Buddha

க்குவப்படுதலின்

ஞானவெளி

Advertisment

கதவுக்கு வெளியே

எனை நிறுத்தியிருக்கிறது

Advertisment

அடைத்த கதவு திறந்து

மீட்டெடுக்க ஒப்புக்கொள்ளும்

தருணங்களின் பொறுமைக்காக

புடம் போடும் காலத்தின்

கட்டளைக்கு காத்திருப்பேன்

இருண்மைக்கும் இம்மைக்கும்

இடையே உழலும் பேரியக்கம்

நிபந்தனையென்ற பெயரில்

சுழலும் இப்பிரபஞ்சம் முழுதும்

அலுப்பற்ற

அன்பினைச் சொல்லும்படி

ஏவுகிறது என்னை

இடரினும் தளரிலா

பொழுதாக்கிக் கொள்ள

அமைதியையும்

பொறுமையையும்

போதித்த புத்தனை

எனக்கும் சிறிது இரவலாய்

தரக் கேட்கிறேன்

பதிலற்று இன்னும்

மௌனித்தே கடக்கிறான்.

மௌனம் வன்மையான ஆயுதம்

அதைக் கைக்கொள்வது

எப்படி என்றால்

ஓயாத புன்னகையை

வீசி வீற்றிருக்கிறான்.

-உமா மஹேஸ்வரி பால்ராஜ்