"மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்'

என்கிறார் வள்ளுவப் பேராசான். ஒருவர்மீது கொண்ட கோபத்தை மறந்துவிடவேண்டும். மறக்காமல் அவரைப் பழிவாங்க நினைத்தால், அந்தக் கோபம் அவருக்கே தீங்காகும் என்பது இதன்பொருள். இது வெறும் குறள் அல்ல;

அறத்தின் குரல்.

Advertisment

இதை டெல்லிலியில் இருப்பவர்கள் உணரவில்லை என்ப தையே, ப. சிதம்பரத்தின் கைது விவகாரம் படம்பிடித்துக் காட்டுகிறது. கொஞ்சம்கூட சங்கோஜம் இல்லாமல், பழி வாங்கும் படலத்தை மோடி அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.

சிதம்பரத்தின்மீது நடவடிக்கையே எடுக்கக்கூடாது என்று நாம் கூற வரவில்லை. அவருக்கு வக்காலத்து வாங்கும் நோக்கமும் நமக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல் தலைவரை, நான்கு முறை நிதியமைச்சராக இருந்த ஒருவரை, காவல்துறை, சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை, உள்துறை அமைச்சராக இருந்து நிர்வகித்த ஒரு மனிதரை, அதே விசாரணை அமைப்புகளை ஏவி, இரவு நேரத்தில் சுவரேறிக் குதித்து அதிரடியாகக் கைது செய்திருப்பது, அதிகார அடாவடியாகும். இந்த நாகரிகமற்ற செயலை, நடுநிலையாளர்கள் எவரும் ரசிக்க மாட்டார்கள்.

பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று சொந்தப் பகைமையைப் பாராட்ட, அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது பெரும் அத்துமீறல்.

Advertisment

2010-ல் சொராபுதீன் போலிலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை, அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சி.பி.ஐ. கைதுசெய்தது. அதற்குப் பழிதீர்க்கவே, இப்போது காங்கிரஸைச் சேர்ந்த ப. சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்திருக் கிறது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

அமித்ஷாமீது அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, இன்று ப.சி.மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இருக்கின்றன.

அன்று என்ன நடந்தது?

ppp

குஜராத்தைச் சேர்ந்த சொராபுதீன் என்பவர், அங்குள்ள காவல்துறை அதிகாரி களோடும் அரசியல் புள்ளிகளோடும் சேர்ந்துகொண்டு, தொழிலதிபர்களை மிரட்டி, கப்பம் வசூலிலித்து வந்திருக்கிறார்.

அப்போது அவரால் மிரட்டப்பட்ட ஆர்.கே. மார்பில்ஸ் என்ற நிறுவனத்தின் அதிபர், அதிகார மையத்திடம் சரணடைந்து தன்னை சொராபுதீனிடம் இருந்து காப்பாற் றும்படிக் கேட்கிறார். இதைத் தொடர்ந்து சொராபுதீனைத் தீர்த்துக்கட்டும் அசைன் மெண்ட் காவல்துறையைச் சேர்ந்த சிலரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சொராபுதீ னுக்கு ஸ்கெட்ச் போட்ட அவர்கள், 2005 நவம்பர் 22-ஆம் தேதி, அந்த சொராபுதீன், தன் மனைவி கவுசர் பீவியோடும், உதவியாளர் துளசிராம் பிரஜாபதியோடும் ஐதராபாத்திலிலிருந்து மகாராஷ்டிர மாநில சாங்லிலிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை அதிரடியாக வழிமறித்தார்கள்.

சொராபுதீனையும் பிரஜாபதியையும் அந்த டீம், பேருந்தில் இருந்து இறக்கிய போது, என் கணவரைத் தனியாக உங்களு டன் அனுப்பமாட்டேன் என்றபடி, சொராபுதீ னின் மனைவி கவுசர் பீவி போர்க்கொடி தூக்கினார். இதைத் தொடர்ந்து கவுசர் பீவியை வலுக்கட்டாயமாக ஒரு பண்ணை வீட்டுக்குக் கொண்டுபோய் அடைத்த அந்த டீம், துளசிராம் பிரஜாபதியை ராஜஸ்தான் போலீஸிடம் ஒப்படைத்தது. பின்னர் சொராபுதீனை மட்டும் தனியே அழைத்துச் சென்றது.

இந்த நிலையில் அடுத்த நான்காம் நாள் (26-ஆம் தேதி) அகமதாபாத் அருகே சொராபுதீன் பைக்கில் போனபோது அவரை என்கவுண்ட் டர் செய்ததாக போலீஸ் அறிவித்தது. அவர் தீவிரவாத அமைப்பான லஷ்கர்- இ-தொய்பாவோடு தொடர்புகொண்டவர் என்றும், பா.ஜ.க. தலைவர்கள் சிலரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார் என்றும் திரைக் கதை எழுதினார்கள்.

அடுத்த இரண்டாம் நாளே, சொராபுதீனின் மனைவி கவுசர் பீவியும் கொல்லப்பட்டார்.

அவர் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டதாக வும் பகீர் தகவல்கள் கூறுகின்றன.

இதையறிந்த பிரஜாபதி, இந்த போலிலி என்கவுண்ட்டர் சம்பவத்தின் ஒரே சாட்சியான தன்னையும் அவர்கள் என்கவுண்ட்டர் செய்துவிடுவார்கள் என்று பயந்தார். அதனால் தன்னைக் காப்பாற்றும்படி நீதித்துறைக்குக் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். ஆனபோதும் தப்பியோட முயன்றதாக, அவரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுவிட்டார். இப்படி அதிரடியாகவும் அநியாயமாகவும் மூன்று கொலைகள் அரங்கேறின.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, இவை என்கவுண்ட்டர் என்ற பெயரில் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் இதன் பின்னணியில் பவர் புள்ளிகள் இருப்பதாகவும் வழக்கைப் பதிவுசெய்தது. குஜராத்தில் இருந்த பா.ஜ.க. அரசு வழக்கை நடத்த விடாததால், ஒரு கட்டத்தில் இந்த வழக்கு மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, சி.பி.ஐ. வசம் கொடுக்கப்பட்டது.

வழக்கைக் கையில் எடுத்த சி.பி.ஐ. இந்த போலிலி என்கவுண்ட்டர் வழக்கில், அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவையும் பிரதான குற்றவாளியாகச் சேர்த்தது. அவர் மூலம்தான், சொரபுதீன் கொலைக்கான என்கவுண்ட்டர் உத்தரவு போடப் பட்டது என்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரித்தது. இதற்காக அமித்ஷா, ஆ.கே. மார்பிள்ஸ் உரிமையாளரான விமல்பாட்னியிடம் பணரீதியாகவும் லாபம் அடைந்தார் என்றும் அது குற்றம்சாட்டியிருந்தது.

அப்போது மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. ப. சிதம்பரம்தான் உள்துறை அமைச்சராக இருந்தார்.

ffaf

ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சி.பி.ஐ., 2010 ஜூலையில் அமித்ஷாவைக் கைது செய்யத் தீவிர வியூகம் வகுத்தது. இதையறிந்த அமித்ஷா நான்கு நாட்கள் தலைமறைவாக இருந்தார். பிறகு, தன்னால் இனியும் ஓடி ஒளிய முடியாது என்ற நிலையில் 2010 ஜூலை 24-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மறுநாள் கான்பூரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்து செய்தி யாளர்களை சந்தித்தார். தான் நிரபராதி என்று விளக்கமளித்துவிட்டு, நேராக அருகே காந்தி நகரில் இருக்கும் சி.பி.ஐ. தலைமை அலுவலகத் தில் சரணடைந்தார்.

அமித்ஷாவை அங்கே மணி நகரில் இருக்கும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திவிட்டு, சபர்மதி சிறையில் கொண்டுபோய் அடைத்தனர்.

மூன்று மாதகாலம் சிறையில் இருந்த அமித்ஷாவுக்கு, 2010 அக்டோபர் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் விசாரணை முழுமையாக நடைபெற்று முடியும்வரை குஜராத் துக்குள் நுழையக்கூடாது என்று அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது. அதனால் இரண்டு ஆண்டுகள் அவர் டெல்லிலியில் உள்ள குஜராத் பவனில் இருந்தபடியே அரசியல் செய்யவேண்டியிருந்தது.

இந்த நிலையில் இப்போது மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக்கப்பட்டிருக்கும் அமித்ஷா, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான், பழைய வரலாற்றை ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு அப்படியே திருப்பிப் போட முயல்கிறார் என்கிறார்கள் டெல்லிலியில் இருக்கும் அரசியல் நோக்கர்கள்.

அதிரடியாய் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்த பழிவாங்கும் வைபவத்துக்கு, காவல்துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளும் நீதித்துறையும் இசைவாக இருப்பதுபோலவே இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும் ப.சிதம்பரம், கடந்த மோடி ஆட்சிக் காலத்திலேயே குறிவைக்கப்பட்டுவிட்டார். அதற்கு பா.ஜ.க.வுக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்தான் ஐ.என்.எக்ஸ். வழக்கு.

ஐ.என்.எக்ஸ் என்ற ஊடக நிறுவனத்திடம் கரன்ஸி லாபத்தை அடைந்துகொண்டு, விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டு முதலீடுகள் அந்த நிறுவனத்தில் நுழைய, ப.சி. சலுகை காட்டினார் என்பதுதான், அவர்மீதான குற்றச் சாட்டு. இந்த சலுகைக்காக ப.சி. மகனான கார்த்திக் சிதம்பரம் மூலமே சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். அணுகியது கார்த்தியும் லாபமடைந்தார் என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. ப.சி.யின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் குறிவைத்து, அடுத்தடுத்த வழக்குகளும் அணிவகுத்துக்கொண்டு இருக்கின்றன.

ப.சி. தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாரா? முறைகேடு செய்தாரா? பணம் வாங்கினாரா? என்ற விவகாரத்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.

அதேசமயம், ப.சிதம்பரத்தை எதை வைத்துக் கொண்டு போலீஸ் துரத்துகிறது? என்றால் ஐ.என்.எக்ஸ் மீடியாவின் முன்னாள் டைரக்டரான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் துரத்துகிறது. இந்திராணி முகர்ஜி என்ன அரிச்சந்திரன் மகளா? என்றால் இல்லை. ஐ.என்.எக்ஸ் நிறுவன முறைகேட்டை நடத்திய குற்றவாளியே அவர்தான். அவருக்கு உதவியதாகத்தான் ப.சி.மீது புகார். ப.சி.யைக் குற்றவாளியாக்க, குற்றவாளியாக இருக்கும் ஒருவரின் வாக்குமூலம் எப்படி சரியாக இருக்கும்? என்பது தெரியவில்லை.

அதுமட்டுமல்ல; இந்திராணி முகர்ஜி ஒரு கொலைக் குற்றவாளி. அதிலும் பெற்ற மகளையே கொலைசெய்த கொடும் குற்றவாளி. தன் முதல் கணவனுக்குப் பிறந்த மகளான ஷீலா போரா, தன் இரண்டாவது கணவர் பீட்டர் முகர்ஜியின் மகனான ராகுலைக் காதலிலித்தார் என்பதற்காக, பெற்ற மகள் என்றும் பாராமல் ஷீலாவை 2012-ல் கொன்று நடுக்காட்டில் வைத்து எரித்தவர்தான் அவர். இப்போது மும்பை சிறையில் அடை பட்டிருக்கும் அந்த இந்திராணி முகர்ஜியிடம் சிதம்பரத் துக்கு எதிராக வாக்குமூலத்தை வாங்கி, அவரை கைது செய்துவிட்டது சி.பி.ஐ.

’ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் மீதான வழக்கை ஸ்ட்ராங்காக ஆக்க, அவர் சொல்லாததை எல்லாம்

அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நான்தான் சேர்த்தேன்’-

என்று ராஜீவ் வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் நீதிமன்றத்திற்கே சென்று பேரறிவாளன் குற்றமற்றவர் என்று வாக்குமூலம் கொடுத்தார். அதுபோன்ற வாக்குமூலங்கள் உரியவர் களின் காதுகளில் விழுவதில்லை.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச் செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, தற்கொலை செய்துகொண்டபோது, அவர் மேலதிகாரியின் டார்ச்சர் தாங்காமல்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று, சக பெண் டி.எஸ்.பி. உள்ளிட்ட வர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் உரியவர்களின் காதுகளுக்குப் போவதில்லை.

ஆனால், கொலை மற்றும் மோசடிக் குற்றவாளியான இந்திரா முகர்ஜியின் வாக்குமூலம் மட்டும் அவர்கள் காதில் நன்றாகக் கேட்கிறது. அதை வைத்துக்கொண்டு, தனது அரசியல் எதிரியைத் துரத்துகிறது மோடி அரசு. இது எவ்வளவு பெரிய வேடிக்கை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நிதி மோசடி போன்றவற்றில் ஈடுபட்ட டேஞ்சரஸ் கிரிமினல்கள் பலரும் வெளியே உலவிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ப.சி.யைக் கைது செய்வதில் சி.பி.ஐ. காட்டிய தீவிரமும் திகைக்கவே வைக்கிறது.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படுகிற ஆண்டு 2007. இதன் பேரில் 2017-ல்தான் எப்.ஐ.ஆர். போடப்படுகிறது. தன் பெயர் எஃப்.ஐ.ஆரில் இருப்பதை அறிந்த ப.சி, கடந்த ஓராண்டாக முன் ஜாமீன் பெற்று, தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து சி.பி.ஐ. தன்னைத் தீவிர மாகக் குறிவைக்கிறது என்பதை உணர்ந்து, மீண்டும் உச்சநீதிமன்றத் தில் முன்ஜாமீனுக்கு முயன்றார். அது கீழ் கோர்ட்டை அணுகும்படி சொல்ல, முன்ஜாமீன் கேட்டு டெல்லிலி உயர் நீதிமன்றத்தில் ப.சி. மனு போட்டார். அதைக் கடந்த 20-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நொடியில் இருந்து நடந்தவை எல்லாம் சட்டத்தின் பெயரிலான துரத்தல்கள்தான்.

ப.சி.தரப்பு மேல்முறையீட்டுக்கு மூன்று நாள் அவகாசம் கேட்டும் தரப்படவில்லை. ப.சி.யின் வழக்கை அவசர வழக்காக ஏற்கும்படி தலைமை நீதிபதியின் அமர்வை அவர் தரப்பு நாடியது. அயோத்தி வழக்கைக் காரணம் காட்டி அதுவும் மறுக்கப் பட்டது. தலைமை அமர்வுக்குப் போகவேண்டிய ப.சி. தரப்பின் மனுவும் போய்ச் சேரவில்லை. காரணம் கேட்டபோது, அந்த மனுவில் குறை இருந்ததால் அனுப்ப வில்லை என்று நீதிமன்றப் பதிவாளர் நீதிபதியிடமே வந்து காரணம் சொன்னார். இதற்கிடையே 21-ஆம் தேதி காலை அமலாக்கத்துறை ப.சி.யைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத்துறை நெருக்கடி கொடுக்கிறது. இந்த நிலையில், ப.சி.மீதான ஜாமீன் மனுவை மறுநாள் விசாரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவிக்கிறார்.

அதனால் அன்று இரவு எட்டு மணியளவில் டெல்லிலியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அமித்ஷா 2010-ல் பேட்டி கொடுத்தது போலவே சிதம்பரமும், தான் நிரபராதி என்று பேட்டி கொடுக்கிறார்.

மறுநாள் தனது ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி விசாரிக்க இருப்ப தால், அதுவரை கைது நடவடிக்கை இருக்காது என்ற நம்பிக்கையில் டெல்லிலி ஜோர்பாக் பகுதியில் இருக்கும் தன் வீட்டுக்குப் போகிறார் சிதம்பரம். அங்கே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவர் வீட்டை முற்றுகையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் டீம், காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்தது. சிதம்பரத்தை ஒரு தீவிரவாதியை மடக்குவதுபோல மடக்கி, அதிரடியாகக் கைது செய்து அந்த இரவு நேரத்தில் தங்கள் தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். அதன்பின் மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை கஸ்டடி விசாரணைக்கு ஆளாக்கித் தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரத்துக்காக திகார் சிறையில் அறையெல்லாம்கூட தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என அவர் கைதான அன்றே செய்திகள் கிளம்பிவிட்டன. ஆக, மிகமிக கவனமாகத் திட்டமிட்டு சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஒரு அரசியல் கட்சியின் சீனியர் தலைவர் அவர். உடல் பிரச்சினைகள் கொண்ட 74 வயது நிறைந்த மூத்த அரசியல்வாதி. அவரை, வெளியே வர அவகாசம்கூடக் கொடுக்காமல், சுவரேறிக் குதித்துக் கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் அதில் வன்மம் தெரிகிறது.

*

அமித்ஷாவுக்காக கடந்த காலங்களில் பா.ஜ.க. அரசு எப்படி யெல்லாம் நீதியை வளைத்தது என்று பார்த்தால், இப்போதும் சிதம்பரம் விவகாரத்தில் அவர்கள் எதையும் செய்வார்கள் என்று கவலைகொள்ள வேண்டியிருக்கிறது. அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் போலிலி என்கவுண்ட்டர் வழக்கை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்பத் என்பவர்தான் விசாரித்தார். அவர் அமித்ஷாவுக்காக வளைந்துகொடுக்காமல் வழக்கை நடத்தினார்.

2014 மே மாதம் மோடி பிரதமராக ஆட்சியில் அமர்ந்தார். தனக் குத் தரப்பட்ட நெருக்கடிகளால், அடுத்த மாதமே உத்பத் ராஜினாமா செய்துவிட்டார். அதன்பின் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பிரிஜ்மோகன் லோயா பொறுப்பேற்றார். அவரும் வழக்கைக் கறாராகவே கையாண்டார். இந்த நிலையில் 52 வயதான லோயா மர்மமான முறையில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து 2014 டிசம்பர் 4-ஆம் தேதி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாக கோசாவி பொறுப்பேற்றார்.

அவர் வந்ததும் அமித்ஷா குறித்த விவாதங்கள் 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. மாயாஜாலம்போல் 30-ஆம் தேதியே சொராபுதீன் வழக்கிலிருந்து அமித்ஷா உள்ளிட்டவர்களை விடுவித்தார்.

இப்படிப்பட்ட மாயாஜால வித்தைகளைக் கற்றுவைத்திருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, சிதம்பரம் விவகாரத்தில் இன்னும் எப்படி எல்லாம் திருவிளையாடல்களை அரங்கேற்றப் போகிறது என்பதை காலம் கவனித்துக்கொண்டிருக்கிறது.

*

அதேசமயம், வேட்டி கட்டிய தமிழர் என்று டெல்லிலி அரசியல் வாதிகளால் மதிப்போடு பார்க்கப்பட்ட ப.சிதம்பரம் இரவு நேரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டபோது, தமிழக காங்கிரஸார் மத்தியில்கூட பெரிய அளவில் எதிர்ப்புணர்வைப் பார்க்க முடிய வில்லை. இதற்கு என்ன காரணம்? என்று காங்கிரஸ் கட்சி நண்பர் ஒருவரிடமே கேட்டபோது....

"அவர் யார் பற்றியும் கவலைப்படமாட்டார். அதனால் அவருக்காக யாரும் கவலைப்படவில்லை' என்றார். ஆனாலும், மோடி அரசு, ப.சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைக் கையாளுகிற முறையில் நாகரிகம் இல்லை. பண்பாடு இல்லை. பழிவாங்கும் போக்கே தெரிகிறது. போட்டார். அதைக் கடந்த 20-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நொடியில் இருந்து நடந்தவை எல்லாம் சட்டத்தின் பெயரிலான துரத்தல்கள்தான்.

ப.சி.தரப்பு மேல்முறையீட்டுக்கு மூன்று நாள் அவகாசம் கேட்டும் தரப்படவில்லை. ப.சி.யின் வழக்கை அவசர வழக்காக ஏற்கும்படி தலைமை நீதிபதியின் அமர்வை அவர் தரப்பு நாடியது. அயோத்தி வழக்கைக் காரணம் காட்டி அதுவும் மறுக்கப் பட்டது. தலைமை அமர்வுக்குப் போகவேண்டிய ப.சி. தரப்பின் மனுவும் போய்ச் சேரவில்லை. காரணம் கேட்டபோது, அந்த மனுவில் குறை இருந்ததால் அனுப்ப வில்லை என்று நீதிமன்றப் பதிவாளர் நீதிபதியிடமே வந்து காரணம் சொன்னார். இதற்கிடையே 21-ஆம் தேதி காலை அமலாக்கத்துறை ப.சி.யைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத்துறை நெருக்கடி கொடுக்கிறது. இந்த நிலையில், ப.சி.மீதான ஜாமீன் மனுவை மறுநாள் விசாரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவிக்கிறார்.

அதனால் அன்று இரவு எட்டு மணியளவில் டெல்லிலியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அமித்ஷா 2010-ல் பேட்டி கொடுத்தது போலவே சிதம்பரமும், தான் நிரபராதி என்று பேட்டி கொடுக்கிறார்.

மறுநாள் தனது ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி விசாரிக்க இருப்ப தால், அதுவரை கைது நடவடிக்கை இருக்காது என்ற நம்பிக்கையில் டெல்லிலி ஜோர்பாக் பகுதியில் இருக்கும் தன் வீட்டுக்குப் போகிறார் சிதம்பரம். அங்கே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவர் வீட்டை முற்றுகையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் டீம், காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்தது. சிதம்பரத்தை ஒரு தீவிரவாதியை மடக்குவதுபோல மடக்கி, அதிரடியாகக் கைது செய்து அந்த இரவு நேரத்தில் தங்கள் தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். அதன்பின் மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை கஸ்டடி விசாரணைக்கு ஆளாக்கித் தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரத்துக்காக திகார் சிறையில் அறையெல்லாம்கூட தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என அவர் கைதான அன்றே செய்திகள் கிளம்பிவிட்டன. ஆக, மிகமிக கவனமாகத் திட்டமிட்டு சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஒரு அரசியல் கட்சியின் சீனியர் தலைவர் அவர். உடல் பிரச்சினைகள் கொண்ட 74 வயது நிறைந்த மூத்த அரசியல்வாதி. அவரை, வெளியே வர அவகாசம்கூடக் கொடுக்காமல், சுவரேறிக் குதித்துக் கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் அதில் வன்மம் தெரிகிறது.

*

அமித்ஷாவுக்காக கடந்த காலங்களில் பா.ஜ.க. அரசு எப்படி யெல்லாம் நீதியை வளைத்தது என்று பார்த்தால், இப்போதும் சிதம்பரம் விவகாரத்தில் அவர்கள் எதையும் செய்வார்கள் என்று கவலைகொள்ள வேண்டியிருக்கிறது. அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் போலிலி என்கவுண்ட்டர் வழக்கை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்பத் என்பவர்தான் விசாரித்தார். அவர் அமித்ஷாவுக்காக வளைந்துகொடுக்காமல் வழக்கை நடத்தினார்.

2014 மே மாதம் மோடி பிரதமராக ஆட்சியில் அமர்ந்தார். தனக் குத் தரப்பட்ட நெருக்கடிகளால், அடுத்த மாதமே உத்பத் ராஜினாமா செய்துவிட்டார். அதன்பின் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பிரிஜ்மோகன் லோயா பொறுப்பேற்றார். அவரும் வழக்கைக் கறாராகவே கையாண்டார். இந்த நிலையில் 52 வயதான லோயா மர்மமான முறையில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து 2014 டிசம்பர் 4-ஆம் தேதி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியாக கோசாவி பொறுப்பேற்றார்.

அவர் வந்ததும் அமித்ஷா குறித்த விவாதங்கள் 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. மாயாஜாலம்போல் 30-ஆம் தேதியே சொராபுதீன் வழக்கிலிருந்து அமித்ஷா உள்ளிட்டவர்களை விடுவித்தார்.

இப்படிப்பட்ட மாயாஜால வித்தைகளைக் கற்றுவைத்திருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, சிதம்பரம் விவகாரத்தில் இன்னும் எப்படி எல்லாம் திருவிளையாடல்களை அரங்கேற்றப் போகிறது என்பதை காலம் கவனித்துக்கொண்டிருக்கிறது.

*

அதேசமயம், வேட்டி கட்டிய தமிழர் என்று டெல்லிலி அரசியல் வாதிகளால் மதிப்போடு பார்க்கப்பட்ட ப.சிதம்பரம் இரவு நேரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டபோது, தமிழக காங்கிரஸார் மத்தியில்கூட பெரிய அளவில் எதிர்ப்புணர்வைப் பார்க்க முடிய வில்லை. இதற்கு என்ன காரணம்? என்று காங்கிரஸ் கட்சி நண்பர் ஒருவரிடமே கேட்டபோது....

"அவர் யார் பற்றியும் கவலைப்படமாட்டார். அதனால் அவருக்காக யாரும் கவலைப்படவில்லை' என்றார். ஆனாலும், மோடி அரசு, ப.சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைக் கையாளுகிற முறையில் நாகரிகம் இல்லை. பண்பாடு இல்லை. பழிவாங்கும் போக்கே தெரிகிறது.

-கவலையோடு

நக்கீரன்கோபால்