போன மாசம், அதாவது மார்ச் 22-ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு புகார் மனுவோடு போனார் "படுக்கை புகழ்' நடிகை ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி. அந்தப் புகார் மனுவில், ""சினிமா ஃபை னான்சியர் சுப்பிரமணி, மூன்றுபேருடன் என் வீட்டுக்கு வந்து என்னைக் கொலை செய்யப்பார்த்தார். எனவே அவரைக் கைது செய்ய வேண்டுமெ''ன கோரியிருந்தார்.

sr

ஸ்ரீரெட்டி மேட்டராச்சே, போலீஸும் உடனே சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி, சுப்பிரமணியை வரவழைத்து விசாரித்தது. ""நான், ஸ்ரீரெட்டி, ரெட்டியின் மேனேஜர் மோகன் ரெட்டி மற்றும் என்னுடன் வந்த இருவர் எல்லாரும் ஸ்ரீரெட்டியின் வீட்டில் உட்கார்ந்து தண்ணி அடிச்சோம். சரக்கு பண்ணிய வேலையால வாய்த்தகராறு ஆனது உண்மை. மத்தபடி வேறெதுவும் நடக்கலை'' என விளக்கம் சொன்னார் சுப்பிரமணி. இதை ஏத்துக்கிட்ட போலீஸ், ஸ்ரீரெட்டியைக் கண்டித்து அனுப்பிவிட்டது.

இது நடந்து நான்கு நாட்கள் கழித்து, அதாவது மார்ச் 26-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தயாரிப்பாளர் ரவிதேவனுடன் போனார் ஸ்ரீரெட்டி. தனக்கு நடந்த மனித உரிமை (!!??) மீறல்களை புகாராக அளித்துவிட்டு வெளியே வந்தவர், ""எனது உயிருக்கு ஆபத்து உள்ள தால், துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கேட்டு, மீண்டும் போலீஸ் கமிஷ னரை சந்திக்கப் போறேன்'' என பகீர் கிளப்பினார்.

Advertisment

அடடா நாட்ல இந்த ஸ்ரீரெட்டி தொல்லை தாங்கமுடியலப்பா. யார் இந்த ரவிதேவன்? சுப்பிரமணி? துப்பாக்கி லைசென்ஸ் கேக்குற அளவுக்கு என்னதான் நடக்குது ஸ்ரீரெட்டி மேட்டர்ல? விசாரணையில் இறங்கினோம்.

""ஆந்திர சினிமா ஹீரோக்கள் சிலர் எனக்கு சினிமாவில் சான்ஸ் தருவதாகச் சொல்லி, என்னை படுக்கையில் பயன் படுத்திவிட்டு கழட்டிவிட்டு விட்டனர்'' என பரபரப்புச் சூட்டைக் கிளப்பியதோடு, தெலுங்கு நடிகர் சங்கத்தின் முன்பாக ஆடைகளை அவிழ்த்துப் போட்டு நிர்வாணப் போராட்டம் நடத்தி கிடுகிடுக்க வைத்தார். அங்கிருந்து நேராக சென்னைக்கு வந்து டெண்ட் அடித்தார். இங்கிருக்கும் நடிகர்களான விஷால், கார்த்தி, ஸ்ரீகாந்த், டைரக்டர்களான ஏ.ஆர். முருக தாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதும் படுக்கை சமாச்சாரத்தைக் கிளப்பி கிலிஏற்படுத்தினார்.

d

Advertisment

ஸ்ரீரெட்டியைப் பொருத்த மட்டில், ஒருவர்மீது செக்ஸ் புகார் கிளப்புவார், பேரம் படிந்ததும் கப்சிப்பாகிவிடுவார். அப்படி ஸ்ரீரெட்டி டாப்கியரில் போய்க்கொண்டிருக்கும்போது தான், பல மாதங்களுக்குமுன்பு தயாரிப்பாளர் ரவிதேவன், சித்திரைச்செல்வன் டைரக்ஷனில் "ஸ்ரீரெட்டி டைரி' என்ற படத்திற்குப் பூஜை போட்டு பீதி கிளப்பினார். இந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் பண்ணுவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி.

srசென்னைக்கு வந்த புதிதில் மடிப்பாக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் நாளொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் வாடகையில் தங்கியிருந்த ஸ்ரீரெட்டிக்கு தொடர்ச்சியாக கமிட்மெண்டுகள் அதிகரித்ததும், சென்னை வளசரவாக்கத்தில் தனி பங்களாவை லீசுக்கு எடுத்தார். மோகன் ரெட்டி என்பவர் மேனேஜர் ஆனார். "ஸ்ரீரெட்டி டைரி' படத்தின் ஷூட்டிங்கும் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென நின்றுவிட்டது. இந்த நிலையில்தான் புதுப்புது பூகம்பத்தைக் கிளப்பியிருக்கி றார் ஸ்ரீரெட்டி.

இந்தியாவே எம்.பி. தேர்தல் பரபரப்பில் இருக்கும்போது, ஸ்ரீரெட்டி வேற குறுக்கால ஓடிக்கிட்டிருக்காரே... என்னதான் நடக்குது என்பதை ஸ்ரீரெட்டியிடமே கேட்ரலாம் என்ற யோசனையில் நாம் இருந்த போது, அவரின் மேனேஜர் மோகன் ரெட்டியே நம்மைத் தொடர்பு கொண்டு, ""மேடம் உங்களிடம் பல உண்மைகளைப் பேசணும்னு விரும்புறாங்க. அதனால், மேடத்தோட வளசரவாக்கம் வீட்டுக்கு வரமுடியுமா?'' எனக் கேட்டார்.

அவர் வரச் சொன்ன 27-ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீரெட்டி வீட்டில் ஆஜரானோம். ""எத்த னையோ நடிகை கள் இருக்கிறார்கள். நீங்க மட்டும் ஏங்க அடிக்கடி சர்ச்சையில சிக்குறீங்க? சுப்பிரமணிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? துப்பாக்கி லைசென்ஸ் கேக்குற அளவுக்கு யாரு உங்களை மிரட்டுறா?'' என கேள்விகளை வரிசையாக அடுக்கினோம்.

"ஸ்ரீரெட்டி டைரி' படத்திற்கு ஃபைனான்சியர் என்ற முறையில்தான் சுப்பிரமணி பழக்கம். ஆரம்பத்துல என்னைக் காதலிப்பதாகவெல்லாம் சொன்னார். ஆந்திராவில் 22 பேரிடம் நான்கு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆந்திரா சென்ட்ரல் ஜெயிலில் 100 நாள் இருந்தவருதான் சுப்பிரமணி. இப்ப ஜாமீன்ல ரிலீசாகி வந்திருக்காரு. அந்த கேஸ் விஷயமா தெலுங்கானா போலீஸ் சென்னைக்கு வந்து சுப்பிரமணி வீட்டு அட்ரஸ் கேட்டாங்க. நானும் கொடுத்தேன்.

sr

அந்தக் கோபத்துல தான் 21-ஆம் தேதி நைட் 11 மணிக்கு சுப்பிரமணி, கோபி மற்றும் ஒருவர் ஃபுல்போதையில வீட்டுக்குள் வந்து "உன்னைக் கொல்லாம விடமாட்டோம்'னு ரகளை பண்ணினார்கள். என்னோட பெட்ரூமுக்குள் ஓடிப் போய் தாழ்ப்பாள் போட்டதால தப்பிச்சேன். ஆனாலும் கண்ணாடி ஷோகேஸை அடிச்சு நொறுக்கிட்டுக் கிளம்பிட்டாங்க. என் எதிரிகளுடன் உட்கார்ந்து நான் எப்படி தண்ணியடிப் பேன்? விஷால்மீதும், முருகதாஸ்மீதும் நான் சொன்ன புகார் அத்தனையும் உண்மை. என்னோட உறுப்புகளைக் கிண்டலடிச்சு, "இவ கூடயெல்லாம் மனுஷன் நடிப்பா னா?'ன்னு கேட்ட விஷாலுக்கு மட்டும் மூஞ்சி நல்லாவா இருக்கு? இந்த மூஞ்சிக்கு பம்பாய் நடிகைகள் கேட்கு தாக்கும்? விஷாலையோ, முருகதாஸையோ விடப் போவதில்லை. அத்தோடு வாராகி என்பவரும் என்மீது விபச்சார வழக்கு போடணும்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருந்தார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் துப்பாக்கி வச்சிக்க லைசென்ஸ் கேட்டிருக்கேன்'' என்றவரிடம் நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது குறித்துக் கேட்டதற்கு, ""ராதாரவி பேசியது தப்பு தான். ஆனா எனக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் பத்தி யாருமே பேசவில்லையே ஏன்?'' என்றார்.

அதானே... ஏன்?

சந்திப்பு: ஈ.பா.பரமேஷ்வரன்

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்