உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் பவுலரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது. இப்படத்தை தார்மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முத்தையா முரளிதரனாக "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
""உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை யையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்.
இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். எம்.எஸ். ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. ஒரு பிரபல தென்னிந் திய தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து இப்படத்திற் காக பணியாற்றிக் கொண்டிருக்கி றோம்'' என்கிறது தயாரிப்பு நிறுவன மான தார்மோஷன் பிக்சர்ஸ்.
முத்தையா முரளிதரன் கூறுகையில்,""எனது வாழ்வின் கதையைப் படமாகத் தயாரிக்கும் தார்மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020-ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதை நான் பெரும் கௌரவமாக கருது கிறேன்'' என்றார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ன சொல்றாருன்னா... ""முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது. இந்த சவாலை நான் ஆவலோடு எதிர் கொள்ளக் காத்திருக்கி றேன்'' என்கிறார்.