இந்த மாதக் கடைசியில் ரிலீசாகிறது விஷால்- ராஷி கண்ணா காம்பினேஷனில், வெங்கட் மோகன் டைரக்ஷனில், பி. மது தயாரித்துள்ள "அயோக்கியா'. படம் ரா. பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. "அயோக்கியா'-வில் ஏகப்பட்ட அடே சமாச்சாரங்களும், விஷாலின் பலத்த வசூல் வேட்டையும் அரங்கேறி கிறுகிறுக்க வைக்கின்றன.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து, தாறுமாறு ஹிட்டான "டெம்பர்' படம்தான் தமிழில் "அயோக்கியா'-வாக ரீமேக்காகிறது. முதலில் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக களத்தில் இறங்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழர் ஒருவர். தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும், தனது பங்காகவும் என மொத்தம் 16 கோடி ரூபாயை விஷாலிடம் கொடுத்து, சீக்கிரமே ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிவிடலாம் என்ற ஆசையுடன் இருந்துள்ளார்.
இடையில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ திடீரென மது என்பவர் படத்தைத் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.
அப்படின்னா அந்த 16 கோடி ரூபாய்...?
"அடுத்த படம் உங்களுக்குத்தான்' என்று சத்தியம் பண்ணியுள்ளாராம் விஷால். இந்தக் கதை இப்படின்னா, போட்ட பட்ஜெட்டைவிட பல மடங்கு எகிறி, தயாரிப்பாளரின் பல்ஸ் ரேட்டை எகிற வைத்திருக்கிறதாம். பொதுவாக விஷால் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கும்.
ஆனால், இந்த "அயோக்கியா'-வோ தெலுங்கு ரீமேக் என்பதால் அங்கே பிஸ்னஸ் ஆகாது. அந்தவகையில் ஏழெட்டு கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கோவிந்தாதான். "இரும்புத்திரை' ஹிட்டடித்தபோது விஷாலுக்கு தமிழிலும் நல்ல மார்க்கெட் இருந்தது. ஆனால் "சண்டக்கோழி-2' மண்ணைக் கவ்வியது. "சண்டக்கோழி-2' 50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது.
விநியோகஸ்தர்களின் கைக்கு வந்ததோ 30 கோடிதான். அந்தப் படம் மூலம் 20 கோடி நஷ்டம்.
எனவே எந்தவகையில் பார்த்தாலும் "அயோக்கியா'-வால் தயாரிப்பாளருக்கு அரோகராதான் என்கிறார்கள் கோலிவுட்டில்.
ஆனாலும் அசராத விஷாலோ, தனது வசூல் வேட்டையைத் தீவிரப் படுத்தியுள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஏழு கோடி, "அதிகாரம்' என்ற டைட்டிலைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு, கதிரேசன் மூன்று கோடி, பல வருடங்களாக படமே எடுக்காத கே.பி.பிலிம்ஸ் கே.பாலு நான்கு கோடி, ஹிதேஷ் ஜபக் மூன்று கோடி இவர்கள் எல்லாருக்கும் படம் பண்ணித் தருவதாகச் சொல்லி விஷால் கலெக்ஷன் பண்ணிய கோடிகள் இவை.
ஹீரோ விஷாலின் கதை இப்படி இருக்க... தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவரான விஷாலின் கதையோ வில்லங்கமாக இருக்கிறது. ""விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எட்டு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தயாரிப்பாளர் ராதாகிருஷ் ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் தலைமையிலான தயாரிப் பாளர்கள் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அரசின் சார்பில் தனி அதிகாரி ஒருவரை நியமித்துவிட்டது. இதை எதிர்த்து விஷாலும் கோர்ட்டுக்குப் போயிருக்கி றார். விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது உயர்நீதிமன்றம்.
கவுன்சில் பணத்தை தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தினாராம் விஷால்.
இதை கவுன்சிலின் பொருளா ளராக இருக்கும் "ட்ரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர். பிரபு கண்டுகொள்ளவில்லையாம். ""சங்கப் பணத்திற்குப் பொறுப்பு பொருளாளர்தான் என்றவகையில் எஸ்.ஆர். பிரபுவும், தலைவர் என்றவகையில் விஷாலும் போலீசால் கைது செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் கள் கவுன்சில் புள்ளிகள்.
சங்கத்தில் சதுரவேட்டை இப்படி என்றால், விஷாலின் பெர்ஷனல் வேட்டையும் கிறு கிறுக்க வைக்கிறது. சரத்குமாரின் மகள் வரலட்சுமியை ரொம்ப வருஷங்களாக காதலித்தார் விஷால். வரலட்சுமியும் விஷாலை சின்சியராக காதலித்தார். யார் நொள்ளக் கண்ணு பட்டுதோ, லவ் பிரேக்- அப் ஆயிருச்சுன்னு திடீர்னு சொன்னார் விஷால்.
பிரேக்-அப் ஆன ஒரு மாதத்தி லேயே ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவுக்கும் விஷாலுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது. மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக "100 சி' கொடுத்திருக்காராம் பெண்ணின் அப்பாவான அந்தத் தொழிலதிபர்.
ஆத்தாடி ஆத்தோவ்... அம்புட்டுப் பணமா?
-ஈ.பா. பரமேஷ்வரன்