இந்தி வெப் சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் ஃபேமஸானவர் அவந்திகா காவ்கர். அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டுவார். அந்த அவந்திகாவுக்கு ஒரு பழக்கம் உண்டு,
அப்பப்ப தன்னை நிர்வாணமாக ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்து தனக்குத் தானே ரசித்துக் கொள்வார், நல்ல ரேட் கிடைச்சா அந்த ஃபோட்டோக்களை விற்றும் விடுவார்.
அப்படித்தான் ஒரு நாளு சென்னையைச் சேர்ந்த ராகேஷ்நாத் வெங்கட்ராவ்ங்கிற பார்ட்டி, தான் ஒரு டைரக்டர்னு அவந்திகாவிடம் அறிமுகம் ஆகியிருக்கார். ஆகி, ஹாலிவுட் வெப் சீரியல் டைரக்டர் ஜேசன் பெர்னாண்டஸ், அவரோட வெப் சீரியலுக்காக உங்களோட முழு நிர்வாணப்படம் கேட்டாருன்னு அள்ளிவிட்டிருக்கார். நல்ல ரேட்டுக்குப் பேசி, தன்னோட ஃபுல் நியூடு ஃபோட்டோக்களை ராவ்விடம் கொடுத்திருக்கிறார் அவந்திகா.
இத செமத்தியான ரேட்டுக்கு ராவிப்புடணும்னு நினைச்ச ராவ், மும்பை பத்திரிகை ஒன்றை அவந்திகாவின் கையெழுத்துப் போட்ட லெட்டருடன் கான்டாக்ட் பண்ணியிருக்காரு. கையெழுத்து மேல சந்தேகப்பட்ட பத்திரிகையோ, "வேணாம்பா சாமி, நாங்க இந்த ஆட்டைக்கு வரலை'-ன்னு வாங்க மறுத்துருச்சு.
"போய்யா பொடிமட்டை, நீ இல்லேன்னா இன்னொருத்தன் சிக்குவான்'-னு நினைச்சுக்கிட்டு, செக்ஸ் பட ஸ்பெஷலிஸ்ட்டுகளான வெப்சைட்டுகளிடம் கொழுத்த விலைக்கு வித்துட்டாரு. அந்த நியூடு ஃபோட்டோக்கள் ஏகப்பட்ட வெப்சைட்டுகளில் டாலடிக்க ஆரம்பிச்சதும் அலறிவிட்டார் அவந்திகா.
"அடப் படுபாவி! இப்படி பண்ணுவான்னு நினைக்கலையே. மோசம் போயிட்டேனே'-ன்னு இப்ப அழுது புலம்புகிறார்
அவந்திகா. இப்ப அழுது என்ன புண்ணியம். நியூடு ஃபோட்டோவ ஏன் எடுப்பானேன், அதை ஏன் விப்பானேன். அது சரி, நியூடு ஃபோட்டோவை வாங்குன மகராசன், அதை விற்காம, வீட்ல ஃபிரேம் போட்டா மாட்டுவான்?