விஜய் சேதுபதி- டைரக்டர் விஜய் சந்தர்- ராஷி கண்ணா- நிவேதா பெத்துராஜ் காம்பினேஷனில் தயாரான "சங்கத் தமிழன்' கடந்த 15-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. டைரக்டர் எஸ்.பி. ஜனநாதனின் "லாபம்', சீனுராமசாமியின் "மாமனிதன்' மற்றும் "க/பெ ரணசிங்கம்', "டெல்லி தர்பார்', "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வரிசையாக நான்கைந்து படங் களில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
இதுபோக பெரிய டைரக்டர் கள், புதுமுக டைரக்டர்களிடம் வரிசையாக கதையும் கேட்டுவருகிறார்.
இன்றைய தமிழ் சினிமா வில் அதிகப் படங்களை கையில் வைத்திருப்பதும் விஜய் சேதுபதிதான்; அதிக வில்லங் கத்துக்கு ஆளாகியிருப்பதும் விஜய் சேதுபதிதான். சமீபத் திய சர்ச்சை விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஒரு விளம்பரப் படம்மூலம் கிளம்பியுள்ளது. எந்த டி.வி. சேனலை ஆன் பண்ணினாலும் ஒரு நாளைக்கு முப்பது முறைக்குமேல் விஜய் சேதுபதி நடித்த "மண்டி' என
விஜய் சேதுபதி- டைரக்டர் விஜய் சந்தர்- ராஷி கண்ணா- நிவேதா பெத்துராஜ் காம்பினேஷனில் தயாரான "சங்கத் தமிழன்' கடந்த 15-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. டைரக்டர் எஸ்.பி. ஜனநாதனின் "லாபம்', சீனுராமசாமியின் "மாமனிதன்' மற்றும் "க/பெ ரணசிங்கம்', "டெல்லி தர்பார்', "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வரிசையாக நான்கைந்து படங் களில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
இதுபோக பெரிய டைரக்டர் கள், புதுமுக டைரக்டர்களிடம் வரிசையாக கதையும் கேட்டுவருகிறார்.
இன்றைய தமிழ் சினிமா வில் அதிகப் படங்களை கையில் வைத்திருப்பதும் விஜய் சேதுபதிதான்; அதிக வில்லங் கத்துக்கு ஆளாகியிருப்பதும் விஜய் சேதுபதிதான். சமீபத் திய சர்ச்சை விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஒரு விளம்பரப் படம்மூலம் கிளம்பியுள்ளது. எந்த டி.வி. சேனலை ஆன் பண்ணினாலும் ஒரு நாளைக்கு முப்பது முறைக்குமேல் விஜய் சேதுபதி நடித்த "மண்டி' என்ற விளம்பரப் படம் பளிச் சிடுகிறது. ஆன்லைன் வர்த் தகத்திற்கான இந்த விளம் பரத்தைப் பார்த்து சிறு-குறு வியாபாரிகள் மட்டுமல்ல; மொத்த வியாபாரிகளே கொந்தளித்துப் போய்விட்டனர்.
""ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்கச் சொல்கிறார் விஜய் சேதுபதி. வியாபாரிகளான நாங்களும் எங்கள் குடும்பமும் விஜய் சேதுபதியின் படத்தை ஆன்லைனில் பார்த்தால் நிலைமை என்னாகும்?'' என குமுறிக் கொந்தளித்து விட்டனர். இத்துடன் நில்லா மல் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் செய்து கைதாகினர்.
"மண்டி' விளம்பரப் படத்தில் நடித்தது குறித்தோ, வியாபாரிகளின் எதிர்ப்பு குறித்தோ, விஜய் சேதுபதி இதுவரை நேரடி விளக்கம் எதையும் சொல்லவில்லை.
""எதையும் அலசி ஆராய்ந்து காரியம் ஆற்றும் விஜய் சேதுபதி, "மண்டி' விளம்பரத்தில் நடித்தது ஏன்?'' என அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவரி டம் கேட்டோம்.
""எல்லாம் பண நெருக்கடி பண்ற வேலை. விஜய் சேதுபதியின் படங்கள் ரிலீசாகும்போதெல்லாம் பஞ்சாயத்து ஏற்பட்டுவிடுகிறது. தனது சம்பளப் பணத்தை விட்டுக் கொடுப்பதோடு, கைக்காசையும் கொடுக்கும் நிலைமைக்கு ஆளாவ தால், ஏகப்பட்ட பண நெருக்கடியில் இருக்கார் விஜய் சேதுபதி. இந்த "மண்டி' விளம்பரத்துக்காக சில கோடிகளை சம்பளமாக வாங்கி, பல கடன்களை அடைச்சிருக்காரு.
அவர்மேல என்ன வருத்தம்னா, இப்ப "லாபம்' படத் துல நடிச்சு முடிச் சிருக்காரு விஜய் சேதுபதி. அந்தப் பட டைட்டிலின் கீழேயே Day Night Robbery-ன்னு சப்-டைட்டில் போட்டிருக்காரு டைரக்டர் எஸ்.பி. ஜனநாதன். "பகல் கொள்ளை'ங்கிறதுதான் அந்த சப்-டைட்டிலோட அர்த்தம். அது மட்டுமல்ல; எஸ்.பி. ஜனநாதன் தீவிர கம்யூனிஸ்ட்காரர். அவரின் இரண்டு படங்களில் நடித்தும் சில்லரை வியாபாரிகளை நசுக்கும் இப்படிப்பட்ட விளம்பரத்தில் விஜய் சேதுபதி எப்படி நடிச்சாருங்கிறதுதான் ஆச்சர்யமாக இருக்கு!
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, "சின்ன வியாபாரிகளை ஆதரிங்க! குறிப்பா, பிளாட்பாரக் கடைகளில் பொருட்கள் வாங்குனா அவர்களின் வாழ்க்கையும் சிறக்கும்'னு தீபாவளி நேரத்துல அறிக்கையெல்லாம் கொடுத்தார் விஜய் சேதுபதி. இப்ப அவரே மாறிட்டாருன்னா பார்த்துக்கங்க, எந்தளவுக்குப் பண நெருக்கடில இருக்காருன்னு. படம் ஓடுதோ இல்லையோ வரிசையா படங்களை கமிட் பண்றதுக்கும் பண நெருக்கடிதான் காரணம்'' என்றார்.
அந்த வில்லங்கம் ஒருபக்கம்னா, விஜய் சேதுபதி பண்ணிய சினிமா வில்லங்கம் வேறு ரகம். இப்போது விஜய் சேதுபதி- மேகா ஆகாஷ் நடித்து வரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டைரக்டர் ரோஹந்த் வெங்கடகிருஷ்ணன். எஸ்.பி. ஜனநாதனிடம் அசோஸி யேட் டைரக்டராக இருந்தவர். ""ஜனநாதன் டைரக்ஷனில் விஜய் சேதுபதி, "புறம்போக்கு' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே "யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் கதை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார் ரோஹந்த்.
ஆனால் இப்போதோ பேருக்குத் தான் இவர் டைரக்டர்...மற்றபடி சீன்களை ஓ.கே. பண்ணுவது, கேமரா ஆங்கிள் வைப்பது, பாடல் காட்சியை எடுப்பது என எல்லாமே விஜய் சேதுபதிதான். "கட்' சொல்வதுடன் ரோஹந்தின் வேலை முடிந்துவிடுகிறது.
சேதுபதியின் அதீத தலையீட்டால் இந்தப் படத்தின் கேமரா மேனாகப் பணிபுரிந்த மகேஷ் முத்துசாமி, பாதிப் படம் முடிந்த நிலையில் வெளியேறி விட்டார். இப்போது வேறொரு கேமராமேன் கமிட் ஆகியிருக்கி றார். இவரும் எப்போது ஓடப் போகிறாரோ?'' என்கிறார் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' யூனிட் டைச் சேர்ந்த ஒருவர்.
அப்படியா விஜய் சேதுபதி சார்?
லாஸ்ட் புல்லட்:
பிரச்சினை தீவிரமானதை அடுத்து சென்னை தலைமைச் செயலகத்துக்குப் போய் அமைச் சர் மாஃபா பாண்டியராஜனிடம் கலைமாமணி விருதை வாங்கி யிருக்கிறார் விஜய்சேதுபதி
-ஈ.பா. பரமேஷ்வரன்