ஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "சோலையம்மா' படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். இவர் இயக்கி நடித்த படம் "வைரவன்.'

சில காலம் நடிப்பு, இயக்கம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து வெற்றிபெற்றார்.

தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...karikalan

அரசியலிலில் நேர்மையானவர்... ஊழலற்றவர்... தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் காமராஜர். அவர்மீது அதிக பற்று கொண்ட கரிகாலன், "காமராஜர் கனவுக் கூடம்' என்கிற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

Advertisment

மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டுமல்ல; ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி, ஒழுக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை, உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல்; ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்...

சமுதாயத்திற்கு ஏற்றவகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும்விதமா கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

Advertisment

அதனால் எனக்கு ஒரு ஆசை. என்னைச் சுற்றி எல்லாமே சரியாக இருக்கவேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கி றேன்'' என்றார் நடிகர் கரிகாலன்.