'வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு'
என்கிறார் வள்ளுவர்.
முரட்டுக் கம்போடு வரும் திருடர்கள், ஒரு இரவில் மக்களை மிரட்டி வழிப்பறி செய்வதுபோல், அரசாங்கத்தின் வசூல் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
ஆனால், இன்றைய எடப்பாடி அரசின் பேருந்துக் கட்டண உயர்வு, மக்களை மிரட்டி வழிப்பறி செய்வதுபோலத்தான் இருக்கிறது.
வரி விதிப்பும், கட்டண வசூலும் எப்படி இருக்கவேண்டும்?
தேனெடுக்கும் வண்டு பூவுக்கு நோகாமல் தேனெடுப்பதுபோல், குடிமக்கள் முகம் சுளிக்காதபடி இருக்கவேண்டும். ஆனால் இப்போதைய தமிழக அரசு, பூவைக் கசக்கித் தேனெடுப்பது போல் நடந்துகொள்கிறது.
வழிப்பறிக் கொள்ளையனைப் பார்த்து... அய்யோ என அலறுவதுபோல்... பேருந்துக் கட்டண உயர்வைப் பார்த்து மக்கள் அலறுகிறார்கள். இந்தக் கட்டண உயர்வை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று மிரளுகிறார்கள்.
இன்று தமிழகத்தையே அமளிக்காடாக மாற்றியிருக்கிறது, எடப்பாடி அரசின் பேருந்துக் கட்டண உயர்வு.
19-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென இந்தத் தாறுமாறான கட்டண உயர்வை அறிவித்து, இது ஒரு இருட்டு அரசாங்கம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இது இருட்டு அரசாங்கம் மட்டுமல்ல; நம் கண்ணெதிரிலேயே நம்மிடமிருந்து பணத்தை வழிப்பறிபோல் பறிக்கிற திருட்டு அரசாங
'வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு'
என்கிறார் வள்ளுவர்.
முரட்டுக் கம்போடு வரும் திருடர்கள், ஒரு இரவில் மக்களை மிரட்டி வழிப்பறி செய்வதுபோல், அரசாங்கத்தின் வசூல் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
ஆனால், இன்றைய எடப்பாடி அரசின் பேருந்துக் கட்டண உயர்வு, மக்களை மிரட்டி வழிப்பறி செய்வதுபோலத்தான் இருக்கிறது.
வரி விதிப்பும், கட்டண வசூலும் எப்படி இருக்கவேண்டும்?
தேனெடுக்கும் வண்டு பூவுக்கு நோகாமல் தேனெடுப்பதுபோல், குடிமக்கள் முகம் சுளிக்காதபடி இருக்கவேண்டும். ஆனால் இப்போதைய தமிழக அரசு, பூவைக் கசக்கித் தேனெடுப்பது போல் நடந்துகொள்கிறது.
வழிப்பறிக் கொள்ளையனைப் பார்த்து... அய்யோ என அலறுவதுபோல்... பேருந்துக் கட்டண உயர்வைப் பார்த்து மக்கள் அலறுகிறார்கள். இந்தக் கட்டண உயர்வை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று மிரளுகிறார்கள்.
இன்று தமிழகத்தையே அமளிக்காடாக மாற்றியிருக்கிறது, எடப்பாடி அரசின் பேருந்துக் கட்டண உயர்வு.
19-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென இந்தத் தாறுமாறான கட்டண உயர்வை அறிவித்து, இது ஒரு இருட்டு அரசாங்கம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இது இருட்டு அரசாங்கம் மட்டுமல்ல; நம் கண்ணெதிரிலேயே நம்மிடமிருந்து பணத்தை வழிப்பறிபோல் பறிக்கிற திருட்டு அரசாங்கம் என மக்கள் கொதியாய்க் கொதிக்கிறார்கள்.
வழக்கமாக கிலோ மீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா என்ற ரீதியில்தான் இதுவரை இருந்த அரசுகள் பேருந்துக் கட்டண உயர்வை நிர்ணயித்திருக்கின்றன.
கடந்த 2006- 2011 வரையிலான கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருதடவைகூட பேருந்துக் கட்டணத்தை ஏற்றவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை உணர்ந்தவர் கலைஞர். அதனால், பேருந்துக் கட்டணத்தை அவர் ஏற்ற நினைக்கவில்லை. ஆனால் அதன்பின் 2011 மே மாதம் ஜெ.வின் ஆட்சி வந்தபிறகு, வந்த வேகத்திலேயே 2011 நவம்பர் 18-ஆம் தேதி அதுவரை இருந்த பேருந்துக் கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்தி மக்களை ஜெ. அதிரவைத்தார். இப்போது அவரது அடிப்பொடிகள் ஆட்சியில் இரண்டாவது முறையாக பேருந்துக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறையின் இந்தக் கட்டண உயர்வின் மூலமாக மட்டும், தமிழக மக்களிடமிருந்து 3,600 கோடி ரூபாய்களை உபரி வருமானமாகப் பார்க்க இருக்கிறது எடப்பாடி அரசு.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை இப்போது 5 ரூபாயாக ஆக்கிவிட்டார்கள். மாநகராட்சி பேருந்துகளில் அதிக பட்ச கட்டணமாக இருந்த 12 ரூபாயை இப்போது 24 ரூபாயாக மாற்றியிருக்கிறார்கள்.
இப்படியாக 60 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம்வரை மனிதாபிமானமே இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை ஏற்றி, மக்களைப் புலம்பவைத்திருக்கிறார்கள்.
19-ஆம் தேதி இரவில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வு பற்றிய விவரம் தெரியாமல், மறுநாளான 20-ஆம் தேதி காலையில் பஸ் ஏறிய பொதுமக்களையும், மாணவர்களையும், திகைக்க வைத்திருக்கிறது இந்தக் கட்டண உயர்வு.
பலர், போக்குவரத்துக்குப் போதுமான காசு கையில் இல்லையென்று வேலைக்குப் போகாமலும் பள்ளிக்குப் போகாமலும் அன்று வீடு திரும்பியிருக்கிறார்கள். விருத்தாசலத்தில், கூடுதல் கட்டணத்தில் டிக்கட் வாங்கக் காசில்லாமல் பரிதவித்த மாணவ- மாணவிகளுக்கு, லட்சுமி என்ற காய்கறி விற்கும் பெண்மணி, தன் காசைப் பிரித்துக்கொடுத்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோல் பல சம்பவங்கள் தமிழகம் முழுக்க நடந்திருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் துயரத்தில் தவிக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை இதேபோல் பேருந்துக் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் இந்த எடப்பாடி அரசு அறிவித்து.... திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், வரும் காலம் எப்படி யிருக்குமோ என்று மக்கள் விரக்தி யில் கலங்குகிறார்கள்.
இதற்குமுன் ஆண்ட எந்த அரசும், ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வு செய்யப்படும் என்று அறிவித்ததில்லை. எடப்பாடி அரசுதான் முதன்முதலிலில்... ஆண்டுதோறும் இப்படியொரு கட்டண கண்டம் உண்டென்று அறிவித்திருக்கிறது.
இந்த தைரியம் எடப்பாடி அரசுக்கு எப்படி வந்தது? பல்வேறு வகையிலும் மக்களின் அதிருப்தியைப் பார்த்த இந்த அரசு... அடுத்த தேர்தலிலில் நாமா ஜெயிக்கப் போகிறோம் என்ற எரிச்சலிலும்... தங்கள்மீது மக்கள் காட்டும் அதிருப்தியால் ஏற்பட்ட கோபத்திலும்... மக்களைத் தண்டிப்பதுபோல் தாறுமாறாகக் கட்டண உயர்வைச் செய்திருக் கிறது.
இந்தக் கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அதைத் திரும்பப்பெற வேண்டுமென தி.மு.க. கோரிக்கை வைத்ததோடு, சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்துகிறது. தி.மு.க.வின் போராட்டத்தில் ம.தி.மு.க.வும் வலிலிமையாகக் கைகோத்திருக்கிறது.
பா.ம.க.வோ, அரசிடம் இருக்கும் 22,509 பேருந்தில் 15 ஆயிரம் பேருந்துகள் இயக்கத் தகுதியற்ற காயலான் கடைப் பேருந்துகள். அதனால், கட்டணத்தை உயர்த்தும் தகுதி இந்த அரசுக்கு இல்லையென்று குரல் உயர்த்தி, தொடர்போராட்டத்தை அறிவித்தது. சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் என தமிழகத்தில் இருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளும் கட்டண உயர்வை வாபஸ் பெறச் சொல்லிலிப் போராடுகின்றன. ஆனால் எடப்பாடி அரசோ, இதற்கு செவிசாய்க்கவில்லை. கடுகளவுகூட மனம் இரங்கவில்லை.
அதனால்தான் இந்த அரசை எதிர்த்து, பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தார்கள்.
தன்னெழுச்சியாய்ப் போராட்டத் தீ பற்றி எரிகிறது. கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம், கோபி, காரைக்குடி என தமிழகம் முழுக்க மாணவர்களின் போராட்டம் தன்னெழுச்சியாய் வெடித்திருக்கி றது.
அவர்களின் எழுச்சி, இன்னொரு ஜல்லிலிக்கட்டுப் போராட்டம்போல் விசுவரூபம் எடுத்துவிடுமோ என அரசே நடுங்கும் அளவிற்கு...
மாணவர்கள் ஆவேசமாகப் போராடுகிறார்கள்.
ஆனாலும் எடப்பாடி அரசு, அசைந்துகொடுக்க மறுக்கிறது இந்த அரசு, மக்கள் விரோத அரசு. தனக்கு வாக்களித்த மக்களையே பகைவர்களைப்போல் நடத்துகிற கேடுகெட்ட அரசு. டெல்லிக்குக் காவடி தூக்குவதையும், மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிப்பதையும் ஊழல் செய்து கல்லா கட்டுவதையும் மட்டுமே கடமையாகக் கருதுகிற அரசு.
தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு லாவணி பாடுகிற அவமானத்திற்குரிய அடிமை அரசு.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாத அரசு. மக்கள்மீது அக்கறையும் கருணையும் இல்லாத அரசு.
இப்படிப்பட்ட கருணையில்லாத அரசை என்ன செய்வது?
"கருணையிலா அரசு கடுகி ஒழிக' என்று வள்ளலார் குரலை வழிமொழிவதைத் தவிர, அடுத்த தேர்தல் வரும்வரை நமக்கு வேறு வழியில்லை.
-ஆதங்கத்துடன்,
நக்கீரன் கோபால்