Advertisment

சசியை சந்திக்க மறுத்த விஜய்!

/idhalgal/cinikkuttu/vijay-refused-meet-sasi

னது மைத்துனர் அசோக்குமார் தற்கொலைக்குப்பிறகு, சொந்தப் படம் தயாரிப்பதை தற்காலிக மாக நிறுத்தி வைத்திருக்கிறார் சசிகுமார். நடிப்பதில் பிஸியாகி, நாலு காசு சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வரும் சசிகுமார், சில மாதங்களுக்குமுன்பு,

னது மைத்துனர் அசோக்குமார் தற்கொலைக்குப்பிறகு, சொந்தப் படம் தயாரிப்பதை தற்காலிக மாக நிறுத்தி வைத்திருக்கிறார் சசிகுமார். நடிப்பதில் பிஸியாகி, நாலு காசு சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வரும் சசிகுமார், சில மாதங்களுக்குமுன்பு, "பாகுபலிலி' டைரக்டர் ராஜமவுலியை ஹைதராபாத்தில் சந்தித்தார்.

Advertisment

sasiராஜமவுலிஇப்போது தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். காம்பினேஷனில் ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார்.

அந்தப் படத்தில் சசிகுமாரையும் நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு என்றார்கள். ஆனால் சசிகுமாரோ வரலாற்றுப் படம் ஒன்றை டைரக்ட் பண்ணுவதற்காக சில ஆலோசனைகளை ராஜமவுலியிடம் பெறத் தான் சந்தித்துள்ளார். மிகப்பிரம்மாண்டமான அந்தப் படத்தைத் தயாரிக்க, பெரிய நிறுவனம் ஒன்றிடமும் பேசி முடித்துவிட்டார் சசிகுமார்.

அந்தக் கதையின் வரலாற்று நாயகனாக விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால், விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்லி, விஜய் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுள்ளார் சசிகுமார்.

Advertisment

ஆனால் விஜய் என்ன நினைத்தாரோ, சசிகுமாரை சந்திக்க மறுத்துவிட்டாராம். இப்போது அந்தக் கதையை சூர்யா ஓ.கே.பண்ணிவிட்டாராம்.

vijay

டைட்டிலைப் படிச்சுட்டு அந்த சசின்னு நினைச் சிருப்பீகளே...

-பரமு

cine190219
இதையும் படியுங்கள்
Subscribe