Advertisment

யோகிபாபு அதிரடி!

/idhalgal/cinikkuttu/yogibabu-action

டிகர் யோகிபாபு "தர்மபிரபு', "கூர்கா' ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது, பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்துவருகி றார். இந்நிலையில், யோகி பாபு "பட்லர் பாலு' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளிய

டிகர் யோகிபாபு "தர்மபிரபு', "கூர்கா' ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது, பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்துவருகி றார். இந்நிலையில், யோகி பாபு "பட்லர் பாலு' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகியிருந்தது. மேலும் யோகிபாபுவுக்கு நகைச்சுவை காட்சிகளுக் கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமார்தான் எழுதிக்கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.

Advertisment

yogibabu

இந்த இரு செய்தி களையும் மறுத்துள்ளார் யோகிபாபு. இதுதொடர்பாக அவர் கூறும்போது, "" "தர்மபிரபு', "கூர்கா' என இரண்டு படங்களில்தான் கதையின் நாயகனாக நடித்துள் ளேன். அதன்பின், தொடர்ந்து காமெடியனாகத்தான் பல படங்களில் நடித்துவருகிறேன். "பட்லர் பாலு' என்ற படத்தில் காமெடியனாக, எட்டு வருடங் களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும்தான் நடித்திருந்தேன். ஆனால், தற்போது நான்தான் அப்படத்தின் ஹீரோ என்பதுபோல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும், எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்களை யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

இயக்குநர்கள் தரும் வசனங் களை என் ஸ்டைலுக்கு ஏற்ற வாறு சிறிதாக மாற்றிக் கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங் களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி'' என்றார்.

ப்

Advertisment
cini221019
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe