இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் தேவை!
டூ களே பரத்தில் அடுத் தடுத்து பெண்கள் வெவ்வேறு ஆண்களைக் கோர்த்துவிட்டுக் கொண்டே இருக் கிறார்கள். இந்தியில் "நமஸ்தே இங்கிலாந்து' படத்தின் டைரக்டர் விபுல் அம்ருத்லால் ஷா தன்னை படக்குழுவினர் முன்னிலையில் பலமுறை வலுக்கட்டாயமாகவும், முறையற்ற வகையிலும் முத்தமிட முயன்றார் என்று மாடல் நடிகை எல்நாஸ் நோரவ்ஸி கூறியிருக்கிறார்.
இவர் சில இணையத் தொடர்களிலும் நடித்தார். "நமஸ்தே இங்கிலாந்து' படத்தின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்ற நேரத்தில்
இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் தேவை!
டூ களே பரத்தில் அடுத் தடுத்து பெண்கள் வெவ்வேறு ஆண்களைக் கோர்த்துவிட்டுக் கொண்டே இருக் கிறார்கள். இந்தியில் "நமஸ்தே இங்கிலாந்து' படத்தின் டைரக்டர் விபுல் அம்ருத்லால் ஷா தன்னை படக்குழுவினர் முன்னிலையில் பலமுறை வலுக்கட்டாயமாகவும், முறையற்ற வகையிலும் முத்தமிட முயன்றார் என்று மாடல் நடிகை எல்நாஸ் நோரவ்ஸி கூறியிருக்கிறார்.
இவர் சில இணையத் தொடர்களிலும் நடித்தார். "நமஸ்தே இங்கிலாந்து' படத்தின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்ற நேரத்தில் எல்நாஸை ஆடிஸனுக்காக வரச்சொல்வாராம் விபுல். ஆடிஸன் திருப்தியில்லை என்று ஆறுமுறை வரச்சொன்னாராம். அந்தச் சமயங்களில் அவர் எல்நாஸை வசப்படுத்த முயற்சி செய்தார் என்றும், முத்தம் கொடுக்க முயன்றார் என்றும் கூறியிருக்கிறார்.
முத்தம் கொடுத்தாரா? கொடுக்க முயன்றாரா என்று எல்நாஸுக்கே வெளிச்சம்.
இயக்குநருக்கு முட்டுக் கொடுக்கும் நடிகை!
இந்தி இயக்குநர் லவ் ரஞ்சன்மீது யாரோ ஒரு அடையாளம் தெரியாத நடிகை பாலியல் புகார் கொடுக்க, அந்த புகாரை மறுத்து, நடிகை நுஸ்ரத் பரூச்சா நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். ""மீ டூ இயக்கம் முக்கியமானது தான். ஆனால், நிறைய பொய்க் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
லவ் ரஞ்சன் ஸார் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
அவரும் அவருடைய டீமும் ரொம்ப மரியாதையானவர்கள். அவர்களிடம் நான் பாதுகாப்பை உணர்ந்திருக்கி றேன்.
பிகினி உடையில் சில முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போ தெல்லாம் லவ் ரஞ்சன் ஸாரும் அவருடைய குழுவினரும் தொழில்முறை நாகரிகத்துடன் நடந்துகொண்டார்கள். நடிகையிலிருந்து, சாதாரண பெண் ஊழியர் வரை தவறை எதிர்த்துக் குரல் கொடுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்'' என்று நீளமாக புகழ்கிறார் நுஸ்ரத்.
இப்படியும் சிலர்- அப்படியும் சிலர்.
ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குவான்?
எனது அம்மாவை வெளியில் நிற்க வைத்துவிட்டு, ""தனி அறையில், பாட வாய்ப்பு வேண்டும் என்றால் எனக்கு ஒரு கிஸ் கொடு'' என்று கேட்டார்.
இந்தியில் பிரபல இசைய மைப்பாளர் அனு மாலிலிக்மீது 15 ஆண்டுகளுக்குமுன் நடந் ததாக இப்படி ஒரு குற்றச் சாட்டை மீ டூ இயக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் பாடகி ஸ்வேதா பண்டிட். அனு மாலிக்மீது ஏற்கெனவே பாடகிகள் சோனா மகாபத்ரா, அலிஷா சினாய் ஆகியோரும் பாலியல் புகார் களைக் கூறியிருந்தனர். இந்நி லையில் ஸ்வேதாவின் குற்றச்சாட்டு கேலிக்குரியது என்று கூறிய அனு மாலிக், தன்மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார். அவருடைய வழக்கறிஞர் ஜுல்பிகர் மேமன் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனு மாலிலிக் மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும், ஆனால், ஒருவருடைய நற்பெயரைச் சிதைக்க இந்த இயக்கத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.