""வால்டர்' திரைப்படம், தமிழகத்தில் நடந்துவரும் குழந்தை கடத்தலை, அதன் பின்னணியைக் களமாககொண்டு அழுத்த மான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ww

தினமும் நாம் தொலைக்காட்சி களில் பார்க்கும்போதும், செய்தித்தாள்களில் படிக்கும்போதும் பிறந்த குழந்தைமுதல் பல குழந்தைகள் கடத்தப்படுவதை அறிந்து வருகிறோம். இது என்னை மனரீதியாகப் பெருமளவில் பாதித்தது. இதனை மையமாகக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ஒரு திரைப்படம் எடுக்கத் தீர்மானித்தேன். அதற்காக, குழந்தை கடத்தலின் பின்னணிக் களத்தை ஆராய்ந்தபோது, பல அதிரவைக்கும், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதனை முழுவதுமாக இத்திரைப்படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கி றேன். இப்படம் நடிகர் சிபிராஜுக்கு சிறப்பான ஒரு படமாக இருக்கும். அவரது திரைவாழ்வில் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்'' என்றார் டைரக்டர் யு. அன்பு.

Advertisment

மார்ச் 13 வெளியாகவுள்ள "வால்டர்' திரைப்படத்தை ஸ்ருதி திலக் 11:11 புரடொக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, "சதுரங்கவேட்டை' நட்டி, சமுத்திரகனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.