்டிச் சென்றார்.
ஹோட்டலி−ல் இரவு...
சிகார், விஸ்கி ஆகியவற்றின் ஆழமான வாசனை... மிதந்து மிதந்துவரும் மெல்லி−ய இசையை...
அழுத்தக்கூடிய போலி−ச் சிரிப்புகள்... குசுகுசுப்புகள்...
வீர வாதங்கள்... ஏமாற்றுச் செயல்கள்...
தியானத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு துறவியைப்போல அவர் சாளரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார்.
முன்னால் முக்கால் பகுதி தீர்ந்த நிலையி−ருக்கும் குவளை... எரிந்து அடங்கும் சிகார்... சுற்றிலும் டாக்ரோன், டெரிலி−ன், லி−ப்ஸ்டிக், ரூஷ், ஹேர்ஸ்ப்ரே...
மிஸஸ் முகர்ஜி:
""லெட் மீ ஹேவ் எ லி−ட்டில் மோர்.''
""டார்லி−ங்... யூ மஸ்ட் நோட்...''
மிஸஸ் சர்மா:
""டோண்ட் பீ ஸில்லி−லெட் ஹேவ் ஆஃப்ட்ரால்.''
""நவ்... லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்...''
மிஸஸ் பிள்ளை:
""இவனின் ஒரு முட்டாள்தனம்... குழந்தைகளின் தந்தையும் நானும் மாதத்திற்கு ஒருமுறை குருவாயூருக்குப் போகவில்லையென்றால்...''
மிஸஸ் சர்மா:
""அய் ஸே... வாட் ஈஸ் ராங் வித் யுவர் ஹஸ்பென்ட்? ஹீ ஹஸ் பிக்கம் ஸோ மூடி அண்ட் எலூஃபி.''
மிஸஸ் முகர்ஜி:
""ஐ அண்டர்ஸ்டான்ட் ஹீ ஈஸ் எ பொயட். வாட் டஸ் ஹீ ரைட்?''
அவருடைய மனைவி:
""ஐ டோண்ட் நோ.''
தூரத்தி−ருக்கும் கப்பல்களின் விளக்குள் அவரைப் பார்த்து கண்களைச் சிமிட்டின. அவர் வெறுப்புடன் நீண்ட பெருமூச்சை விட்டார்.
நிசப்த இரவில்
சாந்த குளிர் இரவில்
சாய்ந்தாடும் பாதி இரவு தீப வெளிச்சம்
தாமரை இதழ்களில்...
இளவேனிற்காலத்தில் தெளிந்த நீர் இருக்கும் ஆறு... ஆற்றின் கரையில் அடிமுதல் முடிவரை பூத்து நின்றிருக்கும் நீர்மருதுக் கூட்டம்... புதர்கள்... குளித்து முடித்து கோவிலுக்குச் செல்லும் புலர்காலைப் பொழுதுப் பூவைப்போன்ற ஒரு இளம்பெண்...
அவருடைய மனைவி அவரைக் குலுக்கி அழைத்து என்னவோ கேட்டாள்.
அவர் மெதுவாகக் கூறினார்: ""ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல...''