கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா...
அங்க ரெண்டு கொடுமை, சிங்குடி சிங்குடின்னு ஆடுச்சாம்’என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதைப்போன்ற நிலையைத்தான் தமிழக மக்கள் வேதனையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் டெல்லிக்கு முறைவாசல் செய்துகொண்டிருக்கும் எடப்பாடி அரசால், தமிழகத்தின் அனைத்துஉரிமைகளும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்ன உச்சநீதிமன்ற உத்தரவையே காலில் போட்டு மிதிக்கும் மோடி அரசு.
எங்கயாவது கண்டமா இந்தக் கொடுமையை? ஆட்சி அதிகாரத்தில் அவங்களே இருப்பாங்களாம். மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம்னு இவங்களே போராடுவாங்களாம்.எவ்வளவு பெரிய காமெடி. அப்ப எங்கப்பன் குதிருக்குள்ளன்னுதான அர்த்தம். தமிழகத்தை யார் ஆட்சி செய்யுறா? யார் காலுக்குக் கீழ மண்டிபோட்டு இருக்காங்கன்னு வெட்ட வெளிச்சமாகத் தெரியுது.
இந்த நேரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடந்துகொண்டிருக்கிற அவமானகரமான பாலியல் மோசடி விவகாரம் வெடித்து, தமிழகத்தையே வெட்கத்திலும் வேதனையிலும் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.
புனிதம் மிகுந்த பேராசிரியர் பணியில் இருந்துகொண்டு, தனக்கு மேலே உள்ளவர்களுக்கு தங்கள் கல்லூரி மாணவிகளையே விருந்து வைக்கத் துடித்த நிர்மலாதேவி இன்று அகப்பட்டிருக்கிறார். இந்தப் பேராசிரியையின் வாட்ஸ் அப் ஆடியோ குறித்த தகவலை வெளியிட்டு, அவரை முதன்முதலில் அம்பலப்படுத்தியது நம் நக்கீரன்தான்.
இப்போது விசாரணையின் பிடியில் இருக்கும் நிர்மலாதேவியின் வாயை அடைத்து, அவரின் வலையில் விழுந்துகிடந்த அதிகாரம் மிக்க பெரிய மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விசாரணை நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
நிர்மலாவின் ஆடியோ பேச்சில்... கவர்னர் கிழவரல்ல என்று மாணவிகளிடம் சொல்லும் அந்த சொல்லிலேயே ராஜ்பவனின் லட்சணம் அம்பலப்படுகிறது.
ஏன் சார், எங்கேயோ அருப்புக்கோட்டைங்குற ஊர்ல இருக்கிற நிர்மலா, கவர்னர் கிழவரல்லன்னு ஏன் மாணவர்கள்கிட்ட சொல்லணும். சம்பந்தமில்லாமலா சொல்வாங்க. கேட்கறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்க.
விவகாரம் ரொம்ப பெரிசா வெடிச்சிருச்சி. அது ராஜ்பவனின்தொடர்பை அம்பலப்படுத்தப்போகிறது என்று தெரிந்ததும், அதை விசாரிக்க, அவசர அவசரமாக ஒரு நபர் கமிஷனை அமைத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அந்தப் பெண் பேராசிரியரின் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை என்றார். அடுத்த கொஞ்ச நேரத்தில் தன்னிலை மறந்து, எதிரே இருந்த பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டினார். இதைப் பார்த்து எல்லாரும் அதிர்ந்துபோக, மீண்டும் கவர்னரை நோக்கி சர்ச்சைகள் வெடித்தன. கவர்னரோ, "அந்த நிருபர் என் பேத்தி மாதிரி' என்று மழுப்பிவிட்டு, அவருக்கு பகிரங்கமாக ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் எழுதினார்.
இதுகுறித்து கருத்துதெரிவித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, "பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம்'’ என நாகரிகமாகவே தவறைச் சுட்டிக்காட்டினார்.
கனிமொழியின் இந்தக் கருத்தை தமிழகத்தின் அவமானச் சின்னமான ஹெச். ராஜாவால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
கவர்னரைக் கண்டிக்க வேண்டிய ராஜா, கனிமொழிமீது பாய்ந்தார். "கலைஞரின் கள்ள உறவுக்குப் பிறந்தவர் கனிமொழி' என, தன் நாறிப்போன குப்பைச் சொற்களை டிவிட்டரில் கொட்டினார்.
யாரைப் பார்த்தாலும் விஷமமாகக் குரைத்துவிட்டு, தெருநாயைப்போல் அவர்களிடம் அடிபடுகிற ஹெச். ராஜாதான், இப்படிச் சொல்லி அசிங்கமான அழுக்கைத் தன்மீதே அப்பிக்கொண்டார். கனிமொழி யார் என்று தெரியாத கழிசடை ராஜா, அவரைப் பற்றி பேசலாமா?
கனிமொழி, முத்தமிழறிஞர் கலைஞருக்கும் அவரது துணைவியார் ராஜாத்தியம்மாளுக்கும் பிறந்த மகள் என்பதை நாடே அறியும். இதுகுறித்து சட்டமன்றத்திலேயே கலைஞர், இலக்கிய நயத்தோடு தன் எதிரிகளுக்கு விளக்கம் தந்திருக்கிறார். அதனால்தான், ராஜாவின் தலைவரான மோடியே கனிமொழியைப் பார்க்கும்போதெல்லாம் கலைஞரைப் பற்றி விசாரிக்கிறார்.
இது இந்த அரசியல் கூமுட்டைக்குக் கொஞ்சமும் தெரியவில்லை.
கனிமொழி, பிறப்பால் மட்டும் கலைஞரின் வாரிசு அல்ல. கவிஞராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக, கருத்தாளராக, பெண்ணியவாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக தனது பன்முக ஆற்றலைக்காட்டி, அதன் மூலமும் தான் கலைஞரின் கவிதை மகள் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறவர். அவரைத்தான் கீழ்ப்பிறவியான ராஜா அபவாதம் பேசுகிறார்.
இதற்குமுன் பெரியாரையும் கலைஞரையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் தொடர்ந்து ஏடாகூடமாக, கீழ்த்தரமாக விமர்சித்து உடனுக்குடன் வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் இந்த மேதாவி. எனினும், நாய்வாலை நிமிர்த்தமுடியாது என்பதுபோல, அவரது புத்தியை அவரது கட்சியாலேயே நிமிர்த்தமுடியவில்லை.
கொழுப்பெடுத்த ராஜாவின் கனிமொழி பற்றிய விமர்சனத்தை,தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் கண்டித்திருக்கிறார்கள். சென்னையில் தி.மு.க. மா.செ.வான மா. சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் ராஜாவுக்கு எதிராக எச்சில் துப்பும் போராட்டத்தையே நடத்திவிட்டார்கள். இது புதுவிதமான எதிர்ப்பு டெக்னிக். சபாஷ் மா.சு அண்ணன்! இப்படி ஒட்டுமொத்த தமிழகமும் ஹெச். ராஜாவைக் காறி உமிழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்தக் களேபரத்துக்கு மத்தியில்... கவர்னருக்காக வரிந்துகட்டி வந்த கோமாளி நடிகர் எஸ்.வீ. சேகர், அந்தப் பெண் பத்திரிகை யாளரைச் சாடுகிறேன் என்று, தான் எங்கெங்கோ குடித்த சாக்கடையை எல்லாம் முகநூலில் கொட்டியிருக்கிறார். அவரைத் தாக்குகிற சாக்கில் அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களையும் கீழ்த்தரமாக விமர்சித்த இந்த சங்கரமடப் புழு, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் ஊடகத்துறையினரையும் படிப்பறிவில்லாதவர்கள், கேவலமானவர்கள், பொறுக்கிகள், ஆபாசமானவர்கள் என்றெல்லாம் குரைத்ததோடு, "பெரிய ஆட்களுடன் படுக்காமல் பத்திரிகையில் சாதிக்கமுடியாது' என்று சொல்லக் கூசும் விதங்களில் விமர்சித்திருக்கிறார். கடும் கண்டனங்கள் புறப்பட ஆரம்பித்ததும், "யாரோ ஒருவர் போட்ட பதிவை கவனிக்காமல் ஃபார்வர்டு செய்துவிட்டேன்' என்று மழுப்பலாய் மன்னிப்புக் கேட்கிறார். அவர் வீசிய அசிங்கமான ஆயுதம், அவர் சமூகத்தைச்சார்ந்த பத்திரிகையாளர்களையும் சேர்த்துதான் தாக்குகிறது. ஆனால் கடுமையான எதிர்வினைகளைத்தான் அவர்களிடம் காணமுடியவில்லை.
எஸ்.வீ. சேகரே, நாரதர்’ என்ற பத்திரிகைய நடத்தியவர்தான்.
அப்போது, அவர் ஏற்படுத்திக்கொண்ட அனுபவத்தை வைத்துதான் படுக்கை பற்றி எல்லாம் இந்த ஆபாச சேகர் குறிப்பிட்டார் போலிருக்கிறது.
நடிகர் ரஜினி, "என் மனைவியே பத்திரிகை நிருபராக இருந்தவர்தான்; அவரைப் போன்ற பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்' என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
நான் எஸ்.வீ. சேகரைப் பார்த்து நேரடியாகவே கேட்கிறேன். உன்னை விடவா ஒருவன், சினிமாவிலும் நாடகத்திலும் ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களைப் பேசியிருக்கிறான்? ஆபாசத்திலும் அசிங்கத்திலும் ஊறிப்போன உனக்கு, எங்கள் பத்திரிகையாளர்களைப்பற்றிப் பேச, என்ன தகுதி இருக்கிறது?
மோடிக்கு உன் முகம் தெரியும் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசுவாயா?
உன் அண்ணி தலைமைச் செயலாளராக இருக்கிறார் என்கிற தைரியத்தில் நீ எங்கள் பத்திரிகையாளர்களை எல்லாம் கேவலப்படுத்துவாயா?
தமிழர்களோடு விளையாடாதே! உன் ஆரியத் திமிரை எங்களிடம் காட்டாதே! தமிழர்கள் நினைத்தால் உன்னைத் தமிழ்நாட்டைவிட்டே துரத்தியடிப்பார்கள். டெல்லிக்கோ, குஜராத்துக்கோ ஓடு என விரட்டியடிப்பார்கள்.
-எச்சரிக்கையோடு,
நக்கீரன்கோபால்