test

ருக்கும்

அடங்காத

அப்பனுக்கு

Advertisment

அங்குசம் ஆகிறாள்

மகள்!

*

Advertisment

""சாப்டியளா?"" என்று

எல்லோரும்தான் கேட்கிறார்கள்!

என்றாலும்...

மகள் கேட்கையில்தான்

மனசு

வயிறு

கண்கள்

எல்லாம் நிறைகின்றன!

*

எல்லாக் கரங்களும்

உதறிவிட்டுக் கடக்கையில்

இறைவனின் கரம்போல்

இறுகப் பற்றுகிறது

மகளின் கரம்!

*

எல்லோரும்

நிராயுதபாணியாக்கித்

தாக்குகையில்

தன்னையே கவசமாக்கித்

தாங்குகிறாள்

மகள்!

*

உறவுகள் எல்லாம்

ஒத்த துருவங்கள்!

அப்பனும்

மகளும் மட்டுமே

எதிரெதிர்த் துருவங்கள்!

*

வார விடுமுறையில்

வெளியில் செல்கையில்

எல்லோரும்

அது வேண்டும்

இது வேண்டும் என்று

கேட்கிறார்கள்!

மகள் மட்டும்தான்

மெல்லிய குரலில்

கேட்கிறாள்...

""காசு இருக்காப்பா?"" என்று!

*

சரியை எல்லாம்

தவறாகப்

புரிந்து கொள்பவர்களுக்கு

மத்தியில்தான்

தவறுகளைக் கூடச்

சரியாகப் புரிந்து கொள்கிற

மகள்கள் இருக்கிறார்கள்!

*

அப்பன்

அவ்வப்பொழுது

வெற்றிலைக் கொடியாகத்

தளரும் பொழுதெல்லாம்

மகள்தான்

அகத்தியாகித் தாங்குகிறாள்!

*

மகளைப் பெற்றவனுக்கு

மெதுவாகத்தான் வரும்

மரணம்!

*

கோயில் வாசலில்

மகளைக் கொஞ்சுகிறான்

தந்தை!

அம்மன்

சன்னிதியில் இருந்து

சன்னமாய்க் கேட்கிறது

விசும்பல்!

-துஷ்யந்த் சரவணராஜ்