னத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

-என்பார் வள்ளுவர்.

பெரும் குற்றத்தைச் செய்துவிட்டு, தண்ணீருக்குள் ஒளிந்துகொள்ள முயல் வது போல், குற்றவாளிகள் பலர், தங்கள் பதவி, செல்வாக்கு போன்றவற்றுக்குள் ஒளிந்துகொள்ள முயல்வார்கள் என்பது இதன் பொருள்.

Advertisment

எவ்வளவு நேரம் ஒருவரால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்க முடியும்? அப்படிப்பட்டவர்கள் எப்படியும் வெளியே வந்துதான் ஆகவேண்டும் என்று, இதன் மூலம் வள்ளுவர் உணர்த்த முயல்கிறார்.

இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, எடப்பாடிக்கு மிகவும் பொருந்துகிறது. ஒரு மாபெரும் குற்றத் தைச் செய்துவிட்டு, தண்ணீருக்குள் ஒளிவது போல், தனது முதல்வர் பதவிக் குள் ஒளிந்துகொண்டிருந்த அவர், இப்போது அம்பலப்பட்டு அலறிக் கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தை விறுவிறுப்பாக்கி வரும் ’கொடநாடு கொலை-கொள்ளை’ விவகாரத்தை, முதன் முதலில் இரண் டரை ஆண்டுகளுக்கு முன்பே, நம் நக்கீரன் தான், தமிழக மக்களிடம் பகிரங்கப் படுத்தியது. கொடநாடு கொலை- கொள்ளை விவகாரத்தின் பின்னணியை ஆராய்ந்தால், எழுத்தாளர் சுஜாதா எழுதும் க்ரைம் கதைகளையே தோற்கடிக் கும் விதத்தில், நிஜமாகவே அதிரடி க்ரைம் சம்பவங்கள் ரத்தக்களறியாய் அரங்கேற் றப்பட்டிருப்பது தெரியும்.

Advertisment

இந்த விவகாரத்தை தி.மு.க. அரசு தூசு தட்டி, மறுபடியும் விசாரிக்கத் தொடங்கியதுமே, ஒரு பக்கம் எடப்பாடி பதற, இன்னொரு பக்கம், அவர் கட்சி எம்.எல்.ஏ.க்களும், கொடநாடு விவகாரத்தை விசாரிக்கக் கூடாது என்று கூறி, சட்டமன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள்.

dd

தங்கள் தலைவியான ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா விலேயே, கொலையும் கொள்ளை யும் நடந்திருக்கிறது என்று தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, அவர் கள் அரசை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்த கொலை கொள்ளைச் சம்பவங்கள் நடந்த போது, இங்கே முதல்வராக எடப் பாடிதான் இருந்தார். அவர் உண்மையிலேயே பரிசுத்தமான வராக, ஜெ.மீது பற்றுக்கொண்டவ ராக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?

”எங்கள் புரட்சித் தலைவி யின் புனிதமான கொடநாடு பங்களாவுக்குள் கிரிமினல்கள் நுழைந்தது அதிர்ச்சியைத் தருகிறது. அங்கே என்னென்ன கொள்ளை போனது என்று தீவிரமாக விசாரிப்போம். உண்மைக் குற்றவாளிகள் ஒருவரையும் விடமாட்டோம்’ என்றபடி அவர், காவல் துறையினரின் விசாரணையைத் தீவிரமாக முடுக்கி இருக்க வேண்டாமா?

ஆனால் அவர், அதற்கு மாறாக, சம்பவம் நடந்தபோது அது பற்றி வாயையே திறக்காமல் மௌனமாக இருந்தார். சம்பவம் நடந்த கொடநாட்டுக்கு ஒரு அமைச்சரைக் கூட அவர் அனுப்பி வைக்கவில்லை. அமைச்சர்களும் அது குறித்து வாயைத் திறக்க வில்லை.

குற்றவாளிகள் பிடிபட்ட போது, அதிர்ந்து போன எடப் பாடி, அவர்கள் கொடநாடு விவகாரம் குறித்து, வெளியே எதையும் சொல்லக்கூடாது என்று நீதிமன்றத்துக்கு ஓடிச்சென்று தடை உத்தரவு வாங்கினார். குற்றவாளிகள் எதையும் பேசிவிடக் கூடாது என்று படாதபாடு பட்டார். ஒரு படத்தில் "சுனா பானா'’வாக நடிக்கும் வடிவேல், ஆடு திருடிவிட்டு, பஞ்சயத்தை நடத்தவிடாமல், படாத பாடுபட்டு அதைக் கலைப்பது போல், கொடநாடு குற்றவாளிகளை அரட்டியும் உருட்டியும் வெளியே நடமாட விடாமல் தடுத்தும், அவர்கள் வாயை அடைத்தார். மீறிப் பேசிவிடுவார்களோ என்ற பயத்தில், தனது முதல்வர் பதவி தந்த அதிகாரத்தில், முக்கிய குற்றவாளிகளான சயான், மனோஜ் மீது, பொய்யான பாலியல் வழக்கைப் புனைந்து, அவர்களை குண்டர் சட்டத்திலும் உள்ளே தள்ளினார். கொடநாடு வழக்கையும் அவசரமாக முடிக்க எத்தனித்தார்.

எனினும், ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, புதிதாக வந்த தி.மு.க. அரசு, இப்போது அந்த வழக்கைத் தூசி தட்டி விசாரிக்கத் தொடங்கிவிட்டது. அதனால் உண்மைகள் வெளியே வந்துவிடுமோ என்று மிரண்டுபோய் கொடநாடு விவகாரத்தை விசாரிக்க வேண்டாம்”என்று கூண்டுக்குள் சிக்கிய எலிபோல், அங்கும் இங்கு மாக முண்டியடிக்கிறார்.

அவருக்கு ஏன் இந்தப் பதற்றம்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல், "என்னை இந்த வழக்கில் சிக்கவைக்கப் பார்க் கிறார்கள்' என்று அவராகவே ஏன் முந்திக்கொண்டு ஓலமிட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் தேடும் முன்பாக அந்தக் கொடநாடு சம்பவம் பற்றி சுருக்க மாகப் பார்க்கலாம்.

dd

=

கொடநாடு பங்களா-ஜெய லலிதா அடிக்கடி தன் தோழி சசிகலாவோடு ஓய்வெடுக்கும் ஆடம்பர எஸ்டேட். ஏறத்தாழ 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட்டுக்கு நடுவே 99 சொகுசு அறைகள் கொண்ட பங்களா, நீச்சல் குளம் உட்பட சகல வசதி களும் அங்கே உண்டு. முதல்வராக ஜெ. இருந்த போது அவர் கொட நாடு சென்றால், அதிகாரிகள் படையும் அங்கே செல்லும். அந்த எஸ்டேட், தற்காலிக முதல்வர் அலுவலகமாகவும் மாறும்.

அதனால் சூறாவளியே வீசினாலும், கொடநாடு எஸ்டேட்டுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்படியான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அது முக்கிய ஸ்பாட் என்பதால், அந்தப் பகுதியில் மக்கள் நடமாட் டம் தடுக்கப்பட்டு, ஏராளமான போலீஸ்காரர்கள் அங்கே பாதுகாப்புக்கு எப்போதும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதில் கடுமையான கண்காணிப்பு செக்போஸ்டுகள் வேறு. போலீஸ் மற்றும் அதிகாரிகள் அனுமதி இன்றி அந்தப் பகுதிக்குள் ஒரு ஈ காக்கை கூட நுழையமுடியாது. ஜெ’ மரணத்திற்குப் பிறகும், அ.தி.மு.க. ஆட்சியே தொடர்ந்த தால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதே அளவுக்குத் தொடர்ந் தன. இந்த நிலையில்...

2017 ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிர வில் 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், ஜெ.வின் முன்னாள் டிரைவர் கனகராஜ், அவர் நண்பர்கள் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் தலைமையில் கொடநாடு பங்களாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கனகராஜுக்கு அந்த பங்களா அத்துப்படி என்பதால் அங்கே என்னென்ன பொருட்கள் எங்கெங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் தெரியும். இவர்கள் அங்கே அனுப்பிவைக்கப்பட்ட பிறகு, இவர்களுக்கு வசதியாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காவலாளிகள் பலர் அங்கிருந்து நகர்த்தப்படுகி றார்கள். அந்த பங்களா முழுதும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுத்தப்படுகின்றன. இப்படி சகல ஒத்துழைப்போடு, அந்தக் கொள்ளைக் கும்பல் கொட நாடு பங்களாவுக்குள் நுழைகிறது. அங்கே எதிர்பாராதவிதமாக அவர் களைத் தடுத்த காவலாளி ஓம் பகதூரை அவர்கள் கட்டிப் போடு கிறார்கள். அப்போது அவர், அவர் களில் ஒருவனின் கையைக் கடிக்க, வலி தாங்காத அவன், ஓம்பகதூரின் கழுத்தை அறுத்துக்கொல்கிறான். இன்னொரு காவலாளியையும் தாக்கினார்கள். பின்னர், எளிதாக பங்களாவை உடைத்துக்கொண்டு உள்ளே போன அந்தக் கும்பல், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்டின் படி, குறிப்பிட்ட எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெளியேறியது.

இதில் எதிர்பாராமல் நிகழ்ந்த கொலையால், இந்த விசயம் ஊடகங்களின் கவனத்துக்கு வந்தது. போலீஸோ, “அது மர்மக் கும்பலின் கொள்ளை முயற்சி” என்று சமாளித் தது. ஜெ.வின் பங்களா விலேயே கொலை நடந்தும், இது குறித்து அ.தி.மு.க. தரப்பில் எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.

=

இதன் பிறகுதான் வில்லங்கம் போல் சீரியல் கொலைகள் நடக்க ஆரம்பித்தன. கொடநாடு கொலை கொள்ளை நடந்த ஐந்தாம் நாள், முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த டிரைவர் கனகராஜ், 28.4.2017-ல் போலீஸில் சரணடைய டூவீலரில் சென்றார். அப்போது, அவரைக் குறிவைத்த கார் ஒன்று, வேகமாக அவர் மீது மோதி, ஸ்பாட்டிலேயே அவரைச் சாகடித்தது. அப்போதே கனகராஜின் சகோதரர் தனபால் “கனகராஜ் திட்டமிட்டு கொல்லப் பட்டிருக்கிறார். இதுபற்றி முதல்வர் எடப்பாடியை விசாரிக்கவேண்டும்” என்று புகார் சொன்னார். அது அவர்கள் ஆட்சி என்பதால் போலீஸ் அதைக் கண்டுகொள்ளவில்லை. மற்றொரு குற்றவாளியான சயான், இதற்கு மறுநாள் தன் குடும்பத்தோடு பாலக்கோடு நோக்கி காரில் போகும் போது, அவர்கள் காரை ஒரு டேங்கர் லாரி குறிவைத்து நசுக்கியது. இதில் சயானின் மனைவி வினுப்பிரியாவும், அவர்களின் 5 வயது மகள் நீலியும் ஸ்பாட்டிலேயே இறந்துபோக, சயான் மட்டும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். அவர் தீவிர மருத்துவத்தால் பிழைத்தார். அவரையும் அங்கேயே கொல்ல முயற்சி நடக்க, அதிலிருந்து தப்பித்து அவர் தலைமறைவானார்.

அடுத்ததாக, கொடநாடு பங்களா வின் கேமராக்களை நிறுத்தி வைத்து, குற்றங்களுக்கு உதவியாக இருந்த 24 வயதே ஆன கேமரா ஆப்பரேட்டர் தினேஷ், 2017 ஜூலை 3-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுபோல் கொடநாடு விவகாரத்தோடு தொடர்புடைய 5 பேர் அடுத்த டுத்து மரணமடைய, இது தொடர் பான எண்ணிக்கை 25 ஐத் தாண்டும் என்கிறார்கள்.

இந்த கொடநாடு கொலை விவகாரத்தை கூர்ந்து கவனித்து வந்த நம் நக்கீரன், 2 அதிரடி வீடியோக்களை வெளியிட்டது.

=

eps

2019 ஜனவரி 14-ல் இவற்றில் முதல் வீடியோவை நக்கீரன் மக்களிடம் கொண்டுவந்தது. அந்த 5.5 நிமிட வீடியோவில், கொடநாடு குற்றவாளிகள் சயானையும், மனோஜையும் டெல்லி பேட்டி மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ’தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூவின் பேட்டியும், கொடநாடு விவகாரம் தொடர்பான புலனாய்வுச் செய்திகளும் இருந்தன. இந்த விவகாரத்தில் தெஹல்கா சாமுவேல் மத்யூ எப்படி வந்தார்?

கொடநாடு கொலை கொலை விவகார லிங்கில் இருந்த ஒவ்வொருவரும் கொல்லப்பட்ட தால், தாங்களும் கொல்லப்படலாம் என்று பயந்து போன சயானும், மனோஜும், துணிச்சல் மிகுந்த கேரள ஊடகவியலாளரான சாமுவேல் மேத்யூவிடம் தானாகத் தேடிப்போய் தஞ்சமடைந்தனர்.

"கொடநாட்டில் எங்களை எடப்பாடிதான் கொள்ளையடிக்கச் சொன்னார். கனகராஜ் மூலம் அவர் எங்களை ஆபரேட் செய்தார். இப்போது அவர் தரப்பு எங்களை யும் கொல்லப் பார்க்கிறது. அதனால் உண்மையை உங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம்''

என்று அவர்கள் கேட்டுக்கொண்ட னர். இதைத் தொடர்ந்தே, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று, பேசவைத்தார் மேத்யூ.

இது குறித்த அந்த நக்கீரன் வீடியோவில்... மேத்யூவின் வாக்கு மூலம் தரப்பட்டது. அதில் மேத்யூ....

"கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 5 பேர் அடுத்தடுத் துக் கொல்லப்பட்டது, எனக்கு உறுத் தலை ஏற்படுத்தியது. நான் விசாரணை யில் இறங்கினேன். அப்போது தமிழக முதல்வரான எடப்பாடி 5 பேரைக் கொலை செய்து, கொடநாட்டில் இருந்த பொருட்களையும் ஆவணங் களையும் கொள்ளை அடித்துவிட் டார் என்பது தெரிந்தது'' என்று அவர் குறிப்பிட்டதும், அவரது பேட்டியும் இடம்பெற்றது. இது தமிழகத்தையே பதட்டப் பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில்....

=

2019 ஜனவரி 24-ல் இன்னொரு பரபரப்பு வீடியோவை நக்கீரன் வெளியிட்டது. கொடநாடு விவகாரத் தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களான சயானிடமும், வாளையாறு மனோஜிடமும், நம் நிருபர் பிரகாஷ் எடுத்த நேர்காணல் அது. அதில், சயான், ”இந்த விவகாரத்தில் எடப்பாடி சம்பந்தப்பட்டிருப்பது கொல்லப்பட்ட கனகராஜுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்” என்று அழுத்தமாகச் சொல்லி இருந்தார். மேலும், எப்படி கொள்ளையும் கொலையும் அரங் கேறியது எப்படி என்பதையும் இஞ்ச் பை இஞ்ச்சாக விவரித்திருந்திருந்த னர். அந்த வீடியோ நேர்காணல், இந்த விவகாரத்தில் சந்தேகமே இல்லாமல் எடப்பாடியும் அவர் தரப்பும் சம்பந்தப்பட்டிருந்ததை உணர்த்தியது.

மேலும், "கொடநாடு வீட்டில் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. மேலும் சில கம்யூட்டர்களில் பல சொத்து டாக்குமெண்டுகளும் இருக்கின்றன. இவற்றை எடுத்துச்சென்று எடப் பாடியிடம் கொடுத்தால், அவர் நமக்கு அதிகமாகப் பணம் தருவதாச் சொல்லியிருக்கிறார்... என்று கனக ராஜன், என்னிடம் சொன்னார். இதன் அடிப்படையில்தான் கொள்ளைத் திட்டங்கள் உருவானது'' என்றும் சயான் அடித்துச் சொன்னார்.

=

இந்த இரண்டு வீடியோக்களை யும், எடப்பாடி முதல்வராக இருந்த நேரத்திலேயே நக்கீரன் தைரியமாக வெளியிட்டது. எடப்பாடியால் "ஸ்லீப்பிங் டோஸ்' கொடுக்கப்பட்ட இந்த வழக்கு, இப்போது அவருக்கு எதிராக எழுந்திருக்கிறது. இதற்குக் காரணம், இந்த வழக்கில், எடப்பாடி யையும், அவரோடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் குற்றத் துக்கு உடந்தையாக இருந்த அப் போதைய நீலகிரி ஆட்சியர் சங்கர், அப்போதைய எஸ்.பி முரளி ரம்பா, மற்றும் எஸ்டேட் பர்னிச்சர் வேலைகளை பார்த்துவந்த, அ.தி.மு.க வர்த்தகப்பிரிவு நிர்வாகி சஜீவன், சஜீவனின் தம்பி சுனில், எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரை யும் விசாரிக்க வேண்டும் என்று, வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி உள்ளிட்டவர்கள் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, அதன் அடிப்படையிலேயே இப்போது வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

=

dd

இந்த அளவிற்கு, கொடநாடு பங்களா குறிவைக்கப்பட்டது ஏன்?

2016 மார்ச் வாக்கில், அ.தி.மு.க. வின் மூத்த அமைச்சர்கள் சிலர், ஊழல் மூலம் பணத்தை தலைமைக் குத் தெரியாமல் பதுக்கி வைத்தனர். இது உளவுத்துறை மூலம் ஜெ.வின் கவனத்துக்குப் போக, உடனடியாக அவர், அ.தி.மு.க.வின் ஐவர் அணி என்று அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகியோருக்குச் சொந்தமான இடங் களில் தனிப்படைகள் மூலம் சோதனை நடத்தினார். இதன் மூலம் அவர், பல ஆயிரம் கோடி பணத்தை யும், சொத்து ஆவணங்களையும் பறி முதல் செய்ததாக அப்போதே செய்தி கள் மீடியாக்களில் வெளிவந்தன.

இது குறித்து அப்போது அறிக்கை வெளியிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "அமைச்சர்களின் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உண்டு என்பதால், அவர் மீதும், மூத்த அமைச்சர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அமைச் சர்களிடம் இருந்து சட்ட விரோத மாக மீட்கப்பட்ட பணம் மக்களுக் குச் சொந்தமானது என்பதால் அதன் மதிப்பை வெளிப்படையாக அறிவித்து அரசுக் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'’என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி அந்த ஐவர் அணியிடம் இருந்து பறிமுதல் செய்த பெருவாரி யான பணமும் சொத்து ஆவணங் களும் கொடநாடு எஸ்டேட்டில் வைக்கப்பட்டதாக அப்போதே பேச்சு அடிபட்டது. இந்த நிலையில், ஜெ. மரணமடைந்ததும், முதல்வர் பொறுப்பில் அமர்ந்த எடப்பாடி, அந்த கொடநாட்டுப் புதையலை எடுக்கத்தான், கனகராஜ், சயான் டீமை அங்கே அனுப்பினார் என்பதை குற்றவாளிகளின் வாக்கு மூலங்கள் உறுதிப்படுத்துகின்றன.

=

இந்த கொலை, கொள்ளை விவ காரத்தில் தனக்கு தொடர்பில்லை என்றால், "அந்தக் குற்றவாளிகளைத் தீர விசாரியுங்கள். உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். வழக் கிற்கு நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன்'' என்றுதானே எடப்பாடி சொல்லியிருக்க வேண்டும்? ஏன் சொல்லவில்லை. இப்போதும் கூட, தி.மு.க. அரசு, தன்னைக் குறி வைக்கிறது என்று அவர் கருதினால், அவர் ஏன் நீதிமன்றத்தை அணுக வில்லை? எதற்காக கவர்னரிடம் ஓடவேண்டும்?

தனது பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில், அ.தி.மு.க.வில் பலரும் குறிவைக்கப்படுவதாக, எதன் அடிப் படையில் எடப்பாடி சொல்கிறார்? அப்படியானால் அந்த சம்பவத்தில் நான் மட்டும் தொடர்பானவன் அல்ல என்கிறாரா?

இது தொடர்பான தீவிர விசாரணையின் போது, எல்லாக் கேள்விகளுக்கும் விரைவில் விடை வரும். அப்போது எடப்பாடி, அவற்றை இப்போது போல் மறுத்துக் கொண்டிருக்க மாட்டார். ஏனெனில் நீதியும் சட்டமும், அவரை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கும்.

எதிர்பார்ப்போடு,

நக்கீரன்கோபால்