திகைக்க வைக்கும் கீழடி மதங்கள் நுழையாத தமிழரின் நகர நாகரிகம் -செ.கார்க்கி

/idhalgal/eniya-utayam/city-civilization-tamils-who-do-not-enter-awe-inspiring-religions-zgarki

கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் ஆதி வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. கங்கைச் சமவெளியில் தோன்றியது போல, நகர நாகரிகம் இங்கு தோன்றவில்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நகர நாகரிகத்தோடு வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

kk

மேலும் கீழடியில் கிடைத்திருக்கக்கூடிய "தமிழி' எழுத்துக்கள் மூலம் தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே கற்று அறிந்தவர்களாக இருந்தனர் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. இந்த தமிழி எழுத்துக்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழி எழுத்துக்கள் என்பது இன்று இருக்கும் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், வேறு பல மொழிகளுக்கும் அடிப்படையாக இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதம் சார்ந்த புராணங்கள், இலக்கியங்கள் மூலமாகவே வரலாற்றைக் கட்டமைக்க நினைப் போருக்கும் பெரும் தலைவலியாய் இருப்பது தமிழி எழுத்துக்களே ஆகும். காரணம் அவை புராண புரட்டர்கள் குறிப்பிடும் தங்களது பழமையை அம்பலப்படுத்தி விடுகின்றன.

ஆனால் பெரும்பாலான தமிழி எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவில்லை என்பதோடு அவை இன்னும் புரிந்துகொள்ள முடியாமல்தான் உள்ளன. இந்த தமிழி எழுத்துக்கள் என்பவை ஆரிய மொழிக் குடும்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். காரணம் ஆரியர்களுக்கு முன்பே திராவிட மொழி இருந்தது. இந்தோ ஆரிய மொழி என்பது சொற்சிதைவுடைய மொழியாகும். ஆனால் திராவிட மொழி என்பது ஒட்டுநிலை மொழியாகும். அது முற்றிலும் ஆரிய மொழிக்கு வேறுபட்டதாகும். ஆனால் மூல திராவிட மொழி தமிழ் என்ற வாதமும் முற்றிலும் தவறாகும்.

தமிழ் எழுத்துருக்கள் தோன்றுவதற்கு முன்பே ஒரு மூல மொழி இருந்திருக்கின்றது. அதில் இருந்தே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தோன்றி யிருக்கின்றன. தமிழி எழுத்துக்கள் என்பவை இந்த வகைப்பட்ட தமிழ்மொழிக்கு முந்திய எழுத்துருவாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். காரணம் கி.மு. மூன்றாமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவற்றிலும் தமிழி எழுத்துருக்கள் கிடைத்திருக் கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

kk

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துருக்களுக்கும், தமிழ்ப் பிராமி எழுத்துருக் களுக்கும் சில வேறுபாடு இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தும் இனமே இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது என்பது உறுதியாகின்றது. அவர்களிடம் இருந்தே பல்வேறு திராவிட மொழிகள் தோன்றி வளர்ச்சி அடைந்து இருக்கின்றன.

கீழடி அகழாய்வுகள் இன்று பெரிய அளவில் கவனிக்கப்படுவதற்குக் காரணம் இந்தத் தமிழ்மண் யாரின் வாழ்விடமாக இருந்தது என்பதையும், அதன் மூதாதையர் யார் என்பதும், அவர்கள் தனக்கென்று தனித்துவமான ஒரு பண்பாட்டையும், நாகரிகத்தையும் கொண்டிருந்தனர் என்பதையும் நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை மற்றும் அபிலாசைகள் இன்று பெரும்பாலான தமிழர்களிடம் ஏற்பட்டிருப்பதுதான். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்ததைத் தான் கீழடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. தற்போது தமிழரின் தனி அடையாளம் ஆரியக் கலப்பற்று கண்டறியப்பட்டிருப்பதால், தமிழர்கள் சாதியற்றவர்களாகவும், மதமற்றவர்களாகவும், ஆரியக் கடவுள்களை வணங்காதவர்க

கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் ஆதி வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. கங்கைச் சமவெளியில் தோன்றியது போல, நகர நாகரிகம் இங்கு தோன்றவில்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நகர நாகரிகத்தோடு வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

kk

மேலும் கீழடியில் கிடைத்திருக்கக்கூடிய "தமிழி' எழுத்துக்கள் மூலம் தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே கற்று அறிந்தவர்களாக இருந்தனர் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. இந்த தமிழி எழுத்துக்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழி எழுத்துக்கள் என்பது இன்று இருக்கும் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், வேறு பல மொழிகளுக்கும் அடிப்படையாக இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதம் சார்ந்த புராணங்கள், இலக்கியங்கள் மூலமாகவே வரலாற்றைக் கட்டமைக்க நினைப் போருக்கும் பெரும் தலைவலியாய் இருப்பது தமிழி எழுத்துக்களே ஆகும். காரணம் அவை புராண புரட்டர்கள் குறிப்பிடும் தங்களது பழமையை அம்பலப்படுத்தி விடுகின்றன.

ஆனால் பெரும்பாலான தமிழி எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவில்லை என்பதோடு அவை இன்னும் புரிந்துகொள்ள முடியாமல்தான் உள்ளன. இந்த தமிழி எழுத்துக்கள் என்பவை ஆரிய மொழிக் குடும்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். காரணம் ஆரியர்களுக்கு முன்பே திராவிட மொழி இருந்தது. இந்தோ ஆரிய மொழி என்பது சொற்சிதைவுடைய மொழியாகும். ஆனால் திராவிட மொழி என்பது ஒட்டுநிலை மொழியாகும். அது முற்றிலும் ஆரிய மொழிக்கு வேறுபட்டதாகும். ஆனால் மூல திராவிட மொழி தமிழ் என்ற வாதமும் முற்றிலும் தவறாகும்.

தமிழ் எழுத்துருக்கள் தோன்றுவதற்கு முன்பே ஒரு மூல மொழி இருந்திருக்கின்றது. அதில் இருந்தே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தோன்றி யிருக்கின்றன. தமிழி எழுத்துக்கள் என்பவை இந்த வகைப்பட்ட தமிழ்மொழிக்கு முந்திய எழுத்துருவாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். காரணம் கி.மு. மூன்றாமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவற்றிலும் தமிழி எழுத்துருக்கள் கிடைத்திருக் கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

kk

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துருக்களுக்கும், தமிழ்ப் பிராமி எழுத்துருக் களுக்கும் சில வேறுபாடு இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தும் இனமே இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது என்பது உறுதியாகின்றது. அவர்களிடம் இருந்தே பல்வேறு திராவிட மொழிகள் தோன்றி வளர்ச்சி அடைந்து இருக்கின்றன.

கீழடி அகழாய்வுகள் இன்று பெரிய அளவில் கவனிக்கப்படுவதற்குக் காரணம் இந்தத் தமிழ்மண் யாரின் வாழ்விடமாக இருந்தது என்பதையும், அதன் மூதாதையர் யார் என்பதும், அவர்கள் தனக்கென்று தனித்துவமான ஒரு பண்பாட்டையும், நாகரிகத்தையும் கொண்டிருந்தனர் என்பதையும் நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை மற்றும் அபிலாசைகள் இன்று பெரும்பாலான தமிழர்களிடம் ஏற்பட்டிருப்பதுதான். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்ததைத் தான் கீழடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. தற்போது தமிழரின் தனி அடையாளம் ஆரியக் கலப்பற்று கண்டறியப்பட்டிருப்பதால், தமிழர்கள் சாதியற்றவர்களாகவும், மதமற்றவர்களாகவும், ஆரியக் கடவுள்களை வணங்காதவர்களாகவும் இருந்தனர் என்பது 100 சதவீதம் உண்மையாகி இருக்கின்றது.

ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் கிடையாது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கின்றது. காரணம் ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு கி.மு. இரண்டாம் ஆயிரம் காலப் பகுதியிலேயே வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களால் அழிக்கப் பட்டது என்பதும் பொய்யான வரலாறே ஆகும்.

மொகஞ்சதாரோவில் வாழும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் குடிமக்கள் பெருமளவு கொல்லப்பட்டார்கள் என்று முதலில் பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த எலும்புகளை பகுப்பாய்வு செய்ததில் பெரும்பாலான மக்கள் கடுமையான இரத்தசோகை வியாதியால் இறந்தார்கள் என்பதை நிரூபித்தன. ஒரு நகர நாகரிகம் ஏன் அழிந்தது அல்லது கைவிடப்பட்டது என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கொத்துக் கொத்தாக மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள், உள்ளூர் தகராறுகள், மோசமான சுற்றுப்புறச்சூழல், வறுமை என பல காரணிகள் இதை நிர்ணயிக்கின்றன.

kkசிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு மூன்றாயிரம் என்றும், ஆரியர் வருகையை கி.மு. இரண்டாயிரம் ஆண்டு என்றும் கொண்டால், நம்மால் கீழடி நகர நாகரிகத்தை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். சிந்து சமவெளி நாகரிகத்தைப் போலவே கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாகரிகமும் நகர நாகரிகமாக உள்ளது. ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்கள் நகர நாகரிகத்துடனும், தனக்கென தனித்த மொழி, எழுத்து, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைக் கொண்டிருந்தனர் என்பதற்கு மேலும் ஒரு வலுவான சான்றுதான் கீழடி. இதன் மூலம் ஆரியர்கள் பூர்விக இந்திய மக்களின் நாகரிகத்தை தன்னுடைய ஆயுத பலத்தின் மூலம் அழித்து அடிமையாக்கவில்லை என்பதும், தன்னுடைய வஞ்சகமான சனாதன வருணாசிரம தத்துவத்தாலேதான் அடிமையாக்கினர் என்பதும் உறுதியாகி இருக்கின்றது.

இந்தியாவில் ஆரியர் வருகைக் காலம் கி.மு. 2000-மாக இருந்தாலும் கி.மு 600 வரை கூட தமிழகத்தில் ஆரியப் பரவல் நடக்காமல்தான் இருந்துள்ளது. அதன் பிறகுதான் படிப்படியாக ஆரியர்கள் தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, அவர்களது சனாதன வருணாசிரமக் கருத்தியலைப் பரப்பி தமிழர்களை அடிமைப்படுத்தி இருக்கின்றனர்.

கீழடியில் ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது மிக முக்கியமானதாகும். ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தனையின் மீதும் பெரும் தாக்கம் செலுத்தத் தகுதியான செய்தியாகும்.

இதுவரை சாதியாகவும், மதமாகவும் தன்னை சுருக்கிக் கொண்டு வாழ்ந்த தமிழன் இன்று அதை எல்லாம் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. இத்தனை நாட்களாக சூத்திரர்களாக வாழ்ந்து வந்த தமிழர்கள் தனக்கு அப்படியான இன இழிவை ஏற்படுத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தையும் கீழடி உணர்த்தி இருக்கின்றது.

அதனால்தான் ஆரியக் கும்பலும், ஆரிய அடிவருடிக் கும்பலும் பதறுகின்றார்கள். இந்த மண்ணின் மக்களை இத்தனை நாட்களாக ஏய்த்துப் பிழைத்து வந்த தங்களின் தொழில் நடக்காது என்று உறுதியானதும் கீழடியை மோசடி என்கின்றார்கள்.

கீழடியின் மூலம் நாம் நம்முடைய வரலாற்றை அறிவியல் முறைப்படி சரியாக அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பிராமி எழுத்துருக்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால் தமிழ் இலக்கியங்களின் காலத்தை சகட்டுமேனிக்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் தள்ளிப் போடுவதற்கு கீழடி கடிவாளம் போட்டிருக்கின்றது. குறிப்பாக தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றின் காலத்தை ஐயாயிரம், பத்தாயிரம் ஆண்டுகள் என இனி அடித்துவிட முடியாது. தொல்காப்பியர் காலத்தை கி.மு. நாலாம் நூற்றாண்டு என்று சிலர் சொல்கின்றார்கள். இதுவே சந்தேகத்திற்கு உரியதுதான். காரணம் தொல்காப்பியத்தில் பார்ப்பனக் கருத்தியல்கள் குறிப்பிடப்படுகின்றன. அப்படி இருக்கும் போது தமிழி எழுத்துக்களில் இருந்து ஒரு திட்டமிட்ட இலக்கண வரையறையை சொல்லும் தொல்காப்பியம் இரண்டு நூற்றாண்டுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான். மேலும் செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது தவறானது என்பதையே கீழடி ஆய்வுகள் காட்டுகின்றன.

kk

சங்க இலக்கியங் களில் நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆரியன் என்ற சொல் பயின்று வருகின்றது. எனவே இந்த இலக்கியங்கள் அனைத்துமே தமிழகத்தில் ஆரிய சித்தாந்தம் வளர்ச்சி அடைந்த காலப்பகுதியில் எழுதப்பட்டவை என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கின்றது. அதன் காலத்தை எப்படிப் பார்த்தாலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்ல முடியாது. எனவே நமக்கான வரலாறைக் கறாரான முறையில் நாம் கட்டமைப்பு செய்ய வேண்டும்.

ஆரியத்திற்கு முந்தியே நமக்கான வரலாறு இருந்தது என்பதை நிரூபிக்க எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் காலத்தைப் பின்னோக்கி தள்ளிப் போடவும், அப்படி தள்ளிப் போட்டதற்காகவே பல புரட்டுகளை கட்டியமைக்கவும் தேவையில்லை. தற்போது நமக்கு ஆரியக் கலப்பற்ற ஒரு தூய தமிழர் நாகரிகம் கிடைத்திருக்கின்றது. அது மதச் சார்பற்றதாக, சாதிய சார்பற்றதாக இருந்திருக்கின்றது. வழிபாடு தொடர்புடைய எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பதில் இருந்தே இன்று இருக்கும் அடிமைத்தனமான வழிபாடு, குறிப்பாக உருவ வழிபாடு அன்று தமிழ் மண்ணில் நிலவவில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது.

மானமுள்ள தமிழர்கள் என்ன செய்யப் போகின் றார்கள்? தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதியையும், மதத்தையும், வழிபாட்டு முறைகளையும் தூக்கி எறியப் போகின்றார்களா? இல்லை தங்களுக்கு மானவெட்கம் எல்லாம் கிடையாது, நாங்கள் சூத்திரர்களாக இருப்பதையே பெருமையாக நினைக் கின்றோம் என்று சொல்லப் போகின்றார்களா? ஒரு புராதன பொதுவுடைமை சமூகத்தின் எச்சமாக கீழடி கிடைத்திருக்கின்றது. நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற இயக்கவியல் விதிப்படி தமிழர்கள் மீண்டும் தாங்கள் தொலைத்த அந்த ஆதி பொதுவுடைமை சமூகத்தை அதன் வளர்ச்சியடைந்த கட்டத்தில் மீட்டெடுக்க பொதுவுடைமைவாதிகளோடு இணைந்து போராட வேண்டும் என்பதைத்தான் கீழடி நமக்கு கற்றுத் தருகின்றது.

க்கள் வாழும் பகுதி, செங்கலால் ஆன கட்டுமானங்கள், உள் மற்றும் வெளிநாட்டு வாணிபம், தொழிற்கூடம், எழுத்தறிவு, பண்பாட்டுத் தொடர்புடைய அலங்காரப்பொருட்கள் - ஒரு முன்னேறிய நகர நாகரிகத்திற்கான கூறுகளாக இவற்றை பட்டியலிடுகிறார்கள் தொல்லியல் அறிஞர்கள். இந்த எல்லா கூறுகளையும் தனக்குள் இருந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழரின் தாய்மடியாம் கீழடி! இந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்று பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில் அதனை உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது வைகை நதிக்கரையொட்டிய கீழடி.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ளது பள்ளிச்சந்தைப் புதூர். இங்குள்ள உழவுநிலமான மண்மேட்டில் தொல்லியல் எச்சங்கள் பலமுறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை. அது நடத்திய மூன்றுகட்ட ஆய்வுகளில் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஆய்வை 2018-ல் கையிலெடுத்தது மாநில தொல்லியல் துறை.

தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஆய்வு அமையுமென்று அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. கீழே தோண்டத் தோண்ட தமிழரின் பெருமையை மென்மேலும் உயர்த்தி இருக்கிறது கீழடி. வைகை நதிக்கரை நாகரிகமாக கீழடியில் வசித்துவந்த தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது என்பதையும், 2,600 ஆண்டுகள் பழமையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந் ததையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

சிந்துசமவெளி நாகரிகம் தொல்தமிழர் நாகரிகம் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினர். அதை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும், வரலாற்று தொன்ம ஆதாரங்கள் முறியடித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ராகிகடியில் எடுக்கப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகளின் மரபணு ஆய்வு முடிவு, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரியர்களின் மரபணுக்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை உறுதிசெய்தது. மேலும், இந்தியா முழுமைக்கும் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, ஆரியர்களுக்கு முற்பட்ட மனிதர்களின் மரபணுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், உலக அரங்கில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பலமாக கீழடி அகழாய்வு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சங்ககாலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகத்தில் வேளாண் சமூகமாக, நகர நாகரிகமாக, வளமும் செழுமையுமாய் நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன.

அகழாய்வு நடந்த பகுதி தொழில்நகரமாக இருந்திருக்கிறது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், சுட்ட செங்கற்களும், சுண்ணாம்பும், கூரை ஓடுகளும் கொண்டு எழுப்பப்பட்டவை. பூச்சுக்காக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருந்ததுதான் இத்தனை ஆண்டுகாலம் அவை நிலைத்திருந்ததற்கான காரணம்.

இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிந்து சமவெளி பண்பாட்டின் வரிவடிவங்களின் நீட்சியாகவும், தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடி யாகவும் கீறல்கள் எனப்படும் வரிவடிவங்கள் பார்க்கப்படுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளில் இந்தக் கீறல்கள் இடம்பெற்றிருப்பதும், அவை சிந்துசமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளோடு ஒத்துப்போவதும் இந்தியா முழுமைக்கும் தொல்தமிழர் நாகரிகம் பரவிக் கிடந்ததற்கான சான்றுகளுக்கும், பார்வைக்கும் வித்திடுகின்றன. அதுபோக, சங்ககாலத்தில் புலவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக அவை விரிகின்றன.

வைகை நதிக்கரை நாகரிகத்தில் வேளாண் சமூகமாகவும், கால்நடைத் தொழிலை முதன்மையாகக் கொண்டும் செழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அங்கு கிடைத்த உயிரினங்களின் எலும்புகளில் வெட்டுத் தழும்புகள் இருப்பதன்மூலம், உணவுக்காக அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவருகிறது. திமிலுள்ள காளை, பசு, காட்டுப்பன்றி, வெள்ளாடு, எருமை, மயில் போன்ற உயிரினங்களாகவே அவை இருப்பதாலும், ஆரியம் தன் புராணங்களில் முன்வைக்கும் குதிரை இல்லாதபடியாலும், இது ஆரியம் நுழைவதற்கு முந்தைய நாகரிகம்தான் என்பதை நிறுவ இயலும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் கீழடி அகழாய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளை யாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்மூலம்,ஆரியர் களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கைசார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கைமுறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரியவருகிறது.

கீழடியில் தற்போது நடந்து முடிந்துள்ள ஐந்தாம் கட்ட ஆய்வில், நகர நாகரிகத்தின் கூறுகளில் முக்கிய இடம்பிடிக்கும் வடிகால் அமைப்புகள் கிடைத்துள்ளன. திறந்த நிலையிலான வடிகால் அமைப்பு, வடிகட்டியுடன் இணைந்திருக்கும் பீப்பாய் வடிவிலான சுடுமண் குழாய் மற்றும் பாதுகாப்பான நீரை எடுத்துச் செல்லும் குழாய்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தப் பணியை சிறப்புடன் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டிய தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தீராத எழுத்துப்பணியின் மூலம் முறையான அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்திவந்த சு.வெங்கடேசன் எம்.பி., அகழாய்வுக்கான நிலத்தை வழங்கியவர்கள் என எல்லோருடைய மதிப்பையும் இன்னும் பல படிகள் கூட்டியிருக்கிறது கீழடி. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் போக்குகளைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கீழடி விவகாரத்தில் உறுதியாக நின்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பாராட்டப்படுகிறார்.

பெருமையும் தொன்மையும் மிக்க ஆய்வுக்காக தன் விளைநிலத்தை வழங்கிய பேராசிரியர் கரு. முருகேசன், மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பல அரிய தகவல்களை வெளிக்கொண்டு வந்த டாக்டர் அமர்நாத், அவரை அந்தப் பணியிலிருந்து மாற்றி, அகழாய்வுப் பணிகளை முடக்க முயன்ற மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து வென்ற வழக்கறிஞர் கனிமொழிமதி என இந்த ஆய்வுக்கு வலுச்சேர்த்தவர்கள் ஏராளம்.

இந்த ஆய்வுப் பணிகள் அருகாமைப் பகுதிகளிலும் தொடர இருப்பதாக நற்செய்தி வருகிறது. விருப்பம் காட்டாத மத்திய அரசும், ஒருவழியாக ஒப்புதல் தந்துவிட்டது. வைகை நதிக்கரை மட்டுமின்றி ஏற்கனவே ஆய்வுக்குட்பட்ட அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும், கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் பகுதியையும் ஆய்வு செய்யும்போது, தொல்தமிழர் பண்பாட்டு அடையாளம் இன்னும் பல மடங்கு வெளிப்படுவதுடன், இந்தியா முழுவதும் திராவிட அடையாளங்கள் நிறைந்திருந்த காலமும் உறுதியாகும்.

இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக தென்னை மரங் களால் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மேட்டைக் கிளறி, மேலே கொண்டுவரப்பட்ட தமிழரின் பெருமையை அதிகார பலத்தின் கரங்களுக்கு இரையாகக் கொடுத்து விடக்கூடாது. அதுவே தமிழை நெஞ்சில் ஏந்தி வாழும் அனைவரின் எதிர்பார்ப்பும், விருப்பமும்.

uday011119
இதையும் படியுங்கள்
Subscribe