ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் "ராஜபீமா'-வின் டிரெய்லர் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் கலந்துகட்டி கச்சிதமாக இருந்தது. இப்போது மேலும் ஓர் ஆச்சரியமாக யாஷிகா ஆனந்தின் சிறப்புத்தோற்றம் ரசிகர்களின் எதிர் பார்ப்பைக் கூடுதலாக்கியிருக்கிறது.
இயக்குநர் நரேஷ் சம்பத் என்ன சொல்றாருன்னா...
""இப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஜர்னலிஸ்டாக வருகிறார். அவரது பாத்திரம் நிறைய திருப்பங்கள் கொண்ட தாக, முக்கியமாக க்ளைமாக்ஸ்க்கு முன்னதான காட்சிகளில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக, ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும். இத்திரைக்கதையை எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திர மும் மிகவும் வலிமையானதாக, கச்சிதமானதாக உருவாக்கப்பட்டது. அதிலும் யாஷிகா ஆனந்த் கதா பாத்திரத்தை எழுதியபோது பல்வேறு நடிகைகளை முயற்சித்தபிறகு யாஷிகா ஆனந்த் இப்பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பதாக அவரைத் தேர்வுசெய்தோம். அவரும் மிக எளிதாக, அட்டகாசமான நடிப்பைத் தந்து இக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளார்.
யானைக்கும் ஹீரோவுக்கும் உள்ள உறவை, அன்பைச் சொல்லும் படமாகச் சொல்லப்பட்டாலும், "ராஜா பீமா' படத்தின் டிரெய்லர் யானை தந்த கடத்தலை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறோம்'' என்கிறார்.
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். மோகன் "ராஜபீமா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் நாசர், ஷாயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் ஓவியாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.