அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில்
அண்ணாந்து பார்க்கிற உயரத்தில், ஆகாயம்
அதிசயங்களை நிகழ்த்தப் போகிறவன் உதயமாகி இருக்கிறான். ஆச்சரியங்களை நிகழ்த்தப் போகிறவன் பிறந்திருக்கிறான் என்று யாரும் ஆரூடம் கணிக்கவில்லை.
""சவால்களைச் சந்திக்க வேண்டியது வரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். அறைகூவல்
தாலாட்டு கேட்டு, தவழ்ந்து, நடை பயின்று, மரங்களின் பெயரையும் மலர்களின் வண்ணத்தையும் அஞ்சுகத்தாய் சொல்லிக் கொடுக்க, சந்திர பிம்பம் போல் வளர்ந்தார்.
அகரம் முதலான தொடக்
காட்டாற்று வெள்ளத்
கலைஞரை ஏற்காதவர்கள் கூட அவர் தோற்காதவர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். கண்ட களங்கள் அனைத்திலும்
மேருவை நிகர்த்த பண்டித நேருவின் மகளும் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை பத்தே நாளில் சந்தித்துப் பகை முடித்தவரும் பூமிப் பந்தில் ஒரு புதிய நாடு வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த
சந்தியில் நின்று சத்தம்
தி.மு.க. பெற்ற வெற்றி இனி தொடர்
இந்திய அரசியலில் வெற்றியின் முகமாக ஒரு சில தலைவர்கள் இருந்தா
துணிவையும் தன்னம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு இத்தாலியில் தனது பயணத்தைத் தொடங்கிய மகத்தான தலைவன் மாஜினி தனது இருபத்தாறு வயதில் ""இத்தாலிய இளைஞர் சங்கம்' ஒன்றை நிறுவி ஆதிக்கத்தின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் தலைவர் கலைஞரோ தனது 15-ஆவது வயதில் தன் உடன் பயின்ற மாணவர்களையும், தான் வசித்த தெருவில் உள்ள வாலிபர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு சிறுவர் சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பை ஒரு ஓலைக்குடிசையில் ஆயிரம் கனவுகளோடு தொடங்கினார். சிறுவர் சீர்திருத்தச் சங்கம் தான் ""தமிழ்நாடு' தமிழ் மன்றமாக புதிய வடிவம் கொள்கிறது.
அதேபோது மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பிரதியையும் தொடங்கி தன் எண்ணங்களை அதில் எழுத்தாக்கினார்.
பல்கலைக்கழகம் செல்லாத கலைஞர் தான் கனவுகள் காணுகிற கால்ச்சட்டைப் பருவத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அப்போது பாவேந்தர் பாரதிதாசனின் ""காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்' என்ற பாட்டு பாடநூலில் இருந்தது. அந்த பாட்டில் தனது மனதைப் பறிகொடுத்தார் கலைஞர். திடீரென மாவட்டக்கழகத்தில் இருந்து அந்தப் பாடலைக் கற்பிக்கக் கூடாது என்ற ஆணை வந்தது.
மாணவனாக அதுவும் பள்ளி மாணவனாகஇருந்த கலைஞர், ஆணை பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முன்வந்தார். கண்டன சொற்பொழிவாற்றிட தலைநகர் சென்னையிலிருந்து டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனத்தை வரவழைத்தார். டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனத்தின் பேச்சு மாணவர்கள் மத்தியில் புயலையும் பூகம்பத்தையும் உருவாக்கியது. ஓர்
கண்டனக் கூட்டம் நடத்தியதன் விளைவு கலைஞருடன் பயன்ற கே.ஆர். ரங்கசாமி ""இராம அரங்கண்ணல் ஆனார். வி.கே. சண்முகம் வ.கோ. மாவெண்கோ ஆனார். சாமிநாதன் அண்ணல் தங்கோவாக மாறினார்.
""தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில்
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் காண்
கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்
கிழித்தெறிய தேடுதுகாண் பகைக் கூட்டத்தை''
என்று பாவேந்தரிடமிருந்து வாழ்த்துப்பா வருகிறது. அந்த வாழ்த்து கலைஞருக்குள் ஒரு புதிய வாசலைத் திறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அதிகாரத்தைக் குவித்து வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆறாவது விரலாக அலட்சியப்படுத்திய, ஒன்றிய அரசையும் சமாளிக்கவேண்டும். அதே நேரத்தில் அண்ணாவிற்குப் பிறகு கழகம் கலகலத்துவிடும் என்று ஆகாதவர்களின் ஆரூடத்தையும் பொய்யாக்கிக் காட்டவேண்டும். இந்த இரண்டு சவால்களை எதிர்கொண்டு வென்றதால் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கலைஞரை ""வியப்பின் புதல்வர்' என்று கொண்டாடினார்.
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பைப் பாதுகாக்கும் பாதுகாவலராக ஆக்டோபஸ் கரங்கள் கொண்ட வலிமை மிகுந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக கலைஞர் நின்றதற்கு வரலாறு பெருமைக்குரிய இடத்தை கலைஞருக்கு மட்டுமே வழங்கும் என்று ""Karunanidhi Man of Destiny
என்ற நூலில் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். History will finally credit him alone individual who stood his stand for the defence of Indian Democracy against the total Dictatorship of the ruling Congress"என்ற அவரது பாராட்டு கையெழுத்துப் பிரதியாக தொடங்கிய வாழ்க்கை கல்வெட்டுப் பிரதியாகி விட்டதைத் தான் காட்டுகிறது.
சராசரி முதல்வர்களுக்கு மத்தியில் சரித்திரம் படைத்த முதல்வராக, தனித்திறம் படைத்த முதல்வராக கலைஞர் உயர்ந்தார். 1973 ஆம் ஆண்டு ஆத்தூர் அறிஞர் அண்ணா திறப்பு விழாவில் கலந்துகொண்ட காலம் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம், ""அண்ணா அவர்களின் இழப்பில் விடப்பட்ட இடைவெளியை கலைஞர் வந்து நிரப்பி இருப்பது எங்களுக்கெல்லாம் ஆறுதலைத் தருகின்ற ஒன்றாகும்'' என்றார்.
ஆட்சித் தலைவராகவும் கட்சித் தலைவராகவும் இருந்து, அடுத்தடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்ந்தியது.
கொட்டியும் ஆம்பலுமாக இருக்க வேண்டியவர்கள் பழமரம் தேடும் பறவைகள் ஆனார்கள். லத்திக்கு
முதல் உலகப் போரின்போது என்ன நடக்கும் என்பதை ஜெர்மன் மன்னன் இரண்டாம் வில்லியத்திற்கு, ஜெர்மன் பிரதமராக இருந்த பிஸ்மார்க் எச்சரித்ததால் பிஸ்மார்க் பதவி இழந்தார். உயிருக்கு உயிராக இருந்த உற்ற நண்பர்களின் நட்பை இழந்தார். நட்பைவிட நாட்டின் மரியாதை காப்பாற்றப்
அந்த காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் பிள்ளைகள் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஆனால் கலைஞரின் குடும்பமே கொடுமைக்கு ஆளானது. கலைஞருக்கு நேர்ந்த கொடுமை இன்னொரு தவைருக்கு நேர்ந்திருந் தால் காணாமல் போயிருப்பார்கள். கண்டுபிடித்துத் தாருங்கள் என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் கலைஞர் கையில் கழகக் கொடியை ஏந்தியவராக அண்ணா சாலையில் அண்ணாசிலைக்கு அருகில் நெருக்கடியை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதிர்ச்சி அவரை நெருங்க முடியாமல் அதிர்ச்சி அடைந்தது.
சங்க காலம் என்ற தங்க காலத்தில் புவியாண்டவர்கள் கவி வேந்தர்களாகவும் இருந்தார்கள். சோழ மன்னர்கள் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் புவியரசர்களாக மட்டுமல்ல கவியரசர்களாகவும் சுடர் விட்டவர்கள். அந்த சோழ வள மரபில் வந்த தலைவர் கலைஞர் அந்த மரபிற்கு மணி மகுடம் வைத்ததுபோல் இலக்கிய உலகில் தன் கொடியை உயரப் பறக்கவிட்டார். தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தின் வெற்றிக்கும் பெற்றிக்கும் கலை இலக்கியத்தைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் அண்ணா என்றால், அந்த வெற்றியை அண்ணா
திரைப்படத்தில் வசனம் எழுதுவதற்குக் கலைஞர் பேனா ஏந்துவதற்கு முன்னால் மணிப்பிரவாள நடையே வசனங்களில் ஆட்சி செய்தது. திரைப்படங்களில் வசனங்களைவிட பாடல்தான் சினிமாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. திரைப்படம் முழுவதும் பாடல்களே பூரணமாக ஆக்கிரமித்து இருந்தது. அந்த நாளில் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டவர் தியாகராஜ பாகவதர். வெள்ளித் திரையில் தியாகராஜர் தோன்றுவதைக் காண ரசிகர்கள் தவமிருந்த காலம் அந்தக்காலம். ஒரு தீபாவளிக்கு திரைக்கு வந்த தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளியைப் பார்த்தது. பாகவதரின் பாட்டுக்காகவே படம் ஓடியதை வசனத்
தன்னை மறந்து தூங்கிய தமிழனை வசனத்தால் தட்டி எழுப்பியவர் கலைஞர்.
மந்திரிகுமாரி நாயகன் மூலமாக கலைஞர் முழங்குகிறார். ""சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் உலவுவது போல நமது நாட்டைச் சுற்றித் திரிகிறது ஒரு சோதாக் கும்பல், எண்ணிக்கையிலே குறைந்
""வானத்தை முட்டும் மாளிகைகள் மானத்தை இழந்த மனிதர்கள். உயர்ந்த கோபுரங்கள். தாழ்ந்த உள்ளங்கள்' என்று பராசக்தி படத்திலே வருகின்ற வசனத்தில் நெருப்பு பள்ளி கொண்டிருந்தது.
விழித்துக்கொண்டது தமிழகம். விழி பிதுங்கியது ஆதிக்கம். பராசக்தி படம் சிவாஜி கணேசன் என்ற கலைக் கருவூலத்தைத் தமிழ்நாட்டிற்குத் தந்தது. மந்திரிகுமாரி, மன்னாதி மன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தந்தது.
விவேகானந்தா கேந்திரம் ஒன்றை நிறுவி கன்னியாகுமரி கடலுக்கு மத்தியில் இருக்கிற கற்பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடம் என்று சொல்லி, கடலுக்கு நடுவில் கற்பாறையில் விவேகானந்தர் பெயரால் மண்டபம் எழுப்பிவிட்டார்கள். மண்டபத்திற்குப் போவதற்கு படகுப் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். நீலக்கடல் ஓரத்தில் குமரி எல்லையை
அவர்கள் விவேகானந்தரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞரோ நம் ஊனில், உயிரில், உணர்வில் நிறைந்திருக்கிற வான்புகழ் வள்ளுவனை அதற்குப் பயன்படுத்திக் கொண்டார். டெல்லியில் இருந்து இந்தியாவைப் பார்க்கவேண்டும் என்பதை வேலைத் திட்டமாகக் கொண்டவர்களுக்கு இனி கன்னியாகுமரியில் இருந்துதான் இந்தியாவைப் பார்க்கவேண்டும் என்பதைப் புரிய வைக்க கடலின் நடுவில் 133 அடி உயரமான சிலையை நிறுவினார். மண் செழிக்க மழை பொழிவது போல் மனித மனம்
தமிழ் தகத்தகாயமென ஒளிர வேண்டும் என்பதில் அண்ணாவுக்கு இருந்த ஈடுபாடு கலைஞருக்கும் இருந்தது. தனித்தமிழ் இயக்கம் பிறந்த
மகளிருக்கு உரிய மதிப்பு தரப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் படும் துயரம் சொல்லும் தரமன்று. விதவை என்று அழைக்கி
அப்போதுதான் தி.மு.கவின் கவனத்திற்குரிய தலைவரானார் கலைஞர். ஆதிக்க இந்தியை எதிர்க்கும் போரில் 1965-ல் கைது செய்து பாளைச் சிறையில் அதுவும் தனிமைச் சிறையில் தவிக்க தவிக்க அடைத்து வைத்தார்கள். என் தம்பி சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த இடம் தமிழர்கள் யாத்திரை மேற்கொள்ளவேண்டிய புனிதமான திருத்தலம் என்றார் அண்ணா. அண்ணாவின் பாராட்டில் இன்னும் உயரமானார். அகவை முதிர்ந்த 78ஆவது வயதில் 2001 ஜூன் 30ல் நடுநிசியில் நந்தவனத்திற்குள் நாய் நுழைந்தது மாதிரி, கரும்புக் கொல்லைக்குள் காட்டெருமை புகுந்தது மாதிரி, கலைஞர் ஓய்வெடுக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து ஜெயலலிதாவின் காவல்துறை கலைஞரை இழுத்துச் சென்ற காட்சியைப் பார்த்து, நாடே நடுங்கியது.
துன்பத்தின் மடியில் இருந்த அந்த கவலைப் பொழுதில் ஒரு தாளை நீட்டி, கைது குறித்து எதையாவது எழுதுங்கள் என்றார். அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர் சிரித்தவாறே ""அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று எழுதிக் கையெழுத்திட்டார். இந்தத் துணிவு கலைஞரைத் தவிர இன்னொருவருக்கு வராது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தோன்றி சமுதாய மேம்பாட்டுக் காக பாடுபட்டு, பல தியாகங்களைச் செய்து முன்னேறியவர். இன்று தமிழகத்தை முன்னேற்றி வருபவர். அண்ணாவின் மறைவுக்குப் பின் நமக்கும் கிடைத்த மாபெரும் சொத்தாகவே கலைஞரைக் கருதுகிறேன். அண்ணாவின் மறைவிற்குப் பின் ரேடியோவில் அண்ணாவைப் பற்றி அவர் பாடிய கவிதையைக் கேட்ட பொழுதுதான்
கலைஞர் கருணாநிதி எந்தெந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்து தி.மு.க.வின் தொண்ட ராகப் பணியாற்றும் கழகத் தலைவர் இவரைப் போலக்
உடன்பிறப்பே! என விழித்து கழகத்தவர்களுக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம்.
மாசற்ற தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு வே.சாமிநாத சர்மா பிரிவாற்றா மையில் எழுதிய கடிதங்களைப் படித்தால் கண்கள் கலங்கும். கவலை நம்மைக் கவ்வும். 1968ல் அக்டோபர்த் திங்கள் 22ல் ஒரு திருமணச் செய்தியோடு உடன் பிறப்பே என விழித்து முரசொலியில் எழுதத் தொடங்கிய கலைஞர், நினைவு தடுமாறுகிற வரை
அரை நூற்றாண்டு கால காலக் கருவூலமாக அந்தக் கடிதங்கள் பதிவாகி இருக்கின்றன. கலைஞருக்கும் களமாடும் தொண்டர்களுக்கும் உறவுப் பாலமாக கலைஞரின் கடிங்களே இருந்தன. அரசு ஆணைகூட நடைமுறைக்கு வர நான்கு நாட்கள் தேவைப்படும். கடிதம் மூலம் உடன்பிறப்புகளுக்கு அவர் போடும் உத்தரவு உடனே நடைமுறைக்கு வரும். அதனால் கலைஞரை
சனாதனக் கிடங்கில் வைதீகப் பள்ளத்தாக்கில் தமிழர்களைத் தள்ள எத்தனிக்கும் சங்பரீவார் சக்திகளை மோதி மிதிக்க, இன்னும் கலைஞர் நமக்கு தேவைப்படுகிறார். திராவிட இயக்கக் கோட்டையில் இன எதிரிகளை எதிர்கொள்ள கலைஞரை ஆயுதமாக ஏந்துவோம். நூற்றாண்டு நிறைவுவிழா காணும் கலைஞரின் காவியப் புகழ் காரும் கடலும்
இருக்கும் வரை நிலைத்திருக்கும். கலைஞர் புகழ்
-நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்