Advertisment

ஆண்ட்ரியாவை சீரழித்தது யார்?

/idhalgal/cinikkuttu/who-degraded-andrea

ரவு- பகல் பாராமல் தொடர்ச்சியாக ஷூட்டிங், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹைவோல்டேஜ் லைட் வெளிச்சம், பட வேலைகள் முடிந்ததும் டப்பிங், அதன்பின் அந்தப் பட புரமோ, அது முடிந்தபின் தொடர்ச்சியான பயணங்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சந்திப்புகள் என சினிமா ஹீரோயின்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது.

Advertisment

இந்த கஷ்டத்தையும் களைப்பையும் போக்கிக்கொள்ள அழகிய தீவுகளில் தனிமையில் பொழுதைக் கழித்துவிட்டு, ஃப்ரஷ்ஷாக மீண்டும் கோலிவுட்டுக்கு வருவார்கள் ஹீரோயின்கள். சில ஹீரோயின்களோ கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு ப

ரவு- பகல் பாராமல் தொடர்ச்சியாக ஷூட்டிங், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹைவோல்டேஜ் லைட் வெளிச்சம், பட வேலைகள் முடிந்ததும் டப்பிங், அதன்பின் அந்தப் பட புரமோ, அது முடிந்தபின் தொடர்ச்சியான பயணங்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சந்திப்புகள் என சினிமா ஹீரோயின்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது.

Advertisment

இந்த கஷ்டத்தையும் களைப்பையும் போக்கிக்கொள்ள அழகிய தீவுகளில் தனிமையில் பொழுதைக் கழித்துவிட்டு, ஃப்ரஷ்ஷாக மீண்டும் கோலிவுட்டுக்கு வருவார்கள் ஹீரோயின்கள். சில ஹீரோயின்களோ கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு புத்துணர்வு டன் திரும்புவார்கள்.

Advertisment

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பியதாகச் சொன்னார் பிரபல ஹீரோயி னான ஆண்ட்ரியா. கைவசம் அவ்வளவாகப் படங்கள் இல்லை, தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இல்லை. பின்ன எப்படி மன அழுத்தம் என கோலிவுட்டில் கூடிக்கூடிப் பேசினார்கள்.

இப்படி கூடிக்கூடிப் பேசியவர் களின் வாயை அடைப்பதற்கு சமீபத்தில் தடாலடியாக தனது திருவாய் மலர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா. "சினிமாவிலும் அரசியலிலும் செல்வாக்கு உள்ளவர். அவருக்கு திருமண மாகிருச்சு. இது தெரிஞ்சும் அவர் கூட நெருக்கமாப் பழகினேன்.

andrea

என்னைக் கல்யாணம் செஞ்சுக் கிறேன்னு சொன்னதால அவரி டம் படுக்கையில் என்னை இழந்தேன். அவர் எப்படியெல் லாம் ஆசைப்பட்டாரோ அப்படி யெல்லாம் நடந்துக்கிட்டேன். என்னோட உடம்பை அவர் படுத்திய பாட்டை, ஒரு கட்டத்துக்குமேல என்னால தாங்க முடியல, கதறி அழும் நிலைக்குப் போய்ட்டேன்.

ஏறத்தாழ என்னோட பாதி உடம்பு அழிஞ்சுபோச்சு. அந்தக் கொடுமையான நினைவுகளிலிருந்து மீளவும், அழிஞ்சுபோன உடம்பை மீட்டெடுக்கவும்', மன அழுத்தத்திலிருந்து மீளவும் சிகிச்சை எடுத்துக்கிட்டேன். என் உடம்பை பாடாய்ப்படுத்திய அந்த நபரைப் பத்தி நான் எழுதியிருக்கும் "இழ்ர்ந்ங்ய் ரண்ய்ஞ்ள்' (முறிந்த சிறகுகள்) என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா பெங்களூரில் நடக்கும்போது பகிரங்கமாகச் சொல்வேன்' என்று சொல்லியிருந்தார்.

கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி பெங்களூருவில் ஆண்ட்ரியா வின் நூலும் வெளியிடப்பட்டது. ஆனால், தன்னோட உடம்பை சிதைத்தவர் யார் என்பதை மட்டும் வெளியிட மறுத்து விட்டார் ஆண்ட்ரியா.

அரசியல்வாதிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிட் டாரா? அல்லது ஆண்ட்ரியாவின் சீஃப் பப்ளிசிட்டியா என பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டோம். ""எனக்கென்னமோ சீஃப் பப்ளிசிட்டி மாதிரி தெரியல. ஆண்ட்ரியா தமிழ்ல மட்டுமா நடிச்சிருக்கு...? நாலு மொழி படத்துலயும் நடிச்சிருக்கு. நாலு மொழியிலும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் ஹீரோ வாக இருக்கிறார்கள். ஹீரோ வாக இருப்பவர்கள் அரசியலி லும் செல்வாக்குடன் இருக்கிறார் கள். ஏதோ ஒண்ணு எசகுபிசகா நடந்திருக்கு! அந்த பார்ட்டியிட மிருந்து பேரத்தொகை ஒத்து வருவதற்காக ஆண்ட்ரியா கையாளும் டெக்னிக்தான் இது.

அமௌண்ட் ஓ.கே.ன்னா, பிராப்ளமும் ஓ.கே. சகலமும் ஓ.கே., ஓ.கே!'' எனச் சொல்லி ஒரு டிசைனாக சிரித்தார் அந்தத் தயாரிப்பாளர்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cini051119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe