பாரதியின் நிலையாமை பற்றி உள்ளுணர்வு! - முனைவர் இராம குருநாதன்

/idhalgal/eniya-utayam/intuition-about-bharathis-instability-dr-rama-gurunathan

னிதன் தன் விருப்பத்தையும் வெறுப்பை யும் வெளிப்படுத்த அவனது அகமனமும், புறமனமும் காரணிகள் ஆகின்றன. அகமனமே அதில் பெரும்பங்காற்றுகிறது. புறமனம் இலக்கியமாகப் பதிவு செய்வதற்கு அகமனம் ஊக்கியாக இருந்து செயல்புரிகிறது. படைப்பாளியின் இயக்கம் என்பது இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழ்கிறது.

தன் மனத்தோடு உறவாடும் அகவெண்ணமும், புறத்தே காணும் சூழ்நிலையும் ஒருவனைப் படைப்பாளியாக ஆக்கும்போது, படைப்புகள் படைப்பாளியைச் சார்ந்தும், சமூகத்தைச் சார்ந்தும் வெளிப்படுகின்றன. படைப்பாளியின் வாழ்க்கைச் சூழல், படைப்பாளி இயங்கும் தளம் இவற்றைப் பொறுத்தே அவனது படைப்புகள் நேர்வினை அல்லது எதிர்வினைக்கு அவனை ஆளாக்கு கின்றன. பாரதியிடம் இந்த இரண்டு போக்குகளும் பல்வேறு வகைகளில் தென்படுகின்றன. பாரதி மனம் அகவயமாகவும், புறவயமாகவும் செயற்பட் டிருப்பதனை அவரது ஆழ்மனவெளிப் பாட்டைக் காட்டுவதாகும். படைப்பாளிகளுக்குரிய பொதுப் பண்பாகவே இது கருதப்படுகிறது.

அரண்மனை வாழ்வும் தனிமையும்

பாரதி இளம்வயதிலேயே கவிதை எழுதும் திறம் பெற்றவர். அவரது இளமைக் காலம் பல்வேறு வகைகளில் அவரை அலைக்கழித்திருக்கிறது. அவரது சிந்தனைகள் யாவும் உணர்ச்சிப் பிழம்பாக ஆயினமைக்கு அவருடைய கவிதை மனம் காரணமாக இருந்துள்ளது. இளமையின் துயர வலைகள், அவரைச் சிறுவயது முதலே சிக்கலுக்கு ஆளாக்கியிருந்தன.

அன்னையை இழந்த சிறுவயது முதலே அவரிடம் ஒருவிதக் கவலை ஆட்கொண்டிருந்ததை அறியலாம், அன்புசெலுத்த அன்னை இல்லையே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்திருக்க வாய்ப்புண்டு. தந்தையின் கண்டிப்பு ஒருபுறம், மற்றச் சிறுவர்களோடு கலந்து பழக அவருக்குத் தந்தையால் விதிக்கப்பட்ட தடை மற்றொரு புறம். எட்டயபுர அரண்மனை வாழ்வில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமை வெளியில் விளையாடமுடியாத சூழல் முதலியன அவரின் தனிமைத் துன்பத்தினை மிகுதிப்படுத்தின. பின்னாளில் அவருக்கிருந்த இனத்தின் புறக்கணிப்பு ஒரு புறம், குடும்ப வறுமை மறுபுறம் ஆகியவை கவலை ரேகை களைப் படரவிட்டன. ஆயினும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாது, கவலைகளைத் தின்னப் பழகி யிருந்ததோடு, அவரது அகமனம் பல தொல்லைகளை யும் துயரங்களையும் சீரணிக்கவும் பழகியிருந்தது. அத்தகைய சூழ்நிலைகளைத் தம் பாடல்களில் ஆங்காங்கே பதிவு செய்திருக்கிறார். இளம் வயதில் அவருக்கு எட்டயபுர அரண்மனையில் நிலவிய கட்டுப்பாடுகள் அவரது மனத்தைப் பாதித்திருந்தன. அதற்கான சூழ்நிலைகள் பல, கட்டுப்பாட்டினை விதிக்கும்போது அதனை மீறிச் செல்ல மனம் எண்ணுவது இயல்பு. நட்பு வட்டமும் வெளியுலக அனுபவமும் அரண்மனை வாழ்வில் கிட்டுவதற்கான வாய்ப்பில்லை. இளம் வயதில் அவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆயின், பெற்றோர் அதற்குத் தடையாக இருந்துள்ளனர்.

இதனால் மற்ற சிறுவர்களைப் பார்க்கும் அவருக்கு ஒருவித ஏக்கம் இருந்திருப்பது கண்கூடு. இளமை யில் இப்படிப்பட்ட துன்பம் அவரை வருத்தியிருக்க வேண்டும். இதனால்தான் தூண்டு நூற்கணத்தொடு தனிமையில், தோழமை பிறிதின்றி வருந்தியதாகத் தம் சுயசரிதையில் சுட்டியுள்ளார். சோமு (பின்னாளில் சோமசுந்தர பாரதி என்றைழைக்கப்பட்டவர்) பாரதியின் தோழராக இருந்துள்ளார். சோமு அரண்மனையில் இருந்தவர். இருவரும் புத்தகங்களைப் படிக்க யாருக்கும் தெரியாமல் கோவில் வாகனத்தின் இடுக்கில் ஒளிந்துகொண்டு படிப்பார்களாம் - ஆதாரம் - சாம்பசிவம் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்) இது ஓரளவு வளர்ந்த பின் நிகழ்ந்த நிகழ்வாகும்) தாயை இழந்த கன்றாக ஆனநிலையில், அவரது ஏக்கங்கள் பல்கியிருக்கலாம். (தம் அன்னை பற்றிய சிந்தனையின் வளர்ச்சி அவரைப் பிற்காலத்தே இந்திய அன்னையைத் தாயின் கோணத்தில் காட்ட முயலுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாமோ!) எட்டயபுர சமஸ்தான மன்னரால் பாரதிக்குச் சில வேண்டாத பழக்கங்கள் உட்புகுந்தன. அவை தம்மை மறந்த லயத்திற்கு அவரை ஆட்பட வைத்தன. அவற்றிலிருந்து அவரால் மீண்டு வர இயலா அளவிற்கு அவர் மனநிலை இருந்ததுண்டு. வறுமையை யும், கவலையையும் மறக்க அவை தேவையாக இருந்திருக்கலாம். இளமைப் பருவத்தே மனத்தைக் கட்டுப்படுத்த முயன்று, அவர் தோல்வியுற்றார். இதனடிப்படையில் உள்ளத் தில் உறுதி வேண்டும் என்றும் உடலினை உறுதி செய் என்றும் பொது நோக்கில் அவருக்குச் சொல்ல வேண்டியிருந்திருக்கலாம்.

உடல் உறுதியும் மன உறுதியும்

பாரதி மெலிந்த உடம்பினர்; தமக்குக் கட்டான உடல் வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார். அது குறித்துக் கடவுளர் களிடம் வேண்டுகின்ற அளவுக்கு அவரிடம் உடல் வலிமை குறித்த தீவிர ஆசை இருந்துள்ளது. உடற்பயிற்சியின் மீது தீராத ஈடுபாடு உடையவர். ஒளிபடைத்த கண்ணும், உறுதிகொண்ட நெஞ்சும் அவரது வரவேற்புக்கு உரியவைகளாக விளங்கின. அவர் வலிமையற்ற தோள்களைப் புறக் கணித்தவர்; பன்றியைப் போல் மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே. வெற்றியை நாடி வானத்தில் ஓட விரும்பு’ என்று சொல்லி இளைஞர்க்கான தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க எண்ணியவர். சில இடங்களில் மன உறுதியும் உடல் உறுதியும் பற்றிப் பேசுவது இதனை மெய்ப்பிக்கிறது.

தோளை வலிவுடைய தாக்கி- உடற்

சோர்வும் பிணிபலவும் போக்கிலி அரி

வாளைக்கொண்டு பிளந்தாலும்- கட்டு

மாறா உடலுறுதி தந்து- சுடர்

நாளைக் கண்ட மலர்போல் - ஒளி

நண்ணித் தி

னிதன் தன் விருப்பத்தையும் வெறுப்பை யும் வெளிப்படுத்த அவனது அகமனமும், புறமனமும் காரணிகள் ஆகின்றன. அகமனமே அதில் பெரும்பங்காற்றுகிறது. புறமனம் இலக்கியமாகப் பதிவு செய்வதற்கு அகமனம் ஊக்கியாக இருந்து செயல்புரிகிறது. படைப்பாளியின் இயக்கம் என்பது இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழ்கிறது.

தன் மனத்தோடு உறவாடும் அகவெண்ணமும், புறத்தே காணும் சூழ்நிலையும் ஒருவனைப் படைப்பாளியாக ஆக்கும்போது, படைப்புகள் படைப்பாளியைச் சார்ந்தும், சமூகத்தைச் சார்ந்தும் வெளிப்படுகின்றன. படைப்பாளியின் வாழ்க்கைச் சூழல், படைப்பாளி இயங்கும் தளம் இவற்றைப் பொறுத்தே அவனது படைப்புகள் நேர்வினை அல்லது எதிர்வினைக்கு அவனை ஆளாக்கு கின்றன. பாரதியிடம் இந்த இரண்டு போக்குகளும் பல்வேறு வகைகளில் தென்படுகின்றன. பாரதி மனம் அகவயமாகவும், புறவயமாகவும் செயற்பட் டிருப்பதனை அவரது ஆழ்மனவெளிப் பாட்டைக் காட்டுவதாகும். படைப்பாளிகளுக்குரிய பொதுப் பண்பாகவே இது கருதப்படுகிறது.

அரண்மனை வாழ்வும் தனிமையும்

பாரதி இளம்வயதிலேயே கவிதை எழுதும் திறம் பெற்றவர். அவரது இளமைக் காலம் பல்வேறு வகைகளில் அவரை அலைக்கழித்திருக்கிறது. அவரது சிந்தனைகள் யாவும் உணர்ச்சிப் பிழம்பாக ஆயினமைக்கு அவருடைய கவிதை மனம் காரணமாக இருந்துள்ளது. இளமையின் துயர வலைகள், அவரைச் சிறுவயது முதலே சிக்கலுக்கு ஆளாக்கியிருந்தன.

அன்னையை இழந்த சிறுவயது முதலே அவரிடம் ஒருவிதக் கவலை ஆட்கொண்டிருந்ததை அறியலாம், அன்புசெலுத்த அன்னை இல்லையே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்திருக்க வாய்ப்புண்டு. தந்தையின் கண்டிப்பு ஒருபுறம், மற்றச் சிறுவர்களோடு கலந்து பழக அவருக்குத் தந்தையால் விதிக்கப்பட்ட தடை மற்றொரு புறம். எட்டயபுர அரண்மனை வாழ்வில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமை வெளியில் விளையாடமுடியாத சூழல் முதலியன அவரின் தனிமைத் துன்பத்தினை மிகுதிப்படுத்தின. பின்னாளில் அவருக்கிருந்த இனத்தின் புறக்கணிப்பு ஒரு புறம், குடும்ப வறுமை மறுபுறம் ஆகியவை கவலை ரேகை களைப் படரவிட்டன. ஆயினும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாது, கவலைகளைத் தின்னப் பழகி யிருந்ததோடு, அவரது அகமனம் பல தொல்லைகளை யும் துயரங்களையும் சீரணிக்கவும் பழகியிருந்தது. அத்தகைய சூழ்நிலைகளைத் தம் பாடல்களில் ஆங்காங்கே பதிவு செய்திருக்கிறார். இளம் வயதில் அவருக்கு எட்டயபுர அரண்மனையில் நிலவிய கட்டுப்பாடுகள் அவரது மனத்தைப் பாதித்திருந்தன. அதற்கான சூழ்நிலைகள் பல, கட்டுப்பாட்டினை விதிக்கும்போது அதனை மீறிச் செல்ல மனம் எண்ணுவது இயல்பு. நட்பு வட்டமும் வெளியுலக அனுபவமும் அரண்மனை வாழ்வில் கிட்டுவதற்கான வாய்ப்பில்லை. இளம் வயதில் அவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆயின், பெற்றோர் அதற்குத் தடையாக இருந்துள்ளனர்.

இதனால் மற்ற சிறுவர்களைப் பார்க்கும் அவருக்கு ஒருவித ஏக்கம் இருந்திருப்பது கண்கூடு. இளமை யில் இப்படிப்பட்ட துன்பம் அவரை வருத்தியிருக்க வேண்டும். இதனால்தான் தூண்டு நூற்கணத்தொடு தனிமையில், தோழமை பிறிதின்றி வருந்தியதாகத் தம் சுயசரிதையில் சுட்டியுள்ளார். சோமு (பின்னாளில் சோமசுந்தர பாரதி என்றைழைக்கப்பட்டவர்) பாரதியின் தோழராக இருந்துள்ளார். சோமு அரண்மனையில் இருந்தவர். இருவரும் புத்தகங்களைப் படிக்க யாருக்கும் தெரியாமல் கோவில் வாகனத்தின் இடுக்கில் ஒளிந்துகொண்டு படிப்பார்களாம் - ஆதாரம் - சாம்பசிவம் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்) இது ஓரளவு வளர்ந்த பின் நிகழ்ந்த நிகழ்வாகும்) தாயை இழந்த கன்றாக ஆனநிலையில், அவரது ஏக்கங்கள் பல்கியிருக்கலாம். (தம் அன்னை பற்றிய சிந்தனையின் வளர்ச்சி அவரைப் பிற்காலத்தே இந்திய அன்னையைத் தாயின் கோணத்தில் காட்ட முயலுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாமோ!) எட்டயபுர சமஸ்தான மன்னரால் பாரதிக்குச் சில வேண்டாத பழக்கங்கள் உட்புகுந்தன. அவை தம்மை மறந்த லயத்திற்கு அவரை ஆட்பட வைத்தன. அவற்றிலிருந்து அவரால் மீண்டு வர இயலா அளவிற்கு அவர் மனநிலை இருந்ததுண்டு. வறுமையை யும், கவலையையும் மறக்க அவை தேவையாக இருந்திருக்கலாம். இளமைப் பருவத்தே மனத்தைக் கட்டுப்படுத்த முயன்று, அவர் தோல்வியுற்றார். இதனடிப்படையில் உள்ளத் தில் உறுதி வேண்டும் என்றும் உடலினை உறுதி செய் என்றும் பொது நோக்கில் அவருக்குச் சொல்ல வேண்டியிருந்திருக்கலாம்.

உடல் உறுதியும் மன உறுதியும்

பாரதி மெலிந்த உடம்பினர்; தமக்குக் கட்டான உடல் வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார். அது குறித்துக் கடவுளர் களிடம் வேண்டுகின்ற அளவுக்கு அவரிடம் உடல் வலிமை குறித்த தீவிர ஆசை இருந்துள்ளது. உடற்பயிற்சியின் மீது தீராத ஈடுபாடு உடையவர். ஒளிபடைத்த கண்ணும், உறுதிகொண்ட நெஞ்சும் அவரது வரவேற்புக்கு உரியவைகளாக விளங்கின. அவர் வலிமையற்ற தோள்களைப் புறக் கணித்தவர்; பன்றியைப் போல் மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே. வெற்றியை நாடி வானத்தில் ஓட விரும்பு’ என்று சொல்லி இளைஞர்க்கான தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க எண்ணியவர். சில இடங்களில் மன உறுதியும் உடல் உறுதியும் பற்றிப் பேசுவது இதனை மெய்ப்பிக்கிறது.

தோளை வலிவுடைய தாக்கி- உடற்

சோர்வும் பிணிபலவும் போக்கிலி அரி

வாளைக்கொண்டு பிளந்தாலும்- கட்டு

மாறா உடலுறுதி தந்து- சுடர்

நாளைக் கண்ட மலர்போல் - ஒளி

நண்ணித் திகழுமுகம் தந்து- மத

வேளை வெல்லுமுறை கூறித்- தவ

மேன்மை கொடுத்தருள வேண்டும்

எனப் பாடியிருப்பது அவரது ஆழ்ந்த மனத்தின் வெளிப் பாடாகும். அதீத நிகழ்வுகள் பாரதியின் வாழ்க்கையில் நடந்ததாகச் சில நிகழ்வுகளைக் குறிப்பிடுவர். அவை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நம்பகத்தன்மையும் இல்லை. இருப்பினும் சிலவற்றை இங்குப் பதிவிடலாம். உயிரியல் பூங்காவில் ஒருசமயம் பாரதி சென்றிருந்த போது, கூண்டில் இருந்த சிங்கத்தைப் பார்த்த பலரும் குரல் கொடுத்து எழுப்பமுயன்றனர். அது கர்ச்சனை செய்யவில்லை. அதனிடம் பாரதி பேச்சுக் கொடுத்ததும் எதேச்சையாக அது கர்ச்சித்தது. பாரதி உடனே புளகாங்கிதம் அடைந்தவராய், அதனைப் பார்த்து நீ காட்டுக்குச் சிங்கம், நான் கவிக்குச் சிங்கம் என்று சொன்னதாக ஒரு குறிப்பு உண்டு. இதுபோல, இன்னொரு நிகழ்ச்சி. ஒருவன் நீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பாரதி, தரையில் நீச்சல் அடிப்பது போன்று செய்கை காட்டினார். அவன் எழுந்துவந்து பாரதியாரை வினவ பாரதி, நான் தண்ணீரில் நீச்சல் அடித்தால் எப்படி இருக்கும் என்பதைத் தரையில் செய்து பார்த்தேன் அவ்வளவுதான்! (ஸ்ண்ஸ்ரீஹழ்ண்ர்ன்ள் ங்ஷ்ஸ்ரீண்ற்ங்ம்ங்ய்ற்)'' என்று சொன்னாராம். இவைபோன்ற நிகழ்ச்சிகள் அவற்றைப் பற்றி வழங்கிவருவது உண்மையாகவோ அல்லது புனைந்துரையாகக் கூட இருக்கலாம். இதனை ஏற்பது ஏலாது. எனினும், அடிப்படையில் இது ஒருவகையான மனநிலையே.அவ்வாறான ஒரு மனநிலை உளவியல் தற்காப்பு (ம்ங்ய்ற்ஹப் ம்ங்ஸ்ரீட்ஹய்ண்ள்ம்) அடிப்படையில் இதனை ஒன்றுதல் (ண்க்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) என்ற உளநுட்பச்செயலாக சிக்மெண்ட் பிராய்டு கூறுவார்.

ss

இளமைக்காலத்துக் காதல்

இளமைப்பருவத்து உணர்ச்சிகள் பெரும்பான்மையும் அக மனத் தின் பாதிப்பால் உண்டாவன. உணர்ச்சி வயப்படும் ஒருவருக்குக் காதல் வயப்படுவது எளிதாக இருக்கிறது என உளவியல் அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு வயப்படுவது அவர்களைக் கனவு நிலைக்கு ஆளாக்குவதும் உண்டு. பாரதியின் காதல் ஒரு கனவு லகு வாழ்க்கையாக இளமையில் கழிந்திருக்கிறது. இஃதோர் அகமனத்தின் வெளிப்பாடாகும். இளம் வயதில் பாரதிக்குக் காதல் இருந்துள்ளது. இளமை நாள்கள் காதலில் கரைந்ததை எண்ணிப் பார்த்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் காதல் அரும்பியதாக ஊகப்படுத்தலாம்.

ஒன்பதாய பிராயத்தள் என்விழிக்கு

ஓதுகாதைச் சகுந்தலை ஒத்தனள்

என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால்

என்ன செய்வேன் பழி என்மிசை உண்டுகொல்

அன்பெனும் பெரும் வெள்ள மிழுக்குமேல்

அதனை யாவர் பிழைத்திட வல்லரே

எனச் சுட்டியிருப்பது பாரதி

காதல் வயப்பட்டிருந்ததைக் காட்டும். தனிமையும் ஏக்கமும் காதல் உணர்வை வளர்க்கும். இதனை உளவியலாரும் விளக்கியுள்ளனர். பாரதி காதலித்த பெண்ணின் பெயர் அவரது சுயசரிதையில் பதிவுசெய்யப்படாவிடினும் காதல் அனுபவத்தைச் சொல்லில் வடித்துள்ளார். அவர் இளம் வயது காதலைச் சிலவிடத்துப் போற்றுதற்குக் காதல் அனுபவமும் காரணமாகும். இளமைக் காதலுக்கு அவர் மதிப்பும் மரியாதையும் தருவதற்குச் சொந்த அனுபவமே காரணமெனலாம். இளமைக் காதலை அவர் தெய்விக நிலைக்கு உயர்த்திக் கூறுகிறார். தாம் காதலித்த பெண்ணை வருணிக்கும் பாரதி,

மென்னடை கனியின்சொல் கருவிழி

மேனிஎங்கும் நறுமலர் வீசிய

கன்னியென்று தெய்வத மொன்றனைக்

கண்டுகாதல் வெறியினில் கலந்தனன்

என்று பாடியிருப்பது காண்க. காதலித்தவளின் பின்னழகு கவிஞரைப் பெரிதும் ஈர்த்திருப்பது கண்டு அவர் பாடுகிறார்

காத்திருந்து அவள்போம்வழி முற்றிலும்

கண்கள் பின்அழ கார்ந்து கணிந்திட

யாத்ததேர் உருளைப்படும் ஏழைதான்

யாண்டு தேர்செலும் ஆங்கும் இழுப்புற்றெனக்

கோத்த சிந்தையோடு ஏகி- அதில்மகிழ்வு

கொண்டுநாட்கள் பல கழித்திட்டனன்

பூத்த ஜோதிவதனம் திரும்புமேல்

புலனழிந்து ஒருபுத்துயிர் எய்துவன்

என்று பாடித் தம் காதல் இன்ப அனுபவத்தைச் சுட்டுகிறார். காதலில் கட்டுண்ட நாள்களை எண்ணி எண்ணி அதனைத் தெய்வ நாள்கள் என்று அவர் சொல்லும் அளவிற்கு அவரது காதல் இருந்துள்ளது. காதல் கனவு நிலையாகவே அவர் உள்ளத்தில் பூத்துப் பொலிவு கூட்டச்செய்திருக்கிறது. காதலியைத் துறக்கவேண்டிய துயரினையும் எண்ணிப் பார்த்தவராய்த் தம் மனப் போராட்டத்தை வெளிப்படுத்தும் பாரதி காதலில் தோற்றுப் போனதை எண்ணி வருந்தியிருப்பதனை

ss

ஆதிரைத் திருநாள் ஒன்றிற் சங்கரன்

ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யான்

சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்

சொற்க ளாடி யிருப்ப மற்றுஆங்கவள்

பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்

பங்க யக்கையில் மைக்கொணர்ந் தேஒரு

சேதி! நெற்றியில் பொட்டு வைப்பேன் என்றாள்

திலக மிட்டனள்; செய்கை அழிந்தனன்

என்றும்,

நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கிதை

நிகழ்த்த நாநனி கூசும்! அன்றியே

எனைத்திங்கு எண்ணி வருந்தியும் இவ்விடர்

யாங்ஙன் மாற்றுவ தென்பது ஓர்ந்திலேம்

என்றும்,

ஓங்கு காதல் தழல்அவ் வளவென்றுஎன்

உளமெ ரித்துளது என்பதும் கண்டிலேன்

என்றும் பாடியிருப்பதை நோக்க, பாரதி காதலில் பிணிப்புண்ட நிலையைக்காட்டும். மேலும், பாரதியிடத்து இருந்தது கைக்கிளைக் காதலா என்று தோன்றும் வகையில், ’,சின்னாள் கழிந்தபின் யாதெனச் செப்புகேன், நின்னொடு வாழ்ந்த நினைப் புமே தேய்ந்தது’ என்கிறார். ’கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும்’ என்ற அடிகளும், ’கனவோ? நனவு கொலோ? தெய்வ வலியோ? கண்ட தொரு காட்சி கனவு நனவென் றறியேன் என்ற அடிகளும் ’கன்னி மீதுறு காதலின் ஏழையேன் கவலை யுற்றனன் கோடியென் சொல்லு கேன்?; என்ற அடிகளும், ’தேனகத்த மணிமொழி யாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தனரோ’ என்ற அடிகளும் பாரதியைக் காதல் அலைக்கழித்தமைக்குரிய அகச்சான்றுகளாகும். ’தெய்வ வலி’ என்றும், ’தெய்வ நாட்கள்’ என்றும் வரும் தொடர்களை நோக்க, காதலில் அழுந்திய கணங் களைக் காட்டுதற்குப் போதிய சான்றுகளாகும். தனக்குத் தம் தந்தை வேறொரு பெண்ணை மணமுடித்த நிலையில் அவரது உளப்போராட்டம் தெற்றதெனத் தெரிகிறது. பாரதியின் மனநிலை அந்த வயதில் அறிதற்குரியதாகவே அவரது காதல் இருந்துள்ளது. காதலின் எதிரொலியைக் குயில் பாட்டில் காண முடியும். நிறைவேறாக் காதலின் வெளிப்பாடு வேறொரு கோணத்தில் குயில் பாட்டில் குறிப்பாக உணர்த்தியிருக்கவும் வாய்ப்புண்டு.

'ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும், சிருங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார்'

என்று வ.ரா பாரதி பற்றிய தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார். எனினும், அவை போன்ற பாடல்களை இயற்றச் சொன்ன சமஸ்தான அரசர் எண்ணத்திற்கு மாறானவர் பாரதி. சிருங்கார ரஸம் சொட்டும் பாடல்களை மன்னர்முன் பாட அவர் விரும்பியதில்லை. அவற்றை வெறுத்துள்ளார் என்பதையும் இங்குச் சுட்டிக்காட்டவேண்டும்.

இளமையில் தந்தையின் கண்டிப்பு, திருமணம் குறித்த சிந்தனையில் ஒரு தடுமாற்றம், காதலை மனத்தில் இருத்திக்கொண்டே வருந்திய மனநிலை, பின்னர்த் தந்தையை இழந்த நிலையில் மனம் நொந்து போனது முதலியன பாரதியின் அகப்புறப் போராட்டங்களுக்கு அவரை ஆட்படுத்தின. அந்த மனநிலை அவரை மனச்சிதைவுக்கு ஆளாக்கியிருக்கக்கூடும். பதினாறு வயதில் துயர அனுபவங்கள் அந்தச் சூழலில் அவரை அலைக்கழித்தன. தந்தைக்குச் சதிகாரர்களால் விளைந்த கொடுமை, பெருஞ்செல்வத்தை இழந்த நிலையில் தந்தை கொண்டிருந்த வருத்தம், தந்தையின் நண்பர்கள் அவரைக் கைவிட்டமை ஆகியன பாரதியை அந்த வயதில் மிகவும் பாதித் திருந்தன. அவரது உள்ளத்தில் அமைதியின்மையைத் தோற்றுவித்தன. இவையெல்லாம் திசையறியா மீகாமனைப் போல, அவரைத் துயர அலையாய் அலைக்கழித்தன. தந்தையின் பொருள் இழப்பினை எண்ணிய பாரதி, ’துயர்க்கடல்’ என்றும், ’இடர் வெள்ளம்’ என்றும், அந்தச் சூழலைச் சுட்டியுள்ளார். ’தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சலென்பாரிலர். சிந்தையில் தெளிவில்லை உடலினில் திறனுமில்லை. உரனுள்ளத்தில்லையால்.. எந்த மார்க்கமும் தோற்றிலது என்செய்கேன்? ஏன் பிறந்தேன் இத்துயர்நாட்டினிலே’ என்று அவர் மனம்நொந்து பாடியுள்ளமை அவரது மனப் போராட்டத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

சிக்கலான வாழ்க்கைப் பின்னணி, பாரதியை மிகவும் நோகச் செய்திருந்த சூழலில், நிம்மதியின்றி இருந்திருக்கின்றார். சென்னை, புதுவை, கடையம், காசி ஆகிய இடங்களில் அவரது வாழ்க்கை கழிந்திருக்கிறது.. அப்படி மாறிமாறி அமைந்த அவரது வாழ்க்கைச் சூழலில் அவரது மனம் பெரும்பாலும் அமைதியுறாதி ருந்தது. தன் விருப்பங்களும், நிறைவேறாத ஆசைகளும் அவரது வாழ்க்கைப் பின்னணியைத் தத்தளிக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்போது வேறுவிதமாக உருவெடுத்திருந்தன. அது ஒருவகையில் மடை மாற்றத் திற்கு(ள்ன்க்ஷப்ண்ம்ஹற்ண்ர்ய்) அவரை ஆளாக்கியிருந்தன என்பதை உணரமுடிகிறது.

மையிலகு விழியாளின் காதலன்றோ

வையகத்தில் வாழும் நெறிகாட்டி

ஐயனெனக் குணர்த்திய ஞானம் பலவாம்

என்றும்,

பல நினைந்து வருந்தியிங்கென் பயன்

பண்டு போனதை எண்ணி என்னாவது?

என்றும்,

ஆங்கோர் கன்னி பிராயத்திலே

நீரெடுத்துதினந்தோறும்

காத்திருந்தவள்…. எய்துவேன்

கைக்கிளைப் பெயர் கொண்ட பெருந்துயர்க்

காதலது கருதவும் தீயதால்

என்றும் பாடியிருப்பதை நோக்க அவரது மனப் போராட்டம் மடைமாற்றத்திற்குக் காரணம் என்பதை அறியமுடிகிறது. இது அவரது அகவாழ்விற்கும் புறவாழ்விற்குமான போராட்ட வாழ்க்கையாக (ண்ய்ற்ங்ழ்ய்ஹப் ஹய்க் ங்ஷ்ற்ங்ழ்ய்ஹப் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற்) இருந்திருக்கிறது. இவற்றிலிருந்து மீள எண்ணித், தம் துயர் போக்க விநாயகர், சக்தி, பரம்பொருள் ஆகிய தெய்வங்களை வேண்டு வதாகவும் கொள்ளலாம். கடவுளரைப் போற்றும் பாடல்களின் உள்ளீட்டை அறிந்தால் மனத்தில் தெளிவும், துணிவும், துன்பத்தை ஏற்கும் பக்குவமும் தமக்கு வேண்டும் என்பதனைப் பல தோத்திரப் பாடல்கள்வழி குறித்துள்ளார். அத்தகைய பாடல் களைப் பொது நிலையில் உலகோரை நோக்கிப் பாடியதாகக் கொண்டாலும், அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடு அவற்றில் அடங்கியிருக்கிறது என்பதை உணர முடியும். உலகோரை நோக்கிப் பாடியதாக இருப்பினும், தனிமனித உணர்ச்சியையே அவற்றில் வெளிப்படுத்துகிறார்.

’மொய்க்கும் கவலைப் பகை போக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இரும்புக் கிணையாக்கிப் பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே மெய்க்கும் கிருத யுகத்தினிலே கொணர்வேன் தெய்வ விதியிஃதே", என்று பாடியிருப்பது, தன்னம்பிக்கைக்கு வித்திடுமாறு அமைந்துள்ளது. தன்னம்பிக்கையே அவரைப் பதரற்ற வாழ்க்கையை வேண்டிநின்றது. பயனுள்ள வாழ்க்கையை வாழவிரும்பியே கவி பாட விழைந்தவர். அவர் வேடிக்கை மனிதரைப் போல வாழ விரும்பாதவர். தன் துன்பம் குறித்த நிலையைப் பாடும்போது, ’என்றன் உள்ள வெளியில் - ஞானத் திரவி ஏறவேண்டும் குன்ற மொத்த தோளும்- மேரு கோல மொத்த வடிவும் நன்றை நாடும் மனமும் - நீயெந் நாளும் ஈதல் வேண்டும் ஒன்றை விட்டு மற்றோர் - துயரில் உழலும் நெஞ்சம் வேண்டா’ என்ற இப்பாடல் அவரது தன்னுணர்ச்சியின் வெளிப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கும். காளியிடம். தம், சிந்தையைத் தெளிவாக்கு-அல்லால் இதைச் செத்த உடலாக்கு என்று பாடியதும்,

சுகத்தினை வேண்டித் தொழுதேன் எப்போதும்

அகத்தினிலே துன்புற் றழுதேன்---யுகத்தினிலோர்

மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி

ஆறுதலைத் தந்தாள் அவள்

என்றும் பாடியிருப்பதைக் காண அவரது மனப் போராட்ட உணர்வுகள் அவரைத் துயரத்திற்கு உள்ளாக்கியிருப்பதை உணரமுடியும். "அகத்தினில் துன்புற்று அழுதேன்", என்ற அளவிற்கு அவரது துயரமும் சூழ்ந்திருந்த தொல்லைகளும் அவரை இடர்ப் படுத்தியிருக்கவேண்டும். இதன் எல்லையிலிருந்து மீண்டுவரத் துணிவு கொண்ட நெஞ்சுரத்தை வேண்டியே கடவுளரைத் துதி செய்கிறார். இது ஒருவகையில் உளவியல் நுட்பத்தோடு தொடர்புடையது. மன எழுச்சியின் அதீத நிலை என்று இதனைக் கூறலாம்.

அருளிச்செயலில் ஆர்வமும் வேண்டலும் கொண்டிருப்போர், ஆண்டவனிடம் தங்களை ஒப்படைத் துச் சரணாகதி அடைகின்றனர். அருள் வேண்டலும் அவ்வருளால் அரியன நிகழ்த்துவித்தலும் இறையருளால் தமக்கு அவை கிட்டும் என்று எண்ணி இறைவனை வழிபட்டிருப்பதனையும், அருளிச் செயலால் அரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதையும் சமயச் சான்றோரின் வாழ்விலிருந்து அறியலாம். நாயன்மார் களிடமும், ஆழ்வாராதிகளிடமும் அவ்வாறு அற்புதங் களை நிகழ்த்தியதைச் சமய வரலாறு காட்டும். இவர் களுக்குப் பின் வந்த இராமலிங்க அடிகள் அருளிச் செயல் தமக்கு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டியதை அவரது திருவருட்பா மூலம் அறியலாம். (செத்தாரை மீட்டுகின்ற திறம் எமக்கு வேண்டும் - வள்ளலார்) நாயன்மார்களைப் போலத், தாமும் அரியன நிகழ்த்த ஆசைகொண்டிருந்தமையை வள்ளலாரின் பாடல்களில் காணலாம். இதன் வெளிப்பாட்டை அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் சில காட்டும். அவர் சித்துகள் அறிவாரெனினும், "சித்திகள் செய்யவல்லேன் அல்லேன்", என்ற கருத்தையும் முன்வைப்பார்.

இதுபோல, பாரதியின் வேண்டுதல்கள் பற்பல. ஆண்டவனிடத்து முறையிடும் பாடல்களில் பாரதியின் உள்ளக்கிடக்கையை மேலே காட்டிய வகையில் அறிய முடிகிறது. அகத்தும் புறத்தும் நல்லவை கிடைத்ததற் கான வழிவகைகளை இறைவனிடம் கேட்டுப்பெற நினைக்கிறார். இந்த நினைப்பில் அவர், ’விண்ணும் மண்ணும் தனியாளும் எங்கள் வீரைசக்தி நின்னருளே -

என்றன் கண்ணும் கருத்தும் எனக்கொண்டு -அன்பு

கசிந்து கசிந்து கசிந்துருகி- நான் பண்ணும் பூசைகள் எல்லாம் -வெறும் பாலை வனத்தில் இட்ட நீரோ-

உனக்கு எண்ணும் சிந்தை ஒன்றிலையோ - அறிவிலாது

அகிலம் அளப்பாயே என்று இறைஞ்சிக் கேட்பதறியலாம்.

மனப்போராட்டங்களிலிருந்து விடுபடும் அவரது உணர்வு தன்னம்பிக்கையின் வழி வருவதாகும். இறைமீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவரை வழிநடத்திச் செல்கிறது. சக்தியிடம் அவர் வேண்டுகிற வரத்தை உணர்ந்தால் அஃதுண்மை என்று தெளியலாம். இதன் அடிப்படையில்தான் அவர் சக்தியை நோக்கி, ’சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய், வல்லமை தாராயோ ,இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று விண்ணப்பம் செய்கிறார். சுடர்மிகு அறிவு என்று பெருமித நிலையில் கூறியிருப்பது தன் முனைப்பாகத் தோன்றலாம்.

பாரதியின் சீட்டுக்கவியில் தன் முனைப்பின் இயல்பையும், தன் நிலையைத் தாழ்த்திக்கொள்ளாத மனப்பாங்கினையும் ஒருங்கே காணமுடிகிறது. தன்னுணர்ச்சியின் வெளிப்பாடான அப்பாடல், எட்டயபுர மன்னரான வெங்கடேசுர எட்டப்ப பூபதிக்கு எழுதிய அச்சீட்டுக்கவி பாரதியின் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறது. அதில் தம் பாட்டின் இயல்பு குறித்துக் கூறுகையில், ‘பண்அளவு உயர்ந்தது என் பண்; பா அளவு உயர்ந்தது என் பா எனவும், அழியாத மகா கவிதை எனவும், தமிழ்நாட்டிற்குக் கவியரசர் இல்லை என்ற வசை என்னால் ஒழிந்தது என்றும் அவர் அவ்வாறு சொல்வதற்கு உரிமை உண்டு. அதனைப் புலமைச் செருக்கு என்று கொண்டாலும், அக்காலப் புலவர்கள் அதனை அவையில் தாம் சிறந்த கவி என்பதனை மெய்ப்பிக்க அஃது ஏதுவாக இருந்திருக்கிறது. சிறந்த புலவர்களிடம் இருக்கும் பண்புகளில் அதுவும் ஒன்று.

கனவு நிலை

கவிஞர்கள் கற்பனையோடும் கனவுகளோடும் கைகோப்பவர்கள். அவர்கள் காணும் கனவில் நிறைவேறும் கனவும், நிறைவேறாக் கனவும் கலந்தே இருப்பன. பாரதி கண்ட கனவும், காண விழைந்த கனவும் எண்ணிறத்தன. அவற்றில் காணவிழைந்த கனவுகள் பற்பல. அவை உளவியல் சார்ந்தவை. ஆசைகளும் விருப்பங்களும் தொடர்ச்சியான சிந்தனைகளும் கனவு தோன்றுவதற்கான காரணங்களில் அடங்கும், ஒருவித மனக்கிளர்ச்சியின் உந்துதலே கனவாக மலர்கிறது. பாரதியின் தனிப்பட்ட வாழ்க்கையில். அவர் காண நினைத்த கனவுகள் பல நிறைவேறாவிட்டாலும், பொதுமனித வாழ்வில் அவர் காண விழைந்த கனவுகள் அவர் காலத்திற்குப் பின் நிறைவேறின. இந்திய விடுதலை பற்றிய கனவு அப்படிப்பட்டது. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடியிருப்பதில் ஒருவகை எக்களிப்பு ஓர் ஆனந்த பரவச (ங்க்ஷன்ப்ப்ண்ங்ய்ற் ங்ஸ்ரீள்ற்ஹள்ஹ்) நிலை இருந்துள்ளது. இதுவும் ஒருவகையான அதீத மன உணர்வின் வெளிப்பாடு, பாரதி வறுமையை அனுபவித்தவர். பசி மறந்தாலும் கவி எழுத மறவாதவர். சமூகமும் தாமும் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற சிந்தனையர். வயிற்றுக்குச் சோறு தேடுவது என்பது தனிமனிதத் தவிப்பு. அதனை முழுமையாக உணர்ந்த பாரதியின் அனுபவ வெளிப்பாடு பொதுமனிதர்க்குரியதாக்கித் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திட முனைகிறது. ஈனவயிறு படும் பாட்டை அவர் உணர்ந்த காரணத்தால்தான் அவரது உள்ளத்தில் வறுமையை ’மண்மிசை மாய்ப் பேன்’ என்ற உரத்த கவிக்குரல் எழுகிறது.

இதன் எதிரொலியாக, மறவன் பாட்டில் வறுமை கொண்ட ஒருவனைச் சித்திரித்து, அவன் வாயிலாக, ’ சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறும் சோற்றுக்கோ வந்ததிப் பஞ்சம்’ என்று சொல்ல வைக்கின்றார். அந்நியமாதலும் அழுந்திய மன உணர்வும் பாரதியின் சில செய்கைகள் புதிராக இருந்தமைக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அதீத மனநிலையில் அவர் தம் இனத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

அதன் விளைவு தம் இனத்திற்கு மாறுபட்ட எதிர்வினையை மேற்கொள்ளச் செய்தமைக்கு உளவியல் சூழல் காரணமாகலாம். (இந்தச் சூழல்தான் கழுதையைத் தன் தோளில் சுமந்து அக்கிராகாரத்தில் உலாவந்ததற்கும், கனக லிங்கத்திற்குப் பூணூல் அணிவித்தமைக்கும் காரணமாகிறது. ) அழுத்தப்பட்ட மன உணர்வு சில சமயம் எதிர்வினை ஆற்றுதற்கு வழிகோலும். துவேசம் காட்டுவோர்க்கு எதிராகச் செயல்படத் தூண்டும். பாரதி ஒருபுறம் சீர்திருத்த எண்ணமும், புரட்சி மனமும் கொண்டிருந்தாலும், இந்த நிகழ்வு உளவியலோடு எண்ணிப் பார்ப்பதற்குரியது. உனக்குப் பிடிக்காதது எனக்குப் பிடிக்கும் என்ற ஒரு உளநுட்பச் செயலே இதற்கு அடிப்படை எனலாம்.

இறப்பு பற்றிய எண்ணம்

மனிதர்கள் கொள்ளும் அச்சங்களில் முதன்மை யானது இறப்பு பற்றிய அச்சம். மனிதன் இறப்பினை அச்சத்துடனே எதிர்கொள்கிறான். இது முதியோரிடத்துக் காணப்படும் பொதுவியல்பு. இறப்பு தவிர்க்க இயலாதது. பாரதி மரணம் பற்றிய சிந்தனையில் ஓர் உளவியல் நுட்பம் அடங்கியுள்ளது. இறப்பைக் கண்டு அஞ்சக்கூடாது என்ற கருத்துடைய வரேனும், தமக்கு அது நேர்ந்துவிடுமோ என்று அச்சப்படாமல் இருந்ததில்லை. 'மரண பயம் நீங்கினேன்;

வலிமையுற்றேன்', என்று அவர் சொன்னாலும், அது ஒருவகையில் அச்சத்தின் வெளிப்பாடே. பாரதி வாழ்வு குறைந்த வயதிலேயே முடிந்துவிட்டாலும் நூறு வயது வாழ்வேன் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். சாவைப் பற்றிய சிந்தனையைத் தம் பாடல்களில் ஆங்காங்கே பதிவுசெய்துள்ளார். வாழ விரும்புவதிலும், சாதனை செய்ய நினைத்ததிலும் அவருக்கு இருந்த ஈடுபாடு அளப்பரிது. விநாயகர் நான்மணி மாலையில், 'தமக்குச் செல்வமும் நூறு வயது வாழ்வும் வேண்டும்' என்று கேட்கிறார். மற்றும் அந்தப் பாடலில் வரும் 'நோவு வேண்டேன்; நூறு வயது வேண்டினேன்', என்ற தொடரைக் காண்க. நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தவர். அவ்வகையில் வாழ்க்கை அமையுமானால் உயர் நோக்கங்கள் பெற்றிடவே வாழ விரும்பியவர். பயனுற வாழ்வதையே வாழ்க்கை என்று ஏற்றுக்கொண்டவரின் இறப்பு எதிர்பாராதவிதமாக அமைந்துவிட்டது கழிவிரக்கமே! இது ஒருவகையில் பிராய்டு கூறும் இறப்பு பற்றிய உள்ளுணர்வின் வெளிப் பாடாகும். தனிமனித உணர்விலும், பொது மனித நிலையிலும், இறப்பு பற்றி அவர் எடுத்துரைத்தாலும், சில சமயம் ஐயுறவாதியாகவும் (ள்ஸ்ரீங்ல்ற்ண்ஸ்ரீஹப் ஹற்ற்ண்ற்ன்க்ங்) இருந்து பேசுகிறார். இதற்கு அவர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டாலாம்.

'சாவதற்கு அஞ்சேல்' என்று அவர்தம் ஆத்திசூடியில் அறிவுறுத்துகிறார். காலனைக் காலடியில் வாடா எனக் கடிந்துரைப்பதையும் காண்கிறோம். கிழப்பருவம் எய்திக் கொடுங்கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை வாழ்வை அவர் விரும்பியதில்லை. மஹாசக்தி பஞ்சகத்தில், 'மரணமும் அஞ்சேன்', எனவும், சிவசக்தி புகழ் என்ற கவிதையில், 'சாவினுக்கோர் அச்சமில்லை' என்று கூறியிருப்பதும் காண்க. இறப்பு, அச்சத்தின் வெளிப்பாடாகக்கூட இதனை அணுக முடியும். பயனுற வாழவேண்டும் என்ற தீவிரமான பற்றுக் காரணமாகவே வாழ்க்கையின் மீதான அச்சத் தையும், மரணத்தையும் அவர் துணிந்து எதிர் கொள்ளச் செய்கிறார். ஆனால், பாரதியின் நீண்ட நாள் வாழும் ஆசை பற்றிய சிந்தனை அவருக்கு எதிராகவே அமைந்தது. பக்தியின் வழியே நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான கலையை அவர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தால் உடலும் உயிரும் ஒளிபெற்று வாழும் நூறு வயதிற்குக் குறை வில்லை. இது ஸத்யம்.நூறாவது நிச்சயமாய் வாழ்வாய் மனிதனுக்கு நூறு வயது இயற்கையிலேயே, ஏற்பட்டது. இயற்கை தவறாமல் மூடக்கவலை களில்லாமல்,இருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம் . மகனே அச்சத்தைப் போக்கு’

என்று பராசக்தியைப் போற்றித் துதிக்க வேண்டு

கிறார். அவ்வாறு துதித்துக் கொண்டிருந்தால்,

அச்சத்திலிருந்து விடுபடலாம் என்பது அவரது துணிந்த

முடிபாக இருந்திருக்கிறது. அஞ்சி அஞ்சிச் சாவதை

அவர் விரும்பியதில்லை. மக்கள் கவிஞராக அவர் இருந்த

படியால், அச்சமகற்றி வாழ்வதே வாழ்க்கை என்று அறிவு

புகட்டியிருக்கின்றார்.

பாரதியின் உள்ளுணர்வு ஒருவித மயக்க நிலைக்கு அவரை ஆட்படுத்தியிருந்ததை அவரது படைப்புகளைக் கூர்ந்து புரிந்துகொள்ளலாம்*.

om011224
இதையும் படியுங்கள்
Subscribe