தெலுங்கு சினிமாவின் பெரும் புள்ளிகள் அனைவருமே "படுக்கை புகழ்' ஸ்ரீரெட்டிக்கு எதிராகத் திரும்பி விட்டார்கள். என்.டி.ஆரின் வாரிசுகள் கடும் எரிச்சலிலில் இருப்பதால் அங்குள்ள ஆளும்கட்சிப் புள்ளிகளும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக வரிந்துகட்டுகிறார்கள். இனிமேலும் ஆந்திராவில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என பயந்து தமிழ்நாட்டில் அடைக்கல மாகியுள்ளார்.

srireddy

இங்குள்ள சில ஏஜெண்டு களின் உதவியால் சென்னை மடிப் பாக்கத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வாடகையில் ஒரு ஓட்டலில் தங்கி பல கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அதில் சிலபல லாபங்கள் கிடைத்ததும், காஸ்ட்லிலியான ஓட்டலுக்கு ஜாகையை மாற்றினார். தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என ட்விட்டரில் தட்டி சிலரை கடுப்பேற்றினார். அதன்பின் கடந்த 20-ஆம் தேதி சென்னை பிரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, """ஸ்ரீரெட்டி டைரி' என்ற பெயரில் எனது வாழ்க்கைக்கதை திரைப்படமாகப் போகிறது.

Advertisment

srireddyஇந்தப் படத்தில் படுக்கை அறையில் ரகசிய கேமரா சமாச்சாரங்கள் இடம்பெறும்'' எனச் சொல்லிபலருக்கு வாந்தி பேதியை உண்டாக்கியுள்ளார் ஸ்ரீரெட்டி. ""இனிமேல் ஆந்திராவுக்குப் போக மாட்டேன். சென்னையிலேயே வீடு வாங்கி செட்டிலாகப் போகிறேன்'' என சிலருக்கு பீதியைக் கிளப்பியுள்ளார். தன்னிடம் படுத்த வர்கள் என தமிழ் சினிமாவின் முக்கிய நபர்கள் ஒன்பது பேரின் லிஸ்டைக் கையில் வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அந்த லிஸ்டில் இருப்பவர்கள், செட்டில் மென்டுக்கு ஒத்து வந்தால் ஓ.கே., இல்லை என்றால் "ஸ்ரீரெட்டி டைரி'- யில் டார் டாராகக் கிழிபடுவார்களாம்.

சென்னையில் டேரா போட்டு, ஸ்ரீரெட்டி இந்த ஆட்டம் காட்டுவ தன் பின்னணியில் தமிழ் சினிமா வைச் சேர்ந்த இருவர்தான் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் ரவிதேவன். கலைப்புலிலி எஸ். தாணு- விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் """துப்பாக்கி' படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, "துப்பாக்கி' டைட்டிலை நான் பதிவு செய்து வைத்துள்ளேன் (துப்பாக்கிக்கு முன்பாக "கள்ள' என சிறிதாகச் சேர்த்து.) எனவே அந்த டைட்டிலை விஜய் படத்துக்குப் பயன்படுத்தக் கூடாது'' என பிரச்சினையைக் கிளப்பி, ஒரு அமவுன்ட் செட்டிலானதும் ஆஃப் ஆனவர்தான் இந்த ரவிதேவன். அடுத்ததாக இருப்பவர் கேமராமேன் சித்திரைச் செல்வன்.

ஏதோ ஒரு கணக்கோடு களத்தில் குதித்துள்ளது ஸ்ரீரெட்டி டீம்.

Advertisment